Our Feeds



Wednesday, June 24, 2026

Zameera

மலையக மக்களுக்கான 4,700 வீடுகள் இந்த ஆண்டுக்குள் பூர்த்தி செய்ய உத்தரவு


 இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள் பூர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 


இந்திய உதவியுடன் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த மீளாய்வு கலந்துரையாடல், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 


இந்த வீட்டுத் திட்டத்தின் கீழ், அனர்த்த அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்ட இடங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு 2,026 வீடுகள் வழங்கப்படவுள்ளன. 


எஞ்சிய வீடுகள் பெருந்தோட்டத் துறையில் வசிக்கும் தகுதியுள்ள தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கமைய, 22 பிராந்திய பெருந்தோட்டக் நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் மலையகக் குடும்பங்களுக்கும், அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம மற்றும் எல்கடுவ பெருந்தோட்டங்களின் கீழ் உள்ள தோட்டங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. 


ஒவ்வொரு வீட்டின் நிர்மாணப் பணிக்காகவும் இந்திய அரசாங்கம் 2.8 மில்லியன் ரூபாவையும், இலங்கை அரசாங்கம் 400,000 ரூபாவையும் பங்களிப்பாக வழங்கியுள்ளன. 


இந்தக் கலந்துரையாடலின் போது, வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடையாளம் காணப்பட்ட காணிகளை எவ்வித தாமதமுமின்றி விடுவிக்குமாறும், திட்டத்திற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காணத் தேவையான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்குமாறும் பிரபாத் சந்திரகீர்த்தி பணிப்புரை விடுத்தார். 


பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

SHAHNI RAMEES

ஹஜ் விவகாரம் - ரிஷாட் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

 


அண்மைக் காலமாக சர்ச்சைக்குரிய விடயமாக

SHAHNI RAMEES

தேர்தல்களின் போது விரலுக்கு மை பூசும் முறையை நீக்க ஐடியா?

 


தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக

Zameera

கொழும்பில் ஆரம்பமான போலியோ ஒழிப்பு மாநாடு


 தென்கிழக்கு ஆசிய போலியோ ஒழிப்பு ஆணைக்குழுவின் 19 வது அமர்வு இன்று (24) ஆரம்பமாகியுள்ளது. 


கொழும்பில் இடம்பெற்று வரும் இந்த அமர்வுக்கு சுகாதார பிரதியமைச்சர் ஹன்சக விஜேமுனி தலைமை தாங்குகின்றார். 


இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, தாய்லாந்து, நேபாளம், மாலைத்தீவு, பூட்டான், பங்களாதேஷ், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 100 நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். 


குறித்த அமர்வானது எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை


 2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். 


எனவே முன்னர் அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 


இன்று (24) பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து அவர், அங்கு மேலும் தெரிவிக்கையில், 2025.09.14 ஆம் திகதி வௌியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளுக்கான கால அட்டவணை நடைமுறைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். 


மாணவர்கள் அனைத்துப் பரீட்சைகளுக்கும் தோற்றுவதற்குத் தேவையான கற்றல் காலத்தை கருத்திற்கொண்டதன் பின்னரே இந்த கால அட்டவணை தயாரிக்கப்பட்டதாகவும் அவர் இதன்போது கூறினார். 


இதன்படி கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையானது ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 


இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரையில் கோரப்பட்டிருந்தது. 


இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தில் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 


அதேநேரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையினை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 


12 ஆம் தரத்திற்காக நடைபெறும் பொது தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையானது ஒக்டோபர் 24 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இதற்கான விண்ணப்பங்கள் நேற்று முன்தினம் (22) முதல் எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி வரையில் கோரப்பட்டுள்ளன. 


இதேவேளை கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. 


இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

SHAHNI RAMEES

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

 

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் இன்று
SHAHNI RAMEES

கோட்டாவின் ரிட் மனு விசாரணை பிற்போடல்...

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸவின்

SHAHNI RAMEES

கோட்டாபயவின் மனு இன்றும் விசாரணைக்கு...

 


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்

Zameera

தெல்தெனிய கொலைச் சம்பவம் - சந்தேக நபருக்கு உதவிய ஓட்டுநர் கைது


 தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் குண்டசாலை பிரதேச சபையின் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவினர் குண்டசாலை பகுதிக்குச் சென்று இன்று (24) இந்த நபரைக் கைது செய்துள்ளதாக நுவரெலியா பிரிவிற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (01) சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார்.


 


கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ள இந்த ஓட்டுநரின் நண்பர் என்பதுடன், சந்தேகநபரின் தொலைபேசி தரவுகளின் ஊடாகவே இந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Zameera

டொலரின் விற்பனை விலை 340 ரூபாவாக அதிகரிப்பு


 அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்றுவிகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 330.35 ரூபாயாகவும், விற்பனை விலை  340.06 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

Zameera

தெல்தெனிய காருக்குள் பெண் சடலமாக மீட்கபட்டது தொடர்பில் கைதான சந்தேகநபர் : ஏற்கனவே பல நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் தேடப்பட்டு வந்தவர்


 தெல்தெனிய பகுதியில் அண்மையில் (17) காரொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பல நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள பல நிதி மோசடி வழக்குகள் தொடர்பிலும் தேடப்பட்டு வந்தவர் என ஸ்ரீலங்கா பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்


பல்லேகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரும், அவரது 35 வயதுடைய மனைவியும் நேற்று அதிகாலை (24) யாழ்ப்பாணத்தில் வைத்து வாலாண மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.



கடந்த ஜூன் 17ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் வாகனமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


திருமணம் செய்து கொள்வதாகக் கூறியும், வாகனங்களை இறக்குமதி செய்து தருவதாகவும், வெளிநாட்டுப் பயணங்களை ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி சந்தேகநபர் இதற்கு முன்னர் பெருந்தொகை பணத்தை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவருக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளில் பின்வருவன அடங்கும்:


கம்பஹா நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள 11.87 மில்லியன் ரூபா மோசடி மற்றும் மோட்டார் காரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமைக்கான வழக்கு.

அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள 1.72 மில்லியன் ரூபா மோசடி வழக்கு.

அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள 1.37 மில்லியன் ரூபா மோசடி வழக்கு.

திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வாகன இறக்குமதி தொடர்பான 2.2 மில்லியன் ரூபா மோசடி வழக்கு.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) அளுத்கடை, ஹொரண மற்றும் கடுவெல நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையிலுள்ள நான்கு தனித்தனி வழக்குகள்.

அளுத்கடை நீதவான் நீதிமன்றில் நிலுவையிலுள்ள வெளிநாட்டுப் பயண வாக்குறுதிகள் தொடர்பான 4.2 மில்லியன் ரூபா மோசடி வழக்கு.

தெல்தெனிய மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Zameera

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிப்பு


 நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா அவர்களினால் “சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்” (Social Media Minimum Age Bill) இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.


சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதும், தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதும் இச்சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும்.


இச்சட்டமூலத்தின்படி, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக தளங்களை அணுகுவதைத் தடுக்கத் தேவையான விதிமுறைகளை வகுக்க உரிய அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


மேலும், சிறுவர்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் அல்லது எந்த நேரங்களில் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் நியமிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளர் ஒருவரினால் இச்சட்டத்தின் விதிகள் கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.



சட்டமூலத்தின் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளுக்கிடையில் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில், சிங்கள மொழியிலான உரை மேலோங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு - வெல்லம்பிட்டியில் நேர்ந்த பயங்கர விபத்து!



அம்பாறை டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை