Our Feeds


Wednesday, December 21, 2022

ShortTalk

ஜே.வி.பி யினர் என்னை இருமுறை கொலை செய்யப் பார்த்தார்கள் - SLPP, MP விமலவீர திஸாநாயக்க



தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததையே மக்கள் விடுதலை முன்னணியினரும் செய்ததாக தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க, ஜே.வி.பியினர் என்னை இருமுறை கொலை செய்ய முயற்சித்ததாகவும் எனவும் தெரிவித்தார். 


பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

கடந்தக் காலத்தில் ஜே.வி.பி என்னை இருமுறை கொலை செய்யப் பார்த்தார்கள். நான் செய்த குற்றம் என்ன? அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும், பல்கலைக்கழக மாணவராகவும் இருந்தேன் எனவும் தெரிவித்தார். 

மக்கள் விடுத​லை முன்னணியின் சின்னம்  மணி என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மிரர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »