Our Feeds



Monday, September 14, 2026

SHAHNI RAMEES

உயர்நீதிமன்றத் தீர்ப்பு பொலிஸ்மா அதிபருக்குக் கிடைத்ததன் பின்னரே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை!

 


உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப் பிரதி பொலிஸ்மா அதிபருக்குக்

SHAHNI RAMEES

ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது! SLPP

 


ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் நாங்களும் உறுதியாக

Zameera

மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்கிறார் ஜனாதிபதி

 


(இராஜதுரை ஹஷான்)


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  புதன்கிழமை (16) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.


அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய  மாவட்டங்களில் வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.


ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். 


இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.


இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

Zameera

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

 

கல்வி பொதுத் தராதார சாதாரண தரத்திற்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உட்பட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான உபகுழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 


பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இக்குழு அண்மையில் கூடியபோதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இதன்போது 12 மற்றும் 13ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் ஒழுக்கநெறி ஆகிய தொகுதிகளை (Modular) உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. 


இங்கு 2027ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் முன்பள்ளிக் கல்விச் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. 


பொதுக் கல்விச் சீர்திருத்தங்களின் ஆரம்பக் கட்டமாக 2 மற்றும் 6ஆம் தரங்களுக்குத் தேவையான செயற்பாட்டுப் புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் தொகுதிகள் (Modules) தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது. 


புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தொடர் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்காக தேசிய முன்பள்ளிக் கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், முன்பள்ளிகளைப் பதிவுசெய்தல், பாடத்திட்டங்கள் மற்றும் ஆசிரியர் வழிகாட்டிகளைத் தயாரித்தல் மற்றும் ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பது உள்ளிட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் இங்கு மேலும் வெளிப்படுத்தப்பட்டது.


Zameera

இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, நாமலை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை

 

இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான பணச் சலவை விசாரணைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தேகநபராக பெயரிட சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.




இலங்கை விமான சேவையின் எயார்பஸ் விமானக் கொள்வனவு நடவடிக்கையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

SHAHNI RAMEES

வெலிக்கடை சிறைக்குள் காலணிகளில் மறைத்து போதைப்பொருள் கடத்த முயற்சி - சிறை அதிகாரி கைது!


வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருள் கடத்த

SHAHNI RAMEES

SLMC வாஸித் ராஜினாமா இன்றைய தினம் (14) முதல் அமுலுக்கு.....

 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற

SHAHNI RAMEES

யோஷித ராஜபக்சவிற்கு எதிரான பணச்சலவை வழக்கு விசாரணை ஒக்டோபர் 2 ஆம் திகதி முடிவுறுத்தப்படும்!

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன்
Zameera

செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலை திருத்தம்?

 

உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார். 


எரிபொருள் விநியோக நிறுவனங்களில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்ளூர் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலேயே எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து செயல்படுவது சவாலானது என சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 


எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு பல தீர்வுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலத்தைப் போல அரசாங்கம் தலையிட்டு எரிபொருள் மானியம் வழங்குவது அல்லது விலைகள் குறித்து ஏதேனும் ஒரு முடிவுக்கு வருவது போன்ற பல வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 


தனியார் நிறுவனங்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்த போதிலும், நுகர்வோரையும் கருத்தில் கொண்டே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார். 


ஒவ்வொரு மாத இறுதியிலும் கனிய எண்ணெய் விலை திருத்தம் செய்யப்படுவதைப் போலவே, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கருத்திற்கொண்டு இந்த மாத இறுதியிலும் அதற்குரிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் வலியுறுத்தினார்.

Zameera

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக 24ஆம் திகதி ஆர்ப்பாட்டம்

 


(எம்.ஆர்.எம்.வசீம்)


ஜனநாயக விராேத அரசியலமைப்பின் 22 ஆவது  திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளோம். இதன் பொருட்டு முற்போக்கான மக்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்று  ஞாயிற்றுக்கிழமை(13)  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.


இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது. 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம்.


தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக் கட்சி ஆட்சியை கொண்டு வந்து, நாட்டின் அதிகாரத்தை பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும். மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். பாராளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இ்ந்த அரசாங்கத்துக்கு இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக பெரும் மக்கள் பலத்தை திரட்டுவோம்.


அதனால் 22ஆம் திருத்தம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்படும்போது கொழும்பில் இருந்து நாங்கள் பெரும் மக்கள் பலத்தை அணி திறட்ட எதிர்பார்க்கிறோம். அதனால் நாட்டின் எதிர்காலம் எமது  எதிர்கால சந்ததியினருக்கும் எதிராக கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தை தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசாங்கத்தை மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது நிச்சயமாகும்.  அதனால் அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிக்கும் பெரும் நடவடிக்கையாக மக்கள் போராட்டத்தை  நாங்கள்  எதிர்வரும்  24 ஆம் திகதி மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம், எனவே அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் பாராளுமன்றத்துக்கு செல்லும் வீதியில் அணித்திரண்டு தமது எதிர்ப்பை தெரிவிக்க முன்வர வேண்டும் என்றார்.

Zameera

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய 3 தனியார் நிறுவனங்களுக்கு தண்டப்பணம்!

 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறிய கொழும்பைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்களுக்கு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் மொத்தம் 300,000 ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளது.Travel Guides & Travelogues



நுகர்வோர் விவகார அதிகாரசபையினால்  தொடரப்பட்ட சட்ட நடவடிக்கையினையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


விலைகளைக் காட்சிப்படுத்தத் தவறியமை மற்றும் இறக்குமதியாளர் விபரங்கள், அதிகபட்ச சில்லறை விலை போன்ற கட்டாயத் தகவல்கள் இன்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தலா 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.


கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பு 03 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிலையங்களே இவ்வாறான சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளன.


நுகர்வோர்கள் சரியான முடிவுகளை எடுப்பதற்கும், நியாயமற்ற விலை நிர்ணய நடைமுறைகளைத் தடுப்பதற்கும் விலை வெளிப்படைத்தன்மை அத்தியாவசியமானது என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.


மேலும், இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களால் உணவு நச்சுத்தன்மை அல்லது ஒவ்வாமை போன்ற சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், விநியோகச் சங்கிலியைக் கண்டறிந்து பொறுப்புக் கூறுவதை உறுதி செய்வதற்கு இறக்குமதியாளர் விபரங்கள் மிகவும் முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



விற்பனைக்கு வைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் விலைகள் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் மற்றும் உரிய விதிமுறைகளின் கீழ் வரவிருக்கும் ஏனைய விபரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் வணிகர்களுக்கு அதிகாரசபை நினைவூட்டியுள்ளது.


நுகர்வோர்கள் ஏதேனும் அநீதிகள் அல்லது சட்டமீறல்கள் தொடர்பில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SHAHNI RAMEES

இலங்கைத் தொழிலதிபருக்குச் சொந்தமான சொகுசு தனியார் ஜெட் இரத்மலானையில் தரையிறக்கம்!

 


இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் கலாநிதி ரொஷ்

Zameera

97,637 டெங்கு நோயாளர்கள் பதிவு

 

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 97,637 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 


அதேநேரம் டெங்கு நோய் காரணமாக 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 


இதனிடையே, செப்டம்பர் மாதத்தின் கடந்த 13 நாட்களில் 2,146 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 


மொத்த டெங்கு நோயாளர்களின் பதிவைக் கருத்திற்கொள்ளும்போது, அதிகளவிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 20,742 ஆகும். 


இது தவிர, கொழும்பு மாவட்டத்தில் 19,235 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 7,291 நோயாளர்களும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 6,247 நோயாளர்களும் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.