Our Feeds



Wednesday, May 21, 2025

ShortNews

கொழும்பு மாநகர சபையில் வண்ணாத்தி கட்சி யாருக்கு ஆதரவளிப்பது : கூடுகிறது உயர் சபை!

 


கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய சமாதான

Zameera

அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்


 நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இன்று தெரிவித்தார்.

சிங்கள மொழி மூலமான (தரம் 1 முதல் 5 வரை) ஆரம்பப் பிரிவில் 4,240 காலியிடங்களும், தமிழ் மொழி மூலமான (தரம் 5) 2,827 காலியிடங்களும் இருப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தரம் 6 முதல் 11 வரை சிங்கள மொழி மூலத்தில் 11,274 வெற்றிடங்களும், தமிழ் மொழி மூலத்தில் 6,121 வெற்றிடங்களும் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

எஸ்.ஜே.பி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.


Zameera

கெஹெலியவின் மகனுக்கு விளக்கமறியல்


  

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார். 

Zameera

உக்ரைன் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சுட்டுக் கொலை

உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி  விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்ட ஆண்ட்ரி போர்ட்னோவ் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் வைத்து மர்ம நபர்களால்  இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

 


இந்த தகவலை ஸ்பெயின் உள்துறை அமைச்சரகம் உறுதி செய்துள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான  தீவிர விசாரணைகளை  ஸ்பெயின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Zameera

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 36 பேர் கைது!


 சட்டவிரோதமாக மீன்பிடி ஈடுபட்ட 36 பேரை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், மீனவர்கள் பயன்படுத்திய 117 சட்டவிரோத வலைகள், ஒன்பது டிங்கி படகுகள், 3,808 கடல் வெள்ளரிகள், உயர் தொழில்நுட்ப மீன்பிடி உபகரணங்கள், சட்டவிரோத வெடிபொருட்கள் மற்றும் மின் விளக்கு உபகரணங்கள் ஆகியவற்றை சட்டத்தின் முன் நிறுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

மட்டக்களப்பு, கொடுமடுவ, திருகோணமலை, சல்லிகோவில், எரக்கண்டி, அலியா தீவு, நந்திக்கடல், கல்லடி, பருத்தித்துறை முனை மற்றும் முல்லைத்தீவு ஆலம்பில் ஆகிய கடல் பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் பிடிபட்டனர்.

 

கடந்த 10ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்தக் குழு கைது செய்யப்பட்டது.


 

கைது செய்யப்பட்டவர்களிள் மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, கோட் பே, முல்லைத்தீவு, மாமுனை, பருத்தித்துறை மற்றும் வாகரை ஆகிய மீன்வள புலனாய்வு அலுவலகங்களுக்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.

ShortNews

கெஹெலியவின் மகன் கைது!

 

 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்
ShortNews

ஹக்கீம் முஷாரப் மீண்டும் சந்திப்பு! - விரைவில் பல முக்கிய திருப்பங்கள்.....

 ஹக்கீம் முஷாரப் மீண்டும் சந்திப்பு 


நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பொத்துவில் பிரதேச சபைக்கு சுயேட்சையாக போட்டியிட்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷார்ரப் உடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு மு.க முயற்சித்து வரும் நிலையில் முஷார்ரபுடனான பேச்சுக்களும் கட்டம் கட்டமாக நடந்து வருகின்றன.



முஷாரப்பை மு.க வில் இணைத்துக் கொள்வதற்கான

ShortNews

ஞானசார தேரரை மிரட்டும் ஏறாவூர், லிபியா கடாபி குழுமம்!

 

ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண
ShortNews

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் புதிய வசதி..!

 

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம்
ShortNews

எம்.பிக்களுக்கு உயிரச்சுறுத்தல்! எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் - தயாசிறி எம்.பி

 

“அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதால் எதிர்க்கட்சி
ShortNews

ஒருநாள் சேவையில் தற்போது 4000 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. - ஆனந்த விஜேபால

 

ஒருநாள் சேவையில் நாளொன்றுக்கு 4000 அளவிலான
Zameera

மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு பற்றாக்குறை

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார். 

"அதிக எண்ணிக்கையிலான மருந்துகளின் பற்றாக்குறைகள் வைத்தியசாலைகளில் காணப்படுகின்றன. 

கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், வைத்திய விநியோகப் பிரிவில் சுமார் 180 வகையான மருந்துகள் கையிருப்பில் இல்லை. 

மேலும், வைத்தியசாலை அமைப்பில் சுமார் 50 மருந்துகள் கையிருப்பில் இல்லை. 

நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் போன்றவற்றிலும் கூட பிரச்சனை இருப்பதாக எங்களுக்குக் தகவல்கள் கிடைக்கின்றன. 

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்களின் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக வைத்தியசாலை அமைப்பு போன்று பிராந்திய ரீதியாகவும் காண்கிறோம். 

"சில மருந்துப் பற்றாக்குறைகள் வைத்தியசாலை அமைப்பிலேயே உள்ளன." என்றார். 

இதற்கிடையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

அதன்படி, நாளை காலை 8.00 மணிக்கு வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுன், இந்த வேலைநிறுத்தத்திற்கு சுகாதார அமைச்சர், பொது சேவை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த இரண்டு மாதங்களாக குறித்த பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலை எதிர்பார்த்திருந்த போதிலும், சுகாதார அமைச்சு அதை வழங்கவில்லை என்றும், இந்த விடயத்தில் அவர்கள் தலையிடாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று என்றும் அவர் மேலும் கூறினார்.
 

ShortNews

ரணில் விக்ரசிங்க என்பவர் உலகத்தை விழுங்கி, தண்ணீர் குடிக்காமல் இருக்கும் ஒருவர். - சாமர சம்பத்

 


என்னை அடக்குவதற்கே அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு