Our Feeds



Wednesday, August 12, 2026

ShortNews

முகம் மறைக்கப்பட்டால்தான் அடையாளம் தெரியாது - தலை,கால்கள், மறைப்பதால் என்ன சிக்கல் - மனோ!


சீருடை நிறம் வெள்ளை, முகம் மறைக்க பட்டால்தான் அடையாளம் தெரியாது. மற்றபடி, தலை, கால்கள்,  மறைப்பதால் என்ன சிக்கல்? 

இது தொடர்பாக ஒரு அரச ஊழியர் சுற்றறிக்கை ஒன்று இருப்பதாகவும் ஞாபகம். ஒருவேளை, அதில் தாதியர் பணி சேர்க்கப்பட்டு இருக்காவிட்டால் இப்போது, திருத்தி சேர்க்கலாமே! 

டிசம்பர் மாத காலத்தில் சபரி மலைக்கு மாலை அணியும், பக்த ஊழியர்கள், கறுப்பு நிற ஆடை அணிய வேண்டாம் என்பார்களோ! 

இந்த விதிகள் எல்லாம் என்ன கல்லில் எழுதபட்டவை அல்லவே! "மாற்றம்" ஒன்றே மாறாதது. மற்ற எல்லாம் மாறியே தீரும்..!

ShortNews

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாயார் உயிரிழப்பு!


மித்தெனிய, உல்ஹிட்டியாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் தாயார் உயிரிழந்தார்.

இன்று (15) மாலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Zameera

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை : தீர்வு காண புதிய முயற்சி


 கிளிநொச்சி மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (11) கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.




இதன்போது, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் சட்டவிரோத அத்துமீறல்களால் தமது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.




இதற்குப் பதிலளித்த அமைச்சர், தடை செய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இலங்கை – இந்திய மீனவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்திய தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.




“பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க நாம் தயாராக உள்ளோம். செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன” என அமைச்சர் தெரிவித்தார்.




அத்துடன், கிளிநொச்சி மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், மீன்பிடி இறங்குதுறைகளை ஆழப்படுத்துதல், தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.




மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, கடற்றொழில் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.

Zameera

பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை


 நாட்டின் பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 


இதற்கமைய, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் செல்லுபடியாகும். 


குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பமானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு : நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை 5 வருடங்களின் பின் நிறைவு!



உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில்

Zameera

யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

யால தேசிய பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு விசேட நடவடிக்கையின் போது வேட்டைக்காரர்களுக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 


இச்சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இந்த நடவடிக்கை நேற்று (11) தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் குழுவினால் வனப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


பூங்காவிற்குள் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே, வேட்டைக்காரர்கள் வனவிலங்கு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பதிலடியாக அதிகாரிகளும் தற்காப்பிற்காக மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 


துப்பாக்கிச் சூட்டின் போது சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில், எல்லகல இடதுகரை, திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரை வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து இரு மான்களின் 41 கிலோகிராம் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இந்த மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளின் போது, லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் உள்ள பூங்காவிற்குள் வனவிலங்கு அதிகாரிகள் காத்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, காயமடைந்த நபர் ஒருவர் தெபரவெவ ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் இலக்க வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பொலிஸார் லுணுகம்வெஹெர பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 


இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது வலது முதுகுப் பகுதியிலும், வலது தோள்பட்டைக்கு கீழ் பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய கால்நடை வளர்ப்பாளர் ஆவார். 


சம்பவம் தொடர்பில் லுணுகம்வெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து பரந்த அளவிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

Zameera

பலூசிஸ்தானில் வான்வழித் தாக்குதல் – 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு


 பலூசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களில் 30க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




சுராப் மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும், குடியிருப்புப் பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் பாகிஸ்தான் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.




பலூசிஸ்தான் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பலூச் மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.




பலூசிஸ்தானில் சுதந்திரம் கோரும் ஆயுதக் குழுக்களுக்கும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்தத் தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Zameera

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்திற்கு சுகாதார அமைச்சர், சுமந்திரன் போன்றோர்கள் தலையிட்டு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எச்.எம்.எம். ஹரீஸ்


 கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்திற்கு சுகாதார அமைச்சர், சுமந்திரன் போன்றோர்கள் தலையிட்டு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – எச்.எம்.எம். ஹரீஸ்


கல்முனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மத, கலாச்சார மற்றும் நிர்வாக ரீதியான சர்ச்சைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க இலங்கை தமிழசு கட்சி செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தலையிட்டு, தமிழ் – முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வைத்தியசாலை நிர்வாகத்துடனும் சமூகத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அதேவேளை, சுகாதார அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தியுள்ளார்.


ஊடகங்களுக்கு இவ்விடயம் தொடர்பில் இரண்டாவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அந்த அறிக்கையில், கல்முனை என்பது தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் நீண்டகாலமாக ஒற்றுமையுடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வரும் பிரதேசமாகும். இங்கு நிலம், நிர்வாகம், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ள போதிலும், அவை மத அல்லது கலாச்சார முரண்பாடுகளாக மாறுவதற்கு இதுவரை நாம் இடமளித்ததில்லை.


குறிப்பாக, கல்முனை உப பிரதேச செயலகத்தில் மத வழிபாட்டு தளம் அமைத்தது தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினையும் பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக சுமூகமாகத் தீர்க்கப்பட்ட அனுபவம் எமக்கு உள்ளது. அதேபோன்று, தற்போதைய கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரத்தையும் சமூகங்களுக்கிடையிலான முரண்பாடாக மாற்றாமல், பொறுப்பான முறையில் அணுகி தீர்வு காண வேண்டும்.


இந்த நிலையில், கல்முனை தமிழ் மக்களுக்காக வழக்காட முன்வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் போன்ற தமிழ் அரசியல் தலைவர் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.


தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகளுக்காக நீதிமன்றங்களிலும் அரசியல் ரீதியிலும் வாதாடி வந்த சுமந்திரன் அவர்கள், கல்முனையில் வாழும் தமிழ் மக்களுடன் மட்டுமல்லாமல், இப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் மத, கலாச்சார உரிமைகளையும் சமமாக மதிக்கும் வகையில் இந்த விடயத்தில் ஒரு நல்லிணக்கமான தீர்வை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்.


இது ஒரு தனிப்பட்ட சமூகத்தின் பிரச்சினையாகப் பார்க்கப்படக் கூடாது. அரச சேவையில் பணியாற்றும் ஒருவரின் மத மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான பிரச்சினை உருவாகும்போது, அதனை சட்டம், அரச சுற்றறிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் அணுகுவதே சரியான வழியாகும். சுமந்திரன் போன்ற தமிழ் தலைவர்கள் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவுடனும் இந்த விடயத்தில் முன்னணியில் இயங்கும் நபர்களுடனும் கலந்துரையாடி, ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நியாயமானதும் சட்டபூர்வமானதுமான தீர்வை வழங்க வழியேற்படுத்த வேண்டும்.


கல்முனை கடந்த காலத்தில் பல சவால்களைத் தாண்டியும் நல்லிணக்கத்துடன் பயணித்துள்ளது. அந்த வரலாற்றை பாதுகாத்து, எதிர்கால தலைமுறைக்கு அமைதியானதும் பரஸ்பர மரியாதை கொண்டதுமான கல்முனையை வழங்குவதே நமது பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார். 


ஊடகப்பிரிவு

Zameera

கற்பிட்டி களப்பில் வல்லம் கவிழ்ந்து விபத்து : இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு


 கற்பிட்டி களப்பில் வல்லம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், கணவன், மனைவி இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இவ்வாறு உயிரிழந்தவர்கள் 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுவர்க 


கற்பிட்டி களப்பின் கொடேபிட்டிய தீவிற்கு அருகில் மீன்பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையை எடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் குறித்த தம்பதியினரும் நேற்று மதியம் வல்லம் ஒன்றில் சென்றுள்ளனர். 


இதன்போது அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக குறித்த வல்லம் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அந்த சந்தர்ப்பத்தில் தம்பதியரில் கணவர் ஒரு பிள்ளையை காப்பாற்றியுள்ளதுடன், மற்றைய பிள்ளையை மனைவி பிடித்துக் கொண்டு கரைக்கு நீந்திச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 


இதற்கிடையில், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வந்த படகு ஒன்றிலிருந்தவர்கள் கவிழ்ந்திருந்த வல்லத்தைக் கண்டு, அந்தப் பகுதியைச் சோதனையிட்டபோது விபத்துக்குள்ளான ஆணையும் ஒரு பிள்ளையையும் கண்டுள்ளனர். 


அவர்களின் அருகில் சென்றபோது இருவரும் நீரில் மூழ்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் படகிலிருந்தவர்கள் மீட்டுள்ளனர். 


அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது, பெண் மற்றைய பிள்ளையை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு கரைக்கு நீந்திச் செல்வதைக் கண்டு, அவர்களையும் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்துள்ளனர். 


எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே குறித்த இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 


இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 7 வயதுடைய சிறுவனும் 13 வயதுடைய சிறுமியும் என தெரியவந்துள்ளது. 


உயிரிழந்த இரண்டு சிறுவர்களில் ஒருவர் வல்லத்தை செலுத்திய தம்பதியினரின் பிள்ளை எனவும், மற்றைய பிள்ளை அந்த தம்பதியினரின் உறவினரான சிறுமி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SHAHNI RAMEES

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

 

நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும்
Zameera

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு


 நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.

SHAHNI RAMEES

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஹிஜாப் சர்ச்சை! - NFGG அப்துல் ரஹ்மான் சுகாதார அமைச்சருக்கு அவசர கடிதம்.

 

சுகாதார உதவியாளர்கள் சீருடை விவகாரம்:

ShortNews

CID யில் இருந்து வௌியேறினார் யோஷித!


வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து சற்றுமுன்னர் வெளியேறியுள்ளார்.

அவர் குறித்த திணைக்களத்தில் இன்று (12) முற்பகல் சுமார் 10 மணியளவில் முன்னிலையானார்.

இந்நிலையில் 2 மணித்தியாலயங்களுக்கும் அதிக காலம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், அங்கிருந்து அவர் வௌியேறியுள்ளார்.