Our Feeds



Tuesday, September 15, 2026

Zameera

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்


 போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகளை தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 


இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 


தினமும் இடம்பெறும் வீதி விபத்துகள் மற்றும் பாரிய விபத்துகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் போது, போதைப்பொருள் பயன்பாடு, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், ஆபத்தான மற்றும் கவனயீனமான முறையில் வாகனம் செலுத்துதல் மற்றும் அதிகப்படியான சோர்வு என்பன அதற்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். 


அத்துடன், விசேடமாக டிப்பர் வாகனங்கள், லொறிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பயணிகள் பேருந்து சாரதிகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி இச்சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக சேனாதீர மேலும் குறிப்பிட்டார். 


போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய பல பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்களின் சாரதி உரிமங்களை இடைநிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். 


மேலும், ஏதேனும் ஒரு பேருந்து சாரதி அதிக வேகத்தில், போட்டியிடும் வகையில், ஒழுக்கீனமாக அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தினால், அது தொடர்பில் 070 47 55 600 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகனத்தின் இலக்கம் தெளிவாக தெரியக்கூடிய வகையில் காணொளிப் பதிவொன்றை அனுப்பித் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். 


அவ்வாறு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், தராதரம் பாராது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  மேலும் வலியுறுத்தினார்.

SHAHNI RAMEES

பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளே காரணம்!

 


  • காசாவில் நடக்கும் வான்வழித் தாக்குதல்கள்

  • SHAHNI RAMEES

    சபாநாயகர் உடனடியாக பதவி விலக வேண்டும்!

     


    இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்

    Zameera

    முன்னாள் பொலிஸ்மா அதிபரினால் ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

     

    முன்னாள் பொலிஸ்மா அதிபரினால் ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. 


    2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் மூலம், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் இருவர் மீறியுள்ளதாக இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.


    அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையச் செயற்பட்டதன் மூலம், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக சில்வா மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன ஆகியோர் மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

    Zameera

    இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு வழங்கக்கூடாது - வசந்த முதலிகே

     

    (க.சிவலிங்கமூர்த்தி)


    இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.


    மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


    அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


    இலங்கை மக்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்கும் திட்டத்தின் கீழ் கைரேகை, கருவிழி உள்ளிட்ட உயிரியளவியல் தரவுகளை சேகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாம் தொழில்நுட்பத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், மக்களின் மிகவும் உணர்வுபூர்வமான உயிரியளவியல் தரவுகளை அரசாங்கம் சேகரித்து வைத்திருப்பதற்கும், அவை இந்திய நிறுவனங்களின் தலையீட்டிற்கு உட்படுத்தப்படுவதற்குமே எமது எதிர்ப்பு.


    ஒருவரின் பெயர், முகவரி, பிறந்த திகதி போன்ற தனிப்பட்ட தகவல்களுக்கும் கைரேகை, கருவிழி, முக அடையாளம் போன்ற தனித்துவமான உயிரியளவியல் தரவுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. இவ்வாறான தரவுகள் எதிர்காலத்தில் மக்களை கண்காணிக்கவும், உளவு பார்க்கவும் அல்லது அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தவும் முடியும்.


    இலங்கையில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் இருக்கின்ற நிலையில், இத்திட்டத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய நிறுவனங்களை ஏன் ஈடுபடுத்த வேண்டும்? மேலும், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படும் ஏழு ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களை அரசாங்கம் ஏன் மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை?


    ஆட்பதிவு திணைக்களத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்த திட்டம் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், இந்தப் பொறுப்பு இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மக்களின் உயிரியளவியல் தரவுகளை எந்தவொரு இந்திய நிறுவனத்திற்கும் வழங்குவதற்கு அரசாங்கத்துக்கு உரிமை கிடையாது.


    எனவே, உயிரியளவியல் தரவுகளை இந்தியாவுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேவேளை, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய ஒப்பந்தங்களின் முழுமையான விபரங்களையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இதனை வலியுறுத்தியே செவ்வாய்கிழமை (15) இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்பாக மக்கள் போராட்ட முன்னணி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளது என வசந்த முதலிகே மேலும் சுட்டிக்காட்டினார்.

    Zameera

    மாகாணசபைத் தேர்தலை பிற்போடவே அரசாங்கம் முயற்சி - ரஞ்சித் மத்தும பண்டார

     


    (இராஜதுரை ஹஷான்)


    மாகாணசபைத் தேர்தலை எந்த வழியில் பிற்போடலாம் என்பதற்காகவே அரசாங்கம் பாராளுமன்ற விசேட செயற்குழுவை பயன்படுத்துகிறது. தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தினால் காணப்படும் சட்ட சிக்கலுக்கு உடன் தீர்வு காணலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


    மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் காலவகாசம் நீட்டிக்கப்பட்டமை மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குழு கூட்டத்தை புறக்கணித்தமை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


    அவர் மேலும் தெரிவிக்கையில்,


    மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைக்கும் பாராளுமன்ற விசேட குழு கூட்டம் கடந்த 08 மாத காலமாக கூடியது.



    மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவும், சட்டமா அதிபர் திணைக்களமும் அறிக்கை சமர்ப்பித்துள்ளன. பழைய தேர்தல் முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாயின் அதற்குரிய திருத்தங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.


    தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த பரிந்துரைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.தேர்தலை பிற்போடுவதற்கான யோசனைகளுக்கு மாத்திரமே முன்னுரிமையளிக்கப்பட்டது.


    இதற்கமைய இந்தக் குழுவின் செயற்பாட்டுக்காலம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது முறையற்றது. தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. குழு அறிக்கை சமர்ப்பித்தால்  தேர்தலை நடத்த தயார் என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் காலத்தை இழுத்தடிப்புச் செய்கிறது.


    காலத்தை வீணடிக்கும் இந்த செயற்குழுவில் தொடர்ந்து பங்குப்பற்றுவது பயனற்றது. ஆகவே எதிர்க்கட்சிகளின் நான்கு உறுப்பினர்களும் இனி குழுவில் கலந்துக் கொள்ள போவதில்லை என்று தீர்மானித்துள்ளோம் என்றார்.

    Zameera

    அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜோசப் ஸ்டாலின்

     

    (செ.கவிஷனா)


    இலங்கையில் கல்வித்துறையில் முறையான அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகிறதுடன், ஆசிரியர்கள் தங்கள் பதவி உயர்வுகளுக்காக மேலதிக கல்வியை மேற்கொள்ளும் போது ஆசிரியர்களை ஏமாற்றி பணம் அறவிடும் இத்தகைய நிறுவனங்கள் மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


    இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


    தகுதியான மற்றும் முறையான அங்கீகாரம் பெற்ற கல்வி வாய்ப்புகள் அரசாங்கத்தினால் போதுமான அளவில் வழங்கப்படாததால் இத்தகைய நிறுவனங்களை நம்பி ஏமாறுகிறார்கள். ஆசிரியர்கள் தங்கள் பதவி உயர்வுகளுக்காக கல்வி டிப்ளோமா படிப்புகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இத்தகைய போலி நிறுவனங்களில் பயிலும் ஆசிரியர்களின் சான்றிதழ்களைக் கல்வி அமைச்சு ஏற்க மறுப்பதால் அவர்களின் பணம் மற்றும் உழைப்பும் வீணாகிறது.



     இதேவேளை, நாட்டில் 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கையைக் கொண்ட சுமார் 157 சிறிய பாடசாலைகளை மூடுவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இவ்வாறான சிறிய பாடசாலைகளை பராமரிப்பதும் அவற்றுக்கான ஆசிரியர்களை நியமிப்பதும் வீண் வேலை என்று அரசாங்க தரப்பினர் கருதுகிறார்கள். சிறிய பாடசாலைகளை மூடிவிட்டு அங்கிருக்கும் மாணவர்களைப் பெரிய பாடசாலைகளுக்கு மாற்றுவதன் மூலம் அவர்களுக்குத் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்று முன்வைக்கும் வாதம் முற்றிலும் தவறானது.பயண வழிகாட்டிகளைப் படி


     குறிப்பாக, கல்வியானது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதாக அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் அமைந்துள்ளது. பின்தங்கிய குடும்பத்தின் மாணவர்களிள் கல்வி வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு பதிலாக அவர்களது அருகிலுள்ள பாடசாலைகளை மூடுவது கல்வி உரிமையை பறிக்கும் செயலாகும். 


    மேலும், அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் இலக்குகள் இன்னும் நிறைவேறாப்படாத நிலையில் தற்போது முன்னெடுக்கப்படும் இந்த நடவடிவக்கை கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு பதிலாக அதன் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளும் ஒரு தவறான அணுகுமுறையாகும். அத்துடன் பாடசாலைகளை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் தற்போது அரசாங்கத்தின் தான் உள்ளனர். எனவே அவசரப்பட்டு பாடசாலைகளை மூடுவதற்கு பதிலாக கல்வி நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து முறையான கல்விசார் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் இவ்வாறான தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும். 

    Zameera

    மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு விதிக்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

     


    (செ.சுபதர்ஷனி)



    மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட சந்தேகநபருக்கு மேல் நீதிமன்றத்தால்  விதிக்கப்பட்ட 15 வருட கடூழிய  சிறைத்தண்டனையை மேன் முறையீட்டு நீதிமன்றம் திங்கட்கிழமை (14) உறுதி செய்தது.


    நீதிபதி அமல் ரணராஜா,  நீதிபதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர்  அடங்கிய மேன் முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்றைய தினம்  மேற்படி வழக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  இதன்போது பிரதிவாதி  தாக்கல் செய்திருந்த  மேல்முறையீட்டில் எவ்வித அடிப்படையும் இல்லை என நீதிபதிகள் அமர்வு குறித்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்திருந்தது.


    2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தன் மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபாருக்கு எதிராக 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில் நீண்ட விசாரணையின்  பின்னர், தண்டனைச் சட்டக் கோவையின் 364(3) பிரிவின் கீழ், ஒரு குற்றச்சாட்டில்  அவர்  குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம், 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது. ஏனைய இரண்டு குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்திருந்தது.


    சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா அபராதமும், பாதிக்கப்பட்ட மகளுக்கு 4 இலட்சம்  ரூபா இழப்பீடு  செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அபராதம் மற்றும்  இழப்பீடு  செலுத்தத் தவறும் பட்சத்தில்  தலா 6 மாதங்கள் மேலதிக சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.  சம்பவம் இடம்பெற்ற நேரம் அல்லது திகதி தெளிவில்லையெனவும், மகளின் சாட்சியத்தை நம்ப முடியாது எனக் கூறியும் பிரதிவாதி மேன்முறையீடு செய்திருந்தார்.



    எனினும், முறைப்பாட்டாளரின் சாட்சியங்கள் மிகவும் நம்பகமானவை எனத் தெரிவித்த நீதிபதி கலாநிதி சுமுது பிரேமசந்திர, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட  எவ்வித அடிப்படை காரணமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.   அதற்கமைய குற்றவாளியின்  மேன்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், 2025 ஜூலை 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட  15 வருட கடூழிய  சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் இழப்பீடு  ஆகியவற்றை நடைமுறைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.

    Zameera

    தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

     

    தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தாய்லாந்து அரசு தீர்மானித்துள்ளது. 


    தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


    குறித்த வேலைவாய்ப்புகளுக்கு இலங்கையர்களை அனுப்புவதற்காக இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இரு விசேட ஒப்பந்தங்கள் நேற்று (14) கையெழுத்தாகியுள்ளன. 


    வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் தாய்லாந்து விஜயத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 


    இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான தொழிலாளர் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    Zameera

    களுபோவில அவிஷ்கவின் பிரதான உதவியாளர் கைது

     

    ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் உறுப்பினரும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருமான 'களுபோவில அவிஷ்க' என்பவரின் உள்நாட்டு போதைப்பொருள் வலையமைப்பை வழிநடத்தியதாகக் கூறப்படும் நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 


    பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே கொஹுவலை - களுபோவில பகுதியில் வைத்து இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


    கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2 கிலோ 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், 504 கிராம் ஹெரோயின், இலத்திரனியல் தராசு ஒன்று, 2 ரப்பர் முத்திரைகள் மற்றும் 2 கைத்தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 


    சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.


    Zameera

    இன்றைய வானிலை

     

    இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது 

    அத்துடன், அப்பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

    இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். 

    நேற்று (14) காலை 8.30 மணி முதல் இன்று (15) அதிகாலை 3.00 மணி வரையிலான காலப்பகுதியில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல, வஸ்லதாலாராம பகுதியில் 146.5 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

    அதேநேரம் நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

    நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

    காற்றானது தென்மேற்கு திசையிலிருந்தோ அல்லது குறிப்பிட்ட திசையின்றியோ மணித்தியாலத்துக்கு 25-35 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 

    கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 

    கொழும்பிலிருந்து காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

    இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அக்கொந்தளிப்பான கடற்பரப்புகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

    Monday, September 14, 2026

    SHAHNI RAMEES

    உயர்நீதிமன்றத் தீர்ப்பு பொலிஸ்மா அதிபருக்குக் கிடைத்ததன் பின்னரே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை!

     


    உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப் பிரதி பொலிஸ்மா அதிபருக்குக்

    SHAHNI RAMEES

    ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது! SLPP

     


    ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் உறுதியாக