Sunday, May 5, 2024
ஜனாதிபதி பக்கம் செல்ல 15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க சுமார் 10-15 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த சட்டமூலத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
மே தின பேரணியில் இதற்கு ஆதரவளிக்குமாறு பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
எவ்வாறாயினும், கட்சி இதற்கு எதிராக இருந்தாலும், இதற்கு ஆதரவளிப்பது தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் அரசாங்க உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
VIDEO: விகாரைக்குச் சென்ற மாணவர்களை கொடூரமாக தாக்கிய தேரர்!
பாடசாலை மாணவன் மற்றும் மாணவி ஆகியோர் மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற போது அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வருடம் சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25ம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளார்.
ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.
அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் ஈர்க்குமாறால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தாக்கப்பட்ட மாணவி கூறும் போது,
“இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன். ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார் என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில்,
"இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர். அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனை அடித்ததால் ஏற்பட்ட இரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார். இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர்.
பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன். அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை.
மகனுக்கு இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை.. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா இருக்கிறான். மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்றார்.
உச்சம் தொடும் வெப்பம் | இதுவரை 9 பேர் உயிரிழப்பு
இந்நாட்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கம் வெப்பமான வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் மாநில மக்கள் கடும் குடிநீர் தட்டுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கிந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வகை வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மக்கள் தொகையில் சரிவு - பத்து ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அதிர்ச்சி மாற்றம்.
கடந்த வருடம் இலங்கையின் சனத்தொகை ஒரு இலட்சத்து நாற்பத்தி நான்காயிரத்தால் குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் மூலம் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை எதிர்மறையான வளர்ச்சியைக் காட்டுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதத்தில் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு
கடந்த மாதத்தில் மாத்திரம் 148,867 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் இருந்து 27 ஆயிரத்து 304 பேரும், ரஷ்யாவில் இருந்து 15 ஆயிரத்து 103 பேரும், ஜேர்மனியில் இருந்து 13 ஆயிரத்து 173 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். (