Our Feeds



Sunday, August 30, 2026

ShortNews

பால்மா, யோகட் விலையில் மாற்றம் இல்லை!



பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

BREAKING NEWS என குறிப்பிட்டு, பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தற்போது சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் பொய்யானவை எனவும், அவ்வாறான செய்திகளை உறுதிப்படுத்தாமல் பகிர்வதைத் தவிர்க்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

போலி அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பகிர்வதன் மூலம் நுகர்வோர் மத்தியில் தேவையற்ற அச்சம் ஏற்படவும், சந்தையில் தவறான புரிதல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது. 

எனவே, சந்தேகத்திற்குரிய விலை மாற்றங்கள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ShortNews

நேபாள பெருவெள்ளம் - பலி எண்ணிக்கை 675ஆக உயர்வு!


மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 675 ஆக உயர்ந்தது.

பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து உடல்களை மீட்டு வருகின்றனர்.

ஒகஸ்ட் 26 அன்று நேபாளத்தைத் தாக்கிய இந்த பேரிடரைத் தொடர்ந்து, 2,400-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். 

நேபாள பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களிலும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

சித்வான் மாவட்டத்தில் அதிகபட்சமாக 248 சடலங்கள் மீட்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நவல்ப்பராசி கிழக்கு (158), நவல்ப்பராசி மேற்கு (75) மற்றும் கோர்கா (54) ஆகிய மாவட்டங்களில் சடலங்கள் மீட்கப்பட்டன. 

மேலும், தாடிங் (49), நுவாகோட் (41), தனஹு (31) மற்றும் ரசுவா (13) ஆகிய மாவட்டங்களிலிருந்தும் சடலங்கள் மீட்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளது. 

நேபாள - திபெத் எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து நிகழ்ந்த பனி மற்றும் பாறைச் சரிவு காரணமாக இந்த பேரிடர் ஏற்பட்டது. 

இதன் விளைவாக உருவான நீர், சேறு மற்றும் குப்பைகள் கலந்த பெருவெள்ளம் கீழ்நோக்கிப் பாய்ந்து, நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது. சாலைகள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியதுடன், நீர்மின் நிலையங்களையும் அழித்தது. 

பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தபோதிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

பேரிடர் பாதித்த பகுதிகளிலிருந்து 163 வெளிநாட்டினர் உட்பட சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் 5,000-க்கும் மேற்பட்ட நேபாள ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 11,000-க்கும் அதிகமான பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

காணாமல் போனவர்களைக் கண்டறியவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சென்றடையவும் தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் முகாமைத்துவ ஆணைக்குழுவின் (NDRRMA) தலைமையிலான குழுக்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை தொடர்ந்து, இதுவரை 184 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூவருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நேபாள சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்தத் தகவல்களின்படி, மொத்தம் 187 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் அல்லது அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். 

அதேவேளையில், 420 வெளிநாட்டினர் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. 

மீட்கப்பட்டவர்களில் 114 இந்தியர்கள், 27 சீனர்கள் மற்றும் 20 தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் அடங்குவர். 

மீதமுள்ளவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் பல உடல்களை மீட்கவும், காணாமல் போனவர்களைக் கண்டறியவும், பரவலான பாதிப்புகளுக்குள்ளான மக்களுக்கு உதவிகளை வழங்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதால், தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Saturday, August 29, 2026

Zameera

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்: சஜித் அரசாங்கத்திற்கு சவால்


 தற்போதைய அரசாங்கம் மக்களுக்குச் சிறந்த சேவையை முன்னெடுப்பதானால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். 


ஹம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம விஜிதபுர பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


அப்போதுதான் தேர்தல் மூலம் அரசாங்கத்தின் மீது மக்களுக்குள்ள செல்வாக்கினை அறிந்துகொள்ள முடியும். 


விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், கைத்தொழிலாளர்கள் கூட மாகாண சபைத் தேர்தல் வரும் வரை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 


இந்நாட்டின் புதிய பயணத்தின் புதிய பாதை, திருப்புமுனை ஐக்கிய மக்கள் சக்தி மூலமாகவே உருவாக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


நாட்டில் பிரச்சினைகள் எண்ணற்ற அளவில் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க முயற்சிக்கின்றது. 


அரசாங்கத்திடம் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில்கள் இல்லை. 


இந்நாட்டின் ஜனநாயகத்தை அழித்து, நீதிமன்றத்தின் சுதந்திரத்தை அழிக்கும் வேலையையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. 


நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டை பலவீனப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை அழிப்பதற்கே இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. 


அரசாங்கம் நீதிமன்றத்தில் தலையிட்டு அழுத்தம் கொடுத்து ஜனநாயகத்தை அழித்து நாட்டில் தனிக் கட்சி ஆட்சியை ஸ்தாபிக்கவே முற்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

Zameera

பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்கள்


 எதிர்காலத்தில் பொலிஸ் சேவைக்கு 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். 


இன்று (29) நடைபெற்ற ஊவா மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொலிஸ்மா அதிபர் இதனைக் குறிப்பிட்டார். 


இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர், மனித வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை குறித்து ஜனாதிபதி மற்றும் அமைச்சருக்கு அறிவித்ததன் பின்னர், பொலிஸ் சேவைக்கு 10,000 பேரை இணைத்துக்கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார். 


அத்துடன், தற்போது பொலிஸ் சேவையில் 38,000 உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்தப் பற்றாக்குறையுடனேயே சேவையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். 


மேலும், ஓய்வு மற்றும் ஏனைய காரணங்களால் வருடமொன்றுக்கு சுமார் 2,000 பேர் பொலிஸ் சேவையிலிருந்து விலகுவதாகவும் பொலிஸ்மா அதிபர் இங்கு மேலும் தெரிவித்தார். 


எமக்குத் தேவையான மனித வளங்கள் போதியளவு இன்மை, உத்தியோகத்தர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை தொடர்பில் ஜனாதிபதிக்கும், அமைச்சருக்கும் அறிவித்ததன் பின்னர் மனித வளத்தை அதிகரிக்க 10,000 பேரை இணைத்துக்கொள்ள எமக்கு அனுமதி கிடைத்தது. 


ஏனெனில், நாங்கள் ஆட்சேர்ப்பு செய்யாவிட்டால், வயது முதிர்வு மற்றும் ஏனைய காரணங்களால் சேவையிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு இரண்டாயிரம் அளவில் இருக்கும். 


இதற்கமைய, இன்றைய நிலவரப்படி சுமார் 38,000 அத்தியாவசிய உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையுடனேயே இந்த சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Zameera

கொழும்பு முதல் பொத்துவில் வரையான கடற்பகுதிகளுக்கு அலைகள் உயரும் எச்சரிக்கை!


 கொழும்பு முதல் காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலைகளின் உயரம் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.


அதன்படி, குறித்த கடற்பகுதிகளில் கடல் அலைகள் சுமார் 2 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருவளையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையை நோக்கி வரக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எனவே, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Zameera

கோதுமை மாவு விலை உயர்வு: தேசிய நுகர்வோர் முன்னணி கடும் கண்டனம்


 கோதுமை மாவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 



அண்மையில் கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 முதல் 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 17 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


இதன்படி, சந்தையில் ஒரு கிலோ பிரீமா கோதுமை மாவு 205 ரூபாய் வரையிலும், பாக்கெட் செய்யப்பட்ட கோதுமை மாவு 250 முதல் 260 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், மக்களின் கவனத்தை திசைதிருப்பி நிறுவனங்கள் ரகசியமாக இத்தகைய விலை உயர்வை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். 


இந்தத் திடீர் விலை உயர்வு குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையோ அல்லது வணிக அமைச்சரோ எந்தவித முன்னறிவிப்பையும் தெளிவுபடுத்தலையும் மக்களுக்கு வழங்கவில்லை என அவர் தெரிவித்தார்.


இந்த விலை அதிகரிப்பால் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 



இவர்கள் தங்களின் அன்றாட உணவிற்காக ரொட்டி மற்றும் கோதுமை மாவு சார்ந்த உணவுகளையே அதிகம் நம்பியுள்ளனர். மேலும், கோதுமை மாவின் விலை உயர்வால் பாண், ரொட்டி, கொத்து, பராட்டா மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வெேகரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், நுகர்வோரின் நுகர்வுத் திறனும் வெகுவாகக் குறையும் என அவர் எச்சரித்தார்.


எனவே, இந்த விலை உயர்வுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை வணிக அமைச்சர் உடனடியாக நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. 


புதிய வரிகள் ஏதேனும் விதிக்கப்பட்டுள்ளதா அல்லது தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக தன்னிச்சையாக விலையை உயர்த்தியுள்ளனவா என்பதை அரசாங்கம் வெளிப்படையாகக் கூற வேண்டும் எனவும் அசேல சம்பத் வலியுறுத்தினார்.

Zameera

236 சந்தேகநபர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு


 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற 236 பேருக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 96 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது

மேலும், 2025 பெப்ரவரி முதல் இதுவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 37 சந்தேகநபர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்டர்போலின் உதவியுடன் இதுவரை 42 சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

ShortNews

அமெரிக்க ராணுவ கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வரவுசெலவுத் திட்ட இலக்குகளை உறுதிசெய்த ஈரான்!


கடல்சார் போக்குவரத்து தடைகள் எதுவாக இருப்பினும், தமது வரவுசெலவுத் திட்டத்திற்கு (Budget) தேவையான நிதியைத் திரட்டுவதற்குப் போதுமான அளவு எண்ணெய் விற்பனைக்குக் கிடைப்பதாக ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வரவுசெலவுத் திட்டத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட எண்ணெய் வருவாயில் 99 சதவீதம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆரம்ப மாதங்களில் எண்ணெய் மூலம் ஈட்டப்பட்ட 7.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அந்நியச் செலாவணி வருவாயை பெட்ரோலிய அமைச்சகம் ஏற்கனவே மத்திய வங்கியிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இது எதிர்வரும் ஜனவரி மாதம் வரையிலான அரசாங்கத்தின் அந்நியச் செலாவணிச் செலவுகளை ஈடுசெய்யும் என்றும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ShortNews

ஈக்வடார் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!



இலஞ்ச வழக்கில் முன்னாள் அதிபர் மொரேனோவுக்கு ஈக்வடார் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும், 73 வயதான லெனின் மொரேனோ, எதிர்காலத்தில் எந்தவொரு பொதுப் பதவியையும் வகிக்க நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளார்.

ShortNews

"உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தை" அறிவித்த டிரம்ப்!



வெனிசுலாவில் உள்ள 65 பில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான, உறுதிசெய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளின் மீது அமெரிக்காவின் பெரும்பான்மைக் கட்டுப்பாட்டை இந்த ஒப்பந்தம் உறுதி செய்வதாக அமெரிக்க அதிபர் கூறினார்.


ShortNews

வழங்கிய உறுதியை நிறைவேற்றாத அரசாங்கம் - சஜித் குற்றச்சாட்டு!


சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டு அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை நாட்டுக்கு வெளிக்கொணர்ந்தது. என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினர் பங்கேற்ற இந்த சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அன்றைய தினம் அந்தப் பிரச்சினைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தியவுடன், அரசாங்கம் இந்த இரு தரப்பினரையும் கண்டி 'சஹஸ் உயன' பகுதிக்கு அழைத்து அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பகிரங்கமாகக் கூறியது. இருப்பினும், தற்போதும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்பார்க்கும் சேவைப் பிரமாணக் குறிப்பு என்பவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது.

கடந்த தேர்தல் சமயங்களில் இந்த இரு குழுக்களையும் நெறிப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அவர்களும் இந்த இரு தரப்பினரையும் ஏமாயுள்ளார். சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை திசைதிருப்பியதாக குறித்த உறுப்பினர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் இந்த சங்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும், இவர்களுக்கான உரிய சேவைப் பிரமாணக் குறிப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பெயரை சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பெயர் மாற்றுவதை மாத்திரமே இந்த அரசாங்கம் நல்லாச் செய்துள்ளது. சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அழைக்கப்படும் இவர்களுக்கு மார்ச் மாதத்தில் தனிச் சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், அந்தச் சட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. 

பொருளாதார அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் இருந்து வாக்குகளைப் பெறுவதற்காக பல பொய்களும் வாக்குறுதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று அவை அனைத்தையும் மறந்து விட்டு, அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்.

அரசாங்கம் இந்தத் தரப்பினரை மறந்துவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவர்களை எப்போதுமே மறக்காது. பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் இவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து நாம் குரல் கொடுப்போமென அவர் மேலும் கூறியுள்ளார்.

Zameera

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்கள் குறித்து அவதானம்


 இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகக் கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசாங்கம் அவதானத்துடன் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். 


இருப்பினும், குறித்த கப்பல்கள் இலங்கைக்குச் சொந்தமான நிலப்பரப்பிற்கு வெளியே இருப்பதால், அவை தொடர்பாக இலங்கைக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்றும், அக்கப்பல்களுக்கு எந்தவொரு வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். 


தங்கள் நாட்டு துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் சுமார் 20 ஈரானிய எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்கள் தற்போது இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் தெரிவித்துள்ளது. 


அமெரிக்கா விதித்துள்ள கடற்படைத் தடை காரணமாகவே குறித்த கப்பல்களால் ஈரானிய துறைமுகங்களை நோக்கி பயணிக்க முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 


இப்பின்னணியில், ஈரான் கொடியுடனான சுமார் 13 எரிபொருள் கடற்போக்குவரத்து கப்பல்களும், தடைகளைத் தவிர்க்கும் நிழற்படை ('Shadow Fleet') கப்பல்கள் சிலவும் பாதுகாப்புத் தேடி இலங்கையின் பிரத்யேக பொருளாதார வலயத்திற்கு அருகில் தற்போது நங்கூரமிட்டுள்ளதாக 'TankerTrackers' இணையதளம் கூறுகிறது. 


எனினும், அந்த இணையதளம் சுட்டிக்காட்டுவது யாதெனில், குறித்த கப்பல்களில் தற்போது எரிபொருள் எதுவும் இல்லை என்பதாகும். 


கடந்த மார்ச் மாதம் இலங்கை கரைக்கு 19 கடல் மைல் தொலைவில் இருந்த 'ஐரிஷ் டேனா' (Iris Dena) கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தி மூழ்கடித்த பின்னணியில், தற்போது இலங்கையை ஒட்டி நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இருப்பினும், சர்வதேச சட்டத்தின் கீழ் நடுநிலை நாட்டின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரந்துள்ள அந்நாட்டின் பிராந்திய கடல் எல்லைக்குள் தங்கியிருக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்கு அனுமதி இல்லை என்றும் 'TankerTrackers' இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

Zameera

ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு சென்ற இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு


 பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று சென்றுள்ளது. 


இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த அறிவித்தலுக்கு அமைய அவர் ஆஜராகாதமையினால், அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) இவ்வாறு அவரது வீட்டிற்குச் சென்றுள்ளது.