Our Feeds



Saturday, May 23, 2026

Zameera

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்


 (நானுஓயா செய்தியாளர்) 


நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை (23) பிற்பகல் நேரத்தில் கடும் மூடுபனி காணப்பட்டது. குறிப்பாக  எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வீதிகளில் பனி சூழ்ந்தது.


நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் நுவரெலியா பிரதான நகரில் மிதமான மழை அவ்வப்போது பெய்ததை அவதானிக்க முடிந்தது.


இதில் நுவரெலியா நகருக்கு உள்நுழையக்கூடிய பிரதான வீதிகள் அனைத்திலுமே கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு அங்குள்ள வீதிகள் புகைமண்டலம் போல் காட்சியளித்தது. 


இதில் நுவரெலியா - கண்டி மற்றும் நுவரெலியா - ஹட்டன் போன்ற வீதிகள் அதிகப்படியான பனி காணப்பட்டது.


இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்துடன் சேர்ந்து கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள்  தங்களுடைய இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.

Zameera

விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் மருத்துவ சிகிச்சை மையம் திறந்து வைப்பு


 


தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு 2026 மே 22 அன்று போயகானையில் உள்ள விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மையத்தை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.




57ஆவது காலாட் படைப்பிரிவின் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட இம் மருத்துவ மையம் பல் மற்றும் பிற மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் இது குருநாகல் மாவட்டத்தில் வசிக்கும் சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற இராணுவப் பணியாளர்களுக்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சேவைகளை வழங்குவதற்காக திறக்கப்படவுள்ளது.

SHAHNI RAMEES

ஹஜ் | சவுதிக்கு பறந்த பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்!

 

2026 ஆம் ஆண்டின் ஹஜ் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கும்,
SHAHNI RAMEES

ஈரான், டுபாய் மீது நடத்திய தாக்குதல்களை VIDEO எடுத்து பரப்பிய இலங்கையர்கள்! - நாடுகடத்தப்பட்டனர்


டுபாய் அரசினால் நாடுகடத்தப்பட்டதன் பின்னர்

SHAHNI RAMEES

இலங்கையில் த#கொலை வீதம் 70 சதவீதத்தால் குறைவு!

 

இலங்கையில் அதிவிஷத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகள்
SHAHNI RAMEES

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்: வாகனப் போக்குவரத்து பாதிப்பு!

 



நுவரெலியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று

SHAHNI RAMEES

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பேர்! வௌியான மேலதிக தகவல்...

 


டுபாய் அரசினால் நாடுகடத்தப்பட்டதன் பின்னர்

Zameera

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கான விசேட அறிவுறுத்தல்


 நாட்டில் நிலவும் பலத்த மழையால் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

மின்னணு எச்சரிக்கை பலகைகளில் உள்ள அறிவுறுத்தல்களை கவனித்து முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயணிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மணிக்கு 60 கிலோமீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்கவும், வாகனங்களுக்கு இடையில் பாதுகாப்பான இடைவெளியை பேணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நனைந்த வீதிகளில் திடீர் பிரேக் போடும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பொறுமையுடனும் அவதானத்துடனும் பயணிக்குமாறு அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.

Zameera

நாடு மீண்டும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால் அதிலிருந்து மீள்வது சாத்தியமற்றது - விஜேதாச ராஜபக்ஷ


 (எம்.மனோசித்ரா)


நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாகவே, நிர்வாக அறிவு மற்றும் அரசியல் தெளிவற்ற குழுக்களிடம் நாட்டின் அதிகாரம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இம்முறை நாடு மீண்டும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தால் அதிலிருந்து மீள்வது சாத்தியமற்றது. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகக் கூறுவது ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளை அழிக்கும் ஒரு சர்வாதிகார முயற்சியாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.


  இலங்கையின் 54ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் அங்கு  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


கடந்த முறையைப் போல இந்த முறையும் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ந்தால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல. கடந்த முறை நமக்கு உதவி செய்ய பல நாடுகள் இருந்தன. ஆனால், இம்முறை வீழ்ந்தால் மீண்டும் எழும் நம்பிக்கையை வைக்க முடியாது. எனவே, நாட்டின் மீது பற்றுள்ள அனைவருக்கும் வீழ்ச்சியடையப் போகும் இந்த நாட்டைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.


இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்டதைப் போன்று இலங்கையிலும் இரண்டு பலமான அரசியல் கட்சிகள் இருந்தன. ஆனால் நம் நாட்டில் அவ்வப்போது இருந்த தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உடைத்து பலவீனப்படுத்தினார்கள். அதன் விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கிறது என்றார். 

Sri Lanka

உயிர்த்த ஞாயிறு விசாரணைகளை மறைக்க நாமல் தரப்பு முயற்சி!



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த காலங்களில் அதிகாரத்தைக் கைப்பற்ற மக்களின் உயிர்களுடன் விளையாடிய அரசியல்வாதிகள் இப்போது சட்டத்திற்குப் பயந்து நடுங்கத் தொடங்கியுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ தெரிவித்துள்ளார்.


நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


நாமல் தரப்பு சட்டத்தரணிகள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தில் மிகவும் அவசரமாகக் கேள்வி எழுப்பினார்கள். ' சஹரானின் வாக்குமூலம் எங்கே என்று அவர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.


ஆனால், இப்போது அந்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதைப் பற்றிப் பேசாமல் சம்பந்தமில்லாத வெற்றுக்கதைகளை கூறிவருகின்றனர். அவர்கள் செய்த குற்றங்களுக்காக இப்போது சட்டம் அவர்களைத் துரத்திக் கொண்டு பின்னால் வருகிறது. இதனால்தான் அவர்கள் தற்போது பெரும் பதற்றமடைந்துள்ளார்கள்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் எங்கே? வேகம் போதவில்லை , இன்னும் ஒன்றும் நடக்கவில்லையே என்று அவர்கள் எள்ளி நகையாடினார்கள். ஆனால், தற்போது விசாரணைகள் மிகச் சரியான பாதையில் வேகமெடுத்துள்ளன.


முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே என்பவர் மாத்திரம் இந்தத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி அல்ல. சுரேஷ் சலே போன்றவர்களைக் கொண்டு 270க்கும் மேற்பட்ட அப்பாவி கத்தோலிக்கப் பக்தர்களைக் கொன்று, மேலும் 500க்கும் அதிகமானோரை அங்கவீனமடைய செய்ய அவருக்கு என்ன தனிப்பட்ட தேவை இருக்கப் போகிறது?


இதன் பின்னணியில் ஒரு பாரிய அரசியல் கரம் இருந்தது. பிணங்களின் மீது ஏறி நின்று அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அந்தப் பேராசைதான் இதன் பின்னணியில் இருந்தது.


அப்படிப்பட்ட கொடூரங்களைச் செய்த 'கனவான்கள்' தான் இன்று சமூக ஊடகமான 'X' தளத்தில் பதிவுகளை இட்டு, 'பொதுமக்களின் பணத்தைச் செலவழித்து பிரான்சுக்குச் சென்று விசாரணை நடத்துவதன் தேவை என்ன?' என்று நம்மிடம் கேள்வி எழுப்புகிறார்கள்.


பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று சர்வதேச ரீதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எவ்வளவு பொதுப்பணம் செலவானாலும் சரி, எவ்வித தயக்கமுமின்றி அதனைச் செலவு செய்து, இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்துவதுதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.


அதனை நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என்ற உறுதியை நாம் மக்களுக்கு வழங்குகிறோம்.


இதுவரைக் காலம் நீங்கள் இந்த நாட்டு மக்களின் பொதுச் சொத்துக்களுடனும், அப்பாவி மக்களின் உயிர்களுடனும் விளையாடினீர்கள். இனிமேலும் இந்த நாட்டில் அவற்றுக்கு ஒருபோதும் இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

டிக்கோயா இரட்டைக் கொலை! பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார். VIDEO

 


ஹட்டன் டிக்கோயா பகுதியில் வயோதிப

SHAHNI RAMEES

சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து 82 பேர் பலி!

 


வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள

Zameera

தெற்கு லெபனானில் இரு இடங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் - சிறுமி உட்பட 10 பேர் பலி


 தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 


தெற்கு லெபனானில் இரு இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


முதலில் ஹனுயே கிராமத்துக்கு குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச் சேர்ந்த 4 மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். 


அதன் பின்னர், டயர் மாகாணத்தில் உள்ள டெய்ர் குவானன் அல் நஹ்ர் கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு சிறுமி, 2 மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதில் சிரியாவைச் சேர்ந்த சிறுமியும் ஹிஸ்புல்லாவின் நட்பு அமைப்பான அமல் இயக்கத்தைச் சேர்ந்த 2 மருத்துவ பணியாளர்கள் இறந்துவிட்டதாக குறிப்பிடப்படுகிறது, 


இஸ்ரேல் - லெபனான் இடையே தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் அந்தப் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. 


எனினும், லெபனானின் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே நேற்று தெற்கு லெபனானில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.