Our Feeds



Saturday, September 5, 2026

Zameera

6ம் திகதி மு.க பேராளர் மாநாடு - ஹக்கீம் தலைமையில் முக்கிய ஆலோசனை

 

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 32வது பேராளர் மாநாடு - 2026 மற்றும் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று (04.09.2026) காத்தான்குடியில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தலைவருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபையின் நகர பிதாவுமான எம்.எஸ். நளீம், காத்தான்குடி நகர சபையின் முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் (ஜே.பி), கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 



Zameera

2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு AI - செயற்கை நுண்ணறிவு பயன்படுத்த ஓராண்டு தடை - நியூயார்க் நகர மேயர் ஸஹ்ரான் மம்தானி அறிவிப்பு.


 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு AI - செயற்கை நுண்ணறிவு பயன்படுத்த ஓராண்டு தடை - நியூயார்க் நகர மேயர் ஸஹ்ரான் மம்தானி அறிவிப்பு. 


நியூயார்க் நகர மேயர் ஸஹ்ரான் மம்தானி, 2ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையான மாணவர்களுக்கு, மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு ஓராண்டு காலத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளார். இது ஏறக்குறைய 600,000 குழந்தைகளைப் இலக்கு வைத்த அறிவிப்பாகும். 


2026-27 கல்வியாண்டு முழுவதும் அமலில் இருக்கும் இந்தக் கொள்கை, 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை உள்ளடக்கியது. மேலும், இது அமெரிக்காவிலேயே மாணவர்களை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுக்கான மிக விரிவான தடை என்று விவரிக்கப்படுகிறது.


புதிய விதிகளின்படி, மாணவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் அந்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படாது, அதே நேரத்தில் அதனுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவு உரையாடல் செயலிகள் அனைத்து வகுப்புகளிலும் தடை செய்யப்படும்.


குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், மனிதத் தொடர்பு மற்றும் கடினமான பிரச்சனைகளைத் தாங்களாகவே தீர்ப்பதற்கான வாய்ப்புகள் தேவை.

Zameera

“குடு சலிந்து” தொடர்பான 2 பைல்களை காணவில்லை - நீதிமன்ற அதிகாரி தாய்லாந்துக்கு சென்றுவிட்டார்


 நிதி மற்றும் அழைப்பாணைகள் தொடர்பான பணிகளைக் கையாளும் பானதுறை நீதவான் நீதிமன்ற அதிகாரி ஒருவர், காணாமல் போன இரண்டு வழக்குக் கோப்புகள் குறித்த விசாரணைக்கு மத்தியில் இலங்கையிலிருந்து தாய்லாந்துக்குச் சென்றுள்ளார் என்று பொலிசார் தெரிவிப்பு.


காணாமல் போன கோப்புகள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சந்தேக நபரான சலிந்து மல்சித குணரத்ன, என்றழைக்கப்படும் “குடு சலிந்து” என்பவருடன் தொடர்புடையவை.


நீதிமன்றப் பதிவாளர் செப்டம்பர் 1 அன்று பானதுறை தெற்கு தலைமையக காவல்துறையிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, பனதுறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணையைத் தொடங்கியது.


புகார் அளிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, செப்டம்பர் 2 அன்று அந்த அதிகாரி தாய்லாந்துக்குச் சென்றதை காவல்துறை கண்டறிந்தது.


காணாமல் போன கோப்புகள், பானதுறை வடக்கு பகுதியில் குடு சலிந்துவின் அறிவுறுத்தல்களின் பேரில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கொலை வழக்கு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு தனி பணமோசடி வழக்கு தொடர்

Zameera

தேநீர் மற்றும் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு


 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டமையைக் கருத்திற் கொண்டு தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகளை 5 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


 


மூலப்பொருட்களின் விலைகள் குறையும் தன்மைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலைகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

Zameera

பம்பலப்பிடிய முதல் தெஹிவளை வரை அனுமதியின்றி இயங்கும் ஹோட்டல்களுக்கு கடும் எச்சரிக்கை அறிவிப்பு

 

பம்பலப்பிடிய முதல் தெஹிவளை வரை அனுமதியின்றி இயங்கும் ஹோட்டல்களுக்கு கடும் எச்சரிக்கை அறிவிப்பு. 


பம்பலப்பிட்டிய முதல் தெஹிவளை வரையிலான கடலோரப் பகுதியில் இயங்கிவரும் அனுமதியற்ற ஹோட்டல்கள் மற்றும் பிற கட்டமைப்புகளை செப்டம்பர் 10ம் தேதிக்கு முன் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக சிலுமின நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதியற்ற நிறுவனங்களை அகற்றுமாறு கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவித்தது.


கடலோரப் பகுதியில் இயங்கிவரும் அனுமதியற்ற கட்டுமானங்கள் மற்றும் வணிகங்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த உத்தரவைப் பின்பற்றத் தவறும் நிறுவனங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zameera

22ம் திருத்தத்தினால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையும் இல்லை. - மக்கள் போராட்ட முன்னணி

 

(க.சிவலிங்கமூர்த்தி)


அரசியலமைப்பின் 22 ஆவது அரசியலமைப்புச் சட்டமூலமானது தனிநபர்களினதும் ஒரு குறிப்பிட்ட குழுவினதும் நலன்களுக்காகவே கொண்டுவரப்படுகின்றது. இதனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது என மக்கள் போராட்ட முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.


நுகேகொடவில் அமைந்துள்ள என மக்கள் போராட்ட முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கத்துக்கு 02 ஆண்டுகள் நிறைவடைவதனை முன்னிட்டு விழாக்கள் நடத்தப்படும் அதேநேரம், தற்போதைய நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காகவே இந்த 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தன்னிச்சையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.



மக்கள் பங்கேற்பு ஜனநாயகம் பற்றிப் பேசும் அரசாங்கம், இச்சட்டமூலம் குறித்து எவ்வித பகிரங்க உரையாடலையும் நடத்தவில்லை.


இச்சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 50 இற்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசாங்கத்துக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய ஜானக அதிகாரி, லக்ஷ்மன் நிபுணாரச்சி போன்ற தமக்கு நெருக்கமானவர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.


பொதுமக்களின் சார்பில் ஆதரவாக மனுக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக எதிர்ப்ப தரப்பில் அரசியல் கட்சிகள், வெகுஜன இயக்கங்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் முன்வந்தனர்.


மேலும், குற்றச்சாட்டிற்கு உள்ளான நீதிபதியே வழக்கை விசாரிக்கும் அமர்வில் அமர்வதுடன், 13 நீதிபதிகள் கொண்ட முழுமையான அமர்வையோ அல்லது மக்கள் தீர்ப்புக்கு செல்வதையோ அரசாங்கத் தரப்பு சட்டத்தரணிகளும் சட்ட மா அதிபரும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.


நீதிமன்ற அமைப்புச் சட்டத்தின் 49 ஆவது பிரிவின்படி நலன்களின் முரண்பாடு ஏற்படும் போது நீதிபதிகள் விலக வேண்டும். ஆனால் இறுதியில் தலைமை நீதிபதியின் விருப்பத்துக்கு அமைவாகவே 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உருவாக்கப்பட்டது.


அத்துடன், இச்சட்டமூலத்தை மக்கள் தீர்ப்புக்கு கொண்டு செல்ல அரசாங்கம் பயப்படுகிறது. மக்கள் தீர்ப்புக்கு சென்றால் நிச்சயமாகத் தோல்வியடைவோம் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், பாராளுமன்றத்தில் உள்ள 159 பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு இதனை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.


குறைந்தபட்சம் நீதிவான் நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை என்ற அடிப்படைச் சட்ட அறிவு கூட இல்லாத உறுப்பினர்களே பாராளுமன்றத்தில் அதிகளவில் உள்ளனர். ஜனாதிபதியோ அல்லது மேலிடத்தில் இருப்பவர்களோ கூறுவதை மட்டுமே இவர்கள் செய்வார்கள்.


இவர்கள் கண்ணை மூடிக்கொண்டு கைகளை உயர்த்தி இதனை நிறைவேற்றுவார்கள். இது மக்கள் ஜனநாயகமல்ல, மாறாக அரசாங்கத்தின் தன்னிச்சையான ஜனநாயக விரோதப் போக்காகும். சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை, நீதித்துறை ஆகிய அனைத்துக்கும் மேலாக மக்களே முதன்மையானவர்கள்.


எனவே, தனிநபர்களின் நலனுக்காகக் கொண்டுவரப்படும் இந்த ஜனநாயக விரோத 22 ஆவது அரசியலமைப்புச் சட்டமூலத்தைத் தோற்கடிக்க மக்கள் வீதியிலிறங்கிப் போராட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Zameera

பொலிசார் பாதாள உலக குழுவினர் போல செயல்படுகிறார்கள் - கொதித்தெழும் சங்கம்!

 

தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தேசிய கூட்டு தொழிற்துறை சங்கத்தின் முக்கிய ஊடகவியலாளர் சந்திப்பு அதன் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தலைமையில் சனிக்கிழமை (05) கொழும்பில் இடம்பெற்றது.


இந்த சந்திப்பில், முச்சக்கர வண்டித் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


முச்சக்கர வண்டிகளை முறைப்படுத்தும் செயல்முறை ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக  பெரேரா குற்றம் சாட்டினார். 


இதன் காரணமாக, பயணிகளுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் மற்றும் தர்க்கங்கள் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், இம்முறைப்படுத்தல் செயல்முறை விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


மேலும், அடுத்த எரிபொருள் விலை குறைப்பு அல்லது அதற்கான நிவாரணம் பொதுமக்களை சென்றடைய வேண்டுமெனில், முச்சக்கர வண்டி முறைப்படுத்தல் செயல்முறை உடனடியாக முடிக்கப்பட வேண்டும் என்றும், முறைப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பிற்குள் மாத்திரமே எரிபொருள் விலை குறைப்பின் பயன்கள் முறையாக பயணிகளுக்கு கிடைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.



அத்துடன், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக நிர்ணயிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து கவலை தெரிவித்த அவர், இந்த முன்மொழிவு ஆயிரக்கணக்கான இளம் சாரதிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், வயது வரம்பை அதிகரிப்பதற்கு பதிலாக, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பொலிஸார் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எதிராக அத்துமீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதுடன் பொலிஸார் பாதாள உலக குழுக்களை போல செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.


எனவே, முச்சக்கர வண்டி முறைப்படுத்தல் செயல்முறையை விரைவாக முடிக்க வேண்டும், எரிபொருள் விலை குறைப்பின் பயன்கள் முறையாக பயணிகளுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும், குறைந்தபட்ச வயது வரம்பை 40 ஆக நிர்ணயிக்கும் முன்மொழிவை கைவிட வேண்டும் மற்றும் பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


 தேசிய ஐக்கிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தேசிய கூட்டு தொழிற்துறை சங்கத்தின் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு, முச்சக்கர வண்டித் துறையில் நிலவும் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், அரசாங்கம் இந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Zameera

QR முறையிலான எரிபொருள் விநியோகம் தொடரும்: இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்!

 

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான கியூஆர்  குறியீட்டு முறையின் கீழான எரிபொருள் விநியோகத் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 


மேற்காசியாவில் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.


இன்று சனிக்கிழமை (05) முதல் அமலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய்  லீற்றருக்கு 38 ரூபாவினாலும், நாப்தா  லீற்றருக்கு 35 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.


இதற்கமைய, ஒரு லீற்றர் உலை எண்ணெயின் விலை 248 ரூபாவிலிருந்து 210 ரூபாவாகக் குறைகின்றது.


உலை எண்ணெய் மற்றும் நாப்தா ஆகியவற்றின் விலைக் குறைப்பைக் கருத்திற்கொண்டு, வரவிருக்கும் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது பொதுமக்களுக்கு அதற்கான நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்

Zameera

தவறுகளைச் செய்தவர்களும் அதற்குத் துணை நின்றவர்களுமே சட்டத்தைக் கண்டு அச்சப்பட வேண்டும் - நளிந்த ஜயதிஸ்ஸ


 (எம்.மனோசித்ரா)


கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. அதனடிப்படையில் தவறுகளைச் செய்தவர்களும் அதற்குத் துணை நின்றவர்களுமே சட்டத்தைக் கண்டு அச்சப்பட வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,பயண வழிகாட்டிகளைப் படி


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறித்து நீதிமன்றமே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும். பொலிஸார், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அல்லது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஆகியவை நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும் தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றம் உரிய முடிவுகளை எடுக்கும்.


குற்றமொன்றில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய நபர் தான் எந்த அளவிற்கு அக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை நன்கு அறிவார். புலனாய்வு அதிகாரிகள் படிப்படியாக உண்மைகளை வெளிக்கொண்டு வருவதால், குற்ற உணர்ச்சி உள்ளவர்கள் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவிக்கக்கூடும்.



அத்துடன், கடந்த ஆட்சிக் காலத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைவிடப்பட்ட அல்லது திரும்பப் பெறப்பட்ட சில முறைப்பாடுகள் குறித்தும் மீண்டும் மறுவிசாரணைகள் நடத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்களும் தவறுகளுக்குத் துணை நின்றவர்களுமே அரசாங்கத்தின் இந்த சட்ட நடவடிக்கைகளைக் கண்டு அச்சப்பட வேண்டும் என்றார். 

Zameera

குளத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து 17 வயது இளைஞன் பலி!


 திவுல்வெவ, வெலிகொல்லேவ வீதியில் ரம்பவெல குளக்கரையின் மீது பயணித்துக் கொண்டிருந்த உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


 


குளக்கரையில் கட்டப்பட்டிருந்த மாடொன்றைக் காப்பாற்ற முயன்றபோது உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து  குளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


 


விபத்தில் படுகாயமடைந்த உழவு இயந்திர சாரதி உட்பட அதில் பயணித்த மூவர் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


 


எனினும், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளான். இவ்வாறு உயிரிழந்தவர் வெலிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.


 


சம்பவம் தொடர்பாக திவுல்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு

 





நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக  லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தைத் தொடர்ந்து, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விற்பனை விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

மேலும்,  5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,750 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது.


அதேபோன்று, 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலையாக 815 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

Zameera

மின்வெட்டு ஏற்படாது – எரிசக்தி அமைச்சர்


 மின்சார விநியோகம் தடையின்றித் தொடர்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.


 


2026 மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான நிலக்கரியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


 


நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு இடம்பெறவுள்ளதாக பரவிவரும் செய்திகள் உண்மையற்றவை என நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.

Zameera

இன்றைய வானிலை நிலவரம்


 நாட்டின் பல மாகாணங்களில் இன்று (5) பிற்பகலில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


 


அதற்கமைய ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


 


சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.


 


இதற்கு மேலதிகமாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.



சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.


 


அதற்கிணங்க இன்று (05) நண்பகல் 12.08 அளவில் மொரட்டுவ, கெஸ்பேவ, பொல்கஸ்ஓவிட்ட, ஹந்தபாங்கொட, ஸ்ரீ பலாபத்தல, பொகவந்தலாவ, இதல்கஸ்சின்ன, யுதகனாவ, கொட்டியாகல மற்றும் பாணம ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.