Our Feeds


Friday, January 6, 2023

SHAHNI RAMEES

பூட்டிய வீட்டிலிருந்து 5 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்பு...!

 

அமெரிக்காவின் உதா மாகாணத்தில் சோல்ட் லேக் சிட்டி உள்ள குடியிருப்பில் உள்ளவர்களின் நலனுக்கான பரிசோதனையில் ஈடுபடுவதற்காக அதிகாரிகள் சென்றனர்.

அப்போது ஒரு வீட்டுக்கு சென்றபோது அந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 8 பேர் மர்மமான நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து சென்ற பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு என்பது அன்றாடம் நடைபெறும் சம்பவமாகி விட்டது. அங்கு பொதுமக்கள் கூடும் வியாபார நிலையங்கள், பாடசாலை மற்றும் கல்லூரிகள் என பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது..


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »