Our Feeds



Tuesday, August 11, 2026

ShortNews

முத்துராஜவெலயில் புதிய 3 எரிபொருள் சேமிப்புத் தொட்டிகள் - அமைச்சரவை அனுமதி!


முத்துராஜவெல முனையத்தில் மூன்று புதிய எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபா தொகைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய மொத்த சேமிப்பு முனைய நிறுவனத்தின் நிதியைப் பயன்படுத்தி 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிபொருள் சேமிப்புத் தொட்டிகளையும் 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட மற்றொரு எரிபொருள் சேமிப்புத் தொட்டியையும் அமைப்பதற்காக 2025 ஜூன் 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சுற்றாடல், சட்ட மற்றும் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானங்களை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர்களுக்கு அறிவுறுத்துவதற்கு 2026 ஜூலை 20 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் விதிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கொள்முதல் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்கள் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

சர்வதேச போட்டித்தன்மை மிக்க விலைமனுக்களைக் கோரும் நடைமுறையின் கீழ் பெறப்பட்ட விலைமனுக்களில், உயர் மட்டக் கொள்முதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட குறைந்த விலைமனுதாரரான M/s Indo-East Engineering & Construction (Lanka) (Private) Limited மற்றும் Ceylex Engineering (Private) Limited கூட்டுப் பங்காளித்துவத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வொப்பந்தத்தின் பெறுமதி 3.04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2,796.14 மில்லியன் இலங்கை ரூபாவாகும் என்பதுடன், இத்தொகை பெறப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரியிலிருந்து (VAT) விலக்களிக்கப்பட்டதாகும்.

ShortNews

ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்!


ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

மீன்பிடி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் மணலை அகற்றும் நடவடிக்கையை கொரிய நிறுவனமொன்றிடம் ஒப்படைத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தியே, பிரதிவாதியான ராஜித சேனாரத்னவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ShortNews

கல்முனை வைத்தியசாலை விவகாரம் - இனப் பதற்றத்தை உருவாக்கும் செயல் - நிசாம் காரியப்பர்!



கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், இன ரீதியான பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையிலான தனிநபர்களின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தலையை மூடிய ஆடையுடன் கடமையேற்கச் சென்ற புதிய முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு, ஆடை விதிமுறையை மீறியதாகக் கூறி கடமையைப் பொறுப்பேற்க அனுமதி மறுக்கப்பட்டமை வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் மக்களிடையேயும், இறுதியில் அனைத்து இலங்கையர்களிடையேயும் இனப் பிரிவுகளைக் கடந்து ஒற்றுமையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக மக்களால் நிராகரிக்கப்பட்ட இனப் பதற்றங்களை மீண்டும் உருவாக்கும் வகையில் தனிநபர்களின் செயற்பாடுகள் அமைய ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் நிசாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.

ShortNews

முஸ்லிம் விவாகர சட்டத்துக்கு தீர்வு அவசியம் - ஜம்இய்யத்துல் உலமா சபை!



முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், காதி நீதிமன்ற விவகாரம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டுமென ஜம்மிய்யத்துல் உலமா சபையினர் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலிஹ், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முளப்பர் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (10) அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கு வருகை தந்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர்.


நீதித்துறை மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விடயத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் புதிய மறுசீரமைப்புகள் தொடர்பாக ஜம்மிய்யா தரப்பினருக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, சமய விவகாரங்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரிடையே பல ஆக்கபூர்வமான கருத்துகள் பரிமாறப்பட்டன.

குறிப்பாக முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம், காதி நீதிமன்ற விவகாரம், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விவகாரம், மூடப்பட்ட பள்ளிவாசல்கள் குறித்த விவகாரம், சமய நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்புகளை இறக்குமதி செய்வது தொடர்பான விவகாரம், கொவிட் 19 காலத்தில் கட்டாய தகனம் செய்யப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் விவகாரம் மற்றும் அரச முஸ்லிம் பாடசாலைகள் தொடர்பான விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றுக்கான உரிய தீர்வுகளை பெறுவது குறித்தும் பேசப்பட்டன.

நிகழ்வின் இறுதியாக, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஜம்மிய்யாவினால் வெளியிடப்பட்ட அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு உள்ளிட்ட முக்கிய சில வெளியீடுகளும் கையளிக்கப்பட்டன.

இந்தச் சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் முப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி, உப தலைவர் அஷ்ஷைக் உமர்தீன், உப பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எஸ்.எம்.தாஸிம், நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான அஷ்ஷைக் எஸ்.எல்.நவ்பர், அஷ்ஷைக் ரிபாஹ் ஹஸன், அஷ்ஷைக் ஏ.எச்.எம்.அக்ரம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

SHAHNI RAMEES

இனவாதமாக செயற்பட்ட அதிகாரிகள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் – காரைதீவு பிரதேச சபையில் வலியுறுத்தல்

 


கல்முனை ஆதார வைத்தியசாலை சம்பவம்

ShortNews

சாகரவின் கருத்தை அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்க வேண்டாம் - நாமல்!


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்தையும் அதை கூறியவர் யார் என்ற அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதிலுள்ள செய்தியைக் கவனத்திற்கொள்ளவேண்டுமென பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அவரது உத்தியோகபூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் மேலும்,

எமது பொதுச் செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டுள்ள கருத்தை, அதை கூறியவர் யார் என்ற அரசியல் கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதிலுள்ள செய்தியைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

பொலிஸ் என்பது ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கத்தினதும் அரசியல் கருவியாக மாறக் கூடாது.

அது அரசுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் சுயாதீன நிறுவனமாக இருக்க வேண்டும். மக்களைப் பாதுகாக்கவும் சட்டத்தை நிலைநாட்டவும் மக்களின் உண்மையான தேவைகளுக்கு பதிலளிக்கவும் பொலிஸாரை பயன்படுத்துங்கள். கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கோ அல்லது அரசியல் கணக்குகளை தீர்ப்பதற்கோ பொலிஸாரை பயன்படுத்த வேண்டாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

ShortNews

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த ஜீவன் எம்.பி!


அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவினல் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் (10) விஜயம் மேற்கொண்டார்.

கடந்த வாரம் ஏற்பட்ட கடும் மழை வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவு காரணமாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட திம்புல்ல கீழ் பிரிவு, ஸ்டோனிக்கிளிப் கீழ் பிரிவு, ஸ்டோனிக்கிளிப் டி.பி டிவிசன் மற்றும் லொக்கில் டிவிசன் உள்ளிட்ட பகுதிகளில் பல குடியிருப்புகள் உள்ளிட்ட மக்களின் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி மண்டபங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்த ஜீவன் தொண்டமான், அவர்களின் தற்போதைய நிலைமைகள், எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவசரத் தேவைகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்தார்.

வெள்ளப்பெருக்கு மற்றும் மன்சரிவு ஏற்படக்கூடிய அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் பாதுகாப்பான இடவசதிகளை ஏற்படுத்துவது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜீவன் தொண்டமான், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் காணிகளைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அத்துடன், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்த விடயங்களை கொண்டு சென்று, உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நாள் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கேற்ப தொழில் அழுத்தங்களும் பணிச்சுமையும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அரசியல் நிலைப்பாடுகளை கடந்து தொடர வேண்டிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் தோளோடு தோள் நின்று பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்ததைப் போன்று, தற்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும் என தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் பி. சக்திவேல், கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ரவி குழந்தைவேல், இ.தொ.கா. காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் அணியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

ShortNews

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருந்தால் எதற்கு அரசாங்கம்? - திலும் அமுனுகம!



சிறைச்சாலைகளுக்குள் இடம்பெறும் மோதல்களுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதுடன், சிறைச்சாலைக்குள் கலவரங்களை உருவாக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிக்கு அதிகாரம் இருக்குமாயின், நாட்டில் அரசாங்கம் ஒன்று எதற்கு என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவ்வாறு தங்களுக்கு அத்தகைய அதிகாரம் இருக்குமெனின், அது அரசாங்கத்தின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துவதாக அமையும். இதேவேளை, தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது. விசேடமாக, நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மகாநாயக்க தேரர்கள், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும், எவருடைய கருத்துக்களுக்கும் செவி சாய்க்காது அரசாங்கம் தனது விருப்பத்தின்படி செயற்படுவது, நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதையே காட்டுகிறது என்றார்.

ShortNews

டெங்கு பரவல் தீவிரம் - 90 ஆயிரத்தை கடந்த பாதிப்பு!


நாட்டில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஓகஸ்ட் 10ஆம் திகதி நள்ளிரவு நிலவரப்படி, நாட்டில் மொத்தமாக 90,306 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,973 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் 21,533 நோயாளர்களும், ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 4,959 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட ரீதியில், கம்பஹா மாவட்டத்தில் 19,204 நோயாளர்கள் பதிவாகி அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. இது மொத்த நோயாளர்களில் 21.27 சதவீதமாகும். கொழும்பு மாவட்டத்தில் 17,965 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா 6,971 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

நடப்பாண்டில் இதுவரை டெங்கு காரணமாக 65 மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, டெங்கு மரண விகிதம் 0.07 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், டெங்கு பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், நுளம்புகள் பெருகும் இடங்களை அகற்றுவதுடன், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

ShortNews

ஜனாதிபதி - சட்டத்தரணிகள் சங்கம் இடையே நாளை விசேட பேச்சுவார்த்தை!



நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ShortNews

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் உறுதியான தீர்மானத்துக்கு அரசாங்கம் வரவேண்டும் - இம்ரான் எம்.பி!


முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான  தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தடை குறித்து இன்று (11) செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் சில அரச உத்தியோகத்தர்களால் தேவையற்ற தலையீடுகளுக்கு உள்ளாகின்றது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

ஒவ்வொரு சமூகத்தவரதும் சமய கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

அரசியலமைப்பை பேணி நடக்க வேண்டியது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரதும் பொறுப்பாகும். இதனை மீறும் அரச உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நடைமுறைகளை அரசாங்கம் அமுல் படுத்த வேண்டும்.

சில அரச உத்தியோகத்தர்களின் இது போன்ற செயற்பாடுகள் சமூகங்களிடையே மீண்டும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தும்.

இது அரசாங்கத்தின் வளமான நாடு கொள்கையை கேள்விக் குறிக்கும்.

எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் அடிக்கடி தேவையற்ற  தலையீடு செய்யப் படுவதால் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SHAHNI RAMEES

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற 9 முஸ்லிம் உதவி சுகாதார உத்தியோகத்தர்களும் வரவு ஏட்டில் கையெழுத்திட அனுமதி!


🚨கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில்

ShortNews

2027 ஐ.சி.சி. உலக கிண்ணத்துக்கு நேரடித் தகுதி பெற்றது இலங்கை!


2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

ஒருநாள் போட்டித் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் அணிகளில் இருந்து, இணைப் போட்டி நடத்துநர்களான தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளைத் தவிர்ந்த ஏனைய அணிகள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும் வகையில் தகுதிச்சுற்று நடைமுறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, அந்த அணியும் உலகக் கோப்பைக்கான நேரடித் தகுதியை உறுதி செய்துள்ளது.

இதன்படி, இலங்கை, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் தரவரிசை அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.

மேலும், போட்டியை நடத்தும் நாடுகளான தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் நேரடித் தகுதி பெற்றுள்ளன.

இதன் காரணமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி நேரடித் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது. அந்த அணி உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று பிரதான தொடருக்கான இடத்தைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.