Our Feeds



Friday, August 14, 2026

SHAHNI RAMEES

(Interpol) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட ஷிரான் பாசிக் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!


டுபாயில் கைது செய்யப்பட்ட, பிரபல போதைப்பொருள்

SHAHNI RAMEES

A/L எழுத சென்ற பாடசாலை மாணவிகளின் ஹிஜாபை பலவந்தமாக அகற்ற முயற்சித்த பரீட்சை மேற்பார்வையாளர்!

 


"அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தில்

SHAHNI RAMEES

முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை...

 


முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு

SHAHNI RAMEES

போதைப்பொருள் கடத்தல் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டிய பொட்டி விளக்கமறியலில்....

 


ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய

Zameera

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் நுரைச்சோலையில் பறிமுதல்


 சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய தொகுதியொன்றை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். 


நுரைச்சோலையின் பனையடி பகுதியில் நேற்று (13) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இதன்போது பீடி இலைகளை ஏற்றிவந்த லொறியொன்றும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 


வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இதன்போது, சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்டு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த, ஆயிரத்து 1464 கிலோ கிராமிற்கும் அதிகமான பீடி இலைத் தொகுதி இவ்வாறு கைப்பற்றப்பட்டது. 


இந்த நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட பீடி இலைத் தொகுதியும் லொறியும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Zameera

திருகோணமலை மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம்


 திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) நடைபெற்றுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்தி, மீன்பிடிப் படகுகளைப் பதிவு செய்தல், மீன்பிடி இறங்குதுறைகளின் பிரச்சினைகள், சிறிய இயந்திரப் படகுகளுக்கான அனுமதி, மீனவர்களின் ஆவண மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறைக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்த்தல், மீனவர்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தை அமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கும் கவனம் செலுத்தப்பட்டது.

மீனவர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு பொறுப்பான நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு, தீர்வுகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடுத்தடுத்த மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Zameera

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்துக்கு


 சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். 


விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் 35ஆவது குழு அமர்வில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்குப் புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


இந்த அமர்வு இன்று (14) மற்றும் நாளை (15) ஆகிய இரண்டு நாட்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. 


இதன்போது, இது தொடர்பாக இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது. 


புதிய அரசாங்கத்தின் கீழ் கடந்த 18 மாத காலத்தில் விசேட தேவையுடையவர்களுக்காக பல கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நலனுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். 


குறிப்பாக, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விசேட தேவையுடைய ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் விசேட தேவையுடையவர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, சட்டவாக்கச் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்காற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


அத்துடன், விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், அது தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


மேலும், கல்வி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் உள்ளிட்ட பல அமைச்சுக்கள் விசேட தேவையுடையவர்களின் தேவைகளுக்காக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் உபாலி பன்னிலகே மேலும் தெரிவித்தார்.

Zameera

91 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்




 இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 


இதன்படி, நேற்று (13) வரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,346 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 


அத்துடன், டெங்கு நோய் காரணமாக 68 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 


இதில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். 


இதன்படி, ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 


இதனிடையே, இம்மாதத்தின் நேற்றைய தினம் வரையிலான கடந்த 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 


இந்த ஆண்டின் இதுவரை கழிந்த காலத்தில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர். 


இதன்படி மேல் மாகாணத்தில் 48,383 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 


அதேபோல், தென் மாகாணத்தில் 13,479 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,160 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

சிறுமியை தாக்கி வீதியில் கைவிட்டதாகக் கூறப்படும் இருவர் கைது!


கண்டி, வத்தேகம பகுதியில் சிறுமி ஒருவரை
SHAHNI RAMEES

மலேசியாவில் "கஞ்சிபானையை” கோட்டை விட்டதா இலங்கை பொலிஸ்?

 



மலேசியாவில் தங்கியுள்ளதாக கூறப்படும்

Zameera

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை


அமெரிக்க வரலாற்றில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய 3 மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

ஓட்டல் ஊழியரைக் கொலை செய்த என்டனி  டேரல் (66), தனது காதலியை சுட்டுக்கொன்ற கார்லோஸ் (70) மற்றும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஜெரமி வில்லியம்ஸ் (42) ஆகிய 3 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இவர்களுக்கு ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதற்கு முன்பு கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் 3 கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

Zameera

கல்முனை வைத்திய உதவியாளர்களின் ஆடை விவகாரத்தை அரசியலாக்காமல் அரச மட்டத்தில் தீர்வு காண வேண்டும் – ஹிதாயத் சத்தார்


 கல்முனை வைத்திய உதவியாளர்களின் ஆடை விவகாரத்தை அரசியலாக்காமல் அரச மட்டத்தில் தீர்வு காண வேண்டும் – ஹிதாயத் சத்தார்

கல்முனை வைத்திய உதவியாளர்களின் ஆடை தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவதை விட, ஆளும் தரப்பில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் உயர்மட்டத்துடன் பேசி உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஹிதாயத் சத்தார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், எதிர்க்கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் குரல் கொடுக்கவில்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், ஆளும் தரப்பில் உள்ள உறுப்பினர்களே இந்த விடயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சட்டரீதியான தீர்வை பெற்றுக்கொடுப்பதே பயனுள்ளதாகும்.

இந்த அரசாங்கத்திற்கு பெருமளவிலான சிறுபான்மை மக்களும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் தரப்பில் உள்ளனர். எனவே, இந்த விடயம் மேலும் இன, மத பிரச்சினையாக வளர்வதற்கு இடமளிக்காமல், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் தெளிவான சுற்றுநிருபங்கள் மற்றும் விதிமுறைகள் இருக்கின்றது, அவை அனைத்து அரச நிறுவனங்களிலும் பாரபட்சமின்றி ஒரே விதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவற்றை மீறி இன அல்லது மத அடிப்படையில் பாரபட்சமாக செயற்பட்டவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்க முடியும். அரசியல் இலாபத்தை விட சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகங்களினதும் கண்ணியம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என ஹிதாயத் சத்தார் மேலும் தெரிவித்தார்.

Zameera

இன்றைய வானிலை முன்னறிவிப்பு


 மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


இதில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடும். 


அத்துடன், பொத்துவில் வரையிலான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும். 


காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம் வரையிலான கடற்பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். 


குறிப்பிட்ட சில கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.