Our Feeds



Friday, March 13, 2026

Zameera

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை


 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 623,651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 

குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 115,772 பயணிகள் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். 

பிரித்தானியாவில் இருந்து 66,164 பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 56,114 பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 45,939 பயணிகளும், சீனாவில் இருந்து 39,725 பயணிகளும் வருகைத் தந்துள்ளனர். 

இவர்களைத் தவிர பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். 

மேலும், மார்ச் மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 66,996 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

SHAHNI RAMEES

உயிர்த்த ஞாயிறு தின விசாரணைகள்: தவறு செய்யாதவர்கள் அஞ்சத் தேவையில்லை!

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள்
Zameera

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்


 வலைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னணியில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ‘Liaowang 1’ உளவு கப்பல், உலக அரசியல் மற்றும் இராணுவ சக்திகளின் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது.Politics


பார்ப்பதற்கு சாதாரண கப்பல் போலத் தோன்றினாலும், இதில் பொருத்தப்பட்டுள்ள பிரம்மாண்டமான ரேடார் அமைப்புகள் மூலம் இப்பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளின் சிக்னல்களையும் கண்காணிக்கும் திறன் இதற்கு உண்டு.


இந்தக் கப்பலானது அமெரிக்காவின் போர் கப்பல் குழுக்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள் மற்றும் ரேடார் அமைப்புகளிலிருந்து வெளியேறும் மின்காந்த அலைகளைக் கண்டறிகிறது.


இந்தத் தரவுகள் மூலம் முழுப் போர்க்களத்தையும் ஒரே மின்னணு வரைபடமாக (Electronic Map) அவதானிக்கும் ஆற்றலை சீனா பெற்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


சமீபத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்களின் துல்லியம் குறித்து இராணுவ நிபுணர்கள் வியப்படைந்துள்ளனர். குறிப்பாக, ஜோர்டானில் உள்ள 300 மில்லியன் டாலர் பெறுமதியான THAAD ரேடார் அமைப்பு மற்றும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள இலக்குகள் மிகவும் துல்லியமாகத் தாக்கப்பட்டன. இதற்கு சீன மற்றும் ரஷ்ய உளவுத் தகவல்கள் உதவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


அமெரிக்க இராணுவத் திட்டமிடுபவர்கள் இந்தக் கப்பலின் செயல்பாடுகளை அறிந்திருந்தாலும், இது சர்வதேச கடற்பரப்பில் சட்டப்பூர்வமாக இருப்பதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளனர்.


இவ்வாறானதொரு கப்பலைத் தாக்குவதோ அல்லது கைப்பற்றுவதோ சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நேரடிப் போருக்கு வழிவகுக்கும் என்பதால் அமெரிக்கா கடும் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளது.


நவீன போர்க்காலத்தில் ஆயுத பலத்தை விட தகவல் பலமே முக்கியமானது என்பதால், ‘Liaowang 1’ கப்பல் அமைதியாக இருந்து முன்னெடுக்கும் இந்த நடவடிக்கை வலைகுடா போரில் ஒரு தீர்மானமிக்க காரணியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Zameera

மின் கட்டண திருத்தம்: PUCSL தீர்மானம் மாத இறுதியில்


 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின் கட்டண திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் இந்தமாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு மின் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை ஒன்றை முன்வைத்தது.

இந்த மின் கட்டண திருத்தம் குறித்து பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டறிய ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, பொது மக்கள் கருத்து கோரல் கட்டங் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த பொது மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் நிகழ்வின் மூன்றாம் நாள் இன்று மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Zameera

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்


 இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் விடுத்த கோரிக்கைக்கு இந்தியாவிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் எரிசக்தித் தேவைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், அமைச்சர் விஜித ஹேரத் கடந்த மார்ச் 06 ஆம் திகதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மத்திய கிழக்கில் யுத்த நிலைமைத் தொடர்ந்தால், இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் விஜித ஹேரத் அங்கு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். 


அதன்படி, அமைச்சரின் இந்தக் கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் தமது சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன், அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. 


இதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தைத் தடையின்றியும் பாதுகாப்பாகவும் பேணுவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது ?? 20ஆம் திகதி விஜித்த ஹேரத் தலைமையிலான செயற்குழு கூட்டம்


 (இராஜதுரை ஹஷான்)


மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கான விசேட செயற்குழு அதன் தலைவர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதன் முறையாக கூடவுள்ளது.


விசேட செயற்குழுவின் சகல உறுப்பினர்களின் பங்குப்பற்றலுடன் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.



மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய தேர்தல் முறையில் நடத்துவதா என்பது தொடர்பில் ஆராய்ந்து யோசனைகள் மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்கு வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர்  விஜித்த ஹேரத் தலைமையில் 12 பேரை உள்ளடக்கிய விசேட செயற்குழு ஒன்று சபாநாயகரால் அண்மையில் நியமிக்கப்பட்டது.


இந்த குழுவில் இணை உறுப்பினர்களாக ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியை  பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல,முனீர் முழப்பர், அருன் ஹேமசந்திரா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷமன் நிபுணராச்சி,சமன்மலி குணசிங்க, தர்மபிரிய விஜேசிங்க,சந்தன சூரியராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார,தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர்  சாணக்கியன் இராசமாணிக்கம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.


மாகாண சபைத் தேர்தல் சட்டத்தில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு பாராளுமன்ற விசேட செயற்குழு ஒன்றை  நியமிப்பதற்கான யோசனையை ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான   நளிந்த ஜயதிஸ்ஸ 2026.01.06 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் ஒரு யோசனையை முன்வைத்தார்.


அந்த யோசனையில், 1988 ஆம்  ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்து தற்போது வழக்கில் உள்ள 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கமைய தொகுதி,எல்லை நிர்ணய  முறைமை இதுவரையில் நிறைவுப்படுத்தாத காரணத்தால் சகல  மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல்  தற்போது  இயங்குகிறது.


தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டத்தின் குறைகளை அவதானத்து அதற்குரிய திருத்தங்களை முன்வைக்க 2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்ட விசேட குழு 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைய எல்லை நிர்ணயம் செய்து அதன் பின்னர் சட்ட வரைவை தயாரிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவரையில் விகிதாசார தேர்தல் முறைமையின் தேர்தலை நடத்தலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.

Zameera

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் - மகிந்த ராஜபக்ஷ


 மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அரசு கொள்கைகள்


கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன?


பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா?


கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. உங்கள் காலத்தில் எப்படி மதிப்பளிக்கப்பட்டது?


பதில்: மிக உயர்வாக மதித்தோம். இப்போது அப்படிச் செய்கிறார்களா என்பது கேள்வியே.


கேள்வி: உங்கள் காலத்தில் இருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?


பதில்: அவர் ஆற்றிய சேவையைப் பாராட்ட வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக் கூடாது. இது சிறையில் அடைக்கும் காலமல்ல.


கேள்வி: தற்போது சர்வதேசப் போரொன்று நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது காலம் இந்தப் போர் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கிறீர்கள்?


பதில்: பிரச்சினை ஏற்படும் தானே. நாட்டிற்கு, நாட்டின் எதிர்காலத்திற்குப் பிரச்சினை ஏற்படும்.


கேள்வி: நாட்டின் தற்போதைய நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்?


பதில்: அரசாங்கம் செய்வதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

Thursday, March 12, 2026

Zameera

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்படும் - மொஜ்தபா கமேனி


 ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் ஊடாக, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். 


அத்துடன், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அனைத்து அமெரிக்க இராணுவத் தளங்களையும் உடனடியாக மூடிவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


அவ்வாறு செய்யத் தவறினால், அந்தத் தளங்களைக் இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். 


எவ்வாறாயினும், ஈரான் அண்டை நாடுகளுடன் நட்புறவு மற்றும் ஒத்துழைப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், தாக்குதல்கள் அமெரிக்க இராணுவத் தளங்களை மட்டுமே இலக்காகக் கொள்ளும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


அதேபோல், ஈரானுக்கு எதிரான தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூடிவைக்கப் போவதாகவும் புதிய அதி உயர் தலைவர் அந்த உரையில் தெரிவித்துள்ளார்.

SHAHNI RAMEES

ஒரு சொட்டு பெற்றோல் கூட இனி அமெரிக்காவுக்கு கிடைக்காது - ஒரு பெரல் பெற்றோல் விலை 200 டாலருக்கு உயரும் - ஈரான் கடும் எச்சரிக்கை.

 


ஒரு சொட்டு பெற்றோல் கூட இனி அமெரிக்காவுக்கு கிடைக்காது

Zameera

இலங்கையில் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவு


 இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா இதனை தெரிவித்தார்.

“இலங்கையில் இரண்டாவதாக அதிகளவில் பதிவாகும் தொற்றுநோய் எலி காய்ச்சல் ஆகும். ஆண்டுதோறும் சுமார் 13,000 நோயாளர்கள் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்றனர். இது இதைவிட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக 100 முதல் 200 மரணங்கள் வரை பதிவாகின. 2024 ஆம் ஆண்டில் 300 மரணங்கள் பதிவாகின. 2025 ஆம் ஆண்டில் அந்த மரணங்கள் 200 க்கும் குறைவாகக் குறைந்தன. 2026 ஆம் ஆண்டில் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இந்நோய் அதிகளவில் பதிவாகியுள்ளது. அதேநேரம் குருநாகல், கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அல்லது அவதான நிலைமைகள் காணப்படுமாயின் அங்கிருந்தும் நோயாளர்கள் பதிவாகின்றனர்.”

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  விசேட வைத்திய நிபுணர் கோலித ஜயசுந்தர, எலி காய்ச்சல் அறிகுறிகள் குறித்து பின்வருமாறு விளக்கமளித்தார்:

"காய்ச்சல் சாதாரணமாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடையில் இருக்கும். இங்கு நோயாளியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 'வரலாறு' ஆகும். இவர் எங்கே சென்றார் என்பது போன்ற விடயங்கள் அவை. நோயைக் கண்டறிவதற்கு நோயாளியின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. வயிறு வலிக்கும், வாந்தி வரும். கடுமையான தலைவலி இருக்கும். மூட்டு வலி வரும். தசை வலிக்கும். அதற்கு மேலதிகமாக, முதல் மூன்று நாட்களுக்குப் பின்னரும் காய்ச்சல் இருக்குமானால், ஒரு வைத்தியரை அணுகி அது குறித்து ஒரு முடிவுக்கு வருவது முக்கியமானது. நோய் தாமதமானால், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை பிரதானமாகப் பாதிப்படையும். அதற்கு மேலதிகமாக மூளைக்குக் கூட பாதிப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிப்பதற்கும் இடமுண்டு."

Zameera

மத்திய கிழக்கு போர்: 1,100க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழப்பு அல்லது காயம்


 அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் போர், மத்திய கிழக்கு முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு பேரழிவு தரும் நிலையை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்ற யுனிசெஃப் (UNICEF) அமைப்பு கூறுகிறது. 


பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையில் இடம்பெற்ற வன்முறைச் செயல்களால் 1,100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


அறிக்கையிடப்பட்டுள்ளபடி, உயிரிழந்த சிறுவர்களில் ஈரானில் 200 பேரும், லெபனானில் 91 பேரும், இஸ்ரேலில் நால்வரும் மற்றும் குவைத் நாட்டில் ஒருவரும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


யுத்தம் மேலும் தீவிரமடைந்து வருவதால், இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும் என யுனிசெஃப் அமைப்பு எச்சரித்துள்ளது. 


இந்த நெருக்கடி காரணமாக மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு கல்வி பறிபோயுள்ளதுடன், இடைவிடாது நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 


"குழந்தைகளின் உயிர்களைப் பறிப்பது, அவர்களை ஊனமுற்ற நிலைக்கு ஆளாக்குவது அல்லது குழந்தைகள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது" எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.

SHAHNI RAMEES

#BREAKING: போரை முடிக்க ரெடி - ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

 

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். 

மூன்று நிபந்தனைகள்!

ஈரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல் (Recognizing Iran's legitimate rights): ஈரானின் இறையாண்மை மற்றும் அதன் அணுசக்தித் திட்டங்களை உருவாக்குவதற்கான உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் 

​இழப்பீடு வழங்குதல் (Payment of reparations): போரினால் ஈரானின் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.

​சர்வதேச உத்தரவாதங்கள் (Firm international guarantees): எதிர்காலத்தில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாது என்பதற்கு உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் 


SHAHNI RAMEES

அயதுல்லா அலி காமேனியின் படுகொலை எதிரொலி - FIFA உலகக்கிண்ணத்திலிருந்து ஈரான் விலகல்!

 


இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப்