Our Feeds


Tuesday, June 9, 2026

Zameera

களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு


 களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (10) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய களுத்துறை, வாதுவ, மத்துகம, பேருவளை, அளுத்கமை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை ஏற்படுவதாக நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »