Our Feeds



Wednesday, August 12, 2026

Zameera

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்திற்கு சுகாதார அமைச்சர், சுமந்திரன் போன்றோர்கள் தலையிட்டு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எச்.எம்.எம். ஹரீஸ்


 கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்திற்கு சுகாதார அமைச்சர், சுமந்திரன் போன்றோர்கள் தலையிட்டு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எச்.எம்.எம். ஹரீஸ்


கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மத, கலாச்சார மற்றும் நிர்வாக ரீதியான சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க இலங்கை தமிழசு கட்சி செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தலையிட்டு, தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிர்வாகத்துடனும் சமூகத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அதேவேளை, சுகாதார அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.


ஊடகங்களுக்கு இவ்விடயம் தொடர்பில் இரண்டாவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில், கல்முனை என்பது தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் நீண்டகாலமாக ஒற்றுமையுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வரும் பிரதேசமாகும். இங்கு நிலம், நிர்வாகம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள போதிலும், அவை மத அல்லது கலாச்சார முரண்பாடுகளாக மாறுவதற்கு இதுவரை நாம் இடமளித்ததில்லை.


குறிப்பாக, கல்முனை உப பிரதேச செயலகத்தில் மத வழிபாட்டு தளம் அமைத்தது தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையும் பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக சுமூகமாகத் தீர்க்கப்பட்ட அனுபவம் எமக்கு உள்ளது. அதேபோன்று, தற்போதைய கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்தையும் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக மாற்றாமல், பொறுப்பான முறையில் அணுகி தீர்வு காண வேண்டும்.


இந்த நிலையில், கல்முனை தமிழ் மக்களுக்காக வழக்காட முன்வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல் தலைவர் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.


தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளுக்காக நீதிமன்றங்களிலும் அரசியல் ரீதியிலும் வாதாடி வந்த சுமந்திரன் அவர்கள், கல்முனையில் வாழும் தமிழ் மக்களுடன் மட்டுமல்லாமல், இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் மத, கலாச்சார உரிமைகளையும் சமமாக மதிக்கும் வகையில் இந்த விடயத்தில் ஒரு நல்லிணக்கமான தீர்வை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.


இது ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பிரச்சினையாகப் பார்க்கப்படக் கூடாது. அரச சேவையில் பணியாற்றும் ஒருவரின் மத மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான பிரச்சினை உருவாகும்போது, அதனை சட்டம், அரச சுற்றறிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் அணுகுவதே சரியான வழியாகும். சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவுடனும் இந்த விடயத்தில் முன்னணியில் இயங்கும் நபர்களுடனும் கலந்துரையாடி, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நியாயமானதும் சட்டபூர்வமானதுமான தீர்வை வழங்க வழியேற்படுத்த வேண்டும்.


கல்முனை கடந்த காலத்தில் பல சவால்களைத் தாண்டியும் நல்லிணக்கத்துடன் பயணித்துள்ளது. அந்த வரலாற்றை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கு அமைதியானதும் பரஸ்பர மரியாதை கொண்டதுமான கல்முனையை வழங்குவதே நமது பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார். 


ஊடகப்பிரிவு

Zameera

கற்பிட்டி களப்பில் வல்லம் கவிழ்ந்து விபத்து : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு


 கற்பிட்டி களப்பில் வல்லம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்க 


கற்பிட்டி களப்பின் கொடேபிட்டிய தீவிற்கு அருகில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையை எடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் குறித்த தம்பதியினரும் நேற்று மதியம் வல்லம் ஒன்றில் சென்றுள்ளனர். 


இதன்போது அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக குறித்த வல்லம் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அந்த சந்தர்ப்பத்தில் தம்பதியரில் கணவர் ஒரு பிள்ளையை காப்பாற்றியுள்ளதுடன், மற்றைய பிள்ளையை மனைவி பிடித்துக் கொண்டு கரைக்கு நீந்திச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 


இதற்கிடையில், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்த படகு ஒன்றிலிருந்தவர்கள் கவிழ்ந்திருந்த வல்லத்தைக் கண்டு, அந்தப் பகுதியைச் சோதனையிட்டபோது விபத்துக்குள்ளான ஆணையும் ஒரு பிள்ளையையும் கண்டுள்ளனர். 


அவர்களின் அருகில் சென்றபோது இருவரும் நீரில் மூழ்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் படகிலிருந்தவர்கள் மீட்டுள்ளனர். 


அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, பெண் மற்றைய பிள்ளையை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு கரைக்கு நீந்திச் செல்வதைக் கண்டு, அவர்களையும் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்துள்ளனர். 


எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே குறித்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 7 வயதுடைய சிறுவனும் 13 வயதுடைய சிறுமியும் என தெரியவந்துள்ளது. 


உயிரிழந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர் வல்லத்தை செலுத்திய தம்பதியினரின் பிள்ளை எனவும், மற்றைய பிள்ளை அந்த தம்பதியினரின் உறவினரான சிறுமி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SHAHNI RAMEES

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

 

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும்
Zameera

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு


 நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

SHAHNI RAMEES

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஹிஜாப் சர்ச்சை! - NFGG அப்துல் ரஹ்மான் சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம்.

 

சுகாதார உதவியாளர்கள் சீருடை விவகாரம்:

ShortNews

CID யில் இருந்து வௌியேறினார் யோஷித!


வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.

அவர் குறித்த திணைக்களத்தில் இன்று (12) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார்.

இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக காலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அங்கிருந்து அவர் வௌியேறியுள்ளார்.

ShortNews

வீதி அபிவிருத்திப் பணிகளை உரிய காலத்தில் நிறைவு செய்யவும் - ஜனாதிபதி!


கிராமிய வீதி அபிவிருத்தியின் போது மாவட்டக் குழுக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அவசர மக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அப்பணிகளை நடைமுறைப்படுத்துமாறும், பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக 2022 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் மீள ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (11) நடைபெற்ற நெடுஞ்சாலைகள் அமைச்சு மூலம் 2026 ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அனைத்து வீதி அபிவிருத்திப் பணிகளையும் உரிய காலத்தில் நிறைவு செய்து பொதுமக்களுக்கு செயற்திறனான போக்குவரத்து கட்டமைப்பை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு மேலும் வலியுறுத்தினார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலும் டித்வா அனர்த்த நிலைமையின் கீழ் ஒதுக்கப்பட்ட 402 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழும் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டமிடல்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

மத்திய அதிவேக வீதியின் 4 ஆம் கட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள குருநாகல் - கலேவெல மற்றும் ருவன்புர அதிவேகப் பாதையின் திட்டமிடல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகம வரையிலான பகுதி மற்றும் துறைமுக நுழைவுச் சாலையின் நிர்மாணப் பணிகள், மத்திய அதிவேகப் வீதியின் 3 ஆம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொத்துஹெர - கலெகதர வரையிலான பகுதி உள்ளிட்ட அதிவேக வீதியின் நிர்மாணத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்தும் இங்கு விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

அதிவேக வீதியின் கட்டமைப்பின் நுழைவு மற்றும் இடைமாறல் தொடர்புகள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்தும், குருநாகல் - கலேவெல வீதி நிர்மாணத்தின் போது நட்டஈடு வழங்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பேஸ்லைன் வீதியை கிருலப்பனை சந்தியிலிருந்து கொழும்பு - ஹொரணை வரை நீடிக்கும் திட்டம் மற்றும் பதுளை - செங்கலடி வீதியின் அம்பாறை - உஹனை வரையிலான பகுதியின் அபிவிருத்திப் பணிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், வீதிகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனரமைக்க வேண்டுமெனினும், பல வீதிகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாத காரணத்தினால் அவற்றை புனர்நிரமாணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

அவ்வாறு கடந்த 15 ஆண்டுகளில் எந்தவிதமான புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாத 130 வீதிகள் (A மற்றும் B) உள்ளன என்றும் இதன்போது தெரியவந்தது.

நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் பாலங்கள் மற்றும் மேம்பாலங்கள் நிர்மாணத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், டித்வா அனர்த்த நிலையைக் கருத்திற்கொண்டு பதுளை - பிபிலை வீதியில் ஏற்பட்டுள்ள நிலைமையை முகாமைத்துவம் செய்து, அவ்வீதியின் அபிவிருத்திப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் போக்குவரத்து தொடர்புகள் மற்றும் சொத்து முகாமைத்துவத் திட்டம், வீதிகள் மற்றும் நகர் பகுதிகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போதுள்ள தரவு கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும் செயற்படுத்தப்படும் National Traffic Database திட்டம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இத்திட்டம் பொலிஸ், வீதிப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் வீதி முகாமைத்துவப் பிரிவுகள் ஒன்றிணைந்த ஸ்மார்ட் வீதி சமிக்ஞை மற்றும் கேமரா தொகுதியாக எதிர்வரும் சில ஆண்டுகளில் மேம்படுத்தப்படவுள்ளதுடன், வீதி நெரிசலைக் கட்டுப்படுத்துவதும் ஒழுக்க நெறிமிக்க வீதிப் பண்பாட்டை உருவாக்குவதுமே இதன் நோக்கங்களாகும்.

தற்போது செயற்படுத்தப்பட்டு வரும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் பொதுமக்கள் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அந்த அபிவிருத்திப் பணிகளை செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும், கிராமிய வீதி அபிவிருத்தி தொடர்பில் மாவட்ட குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் செயற்படுத்தப்பட்டதன் முன்னேற்றத்தையும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் வீதி அபிவிருத்தித் திட்டங்களை மாவட்ட மட்டத்தில் முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் சிறிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பினை கட்டம் கட்டமாக மாவட்டச் செயலாளர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ShortNews

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (12) காலை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டிருந்தது.

ShortNews

தங்காலையில் துப்பாக்கிச் சூடு!


தங்காலை, குடவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (12) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மீன்பிடிப் படகு உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

SHAHNI RAMEES

கோட்டாவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார நீதிமன்றில் முன்னிலை!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்

SHAHNI RAMEES

யோஷித ராஜபக்ஷ CID யில் முன்னிலை!


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன்

SHAHNI RAMEES

மெகசின் சிறைக்கு போதைப்பொருளை விநியோகித்த சிறை அதிகாரி கைது!

 


பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள்

SHAHNI RAMEES

இந்தத் துயரமான சந்தர்ப்பத்தில் கொலம்பிய மக்களுடனும், அந்த நாட்டு அரசாங்கத்துடனும் இலங்கை துணைநிற்கும்!

 

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தினால்