Our Feeds



Monday, August 10, 2026

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது!

 



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

SHAHNI RAMEES

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை - ஐக்கிய மக்கள் சக்தி ஆலோசனை

 


உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற

SHAHNI RAMEES

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

 


க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின்

SHAHNI RAMEES

பொலிஸ்மா அதிபர் பற்றிய கருத்து - சாகர காரியவசம் இன்று மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலை!

 

பொலிஸ்மா அதிபர் தொடர்பாக வெளியிட்ட கருத்து

Sunday, August 9, 2026

SHAHNI RAMEES

நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்து உலமா சபைக்கும் தெளிவூட்டிய நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார!

 


இலங்கையின் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்புகள்

SHAHNI RAMEES

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,000 ஐ நெருங்குகிறது: 65 பேர் பலி

 


இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின்

SHAHNI RAMEES

தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமாருக்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு!


தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில்

SHAHNI RAMEES

22ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தம் சர்வாதிகார ஆட்சிக்கான முதற்படி!

 


உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின்

SHAHNI RAMEES

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்தாலும் சிறைச்சாலை மோதல் தொடர்கின்றது! - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

 


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற பாரிய மோதல்

SHAHNI RAMEES

சிறை மோதல்களுக்கும் ராஜபக்ஷர்களுக்கும் தொடர்பா?" : அரசாங்கத்தை சாடிய நாமல்!

 


சிறைச்சாலைகளில் இடம்பெறும் மோதல்களுக்கும்,

Saturday, August 8, 2026

ShortNews

தரக் குறைபாடுகள் காரணமாக சில நாடுகளில் புதிய இலங்கை கடவுச்சீட்டுகள் நிராகரிப்பு - முஜீப் எம்.பி.


புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் காணப்படும் தரக்குறைபாடுகள் காரணமாக, முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை முறையாக வாசிக்க முடியாததால், அது போலியானதாக இருக்கலாம் என பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் சந்தேகித்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை கடவுச்சீட்டுகளில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆக குறைக்கப்பட்டுள்ள போதிலும், கடவுச்சீட்டு வழங்குவதற்கான ரூ.6,000 கட்டணத்தில் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

புதிய கடவுச்சீட்டுகளில் குறிப்புகள் அல்லது நீட்டிப்புகளுக்கான பக்கங்கள் இடம்பெறவில்லை என்றும், அச்சுத் தரம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குடிவரவு முத்திரைகளின் மை எதிர்பக்கத்திலும் பதியும் நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில நாடுகள் இந்தக் கடவுச்சீட்டுகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரக்குறைபாடுகள் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

கடவுச்சீட்டுகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்தமை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவானது என்றும், பல நாடுகளும் இதே நடைமுறையைப் பின்பற்றுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், மின்னணு கடவுச்சீட்டு (e-passport) முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ShortNews

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து!



தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஒரு வழியில் (Lane) மட்டுமே வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழியில் வாகனமொன்று இயந்திரக் கோளாறுக்கு உள்ளானமையினாலும் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ShortNews

இந்தியா-இலங்கை எரிசக்தித் துறை ஒத்துழைப்பு குறித்து ஆய்வு!


இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான எரிசக்தித் துறை இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இவ் ஆய்வு கூட்டத்தில், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் இந்தியக் குழுவிற்கு தலைமை தாங்கினார், அதேவேளை இலங்கைக் குழுவிற்குத் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தலைமை தாங்கினார்.

பிராந்தியத்தில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும் மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், எல்லை தாண்டிய மின்சார வர்த்தகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பரிமாற்றக் கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

பொது - தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியாக கட்டண அடிப்படையிலான போட்டி ஏல (TBCB) கட்டமைப்பு மூலம் பரிமாற்ற அமைப்பு மேம்பாட்டில் தனது அனுபவத்தையும் இந்தியத் தரப்பு பகிர்ந்து கொண்டது.

நிலையான வளர்ச்சி மற்றும் பிராந்திய எரிசக்தி பாதுகாப்புக்காக மின் துறைசார்ந்த இருதரப்பு வழிமுறைகளின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தரப்பினரும் ஆய்வு செய்ததுடன், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.