மாவனெல்லை-ஹெம்மாதகம ஊடாக கம்பளை வரையான வீதியில் “துனே கணுவ” பிரதேசத்தில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இன்று (25) காலை 8 மணியளவில் குறித்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெரும்பாலான வாகனங்கள் மாற்று வீதிகளில் பயணித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.