Our Feeds



Thursday, September 10, 2026

Zameera

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகிறது – சாகர காரியவசம்

 

(க.சிவலிங்கமூர்த்தி)


மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் அதனை நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம் தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற விடயத்தை அரசாங்கமே நாட்டுக்கு வெளிப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


கட்சியின் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் புதன்கிழமை (09) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆதரவு இல்லை என்ற கருத்தை நாங்கள் முன்வைக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் நாளுக்கு நாள் காலதாமதம் செய்வதன் மூலம் மக்கள் ஆதரவு தொடர்பான உண்மையான நிலைமையை அரசாங்கமே நாட்டுக்கு வெளிப்படுத்தி வருகிறது.



மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் சந்திப்புகளுக்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதையும் நாம் பார்க்கின்றோம். ஆனால், ஒரு கூட்டத்துக்கு பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வதை மாத்திரம் வைத்து அந்தக் கட்சிக்கு நாடு முழுவதும் அதிகளவான மக்கள் ஆதரவு இருக்கின்றது என்று கூற முடியாது.


மக்கள் விடுதலை முன்னணி தேர்தல்களில் குறைந்த வாக்குகளைப் பெற்றிருந்த காலங்களிலும் நாட்டில் மிகப் பெரிய மக்கள் கூட்டங்களை நடத்தியுள்ளது. அந்தக் கட்சியுடன் நீண்டகாலமாக இணைந்துள்ள உறுதியான உறுப்பினர்கள் ஒரு குழுவினர் உள்ளனர். நாட்டின் எந்தப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் நடைபெற்றாலும் அவர்கள் அங்கு சென்று கலந்துகொள்வார்கள். எனவே, ஒரு கூட்டத்துக்கு திரண்டுவரும் மக்களின் எண்ணிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அந்தக் கட்சிக்கான மக்கள் ஆதரவை மதிப்பிட முடியாது.


எனினும், மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை நாங்கள் கூற வேண்டிய அவசியமில்லை. அந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியே அதன் செயற்பாடுகள் மூலம் நாட்டுக்கு வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, நடத்தபபட வேண்டிய மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வருகின்றனர். மக்கள் ஆதரவு இருப்பதாக அரசாங்கம் நம்புமானால், மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் தீர்ப்பை பெற்றுக்கொள்ள வேண்டும்.


தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் இருக்கக்கூடாது. மக்கள் தமக்கு ஆதரவாக இருக்கின்றார்கள் என அரசாங்கம் நம்பினால், தேர்தலை நடத்தி அந்த மக்கள் ஆதரவை நிரூபிக்க முடியும். மாகாண சபைகள் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கியமானவை. அவற்றுக்கான தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட்டு, மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்யும் உரிமையை அனுபவிக்க வேண்டும். தேர்தலை தொடர்ச்சியாக பிற்போடுவதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமை மட்டுப்படுத்தப்படுகிறது.


மக்கள் ஆதரவு தொடர்பில் அரசாங்கம் உண்மையாகவே நம்பிக்கையுடன் இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு ஏன் தயங்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதன் மூலம் தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவு தொடர்பில் அரசாங்கத்துக்கே அச்சம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களிடம் உருவாகிறது. எந்தவொரு அரசாங்கமும் மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். மக்கள் தமது வாக்குரிமையின் மூலம் தமது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். எனவே, மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் காலதாமதம் செய்யாமல் அதனை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.


மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அதற்கான சிறந்த அளவுகோல் தேர்தலாகும். தேர்தலை நடத்தாமல் மக்கள் ஆதரவு தொடர்பில் அரசாங்கம் பல்வேறு கருத்துகளை முன்வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, அரசாங்கம் தேர்தலை எதிர்கொண்டு மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

Zameera

முன்னாள் விமானப் படை தளபதி FCID யில் ஆஜர்


 முன்னாள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இன்று (10) முற்பகல் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். 


மிக் விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த விசாரணை பிரிவில் இன்று காலை 9.30 மணிக்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 


இதற்கமைய, அவர் இந்த விசாரணைப் பிரிவில் இன்று முற்பகல் ஆஜராகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

இலங்கையில் உள்ள ரோஹிங்யா அகதி - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விடுதலை கோரி முறையீடு!

 



இலங்கையில் உள்ள ரோஹிங்யா அகதி ஐ.நா மனித உரிமைகள்

SHAHNI RAMEES

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது: உயர் நீதிமன்றம் அதிரடி!




பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே

Zameera

நாமலின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை

 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக ஊழல் தடுப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்திய அவர், நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் போது முன்வைக்கப்படும் சாட்சியங்கள் குறித்து எவ்வித நம்பிக்கையும் கொள்ள முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அபேகோன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

SHAHNI RAMEES

புது CEO புதிய ஐபோன் மாடல்கள்! iPhone 18




ஆப்பிள் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) இரவு பெரிதும்

SHAHNI RAMEES

iPhone Duo: ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகம்!

 


‘ஐபோன் டியோ’ புதிய மாடல் ஐபோன்

உலகம் முழுவதும் டெக் ஆர்வர்லர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் நிறுவனத்தின் சர்ப்ரைஸ் அண்ட் ஷைன் நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் பார்க் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐபோன் 18 சீரிஸ் போன்கள் மற்றும் ஏர்பாட்ஸ் 5 மற்றும் புதிய வாட்ச் சிரீஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிளின் புதிய சிஇஓவாக பதவியேற்றுள்ள ஜான் டர்னஸ் தலைமையேற்று நடத்திய இந்த முதல் நிகழ்வை உலகம் எங்கும் கோடிக்கணக்கானோர் நேரிலும் நேரலையிலும் பார்த்தனர். ஆப்பிள் டிவி மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய போனை அறிமுகம் செய்தது.


​சர்வதேச சந்தையில் இதன் ஆரம்ப விலை (256GB) $1,999 (அமெரிக்க டாலர்) ஆகும்.  

​இலங்கையின் தற்போதைய அந்நிய செலாவணி விகிதம், இறக்குமதி வரிகள் (Import Taxes), சுங்கக் கட்டணங்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களின் லாப வரம்புகளைக் கணக்கிடும் போது:

​எதிர்பார்க்கப்படும் இலங்கை பெறுமதி:

​256GB (அடிப்படை மாடல்): சுமார் ரூ. 7,20,000 – ரூ. 7,80,000  

​512GB / 1TB மாடல்கள்: சுமார் ரூ. 8,20,000 – ரூ. 9,50,000  

​2TB (உயர் சேமிப்பு மாடல்): சுமார் ரூ. 11,50,000 – ரூ. 12,00,000  

​இலங்கையில் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்கள் (Authorized Resellers) மூலம் விற்பனைக்கு வரும் போது, இறக்குமதி வரி மற்றும் உத்தரவாதக் கட்டணங்களை பொறுத்து இந்த விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

Zameera

இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

 

இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்!


இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Zameera

நேபாள வெள்ளம்: மீட்புப் பணிகளுக்காக இலங்கை 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதநேய நிதி உதவி வழங்கிவைப்பு

 



(க.சிவலிங்கமூர்த்தி)



நேபாளத்தில் பொட்டே கோஷி ஆற்றில் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் காரணமாக இரசுவா, நுவாகோட், தாலிங் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருமளவான உயிரிழப்புகளும் பரவலான சொத்துச் சேதங்களும் ஏற்பட்டுள்ள நிலையில், அந்தத் துயரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் நேபாள அரசுக்கும் ஆதரவு வழங்கும் முகமாக இலங்கை அரசு சார்பில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதநேய நிதி உதவி இன்று புதன்கிழமை (9) காத்மண்டுவில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.


நேபாளத்துக்கான இலங்கையின் தூதுவர் ருவன்மதி டெல்பிட்டிய நேபாளத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சிஷிர் கானலைச் சந்தித்து இந்த நிதியைக் கையளித்தார்.


இச்சந்திப்பின்போது, தூதுவர் டெல்பிட்டிய இலங்கை அரசின் சார்பாகவும் நாட்டு மக்கள் சார்பாகவும் நேபாள மக்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இடைவிடாத ஒற்றுமையையும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இந்த இயற்கை இடரினால் தங்கள் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தனது இரங்கல்களையும் தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையிலேயே இந்த உடனடி உதவி வழங்கப்பட்டுள்ளது. 


தற்பொழுது நேபாள அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து மனிதநேயப் பணிகள், நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் அனைத்துக்கும் இந்த நிதிப் பங்களிப்பு பெரும் உதவியாக அமையும். 


மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அடிமட்டச் சமூகங்களுக்குத் தேவையான அவசர உதவிகளைச் சென்று சேர்ப்பதை இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த மனிதநேய நிதியின் கையளிப்பானது நீண்டகாலமாகக் காலங்காலமாக இலங்கைக்கும் நேபாளத்துக்கும் இடையே நிலவிவரும் மிக நெருக்கமான மற்றும் பாரம்பரியமான நட்பு, பரஸ்பர ஒற்றுமை மற்றும் பல்துறை ஒத்துழைப்புப் பந்தங்களை மேலும் மெய்ப்படுத்திப் பிரதிபலிக்கிறது. 


எதிர்காலத்திலும் தேவைப்படும் அனைத்து கடினமான காலங்களிலும் நேபாளத்துக்கும் அதன் மக்களுக்கும் தோள்நின்று உறுதுணையாக நிற்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நிலையான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசு எப்போதும் முழுமையான உறுதிபூண்டுள்ளது.


அத்துடன், தொடர்ச்சியாக தற்பொழுது நடைபெற்றுவரும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான எதிர்கால உதவிகளை வழங்குவதற்கான பொருத்தமான மற்றைய வழிகளையும் ஆராய்வதற்காக இலங்கை அரசு நேபாள அரசுடன் எப்போதும் நெருங்கித் தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என்றார்.

Zameera

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8 மாவட்டங்களில் கடும் பாதிப்பு

 

(செ.கவிஷனா)


நாட்டில் நிலவி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக 8 மாவட்டங்கள் வறட்சியான வானிலையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகித் தனசூரிய கருத்து தெரிவிக்கையில்,


இந்த நிலமையினால் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 47,368 குடும்பங்களைச் சேர்ந்த 154,167 நபர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பிரதேசங்களில் குடிநீர் ஆதாரங்களும் கிணறுகளும் முற்றிலும் வற்றிப்போயுள்ளதால், பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கும் குடிநீருக்கும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்த நீர் தட்டுப்பாட்டைத் தணிக்கும் வகையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 40,945 குடும்பங்களுக்கு உட்பட்ட 132,748 நபர்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிகபட்சமாக மொனராகலை மாவட்டத்தில் 08 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 13,139 குடும்பங்களின் 42,429 நபர்களுக்குக் குடிநீர் வழங்கி உதவப்படுகிறது. அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் 08 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 11,142 குடும்பங்களின் 33,394 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 03 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 3,794 குடும்பங்களின் 12,047 பேருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது பகுதி கிராமிய அனர்த்த நிவாரணக் குழு, பிரதேச செயலகம் அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 0716 807 807 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான குடிநீர் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனறார். 

Zameera

ஜனாதிபதிக்கான மக்கள் ஆதரவு அதிகரிப்பு – துஷாரி ஜெயசிங்க

 


ஜனாதிபதி அனுர குமார திசாநாயக மீது மக்களுக்கு இருக்கும் ஈர்ப்பும் ஆதரவும் நாளுக்கு நாள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் (NPP) பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜெயசிங்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதுகாப்பு தலைமை அதிகாரியின் பதவியை நீக்குவதற்கான சட்டமூலம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி மீது அடித்தட்டு மக்களுக்கு இருக்கும் தீவிர ஆர்வமும் அன்பும் குறித்து தனது சொந்த அனுபவங்களை விவரித்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியதாவது:

Zameera

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் – முன்னிலை சோசலிசக் கட்சி

 



(க.சிவலிங்கமூர்த்தி)Travel Guides & Travelogues

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தந்து கைச்சாத்திட்ட உண்மையான ஒப்பந்தங்கள் மற்றும் எட்டப்பட்ட உண்மையான உடன்படிக்கைகள் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நுகேகொடவில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு வருகை தந்து கெடட் பயிற்சி, பாதுகாப்புப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆயுதங்களின் பராமரிப்பை இலவசமாக மேற்கொண்டுள்ளமை போன்ற ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், அது தொடர்பில் நியாயமான சந்தேகம் ஒன்று எழுகிறது. இந்தியா போன்ற வல்லரசு நாட்டின் அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவது, இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் அல்லது சாதாரண அரச அதிகாரிகளால் கைச்சாத்திடக்கூடிய அத்தகைய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காக இருக்க முடியாது.


இந்தியப் பாதுகாப்பு அமைச்சரொருவர் இலங்கைக்கு வருகை தந்து தற்போது 38 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்கு முன்னர் அப்போதைய இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில்தான் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதுவும், இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு மிகவும் சிக்கலான சூழலொன்று நிலவிய அந்தக்காலப் பகுதியில் அது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர் வந்திருந்தார். நான்கு தசாப்தங்களுக்கு நெருக்கமான காலப்பகுதிக்குப் பின்னர் தற்போதைய வருகையானது கெடட் பயிற்சி அல்லது யுத்த ஆயுதப் பராமரிப்பு தொடர்பில் பேசுவதற்காக அமைந்திருக்க முடியாது. எனவே, உண்மையில் என்ன பேசப்பட்டது, எத்தகைய உடன்படிக்கைகள் எட்டப்பட்டன என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

இதற்கு முன்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் 2025 ஜனவரி இந்திய உத்தியோகபூர்வ பயணத்தின் போது பல உடன்படிக்கை ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. எனினும், அவைகள் எவை என்பது குறித்து இன்னமும் மக்களுக்குத் தெரியாது. 2025 ஏப்ரல் 5 ஆம் திகதியன்று இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அவற்றின் பிரதிகள் இன்னமும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.Executive Branch

அந்த ஏழு ஒப்பந்தங்களுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் உள்ளடங்கியுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு வருகை தருவது அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு மேலும் விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காகவே என இதற்கு முன்னர் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அரசாங்கம் இவை அனைத்தையும் மக்களிடமிருந்து மறைத்து வருகின்றது.

2025 ஏப்ரல் 5 ஆம் திகதி இந்தியாவுடனும், 2025 செப்டம்பர் 26 ஆம் திகதி ஜப்பானுடனும், 2025 நவம்பர் 14 ஆம் திகதி அமெரிக்க ஐக்கிய நாடுகளுடனும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அந்த மூன்று நாடுகளும் ஆசியாவின் நேட்டோ என அழைக்கப்படும் குவாட் யுத்தக் கூட்டணியின் நான்கு பங்காளிகளில் மூவராவர். இதன் ஊடாக இலங்கை ஆசியாவின் நேட்டோவுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கடந்த வாரத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் துய்யகொந்தா நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பொன்றுக்கு உடன்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை இத்தகைய உடன்படிக்கையொன்றுக்கு எட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். ஆசியாவின் நேட்டோவுடன் நிறுத்திக்கொள்ளாமல் பிரதான நேட்டோ அமைப்புடனேயும் இலங்கை பிணைக்கப்பட்டுள்ளதா? ஏன்ற சந்தேகம் உள்ளது. அரசாங்கத்தின் இந்தப் வெளிநாட்டுக் கொள்கையானது இலங்கையை ஒரு பூகோள அரசியல் பொறிக்குள் சிக்கவைக்கக் கூடும்.

புதிய அரசியல் கலாசாரம் ஒன்றுக்கான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த தற்போதைய இந்த அரசாங்கம், இவை அனைத்தையும் மக்களிடமிருந்து மறைத்து, மக்களின் தகவல் அறியும் உரிமைக்குத் தடை விதித்து, மிகமோசமான அரசியல் கலாசாரத்தையே பின்பற்றி வருகின்றது. எனவே, வெளிநாட்டு உறவுகள் துறையில் அரசாங்கம் எடுக்கும் அனைத்து நகர்வுகள் குறித்தும் உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இவற்றின் பிரதிகூலங்களை அரசாங்கத்தின் தலைவர்கள் மட்டும் அனுபவிக்கப் போவதில்லை, மாறாகச் சமூகம் முழுவதுமே எதிர்கொள்ள நேரிடும் என்றார்.


Zameera

இன்றைய வானிலை


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


அந்த திணைக்களம் இன்று (10) அதிகாலை வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


அந்த திணைக்களம் இன்று (10) அதிகாலை வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. 


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்,முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.