Our Feeds



Saturday, September 12, 2026

Zameera

507 ரூபாவாக இருந்த டீசல் லீட்டரை 407 ரூபாவிற்கு வழங்கினோம் – ஜனாதிபதி

 

முந்தைய ஆட்சியாளர்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் போது இயங்கி வந்த அரசாங்கங்களே இருந்தன; ஆனால், தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டியிருந்தது, அபிவிருத்தி திட்டங்கள் மட்டுமின்றி முழுப் பொருளாதாரமும் முற்றிலும் ஸ்தம்பித்து சீர்குலைந்திருந்த ஒரு நாட்டையே ஆகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


பொலன்னறுவையில் இடம்பெற்ற விவசாயிகள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, வாகன இறக்குமதி முதல் கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலை, கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி, வடமத்திய மகா கால்வாய், கீழ் மல்வத்து ஓயா திட்டம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலைக் கட்டிடங்களின் பணிகள் முந்தைய ஆட்சியின் போது பாதியிலேயே நிறுத்தப்பட்டிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.


கடன் செலுத்த முடியாது என அறிவித்து நாடு நன்மையிழந்து (வங்கித்துரோத்து நிலைக்கு) தள்ளப்பட்டதால், வெளிநாட்டு கடன்களும் உதவிகளும் கூட நாட்டிற்கு முற்றாக இல்லாது போயிருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.


இருப்பினும், 2024 டிசம்பரில் சர்வதேச கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கடன்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதன்படி 2028 ஆம் ஆண்டு முதல் அக்கோரிக்கைக் கடன்களைத் திரும்பச் செலுத்தத் தொடங்குவதற்கான அவகாசக் காலம் பெறப்பட்டதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அதன் பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பித்து வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான வழி திறக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.


நாட்டின் மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன், சீர்குலைந்திருந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே அரசாங்கத்தின் முன்னிருந்த மிக முக்கிய சவாலாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய அவர், இன்று எரிபொருள் வரிசைகள், எரிவாயு தட்டுப்பாடு அல்லது மின்வெட்டு குறித்த பயமில்லாத ஸ்திரமான நிலைக்கு நாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.


மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை டொலரில் அதிகரித்த போதிலும், நாட்டில் எவ்வித எரிபொருள் வரிசைகளும் உருவாக இடமளிக்கவில்லை என்றும், 507 ரூபாவாக இருந்த டீசல் லீட்டருக்கு 100 ரூபா மானியம் வழங்கி, அதனை 407 ரூபா விலைக்கு வழங்கி மக்களுக்கு நிவாரணம் அளித்ததாகவும் அவர் கூறினார்.


‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய சேதங்கள் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மகா திறைசேரியிலிருந்து நிதியை ஒதுக்கி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ளக்கூடிய வலுவான பொருளாதாரம் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு மகா திறைசேரியின் அதிகபட்ச வருமானத்தைப் பதிவு செய்யத் தற்போதைய ஆட்சி சமர்த்தாகியுள்ளதாகவும் மேலும் வலியுறுத்தினார்.

Zameera

இரு குழந்தைகளின் உயிரைப் பறித்த கைக்குண்டுத் தாக்குதல் : ஐ.நா கவலை

 

தெஹிவளை பகுதியில் கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் இந்நாட்டின் வதிவிட இணைப்பாளர் மார்க் என்ட்ரே குறிப்பிடுகையில், இரண்டு குழந்தைகளின் உயிரைப் பறித்த அந்தச் சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவித்தார்.

இது போன்ற வன்செயல்களுடன் தொடர்புடைய தரப்பினர் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என அவர் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், அவ்வீட்டில் இருந்த இரு குழந்தைகள் உயிரிழந்ததுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தாக்குதலைத் நடத்துவதற்காகச் சந்தேக நபர்கள் வந்ததாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி நேற்று பாதுக்கை, கீழ் போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதிலும், சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, இந்தக் குண்டுத் தாக்குதல் இலக்கு மாறித் தாக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகித் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும், உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தையின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்தே குறித்த குண்டுத் தாக்குதலை நடத்தக் குற்றவாளிகள் வந்துள்ளதாகவும், வீடு மாறியதன் காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்கள் இன்று (12) பிற்பகலில் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டதாக அதிகாலை அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Zameera

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

 


டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாரியளவிலான  போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கின் தந்தையான அப்துல் ரசாக் மொஹமட் பாஸிக் என்பவரைக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


 


சந்தேக நபர் இன்று கொழும்பு புதுக்கடை இலக்கம் 3 நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 


இதன்போது, சந்தேக நபரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


 


குறித்த சந்தேக நபர் நேற்று (11) மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.


 


ஷிரான் பாஸிக் என்பவரினால் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 3 கோடி ரூபா பணத்தைச் செலவிட்டு கம்பஹா பிரதேசத்தில் சொகுசு வீடு ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


இச்சம்பவம் தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Zameera

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீ#விரவாதிகள்

 


ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீ*விரவாதிகள் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும் கருத்து வெளியிட்ட அவர் ,


ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீ*விரவாதிகள் தற்போது இலங்கைக் குடியுரிமை கோருகின்றனர் ஐ எஸ் ஐ எஸ் , போக்கோ ஹராம் , ஹூதி போன்ற தீவிரவாத குழுக்களை போன்ற ஒரு குழுவை இலங்கையில் உருவாக்க தேவையில்லை.


மியன்மாரில் பொலிஸார் மீது பௌத்த விகாரைகள் மீதும் தாக்குதல் நடத்தியதாலேயே தோஹிங்யா முஸ்லிம்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அங்கே இருந்து விரட்டப்பட்டனர்.அவ்வாறான தீவிரவாத குழுவிற்கு இலங்கையில் அடைக்களம் கொடுப்பதை நாம் கண்டிக்கின்றோம்” என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் பகிரங்கமாக சாடியுள்ளார்.

Zameera

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் 'ஸ்மார்ட் கீ' திருட்டு

 

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் 'ஸ்மார்ட் கீ' (Smart Key) திறப்புகளைத் திருடி விற்பனை செய்யும் மோடியில் ஈடுபட்டு வந்த துறைமுக ஊழியர் ஒருவரும், அந்தத் திறப்புகளைக் கொள்முதல் செய்த வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அவர்கள் இருவரும் நேற்று (11) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 


இந்த 'ஸ்மார்ட் கீ' காணாமல் போனமை தொடர்பாக அம்பாந்தோட்டை துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட நீண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, துறைமுக ஊழியர் ஒருவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 


அதன்படி, குறித்த ஊழியரைப் பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 


துறைமுக ஊழியரிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட ஸ்மார்ட் கீ திறப்புகளைக் குருநாகல் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு வாகன வகைக்கு ஏற்ப 6,000 ரூபாய் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. 


இதன் மூலம் கடந்த சில மாதங்களில் சுமார் 45 'ஸ்மார்ட் கீ' திறப்புகளை விற்பனை செய்து, சந்தேக நபரான ஊழியர் 15 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தைச் ஈட்டியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 


மேலும், கைது செய்யப்பட்ட துறைமுக ஊழியர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குருநாகல் பகுதியைச் சேர்ந்த குறித்த வியாபாரியையும் பொலிஸார் கைது செய்ததுடன், அவர் அந்த 'ஸ்மார்ட் கீ' திறப்புகளைக் கொள்முதல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 


அத்துடன் அவரிடமிருந்த 'ஸ்மார்ட் கீ' திறப்புகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். 


இந்த மோசடி நடவடிக்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யத் தொடங்கிய காலத்திலிருந்தே இடம்பெற்று வந்துள்ளதாகத் துறைமுகப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


ஹம்பாந்தோட்டை துறைமுகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்தவின் அறிவுறுத்தலின் பேரில் குற்றத் தடுப்புப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Zameera

சாவகச்சேரியில் அரசுக்கு எதிராக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்


 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது. 


அநுர அரசு பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளை செயற்படுத்தவில்லை என்கின்ற அடிப்படையில் இந்த போராட்டம் சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்படுகிறது. 


அத்துடன் அரசியல் கைதிகளுடைய விடுதலை, கையகப்படுத்தியிருக்கக்கூடிய காணிகளை விடுவித்தல், செம்மணி புதைகுழிக்கான நீதி கோரல், மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை முன்னிறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இந்த போராட்டத்தில் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Zameera

பலாலி விமான நிலையத்துக்கு தனியார் காணிகள் ஏன்? – சாணக்கியன் கேள்வி

 

எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


மத்தள விமான நிலையத்தை பலாலி விமான நிலையத்துடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுபாதையை சீரமைத்தல் மற்றும் முனையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தற்போதைய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பலாலி விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே போதுமான காணிகள் உள்ள நிலையில், மேலதிக தனியார் காணிகளை அரசாங்கம் ஏன் கையகப்படுத்த முயல்கிறது? காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார்.


பாராளுமன்றத்தில்  இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை  இருபத்தேழு இரண்டின்   கீழ் கேள்விகளை முன்வைத்து மேற்கண்டவாறு வினவினார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,



யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி,வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களின் இணைப்புத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாகும்.


காங்கேசன்துறை துறைமுகத்திற்காக இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளதுடன், அதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் மற்றும் வடிவமைப்புகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தாமதத்திற்கான காரணங்கள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தொடர்ந்தும்  தெளிவற்ற  நிலை நிலவுகிறது.


இந்தத் திட்டங்கள் குறித்து அரசாங்கமே இறுதி முடிவை எடுக்கும் என்றும்,அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு நன்மையளிப்பதாக அமைய வேண்டும் என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க  அண்மையில்  குறிப்பிட்டுள்ளார்.


அவர் துறைமுகங்கள் அல்லது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சராக  தற்போது பதவி வகிக்காத  நிலையில், எந்த அடிப்படையில்  அவர்  அவ்வாறு குறிப்பிட்டார்.இது   அரசாங்கத்தின் நிலைப்பாடா,?


பலாலி மற்றும் காங்கேசன்துறை அபிவிருத்திகள் இணைப்புத்தன்மை, சுற்றுலா,வேலைவாய்ப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நேரடிப் பலன்களை அளிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, இத்திட்டங்கள் மக்களுக்குப் போதுமான பலனைத் தராது எனத் தீர்மானிப்பதற்கு அரசாங்கத்தால் என்ன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது? 


யாழ்ப்பாண விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிடுவதற்கு ஆதரவாக என்ன சாத்தியக்கூறு ஆய்வுகள், மதிப்பீட்டுத் தேவை முன்னறிவிப்புகள், வருமான கணிப்புகள் அல்லது செலவு, பயன் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?


சுற்றுலா, முதலீடு மற்றும் புலம்பெயர் மக்களின் இணைப்புத்தன்மையைக் சுட்டிக்காட்டி, லண்டன் மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே நேரடி விமான சேவைகளுக்கான யோசனையை  பிரித்தானிய பாராளுமன்ற  உறுப்பினர் காரெத் தோமஸ் முன்வைத்துள்ளார்.   


இந்தப் பிரேரணை தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம், விமான நிறுவனங்கள் அல்லது விமான நிலைய அதிகாரிகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா? அவ்வாறாயின், பாலாலியில் இத்தகைய சேவைகளை சாத்தியமாக்குவதற்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் யாவை? அதற்கான காலவகாசம் என்ன?


ஓடுபாதையை சீரமைத்தல் மற்றும் முனையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட தற்போதைய விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பலாலி விமான நிலைய வளாகத்திற்குள்ளேயே போதுமான காணிகள் உள்ள நிலையில், தற்போது  மேலதிகமாக  தனியார் காணிகளை அரசாங்கம் ஏன் கையகப்படுத்த முயல்கிறது? பலாலி, மலியிட்டி, வசாவிளான் பகுதி மக்களின் காணிகளை   விடுவிக்காமல், ஓடு பாதை அபிவிருத்தி என்று குறிப்பிட்டுக் கொண்டு  பொது மக்களின் காணிகயை ஏன்  கையகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.



மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம்,திருகோணமலை துறைமுகம் மற்றும் தலைமன்னார் - இராமேஸ்வரம் படகு சேவை தொடர்பில் அரசாங்கத்தின் திட்டம் என்ன? இவை தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வுகள், நிதி ஏற்பாடுகள்,பங்குதாரர் கலந்துரையாடல்கள் அல்லது காலவகாசம் ஏதும் வழங்கப்பட்டுள்ளதா?


முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஊருக்காகவே மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்தார்.அதனால் எவ்வித பயனும் நாட்டுக்கு கிடைக்கவில்லை என்பது உண்மையே.   பலாலி விமான நிலையத்தை மத்தள விமான நிலையத்துடன் ஒப்பிட முடியாது.


பலாலி விமான நிலையம் வணிக விமான நிலையமாகவும் பயணிகள் விமான நிலையமாகவும் காணப்படுகிறது. ஆகவே  அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்தை ஏற்க முடியாது. அவரது கருத்து  தவறானது.


 காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  வெளிநாடு ஒன்றினால் 62 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தொகையை கொண்டு எவ்வாறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது என்று அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.


ஆனால் கடந்த வாரம்  துறைமுக அமைச்சில்  அபிவிருத்தி பணிகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆகவே  இந்த அபிவிருத்தி பணிகள் தொடர்பில் அரசாங்கம்  வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட  வேண்டும் என்றார்.

SHAHNI RAMEES

இன்று மைதானத்தில் இடம் போதாமல் போகும்! - ரோஹித

 


"மைதானத்தில் இடம் பற்றாக்குறையாக இருக்கும்..

SHAHNI RAMEES

தமது கலாசார அடையாளத்துடன் வாழ்வதற்கு எந்தவொரு சமூகமும் அச்சம் அடையத் தேவையில்லை! - ஜனாதிபதி ACJUவிடம் உறுதி

 



தமது கலாசார அடையாளத்துடன் வாழ்வதற்கு எந்தவொரு

Zameera

மகன் என்பதால் நாமல் ராஜபக்ஷவால் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவாக மாற முடியாது - நிரோஷன் பாதுக்க

 

(செ.கவிஷனா)


நாமல் ராஜபக்ஷ தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவின் மகனாக இருக்கலாம், ஆனால் அதற்காக ஒருபோதும் அவரால் மஹிந்த ராஜபக்ஷவாக மாற முடியாது. மஹிந்த ராஜபக்ஷ என்பவர் முற்றிலும் ஒரு தனித்துவமான அரசியல் ஆளுமையையும் அடையாளத்தையும் கொண்டவராவார். எனவே, வெறும் வாரிசு என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் ஆளுமையையோ அல்லது அவருக்குரிய இடத்தையோ நாமல் ராஜபக்ஷவினால் அடைந்துவிட முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்தார்.Politics


கொழும்பில் வெள்ளிக்கிழமை (11) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,



அத்துடன், நாமல் ராஜபக்ஷவும் அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் தவறான நிர்வாகச் செயற்பாடுகள் மற்றும் சீர்கேடான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இலங்கை நாடு முன்னெப்பொழுதுமில்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. எனினும், நாடு எவ்வாறு இவ்வாறான வீழ்ச்சியைச் சந்தித்தது என்பதற்கான உண்மையான காரணங்களையோ அல்லது அதிலிருந்து மீண்டு வருவதற்கான சரியான தீர்வுகளையோ பற்றிய எந்தவொரு புரிதலும் தெளிவும் இல்லாத ஒரு தரப்பிடமே நாட்டின் பொதுமக்கள் தற்போதைய ஆட்சி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர்.


அதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் தமக்குரிய பொறுப்புகளையும் கடமைகளையும் தாங்கள் சரியான முறையில் நிறைவேற்றி வருகிறோம். எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்துக் குழுக்களும் தத்தமது அரசியல் இலக்குகளை நோக்கிப் பயணிப்பதற்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நாட்டில் தற்போது உடனடியாகத் தேர்தல்கள் எதுவும் நடத்தப்படாத நிலையில், நாமல் ராஜபக்ஷவும் எதிர்க்கட்சியிலேயே தொடர்ந்தும் அங்கத்துவம் வகித்து வருகிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Zameera

மழையால் மின் உற்பத்திச் செலவு குறைவு

 


(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


அதிக மழைவீழ்ச்சி கிடைத்தமையால் மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.இதன் காரணமாக அடுத்த காலாண்டிற்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தேவையில்லை.அதற்கமைய மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை என வலுசக்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்  அநுர கருணாதிலக தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது  ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,


கடந்த காலத்தில் அதிக மழைவீழ்ச்சி கிடைத்தமையால் மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.இதன்காரணமாக அடுத்த காலாண்டிற்கு மின்சாரக் கட்டண அதிகரிப்பு தேவையில்லை.அதற்கமைய மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை.



 எதிர்வரும் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குத் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வலுசக்தி அமைச்சினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


 எதிர்பார்த்ததை விட அதிக மழைவீழ்ச்சி கிடைத்ததன் காரணமாக,மின் உற்பத்திக்கான செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது. இதற்கமைய,அடுத்த காலாண்டில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக எந்த வகையிலும் கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கவில்லை.


புதுப்பிக்கத்தக்க சக்தி சேமிப்புக்காக பயன்படுத்தப்படும் மின்கலன்களுக்கு (டியவவநசநைள) முறைசாரா சலுகைகளை வழங்க அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்தார். முதற்கட்டமாக 100 கிலோவாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட அமைப்புகளுக்கு இந்தச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன.


இலங்கையின் தற்போதைய புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி முன்னேற்றகரமாக காணப்படுகிறது.மின்சார உற்பத்தியில் 60 சதவீதம்  முதல் 70 சதவீதம்  வரையிலான பங்கு தற்போது புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்தே பெறப்படுகிறது.


கூரைமீது பொருத்தப்படும் சூரியமின் சக்தி  மூலம் சுமார் 2,500 மெகாவாட்டும்,தரையில் அமைக்கப்படும் சூரியமின் சக்தி மூலம் 530 மெகாவாட்டும்,காற்றுவழி மின் உற்பத்தி மூலம் 250 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரமும் பெறப்படுவதாகவும், இது மொத்த மின் உற்பத்தியில் 40 சதவீதத்துக்கும் அதிகம்.


சூரியமின் திட்டங்களுக்கான அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதங்கள், நிலங்களைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் மற்றும் புதிய மின் உற்பத்தி அமைப்புகளை தேசிய மின்வரிசையுடன் இணைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட இத்துறை சார்ந்த சவால்களையும்  ஏற்றுக்கொள்கிறோம். அவற்றுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியின் வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு, முறையான தரநிலைகளுடன் கூடிய மின்கல சேமிப்பு முறையை அறிமுகப்படுத்துவதோடு, இந்தச் சிக்கல்களுக்கும் தீர்வுகாண்பது மிகவும் முக்கியமானது  என்றார்.

Zameera

களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு!

 

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜல்தர பகுதியில் களனி கங்கையிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (11) மாலை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. 


உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 


சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நடாத்தப்படவுள்ளதுடன், ஹங்வெல்ல பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம்: குவைத், சவூதி நிதியை பெற்றுத்தர தயார் – ஹிஸ்புல்லாஹ்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)



தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடம் நிறுவப்படுவதன் மூலம் அது நாட்டின் அபிருத்திக்கும் பொருளாதாரத்துக்கும்  பலமாக அமையும் அதனால் அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்கினால் அதற்கு தேவையான நிதியை குவைத் மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தில் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை நிறுவ வேண்டும் என்ற தனிநபர் பிரேரைணயை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.பயண வழிகாட்டிகளைப் படி


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும்  தென் கிழக்கு கல்வியில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கில் மறைந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இன்று அந்த பல்கலைக்கழகம் மூவினங்களையும் சேர்ந்த 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கையும் 6 பீடங்களையும் கொண்டு மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.



இந்த பல்கலைக்கழகத்தில் மருத்து பீடத்தை ஆரம்பிப்பதற்கு 2022ஆம் ஆண்டு, அப்போது அங்கு உப பீடாதிபதியாக இருந்த அபூபக்கர் ரமீஸ் அதுதொடர்பில் பிரேரணை தயாரித்து, பல முயற்சிகளை மேற்கொண்டபோதும்  நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை. என்றாலும் தற்போது அந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்படுவதற்கான தேவை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக நிந்தவூர் ஜூம்ஆ பள்ளிவாசல் சுமார் ஏழு ஏக்கர் காணியை சுகாதார அமைச்சுக்கு  கொடுத்தது, சுகாதார அமைச்சு அதில் வைத்தியசாலாையை அமைத்து, சுமார் 100 மில்லியன் ரூபாவை செலவு செய்திருக்கிறது.


மேலும் மருத்துவ பீடத்தை கொண்டுவருவதற்கு இலங்கையில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இலங்கை மெடிக்கல் கவுன்சில் ஆகிய 6 நிறுவனங்கள் ஒன்றிணைவதன் மூலமே இதனை மேற்கொள்ள முடியும். இதற்கு தேவையான நிதி உதவியையும் எங்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். இதுதொடர்பில் கல்வி அமைச்சு நிதி அமைச்சு ஊடாக ஒரு கோரிக்கையை முன்வைக்குமானால், அதற்கு தேவையான முழு நிதியையும் குவைத் மற்றும் சவூதி அபிவிருத்தி அபிவிருத்தி நிதியத்தில் இருந்து பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.