Our Feeds



Monday, March 9, 2026

Zameera

இலங்கையின் மின்சாரத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டது


 இலங்கையின் மின்சாரத் துறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றமாக, இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board - CEB ) உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டு, அதன் பணிகள் மற்றும் பொறுப்புகள் ஆறு தனித்தனி அரசுடைமை நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஞாயிற்றுக்கிழமை (08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.


இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்ததாவது, இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு, முந்தைய காலங்களில் இலங்கை மின்சார சபை மேற்கொண்ட பணிகளை மேற்கொள்ள ஆறு புதிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.


இந்த வர்த்தமானி அறிவிப்பு  09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்ததுடன், 1969 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கம்  இலங்கை மின்சார சபையின் சட்டத்தின்  கீழ் நிறுவப்பட்ட 56 ஆண்டுகள் பழமையான மின்சார சபையின் செயல்பாடுகள் இத்துடன் நிறைவுக்கு வந்துள்ளன.


புதிய அமைப்பின் கீழ் மின்சாரத் துறையானது, மின்சார உற்பத்தி, மின்சார பரிமாற்றம், மின்சார விநியோகம், மின்சார அமைப்பு செயல்பாடுகள் எனப் பிரிக்கப்பட்டு, ஆறு தனித்தனி அரச நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும்.


இந்த மறுசீரமைப்பின் மூலம் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க  இலங்கை மின்சாரம் சட்டத்தின் மீதமுள்ள பிரிவுகளும் அமுலுக்கு வந்துள்ளன. எனினும் சில குறிப்பிட்ட பிரிவுகள் மட்டும் தற்போது அமுல்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இலங்கை மின்சார சபையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும், தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு  விண்ணப்பித்தவர்களைத் தவிர, புதிதாக நிறுவப்பட்ட ஆறு நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் மார்ச் 10 முதல் வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில் தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பித்த ஊழியர்கள் நேற்றைய தினம்  நள்ளிரவு முதல் தங்களது பதவிகளில் இருந்து விலகியதாகக் கருதப்படுவார்கள். அவர்களுக்கான நலன்கள் பின்னர் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மின்சார சபையுடன் இணைக்கப்பட்டிருந்த ஊடகப் பேச்சாளர் பதவியும் இனி அமுலில் இருக்காது. புதியதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனி ஊடகப் பேச்சாளர்களை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நாட்டில் மின்சார உற்பத்தி அல்லது விநியோகத்தை பாதிக்காது என அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளனர்.


இதனுடன் லங்கா மின்சார நிறுவனம் (LECO) நிறுவனமும் புதிய அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட விநியோக நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளது.



இலங்கை மின்சார சபையை பல அரச நிறுவனங்களாகப் பிரிப்பது, தெளிவுத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இலங்கையின் மின்சாரத் துறையின் வரலாற்றில் மிகப்பெரிய மறுசீரமைப்புகளில் ஒன்றாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது. புதிய அமைப்பு மூலம் மின்சாரத் துறையின் நிர்வாகம் மேலும் சீரமைக்கப்பட்டு, திறன் மேம்படும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


Zameera

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் MRI ஸ்கேன் இயந்திரம் செயலிழப்பு




 கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிலுள்ள எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரம் செயலிழந்துள்ளது.

குறித்த ஸ்கேன் இயந்திரம் கடந்த 3 ஆம் திகதி முதல் செயலிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்களில் காயமடைந்தவர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்ட நோயாளர்களுக்காக பிரதானமாக ஒதுக்கப்பட்டிருந்த இந்த இயந்திரம் செயலிழந்துள்ளமையால் அவசர நோய் கண்டறியும் பரிசோதனைகள் செய்யவேண்டிய நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த இயந்திரம் மூலம் நாள் ஒன்றுக்கு 25க்கும் மேற்பட்ட எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

தற்போது இவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

தேசிய வைத்தியசாலையில் மேலதிகமாக இரண்டு எம்.ஆர்.ஐ இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ள போதிலும், இந்த இயந்திரத்தின் செயலிழப்பால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

ஏற்கனவே பரிசோதனைகளுக்காக நேரத்தை ஒதுக்கியிருந்த நோயாளர்கள் இதனால் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

தனியார் வைத்தியசாலைகளில் எம்.ஆர்.ஐ பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்கு 30,000 ரூபாய் முதல் 120,000 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Zameera

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு


மட்டக்களப்பு சின்னப்புல்லுமலைப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நொச்சிமுனையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் அரிச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சின்னப்புல்லு மலை பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்துவிட்டு தங்கியிருந்த வேளை யானை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் இங்கு கடந்த ஒரு மாதகாலமாகத் தங்கியிருந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து பிரேதம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவர் தங்கியிருந்த வயல் வாடியைச்சுற்றி யானை வேலி போடப்பட்டுள்ளதனால் இங்கு காட்டு யானைகள் உள்நுழைவதில்லை. ஆயினும் சம்பவதினம் இரவு இவர் யானை வேலிக்கான மின் விநியோகத்தை வழங்க மறந்து உறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டு யானை இவர் தங்கியிருந்த வயல் வாடியை உடைத்த வேளையில் யானையின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக ஓடியுள்ளார். எனினும் அந்த யானை துரத்தி தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

(ஏறாவூர் நிருபர்)


Zameera

ஹங்வெல்ல – கொழும்பு 143 பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு




 வழி இலக்கம் 143 ஹங்வெல்ல - கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடுவெல - கொழும்பு பேருந்து ஊழியர்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக எழுந்த பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அந்த பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

புணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஹங்வெல்ல - கொழும்பு தனியார் பேருந்து ஊழியர்களை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜெயசிங்க, பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.


Zameera

பிரதமர் பிலிப்பைன்ஸ் நோக்கி பயணம்


பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி பயணமானார். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமரின் இந்த உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெற்றுள்ளது. 

​இவ்விஜயத்தின்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்வில் பிரதமர் உரையாற்றவுள்ளார். 

அத்துடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தின் அமைச்சர்களுடனும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

SHAHNI RAMEES

இஸ்ரேல் மீது - ஈரான் கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்துகிறது! - சிறீதரன் கவலை

 

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு
SHAHNI RAMEES

சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன்! - டிரம்ப் திடீர் அறிவிப்பு.

 


ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது

Zameera

மக்கள் நம்பிக்கை கொள்ளும் அரசாங்கம் ஒன்று இலங்கையில் தற்போது தோற்றம் பெற்றுள்ளது - கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா


 (இராஜதுரை ஹஷான்)


மக்கள் நம்பிக்கை கொள்ளும் அரசாங்கம் ஒன்று இலங்கையில் தற்போது தோற்றம் பெற்றுள்ளது. இலங்கைக்கு பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்த போது மக்கள், நாட்டுக்கு உதவி செய்யுங்கள் என்று தான் என்னிடம் கேட்டார்கள். அது அவர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியது என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்தார்.


தாய்லாந்து நாட்டில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,


நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.


தொழில்நுட்பம் தற்போது முன்னேற்றமடைந்துள்ள நிலையில் அதன் பயன் ஒருதரப்பினருக்கு மாத்திரம் கிடைக்க கூடாது. புதிய தொழில்நுட்பத்தின் உச்சபயன் ஒட்டுமொத்த மக்களுக்கும் கிடைக்க்பெற வேண்டும்.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது இடம்பெற்றதை இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.



நான் கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்த போது விமான பணிப்பெண் என் அருகில் வந்து 'நீங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தானே, எமது நாட்டுக்கு உதவி செய்ததற்கு மிக்க நன்றி, தயவு செய்து இந்த அரசாங்கத்துக்கு உதவி செய்யுங்கள்| என்று என்னிடம் தெரிவித்தார்.


அந்த பெண் சிறந்தவர் என்பதுடன், அவர் ஊழல் மோசடிக்கு எதிரானவர் என்று எனக்கு தோண்றியது. இலங்கைக்கு பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்த போது மக்கள் நாட்டுக்கு உதவி செய்யுங்கள் என்று தான் என்னிடம் கேட்டார்கள். அது அவர்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியது என்றார்.


இந்த மாநாட்டில் கலந்துக் கொண்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிடுகையில்,


பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சிப்பெறுவதற்கு ஆரம்பக்கட்டமாக கடினமான தீர்மானங்களை எடுத்தோம். நீண்டகால சிறந்த திட்டங்களையும், மீட்சியையும் அடிப்படையாகக் கொண்டு அந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.


சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள். தோற்றம் பெற்ற பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட வேண்டும் என்ன எண்ணப்பாடும் மக்கள் மத்தியில் காணப்பட்டது.


இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைப்பாடு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பலமுறை சாதகமான நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தியுள்ளார்.இது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நிதி முகாமைத்துவத்தின் ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துகிறது.


நாட்டின் பேரண்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவது எமது பிரதான இலக்காக காணப்படுகிறது. பொருளாதார மீட்சிக்குரிய திட்டங்களை வலுவான வகையில் அமுல்படுத்த வேண்டும் என்பதை நாடு என்ற அடிப்படையில் நெருக்கடியான நிலையில் விளங்கிக் கொண்டோம் என்றார்.


Zameera

பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பயணத்திற்காக அணிதிரள்வோம் - சஜித்


 (எம்.மனோசித்ரா)


சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பெண்களின் உரிமையை ஒரே ஒரு நாளில் மட்டும் கொண்டாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், 24 மணி நேரமும் வருடத்தின் 365 நாட்களும் பெண்களின் உரிமைகளை வெற்றிகொள்ளும் நாடாக நமது நாட்டை மாற்றுவதற்கு நாமானைவரும் அர்ப்பணிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மகளிர் சக்தியும் இணைந்து 'தேசத்தைக் கட்டியெழுப்பும், அவளைப் பாதுகாப்போம் - ஐக்கிய மகளிர் தினம்' எனும் கருப்பொருளில் ஞாயிற்றுக்கிழமை (8) கொழும்பு தாமரைத் தடாக அரங்கு வளாகத்தில் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


'ஜன நள லிய' திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக்க் கல்வியில் ஈடுபடும் மாணவிகளுக்குப் பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டமொன்றை இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். பெண்கள் நலன், பெண்களை மையப்படுத்திய அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை நாடு முழுவதும் உள்ள 14,008 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 50,967 கிராமங்களிலும் எதிர்வரும் 2 ஆண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்த கீழ் மட்ட கட்டமைப்பை வலுப்படுத்தும் தேசிய செயற்திட்டத்தை முன்னெடுப்போம். பெண்களின் உரிமைகளோடு வீட்டிலும் பணியிடத்திலும் பொது இடங்களிலும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு பாதுகாப்பும் அரணும் வழங்குவதோடு, பெண்களின் உரிமையுடன் இணைந்த குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாக்கும் பயணத்தையும் நாம் முன்னெடுப்போம்.


தாய் மற்றும் குழந்தை ஊட்டச்சத்தின்மை இன்று தீவிரமாகி வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளில் நாம் நான்கு மாபெரும் சோகங்களை எதிர்கொண்டோம். இந்த நான்கு சோகங்களால் நாட்டில் வறுமை அதிகரித்து, வருமான வழிகள் இல்லாமல் போய், வாழ்வாதாரம் சீர்குலைந்து, இல்லத்தரசியின் உரிமைகள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலை காணப்படுகின்றன. இன்று மத்திய கிழக்கிலிருந்து வியாபித்து வரும் போர்ச்சூழலை நாம் எதிர்கொள்கிறோம். இந்த போர்ச்சூழல் காரணமாக பல சவால்கள் உருவாகி, பொருளாதார அபிவிருத்தி, வாழ்வாதாரம் மற்றும் குடும்ப வருமானம் குறைவதால் பாதிக்கப்படுவது வீட்டின் தெய்வமான தாய்மார்களே.


ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களே மிகுந்த பொறுப்புணர்வுடன் பிள்ளைகளை வளர்த்து, குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக கிடைக்கும் பணத்தை சேமித்து குடும்பத்தை வலுப்படுத்த முதலீடு செய்து முக்கியமான பணியை ஆற்றுகின்றனர். இந்த போர்ச் சூழலில் வறுமை அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. வாழ்வாதாரமே இல்லாமல் போகும் அபாயமும் காணப்படுகின்றது. அதோடு பொருட்களின் விலைகள் அதிகரித்து வாழ்க்கைச் சுமை அதிகரிக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டு தாய்மார்கள் உள்ளிட்ட பெண்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


இந்த தருணத்தில் நாம் உண்மையான யதார்த்தத்தை புரிந்துகொண்டு, அறிவை பயன்படுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கனவு உலகிலிருந்து விடுபட்டு வதந்திகளுக்கு செவிசாயாமல், பொய்யான ஆர்ப்பாட்ட நாடகங்களில் இன்பம் காண்பதற்கு பதிலாக நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் முன்பாக, நாட்டுக்கு முன்பாக, மக்களுக்கு முன்பாக உருவாகும் பிரச்சினைகளை நோக்கிப் பார்க்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். கல்வியறிவின்மையை ஒழிக்க தெளிவான வேலைத்திட்டமொன்று எமக்கு அவசியமாகவுள்ளது. அதில் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதும், பிரபஞ்சம் திட்டத்தின் மூலம் டிஜிட்டல் யுகத்திற்கேற்ற டிஜிட்டல் கல்வியறிவை பெண் குழந்தைகளுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். புதிய அறிவை பெற்றுக் கொடுக்கும் திட்டங்களையும் இனிவரும் காலங்களில் முன்னெடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.


நுண்கடன் வலையில் சிக்கி கடன் சுமையால் அழுத்தத்திற்கும் தொல்லைக்கும் உள்ளாகியிருக்கும் பெண்களை மீட்பதற்கு தெளிவான திட்டமொன்று நாட்டுக்கு அவசியமாக காணப்படுகின்றன. நுண் கடன் வலையில் சிக்கி நசுக்கப்பட்டுள்ள பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க இலவச சட்ட உதவித் திட்டங்களை ஆரம்பித்து, சட்ட ரீதியாக பெண்களுக்காக குரல் கொடுத்து, பெண்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்த நாம் முன்நிற்ப்போம்.


ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மகளிர் சக்தியும் உண்மையை பேச பயப்படாத ஒரு அரசியல் இயக்கமாகும். யதார்த்தத்தை விளக்கி விருப்பு வெறுப்புகளை பற்றி அஞ்சாமல் சமூகத்தில் உண்மையை உண்மையாக பேசும் அரசியல் இயக்கமாகும். முன்பு மாதவிடாய் வறுமை தொடர்பில் நாம் பேசியபோது எமக்கு சேறு பூசியவர்கள், இப்போது அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு இந்த மாதவிடாய் வறுமையை ஒழித்து பெண்களின் சுகாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேசியக் கொள்கையை முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். உண்மையை பேசியதால்தான் ஐக்கிய மக்கள் சக்தி இத்தகைய வெற்றியை அடைந்தது.


மாதவிடாய் வறுமையை ஒழிக்க சிறிய மட்டத்தில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு இத்திட்டங்களை ஆரம்பித்தாலும், நாடு முழுவதும் உள்ள பெண்களை ஒன்றிணைத்து அனைவருக்கும் இலவசமாக இந்த பக்க பலத்தைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக இனிவரும் காலங்களிலும் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல் எழுப்புவேன் என்றார். 

Sri Lanka

ஈரானின் புதிய உச்சத் தலைவராக முஜ்தபா கமேனி!

 

ஈரானின் புதிய உச்சத் தலைவராக  முன்னாள்
Zameera

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுகிறது – சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர்


 ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகச் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் தெரிவித்துள்ளார்.


ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என்பதே சுவிஸ் அமைச்சரவையின் கருத்தாகும் என்று அவர் நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


இந்தத் தாக்குதல்கள் வன்முறைத் தடையை மீறுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகப் போரை நிறுத்துமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்தினார்.


அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.


இதன் மூலம், ஈரானைப் போலவே அவர்களும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர் என்று பிபிஸ்டர் தெளிவுபடுத்தினார்.


ஜேர்மனி மற்றும் ஸ்பெயினின் நிலைப்பாடு இந்தக் கருத்துக்கள் ஜேர்மனியின் உப ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான லார்ஸ் கிளிங்பெயிலின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.


இந்தப் போர் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டபூர்வமானது என்பதில் எனக்குப் பலத்த சந்தேகங்கள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.


விதிகள் இல்லாத, வலிமையானவர்களின் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும் ஒரு உலகிற்குள் நாம் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக கிளிங்பெயில் எச்சரித்துள்ளார்.


இதேவேளை, ஈரான் மீதான குண்டுவீச்சுகளைப் பொறுப்பற்றது மற்றும் சட்டவிரோதமானது என ஸ்பெயின் நாடும் கண்டித்துள்ளது.

Zameera

ஈரான் கப்பலில் மீட்கப்பட்டவர்களுக்கு இலவச விசா - அமைச்சர் ஆனந்த விஜேபால


 ஈரான் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட குழுவினருக்கு சுமார் ஒரு மாத காலத்திற்கு இலவச விசாக்களை வழங்கி, மனிதாபிமானப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.


சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் கடல்சார் சட்ட விதிகளைப் பின்பற்றி, அணிசேரா கொள்கையின் அடிப்படையில் ஈரான் மாலுமிகள் தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான தீர்மானங்கள் மூலம் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதோ அல்லது எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதோ அரசாங்கத்தின் நோக்கமல்ல என அவர் குறிப்பிட்டார்.


உலகளாவிய ரீதியில் போர்ச் சூழல்கள் நிலவினாலும், அதன் மறைமுகத் தாக்கங்களுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பிற்கே அரசாங்கம் முதலிடம் வழங்கும்.


தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்

Sunday, March 8, 2026

SHAHNI RAMEES

புதிய தலைவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் - ட்ரம்ப்

 

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா