
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!
உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி தொடர்பான விசேட மருத்துவ நிபுணராக பல நாடுகளில் பணியாற்றியுள்ள அவர், கண்டி மாவட்ட சமூக மருத்துவ நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்.


கொழும்பிற்கான தமது விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின் போது, பிராந்தியத்தின் முக்கிய நிகழ்வுகள் குறித்தும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், அபிவிருத்தி மற்றும் மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களை அவமதிப்பதாக பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்ட அனோஜனுக்கான மேல்முறையீடு வெற்றியடைவதற்கோ அல்லது தண்டனை குறைக்கப்படுவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு.
சவூதி அரேபிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் (SAR 3 மில்லியன்) அபராதமும் விதித்துள்ள இலங்கை இளைஞரின் குடும்பம், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தேவையான சட்டச் செலவுகளை ஏற்க முடியாத நிலை காரணமாக சர்வதேச உதவியை கோரியுள்ளது.
கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் பெற்றோர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு கடிதம் எழுதி, அவரது தண்டனையை குறைக்கவும், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பத்தினரின் தகவலின்படி, இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களையும் அவமதிப்பதாக பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்ட அனோஜன், சவூதி அரேபியாவின் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
2026 ஜூலை 31 ஆம் திகதியிட்ட இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு வெளியிட்டுள்ள கடிதத்தின்படி, சவூதி நீதிமன்றம் அனோஜனுக்கு பின்வரும் தண்டனைகளை விதித்துள்ளது:
முதல் தடவை கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து கணக்கிடப்படும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை.
30 இலட்சம் சவூதி ரியால் (SAR 3 மில்லியன்) அபராதம்.
குற்றம் புரிய பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனத்தை பறிமுதல் செய்தல்.
சம்பவத்துடன் தொடர்புடைய சமூக ஊடகக் கணக்கை மூடுதல்.
தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுள்ள சட்ட ஆலோசனையின் அடிப்படையில், மேல்முறையீடு வெற்றியடைவதற்கோ அல்லது தண்டனை குறைக்கப்படுவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீட்டுக்கான வழக்கறிஞர் கட்டணமாக 20,000 சவூதி ரியாலும், மேல்முறையீட்டு மனுவை தயாரித்து தாக்கல் செய்வதற்காக மட்டும் 5,000 சவூதி ரியாலும் செலவாகும் என்றும், இந்தச் சட்டச் செலவுகளை குற்றம் சாட்டப்பட்ட நபரே ஏற்க வேண்டும் என்றும் இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அனோஜன் குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டும் நபர் என்றும், தற்போது குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் விதித்துள்ள அபராதத்தையோ, மேல்முறையீட்டிற்குத் தேவையான சட்டச் செலவுகளையோ ஏற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனிதாபிமான அடிப்படையில் அவரது தண்டனையை குறைத்து, அவரை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான முயற்சிகளுக்கு உதவி வழங்குமாறும் அவர்கள் ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், சவூதி அரேபியாவில் இந்த வழக்கை முன்னெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளுக்கான நிதி உதவியையும் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அனுரவை கொழும்பில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் மற்றும் இலங்கையில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களின் மீளாய்வு ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தித்வா புயலைத் தொடர்ந்து இலங்கையால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புனரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்திய ரூபாய் மதிப்பிலான கடன் வசதிகள் குறித்த ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டனர். இந்த கடன் வசதிகள், புயலுக்குப் பிறகு ஏற்பட்ட புனரமைப்பு, உள்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கொள்முதல் தேவைகளுக்கு ஆதரவளிக்கும்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 25 சதவீத மக்களை தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர்களது உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்காகவுமே இப்பேரவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழி பேசும் மக்களின் அரசியல் பேரவையின் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது பேரவையின் நோக்கங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் அண்மையில் ஜனாதிபதியுடனும் அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவருடனும் நடைபெற்ற சந்திப்புகளின் பெறுபேறுகளும் எடுத்துரைக்கப்பட்டன.
இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 25 சதவீத மக்களை இந்த அரசியல் பேரவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதையும் பேரவை சுட்டிக்காட்டியது.
மேலும், நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்காக பேரவை மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகரின் கவனம் ஈர்க்கப்பட்டது.
இந்த விடயத்தில் இந்திய அரசு தொடர்ந்தும் தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கும் என பேரவை நம்பிக்கை தெரிவித்தது.
குறிப்பாக, இந்தியா–இலங்கை ஒப்பந்தம் மூலம் இலங்கையின் அரசியலமைப்பில் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்துவதில் இந்தியா முக்கிய பங்காற்றியிருந்தமை தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டதாக நிசாம் காரியப்பர் எம்.பி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்கள பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றதுடன், எதிர்வரும் சில நாட்களில் சீரற்ற காலநிலை நிலவினால் பரீட்சைப் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாளை (06), நாளை மறுதினம் மற்றும் 8 ஆம் திகதிகளில் மழைக்காலநிலை நிலவினால், பரீட்சைப் பணிகளுக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் செயல்பாட்டு அறையில் விசேட பிரிவொன்றை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெள்ளப்பெருக்கு ஏற்படுமாயின் அதற்காகப் படகுகள் மற்றும் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டும் உயர்தரப் பரீட்சை நடைபெற்ற நவம்பர் மாதத்தில் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அசௌகரியத்திற்கு உள்ளான உயர்தர மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் படகுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மில்லனிய - படகொட வீதியில் பொலிஸாரால் வீதித் தடை ஏற்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, மோட்டார் சைக்கிளில் பயணித்த இந்த இரு சந்தேகநபர்களும் சோதனையிடப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டிற்காக களுத்துறை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள தமது சகோதரரைப் பார்ப்பதற்காக இவர்கள் சென்றுகொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இவர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அடுத்து, மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது, இரண்டு 'மிக்ஸ் ரைஸ்' உணவுக்குள் மிளகாய் பேஸ்ட் போட்டிருந்த சிறிய பொலித்தீன் உரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கைப்பேசி என்பனவும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக முன்னர் போதைப்பொருள் தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், இச்சம்பவம் தொடர்பில் அங்குருவாத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பரீட்சைக்கு முதன்முறை மற்றும் இரண்டாம் முறை தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து கிராமிய மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மண்முனைபற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பாலமுனை மஹ்மூது லெப்பை வீதியை கொங்கிரீட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க தலைமையிலான அமைச்சின் ஊடாக கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பாலங்கள் மற்றும் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதிகளும் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொது போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில் புதிய மெட்ரோ பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான புதிய பேருந்துகளும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் அரசியல் விளம்பரங்கள் மற்றும் தலைவர்களின் புகைப்படங்களுடன் பேருந்துகள் இயக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கம் எந்தவித அரசியல் விளம்பரங்களும் இன்றி, மக்களுக்கு தரமான சேவையை வழங்கும் நோக்கில் சுயாதீனமான போக்குவரத்து சேவையை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
புதிய மெட்ரோ பஸ் சேவையில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயணிக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், பயணக் கட்டணத்தை செலுத்தும் முறையும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஊழல் மற்றும் இலஞ்சமற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் அரச சேவைகளை நவீனமயப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பல புதிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

தெஹிவளை - கல்கிசை மாநகர சபை, தனது பொதுச்சபைக் கூட்டங்களை நேரலையில் ஒளிபரப்பத் தொடங்கிய இலங்கையின் முதல் உள்ளூராட்சி அமைப்பாக புதிய சாதனையைப் படைத்துள்ளது.
சபையின் ஒருமனதான ஒப்புதலைத் தொடர்ந்து, நேற்று காலை 9.30 மணி முதல் மாநகர சபையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் ஊடாக கூட்டங்கள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
2025 உள்ளூராட்சி தேர்தலில் சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டு தெரிவான சமூக நீதிக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் அர்கம் முனீர் இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.
இந்த முயற்சியின் மூலம், சபை விவாதங்கள், தீர்மானங்கள் மற்றும் கலந்துரையாடல்களை பொதுமக்கள் நிகழ்நேரத்தில் பார்வையிடும் வாய்ப்பு கிடைப்பதுடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மக்கள் பங்கேற்பை மேலும் வலுப்படுத்தும் என மாநகர சபை தெரிவித்துள்ளது.
இந்த யோசனைக்கு ஒருமனதாக ஆதரவு வழங்கிய மேயர், பிரதி மேயர், ஆளும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் முழு சபைக்கும் சமூக நீதிக் கட்சி நன்றியைத் தெரிவித்துள்ளது.