Our Feeds


Friday, January 6, 2023

News Editor

பணம் கேட்டு குழந்தையை கடத்திச் சென்று சிறை வைத்த பெண்!


 

நீர்கொழும்பில் 10 வயது குழந்தையொன்றை கடத்தி சிறை வைத்துக் கொண்டு பணம் கேட்ட சம்பவத்தில் 47 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், குழந்தையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குழந்தை கிராண்ட்பாஸ் – ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே நீர்கொழும்பு பகுதியில் உள்ள நபரொருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளார்.

உரிய பணத்தை செலுத்தாததால் அவரது குழந்தை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »