Our Feeds



Sunday, February 22, 2026

Zameera

நுவரெலியா நகரம் பாதுகாப்பாக உள்ளது


 நுவரெலியா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். 


நிலவும் சீரற்ற வானிலை மத்தியிலும், நகரத்தை அண்மித்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு நிலைமை எதுவும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 


சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 


எவ்வாறாயினும், நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன மற்றும் மதுரட்ட உள்ளிட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


அப் பகுதிகளில் உள்ள மக்களைத் தெளிவுபடுத்தி தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அவசர அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அனைத்துப் பிரிவினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Zameera

முன்பள்ளி ஆசிரியர்கள் ஹட்டனில் போராட்டம்


 தோட்ட நிர்வாக தலையீட்டுக்கு எதிராக ஹட்டனில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (22) ஈடுபட்டனர். 


தோட்ட நிர்வாகங்களின் தலையீட்டினால் முன்பள்ளி சிறார்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும், தமக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்குமாறும், நிரந்தர நியமனம் வழங்குமாறும் வலியுறுத்தி, மலையக முன்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றியம் இன்று ஹட்டன் புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


நீண்டகாலமாக கொடுப்பனவு அதிகரிக்கப்படாமை காரணமாக தாம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


அத்துடன் தோட்ட நிர்வாகங்கள் முன்பள்ளிகளை நேரடியாக நிர்வகிப்பதன் காரணமாக, தோட்டப்புற மாணவர்களுக்கு முறையான ஆரம்பக் கல்வி வழங்குவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 


மேலும், முன்பள்ளிகளை நிர்வகிக்கும் உரிமை தோட்ட நிர்வாகங்களுக்கு யார் வழங்கினர் என கேள்வி எழுப்பிய அவர்கள், அரசின் கீழ் இயங்கும் மாகாண சபைகளே தோட்ட முன்பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகள் என சுட்டிக்காட்டினர். 


ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான தகுதிகளைப் பெற்றிராத பிள்ளை பராமரிப்பாளர்கள் முன்பள்ளிகளை நடத்துவதால், பல முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் மாணவர்களின் ஆரம்பக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர். 


இவ்விடயத்திற்கு விரைவான தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Zameera

அரநாயக்கவில் மீண்டும் மண்சரிவு அபாயம்




 நேற்று (21) பெய்த மழை நிலைமையுடன், 'டித்வா' புயலினால் ஏற்கனவே மண்சரிவுக்குள்ளான அரநாயக்க பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. 


இதன்படி, அரநாயக்கவின் அம்பலகந்த, தோதல்தோய மற்றும் கந்துன ஆகிய பகுதிகளுக்கு இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது. 


அரநாயக்க நகரில் இருந்து தோதல்தோய வரை செல்லும் பிரதான வீதியின் காபட் (Carpet) இடுகை, அம்பலகந்த பகுதியில் நேற்று நடுவே மிகவும் அபாயகரமான முறையில் வெடித்துத் தாழிறங்கியுள்ளதாக அத தெரண கமெராவில் பதிவாகியிருந்தது. 


கடந்த நாட்களில் மண்சரிவு ஏற்பட்ட இந்த இடத்தில் உள்ள பிரதான கால்வாயின் மதகு (Culvert) முறையாகப் புனரமைக்கப்படாத காரணத்தினால், பிரதான வீதியின் ஊடாக நீர் பாய்ந்துச் சென்றதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 


இதனால் தோதல்தோய கிராமத்திற்கு வாகனங்களில் பிரவேசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதியான புவக்வத்த வீதியும் மண்மேடுகள் சரிந்து விழுந்தமையால் தடைப்பட்டுள்ளது. 


எவ்வாறாயினும், அரநாயக்க பகுதியில் 'டித்வா' புயலுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் 13 உயிர்கள் பலியானதுடன், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன. 


மேலும் சுமார் 500 வீடுகள் கடும் அபாய நிலைக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHAHNI RAMEES

3700 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டுக்கு!


3700 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல்

SHAHNI RAMEES

அரசாங்கத்தின் மீது நம்பிக்கை அதிகரித்திருந்தால் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துங்கள்!

 

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக
Zameera

கம்பளை–நாவலப்பிட்டி வீதியில் வாகன விபத்து: சிறுமி பலி


கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் ஹெட்காலை நாகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது தாயாரும் ஏழு வயது சகோதரரும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கம்பளை உனம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த குலதுங்க முதியன்சாலகே அபிஷா நிஷாரா கெனுலி குலதுங்க என்ற மூன்று வயது சிறுமியே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று (21) மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் முன்பள்ளி ஆசிரியையின் கம்பளை மாவதுரயில் அமைந்துள்ள வீட்டில் இடம் பெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மூவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஸ்ஸங்க நந்தன குலதுங்கவின் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர் திசையில் இருந்து வந்த கார் ஒன்று நாகொல்ல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றினை முந்திச் செல்ல முயன்ற சந்தர்ப்பத்திலேயே மோட்டார் சைக்கிளில் கார் மோதியுள்ளது.

கம்பளை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனையின்போது குழந்தையின் மார்புப் பகுதியில் ஏதோ ஒரு பொருள் மோதியதால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக சட்ட மருத்துவ அதிகாரி கூறியுள்ளார். மார்பு மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் மரணம் நிகழ்ந்தது என்று தீர்மானிக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் நாவலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயது காரின் சாரதியை ஹெட்காலை பொலிஸார் கைதுசெய்து கம்பளை நீதி மன்ற நீதவான் சரசி பரணமான முன் நிலையில் ஆஜர்படுத்தி நாளை வரை (23) விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கலஹா செய்தியாளர்

SHAHNI RAMEES

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நாமலின் லண்டன் பயணம் ஆரம்பம்!

 

இங்கிலாந்தில் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டபோதும்,
SHAHNI RAMEES

இந்தியா நம்பிக்கைக்குரிய நண்பன்! - JVP ட்ரில்வின் சில்வா

 

இந்தியாவை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பராகவும்,
SHAHNI RAMEES

சிறுவன் படுகொலை - யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்!

 


யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின்

SHAHNI RAMEES

அக்குரேகொட இரட்டைக் கொலை - துப்பாக்கிதாரி தொடர்பில் வௌியான பகீர் தகவல்!

 


அக்குரேகொட இரட்டைக் கொலைத் தொடர்பில்

Zameera

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது


 கல்கிஸ்ஸ, வில்லியம் பிளேஸ் பகுதியில் 110 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணாவார். 

சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

இன்றைய வானிலை !


இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணியின் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. 

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 

Zameera

கொழும்பு–கண்டி வீதியில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு


 கொழும்பு - கண்டி வீதியில் வேவெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரும், பின்னால் பயணித்த யுவதியும் காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் வரக்காப்பொலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

பின்னால் பயணித்த யுவதி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடையவராவார். விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தங்ஓவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.