Our Feeds



Monday, May 18, 2026

Zameera

பிரதமர் இங்கிலாந்துக்கு விஜயம்




 இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (18) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். 


பிரதமருடன் மேலும் இருவர் சென்றுள்ளதாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார். 


அவர்கள் இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகர் நோக்கி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்.- 403 (UL- 403) என்ற விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 


அவர்கள் தமது பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்பவுள்ளனர்.

Zameera

விமல் வீரவன்சவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது. 


2016ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 


இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இதன்போது, வழக்கின் சாட்சியாளர்கள் எவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை என 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார். 


இதற்கமையவே, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஜூலை மாதம் 13ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. 


கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி 6ஆம் திகதி, அன்றைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுசைன் இலங்கை வந்திருந்த போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு - துன்முல்ல பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, வீதிகளை மறித்து பொதுமக்களுக்குப் இடையூறு ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி கறுவாத் தோட்டம் பொலிஸாரால் இந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. 


வீதிகள் கட்டளைச் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் புரிந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, ஜெயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, ரொஜர் செனவிரத்ன மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Zameera

ஈரான் இணங்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது - ட்ரம்ப்

அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரான் இணங்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல்களை ஆரம்பித்தன.

இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைகள் அனைத்து தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் மீண்டும் போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்கா முன்மொழியும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஈரான் சம்மதம் தெரிவிக்காவிட்டால் அந்நாட்டில் எதுவும் மிஞ்சாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (17) தெரிவித்துள்ளார்.

“ஈரானைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு நேரமில்லை. அவர்கள் வேகமாகச் செயல்பட வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு எதுவும் மிஞ்சாது. நேரம் மிகவும் முக்கியமானது” என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


 

SHAHNI RAMEES

LTTEக்கு பகிரங்கமாக ஆதரவு! - அர்ச்சுனா MP கைது செய்யப்படலாம் என அச்சம்!

 


இலங்கை எம்பி அர்ச்சுனா கைது செய்யப்படலாம் என அச்சம்!

SHAHNI RAMEES

பிரதமர் இணக்கம்! - மல்வானை வீட்டில் இருந்து வௌியேறும் பல்கலை மாணவர்கள்!

 

தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள
SHAHNI RAMEES

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளனர்!

 


யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை
SHAHNI RAMEES

ஜனாதிபதி இவ்வாரம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம்!

 


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த வாரம்

Zameera

கோத்தபாய சென்ற வழியிலேயே இந்த அரசாங்கம் பயணிக்கிறது - எஸ்.எம்.மரி்க்கார்


 (எம்.ஆர்.எம்.வசீம்)


அரசாங்கம் பாரிய டொலர் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதால், வாகன இறக்குமதியை தடை செய்யாமல் வாகனங்களுக்கான வரியை அதிகரித்துள்ளது. எதிர்காலததில் வீடுகளில் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் உபகரணங்களுக்கும் வரியை அதிகரிக்கும். அதனால் கோத்தபாய சென்ற வழியிலேயே இந்த அரசாங்கம் பயணிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரி்க்கார் தெரிவித்தார்.


கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,


அரசாங்கம் 33வீதம் மின்சார கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்து, தற்போது மின்சார கட்டணத்தை தற்போது 40 வீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று உணவு. கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்களின் வரியை பூச்சியமாக்குவதாகவே தெரிவித்தது. ஆனால் 2024 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இருந்ததை விட அதிக விலைக்கே உணவுப்பொருட்கள் மருந்துப்பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்கிறோம்.


அதேபோன்று தற்போது டொலரின் பெருமதி 330 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திறைசேரியில் இருந்து 2,5 மில்லியன் டொலர் காணாமல் போயுள்ளது. என்.டி.பி வங்கி, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் போன்ற நிறுவனங்களில் இருந்து பாரியளவில் டொலர் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அரசாங்கம் எதுவும் கதைப்பதில்லை. அதனை மறைப்பதற்கே முயற்சித்து வருகிறது. 


அதேநேரம் அரசாங்கம் தற்போது இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 50 வீத வரி அதிகரித்துள்ளது. டொலரை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு வாகனம் இறக்குமதி செய்வதை தடை செய்திருக்கலாம். அதனை செய்யாமல், வாகனங்களுக்கான வரியை அதிகரித்து, மக்களுக்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியுமாகி இருந்த அந்த இயலுமையை இல்லாமல் செய்திருக்கிறது. எதிர்காலத்தில் அரசாங்கம் வீட்டு உபகரணங்களான ஆடை சலவை இயந்திரம், மின்விசிறி போன்ற இலத்திரனியல் உபகரங்களின் இறக்குமதி வரியை அதிகரிக்கும். அரசாங்கம் கோத்தபாய அரசாங்கம் பயணித்த வழியிலே செல்கிறது.


மக்கள் அனுபவமில்லாத கோத்தபாய ராஜபக்ஷ்வை நாட்டின் ஜனாதிபதியாக்கி, நாட்டை வங்குராேத்தாகியது. அதேபோன்று பரீட்சித்துப்பார்ப்பதற்காக அநுர குமாரவை ஜனாதிபதியாக்கி, கைசேதப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்துக்கு முடியாது என்பதை மக்கள் தற்போது உணர்ந்து வருகிறார்கள். அதனால் மக்களுக்கு அடுத்த மாற்று வழியாக இருப்பது, அனுபவமுள்ள, பரீட்சித்து பார்க்கப்படாத ஒரே தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது அணியான ஐக்கிய மக்கள் சக்தியாகும். நாட்டை அபிவிருத்தியடையச் செய்ய முடியுமான ஆளுமையும் திறமையும் உள்ளவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலே இருக்கிறார்கள் என்றார்.

Zameera

வெளிவிவகார அமைச்சின் e-DAS கட்டமைப்பில் கோளாறு: ஆவண சான்றளிப்பு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!


 வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவண சான்றளிப்பு கட்டமைப்பில் (e-DAS) ஏற்பட்டுள்ள திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவண சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.


பத்தரமுல்லையில் அமைந்துள்ள தூதரக விவகாரப் பிரிவின் முதன்மை அலுவலகம் மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை, குருநாகல் ஆகிய பகுதிகளில் உள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களின் சேவைகளும் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தொடர்புடைய தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடன் இணைந்து, e-DAS கட்டமைப்பை மிக விரைவாக வழமைக்குக் கொண்டு வந்து, சாதாரண சேவைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


ஏற்கனவே இணையத்தளம் மூலமாக நேரத்தை ஒதுக்கியுள்ள விண்ணப்பதாரர்கள், அடுத்தகட்ட அறிவிப்புகள் மற்றும் இற்றைப்படுத்தல்களை (Updates) அறிந்துகொள்ள 'e-Channeling' கட்டமைப்பைக் அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கட்டமைப்பு வழமைக்குத் திரும்பியவுடன் அது குறித்த விபரங்கள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் உடனடியாக அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த திடீர் முடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு தூதரக விவகாரப் பிரிவு தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.   


  

Zameera

இலங்கைக்கு வருகை தந்த ஐசிசி பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்


 இம்ரான் குவாஜா மற்றும் தேவஜித் சாகியா உள்ளிட்ட, தற்போது இலங்கையில் உள்ள ஐசிசி பிரதிநிதிகள், நாட்டில் கிரிக்கெட் நிர்வாகத்தின் எதிர்கால திசை குறித்த தொடர் கலந்துரையாடல்களுக்கு மத்தியில், கொழும்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.G


இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்ட சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து ஐசிசி அதிகாரிகள் மேற்கொண்ட ஒரு முக்கிய பயணத்தின் போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் ஆளுகை மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மீது கவனம் தொடர்ந்து குவிந்துள்ள நிலையில், ஐசிசி பிரதிநிதிகள், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைமையகத்தில் புதிதாக நிறுவப்பட்ட இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாக அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.


முந்தைய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைமை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஒன்பது பேர் கொண்ட கிரிக்கெட் உருமாற்றக் குழுவை நியமித்ததை அடுத்து இந்த பயணம் அமைந்துள்ளது. எரான் விக்ரமரத்ன தலைமையில் இயங்கும் இக்குழு, புதிய தேர்தல்கள் நடத்தப்படும் வரை கிரிக்கெட் நிர்வாகத்தை மேற்பார்வையிடவும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் பணிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடல்கள் இந்த விளையாட்டின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கிய தருணத்தில் ஐசிசி அதிகாரிகளின் இந்த பயணம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் சாதகமான நிலைக்கு மாறும் - ரத்ன கமகே


 உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்நாட்டின் வெளிநாட்டு நாணய மாற்று அதாவது டொலர் கையிருப்புகளை ஸ்திரப்படுத்துவதற்காக வாகன இறக்குமதி வரிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் உள்நாட்டு நிதி நிர்வாகத்தை முறையாக மேற்கொள்வதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன் மூலம் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அளவு கணிசமான மட்டத்தில் அதிகரித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.


இந்தத் தீர்மானம் மக்களுக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தாது என வலியுறுத்திய அமைச்சர், இது ஒரு குறுகிய காலத்திற்கு மாத்திரமே பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.


இந்தக் கடினமான காலப்பகுதிக்குப் பின்னர், நாட்டின் பொருளாதாரம் மிக விரைவில் சாதகமான நிலைக்கு மாறும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

Zameera

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டவர் கைது


 கொள்ளுப்பிட்டி நிமல்கா கார்டன் பகுதியில் தீர்வை வரி இன்றி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 540 சிகரெட்டுகளுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இவ்வாறு கைதானவர் 35 வயதுடைய சீன நாட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zameera

அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்


 மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (18) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 


அநுராதபுர மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யும் வாய்ப்புள்ளது. 


ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.