Our Feeds



Wednesday, March 11, 2026

SHAHNI RAMEES

ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் - நீதவான் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

 

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும்
SHAHNI RAMEES

மின்சார சபை ஊழியர்களின் கோரிக்கைகளுக்குப் பச்சைக்கொடி!

 

மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில்
Zameera

சவூதியில் உள்ள இலங்கை உம்ரா யாத்ரீகர்களுக்கு விசேட அறிவிப்பு


 (நா.தனுஜா)

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வருகைதந்துள்ள உம்ரா பயணிகள் அனைவரையும் https://forms.gle/YD26uHKC5NgQ5p7T7 என்ற இணைப்பின் ஊடாகத் தூதரகத்தில் பதிவுசெய்யுமாறு ஜித்தாவில் உள்ள இலங்கைத் துணைத்தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையில் மூண்ட போர் சூழ்நிலை தீவிரமடைந்து தற்போது மத்திய கிழக்குப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளும் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ள பின்னணியிலேயே இலங்கைத் துணைத்தூதகரம் மேற்குறிப்பிட்ட அறிவிப்பை விடுத்துள்ளது.

ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், அனைத்து உம்ரா யாத்ரீகர்களுக்கும் உரிய நேரத்தில் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்காகவே இவ்விபரங்கள் கோரப்படுவதாக துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை இதுகுறித்து கரிசனையை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விமானசேவை வழங்கல் நிறுவனங்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் தொடர்புகொண்டு, இலங்கையிலிருந்து சென்ற உம்ரா யாத்ரீகர்கள் மீண்டும் பாதுகாப்பாக நாடு திரும்புவதை உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களுக்கு அவசியமான உதவிகளை உரிய வேளையில் வழங்குவதுமே தற்போது முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Zameera

ஈரான் கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை


 இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டெனா'  கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் 'பார்ஸ்'  செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயிரிழந்த 104 கடற்படையினரில் 84 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த சடலங்கள் விரைவில் ஈரானுக்கு கொண்டு வரப்படும் என்றும் இராணுவ மக்கள் தொடர்பு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

ஈரான் வெளிவிவகார அமைச்சின் முயற்சி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த சடலங்களை மீளப்பெறும் பணிகள் முன்னெடுக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், உயிரிழந்த ஈரான் கடற்படையினரின் சடலங்களை ஈரானிடம் ஒப்படைக்க வேண்டாம் என வொஷிங்டன் (அமெரிக்கா), இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Zameera

அபுதாபிக்கான அனைத்து விமானங்களும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து


அபுதாபிக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் எயார்வேஸ் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் எயார்வேஸ் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பஹ்ரைன், அம்மான், தோஹா, டுபாய் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் இந்த மாத இறுதி வரை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Zameera

திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுகிறது - நாமல் ராஜபக்ச


 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் நிலையில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது.

நிலக்கரி கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே அரசாங்கம் மக்கள் மீது இந்தச் சுமையை சுமத்தியுள்ளது.

அரசாங்கம் முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் காலத்தை இழுத்தடித்தமையே இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Zameera

சீரழிந்த இ.போ.சபைக்கு புதிய கலாச்சாரத்தைக் கொண்டுவர பாடுபடுவோம் - ஜனாதிபதி


 மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும்  ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அநுர  குமார திசாநாயக்க தெரிவித்தார்.



உரிய தரத்துடனான புதிய பஸ்களைச் சேவையில் இணைப்பதற்கும், பழைய பஸ்களைப் படிப்படியாக போக்குவரத்து கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்குமான திட்டங்களை அரசாங்கம் தற்போது தயாரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது ஒரே தடவையில்  மேற்கொள்ளக் கூடியதல்ல என்றாலும், சில ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் செயல்படுவதன் மூலம் அரசாங்கத்தின் பிரதான இலக்கான  தரமான பஸ் சேவையை நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.



நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 199 சாரதிகளுக்கும் 342 நடத்துநர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு  இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நியமனக் கடிதங்கள் வழங்குவதை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் சிலருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.



இலங்கை போக்குவரத்துச் சபையுடன் கடந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பிற்காலத்தில் அரசியல் நியமனங்கள் மற்றும் பல்வேறு முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்த இ.போ.சபையை மீண்டும் ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாகக் கட்டியெழுப்ப இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்ததோடு புதிய நியமனம் பெற்றவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.



இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க:



இலங்கை போக்குவரத்துச் சபையுடன் நமது நாட்டு மக்களுக்கு பயணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கலாச்சார ரீதியான பிணைப்பு உள்ளது. இன்று சாரதிகளாகவும் நடத்துநர்களாகவும் நீங்கள் இணைவது அத்தகைய வரலாற்றைக் கொண்ட, மக்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிவந்த ஒரு சேவைக்காகும். அதேபோல், இ.போ.சபையை தற்போதுள்ள நிலையிலிருந்து உயர்நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என நான் கருதுகிறேன். அது தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, அந்த பஸ்களில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மக்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும், அவர்களின் பாதுகாப்பு குறித்துச் சிந்தித்தும் செயல்படும் புதியதொரு நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். எனவே, இதில் இணையும் உங்களால் இ.போ.சபைக்குள் புதிய கலாச்சாரத்தைக் கொண்டு செல்ல முடியும் என நான் நினைக்கிறேன்.

சிறந்த வரலாற்றைக் கொண்டிருந்த இ.போ.சபை, பிற்காலத்தில் அரசியல் நியமனங்கள் மற்றும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக அழிவை நோக்கிச் சென்றது. சில அரசியல் அதிகாரங்களின்  அதிகாரத்தை பரப்புவதற்கு இந்த நிறுவனம் பயன்படுத்தப்பட்டது. இதனால் இ.போ.சபை மீது மக்கள் கொண்டிருந்த பிணைப்பைச் சீர்குலைக்க இந்த அசிங்கமான அரசியல் கலாச்சாரம் காரணமாக அமைந்தது என நான் கருதுகிறேன். அதேபோல், நவீன உலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய முடியாமல் போனதும் மக்களுக்கும் இ.போ.சபைக்கும் இடையிலான உறவு வீழ்ச்சியடையக் காரணமாக அமைந்தது.

நாட்டிற்கு ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவை அவசியம் என்பதில் இன்று நாம் அரசாங்கம் என்ற ரீதியில் உறுதியான கொள்கையில் இருக்கிறோம். இதற்குப் பல பிரதான காரணங்கள் உள்ளன. இன்றும் நமது நாட்டில் ஒரு குடும்பத்தின் வருமானத்தில் போக்குவரத்திற்காகச் செலவிடப்படும் தொகை அதிகமாக உள்ளது. அதேபோல், பொதுப் போக்குவரத்துச் சேவையில் வினைத்திறனான மற்றும் தொடர்ச்சியான சேவையைப் பெற முடியுமா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் உள்ளது. அந்தச் சந்தேகம் காரணமாகத் தமது போக்குவரத்துத் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்ள மக்கள் தனிப்பட்ட ரீதியில் மோட்டார் சைக்கிள் அல்லது சிறிய காரை வாங்க முயற்சிக்கிறார்கள். இதன் காரணமாகத் தமது வருமானத்தில் பெரும் பகுதியை இந்தப் போக்குவரத்துத் தேவைகளுக்காகச் செலவிட வேண்டியுள்ளது. இறுதியில் பார்த்தால், அவர்கள் வேலைக்குச் செல்வதற்கான செலவைத் தேடுவதற்காகவே வேலை செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் போக்குவரத்திற்காகச் செலவிடும் சுமையைக் குறைக்க வேண்டும். மக்களுக்குச் சுமையாக அமையாத போக்குவரத்துச் சேவையை நாம் உருவாக்க வேண்டும்.

அதேபோல், நாம் பெருமளவிலான வாகனங்களை இறக்குமதி செய்கிறோம். அதற்காக இறக்குமதிச் செலவில் பெரும் தொகையைச் செலவிடுகிறோம். பொதுப் போக்குவரத்தை வலுவாக மேம்படுத்தினால், வாகன இறக்குமதிக்கான செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என நான் நம்புகிறேன். இது பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது.

மேலும், சுற்றுச் சுழலில் ஏற்படும் காற்று மாசடைவிற்கு  இந்த வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையும் ஒரு காரணமாக உள்ளது. சுற்றாடலில் வெளியேற்றப்படும் நச்சுப் புகையின் அளவைக் குறைப்பது குறித்து இன்று உலகம் முழுவதுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்காக இந்தச் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும்.

இன்று நகர்ப்புற நெரிசல் ஒரு பிரதான பிரச்சினையாக உள்ளது.வீதியில் எவ்வளவு மனித நேரங்கள் வீணாகின்றன? இதனைப் பொருளாதார ரீதியாகக் கணக்கிட்டால் பொருளாதாரத்திற்குப் பெரும் இழப்பு ஏற்படுவதை உணரலாம். எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இவ்வாறான வலுவான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த எண்ணக் கருக்களை உருவாக்குவதில் பயனில்லை. மக்களுக்கு அந்தச் சேவை முறையாகக் கிடைக்க வேண்டும். அதேபோல் வசதியான போக்குவரத்துச் சேவை அவசியமானது. இதற்காகவே நாம் தற்போது பஸ்கள் தொடர்பில் தேசியக் கொள்கை ஒன்றைத் தயாரித்து வருகிறோம். மக்களுக்கு வசதியான சேவை தேவை என்பதால், நினைத்தவாறு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளை நெரிசலில் ஏற்றிச் சென்றால், நாம் பொதுப் போக்குவரத்து தொடர்பில் எந்தளவு முயற்சி எடுத்தாலும் பயனில்லை, மக்கள் அதிலிருந்து தூரமாகிவிடுவார்கள். எனவே, எந்த வகையான பஸ்கள் வீதியில் சேவையில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து நாம் தேசியக் கொள்கையை உருவாக்குகிறோம். இதனை ஒரே நேரத்தில் செய்ய முடியாது. முழு பஸ்  இருப்பையும் அகற்றிவிட்டுப் புதிய பஸ்களை ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யும்  வசதி எம்மிடம் இல்லை. எனினும், புதிதாக இணைக்கப்படும் பஸ்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதோடு, பழைய பஸ்கள் படிப்படியாக நீக்கப்பட வேண்டும். இதனைச் சில ஆண்டுகள் திட்டமிட்டபடி செய்தால், முழு பஸ் இருப்பையும் தரமானதாக மாற்ற முடியும். இது எமது பிரதான இலக்காகும்.

அதேபோல், பஸ்கள் எவ்வளவு வசதியுள்ளதாக இருந்தாலும், அந்த பஸ்ஸை ஓட்டும் சாரதி மற்றும் நடத்துநரின் நடத்தை சரியாக இல்லாவிட்டால் பயனில்லை. ஏனெனில், பஸ்ஸில் பயணம் செய்யும் அனைத்து மக்களின் உயிரும் அவரது கைகளிலேயே உள்ளது. எனவே, எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பஸ்ஸை  ஓட்ட அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இடமளிக்கக் கூடாது. சில பஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இதற்கு எதிராகச் சில கருத்துக்களைக் கூறியிருந்தனர். எனினும், நாம் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு பிரஜையும் தமது உயிரின் மீது நம்பிக்கையுடன் பஸ்ஸில் ஏறுகிறார்கள். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால், யாரும் தமது பிள்ளையை பொது போக்குவரத்தில் பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள். பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமாயின், தற்போதைய நிலைமையை மாற்ற வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் எவருக்கும் பஸ்ஸை செலுத்த அனுமதிக்கப்படக்கூடாது. இது தொடர்பாக தேவையான சட்டங்கள், பரிசோதனைகள் போன்ற அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நடத்தை சிறந்த தரத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும், செயல்திறனை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது பயண இடத்தை விரைவாக அடைய எதிர்பார்க்கிறார்கள். எனவே, செயல்திறனை உருவாக்க வேண்டும். பயண இடத்தை  குறித்த நேரத்தில் அடைய வேண்டும். மேலும், தொடர்ச்சி மிகவும் முக்கியம். இல்லையெனில், அன்றாட வாழ்க்கை சீர்குலைந்துவிடும். எனவே, வசதியான, செயல்திறனான மற்றும் தொடர்ச்சியான பொது போக்குவரத்து சேவையை வழங்குவதே எமது எதிர்பார்ப்பு. இதற்காக, வசதியான பஸ் கட்டமைப்பை நிறுவி, இந்த மாதம் அதைத் தொடங்க நாம் எதிர்பார்க்கிறோம். இந்த மாதம், ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து 08  புதிய பஸ் வண்டிகளைப் பெறவுள்ளோம். இதற்கு மேலதிகமாக, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்குள் நாம் கொள்வனவு செய்த பஸ்கள்  கிடைக்கவுள்ளன.

அதன்படி, புதிய நிறுவனத்தின் மூலம் பயணிகளின் வசதியான போக்குவரத்திற்கு ஏற்ற பஸ்களின் தொகுப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பழைய பஸ்களின் தொகுப்பை நகரங்களிலிருந்து படிப்படியாக அகற்றத் தொடங்குகிறோம். முக்கிய நகரங்களில் குறுகிய பயணங்களுக்கு பஸ்களின் தொகுப்பை உருவாக்கி, பழைய பஸ்களை படிப்படியாக சேவையிலிருந்து அகற்றி வருகிறோம். இதை ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

மேலும், பிரஜைகளுக்கு வழங்கப்படும் சேவை மிகவும் முக்கியமானது. எனவே, அரசாங்கமாக, சிறந்த சேவையை வழங்க நாம் உறுதிபூண்டுள்ளோம். இருப்பினும், இந்த சேவையை முழுமையாக தனியார் துறைக்கு விட்டால், அவர்களிடையே ஒரு ஏகபோகம் உருவாகும். எனவே, இதை முழுமையாக கைவிடக்கூடாது. ஆனால், நாம் முறையான முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். 

இது அரசாங்க பங்களிப்பு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன், நாம் எதிர்பார்க்கும் பணிகளுக்குத் தேவையான ஒழுங்குமுறையுடன், பாதுகாப்பான, வசதியான, நிலையான, திறமையான பொது-தனியார் கூட்டாண்மையாக மாற்றப்பட வேண்டும்.

21,000 தனியார் பஸ்கள் இருந்தபோது, 19,000 உரிமையாளர்கள் இருந்தனர். பஸ் சேவை என்பது ஒரு தொழிற்துறை என்பதைவிட அது சுயதொழிலாக மாறிவிட்டது. எனவே, தரமான சேவையைப் பெறுவது சாத்தியமில்லை. போட்டி அதிகம். இன்று, அதிக மக்கள் இல்லாத நேரங்களில் சேவை வழங்கப்படுவதில்லை.

இது நம் நாட்டின் கலாசார வாழ்க்கையையும் பாதித்துள்ளது. இன்று, 9.30 மணிக்கு  திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கிராமத்திற்குச் செல்ல பஸ் இல்லை. அதன்படி, அது ஒரு சேவை இடத்திலிருந்து இலாபம் ஈட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரிமையாளர்கள், பல்வேறு ஊழியர்கள் மற்றும் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட பஸ்கள் இதற்கு வழிவகுத்தன.

எனவே, ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு சிறந்த, தரமான பொது போக்குவரத்தை உருவாக்குவதாகும். அதற்காக, நாம் மாகாண முறைமைக்குச் செல்ல வேண்டும் என்று  நம்புகிறோம். உரிமையாளர்கள் தமது பஸ்களை வலயங்களில் நிறுவப்படும் பஸ் நிறுவனங்களுடன் இணைக்கலாம். அந்த நிறுவனம் தொடர்ச்சியான சேவையை வழங்க வேண்டும். அந்த வலயம் நட்டத்தில் இயங்கினால், அரசாங்கம் அதற்கு மானியம் வழங்க முடியும்.

சிறந்த போக்குவரத்து சேவைகளை வழங்க இதுபோன்ற ஒரு திட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும். நாம் ஒருபோதும் போக்குவரத்து சேவைகளை இலாப-நட்டக் கணக்கில்  வைத்து அளவிட தயாராக இல்லை. இதை ஒரு சேவையாக நாங்கள் அளவிடுகிறோம். இந்த வழியில், நட்டம் ஏற்படும் கிராமப்புற வீதிகளுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்க இந்த வரவு செலவுத்திட்டத்தில் சுமார் 2000 மில்லியன்களை ஒதுக்கியுள்ளோம்.

செயற்திறனான போக்குவரத்து சேவையின் நன்மைகள் வெளிப்புற பொருளாதாரத்தில் உணரப்படுகின்றன. நமது பணிபுரியும் ஊழியர்கள் திறமையான பணியிடத்திற்குச் சென்றார்களா? அந்த சேவைகள் மற்றும் தயாரிப்புகளிலிருந்துதான் பொருளாதாரம் இலாபம் ஈட்டுகிறது மற்றும் இழக்கிறது.  நமது பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் சிறந்த சேவையின் அடிப்படையில் மேம்படுத்தப்படுகின்றன. எனவே, ஒரு அரசாங்கமாக நமது எதிர்பார்ப்பு அதற்குத் தேவையான போக்குவரத்து சேவையை உருவாக்குவதாகும்.

போக்குவரத்து சேவையை வலுப்படுத்த நமக்கு ஒரு நல்ல மற்றும் திறமையான அரசியல் அதிகாரம் தேவை. இந்த போக்குவரத்து சேவையை திறம்படச் செய்ய எங்கள் அமைச்சரும் இரண்டு பிரதி அமைச்சர்களும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். தொலைதூர கிராமங்களில் பஸ்கள் இயக்கப்படுவது குறித்து உங்களிடம் கேட்கப்படும் நேரங்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தத் துறையை மேம்படுத்துவதில் மிகவும் ஆர்வமுள்ள ஒரு நல்ல அரசியல் அதிகாரம் உள்ளது. இந்த மாற்றத்தை அடைவதில் இது மிகவும் முக்கியமானது.

அதே போன்று எங்களிடம் மிகச் சிறந்த அதிகாரிகள் குழு ஒன்று உள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு பிரச்சினைகள் இருந்திருக்கலாம். ஆனால், நாம் எதனையும் கடந்த காலத்தைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. தற்போதைய அவர்களின் செயல்பாடு நல்லதா அல்லது கெட்டதா என்பதன் அடிப்படையிலேயே நாம் முடிவுகளை எடுக்கிறோம். எம்மால் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முடியும். கேள்விப்பட்ட விடயங்களை வைத்து நாம் எவரையும் எடைபோடுவதில்லை. எனவே, எமது  அதிகாரிகள் குழு தற்காலத்தில் இதற்காக அணிதிரண்டு பணியாற்றுவார்கள் என்று நாம் நம்புகிறோம்.

குறிப்பாக, இன்று இலங்கை போக்குவரத்து சபையில் இணையும் உங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. இந்த நிறுவனம் குறித்து நிலவும் மிகவும் மோசமான கலாசாரத்தை எங்காவது ஒரு புள்ளியில் மாற்றியமைக்க வேண்டும். அந்த கலாசாரத்தை வெறும் பேச்சுகளாலோ, அறிக்கைகளாலோ அல்லது ஆவணங்களாலோ மட்டும் மாற்றிவிட முடியாது.அது செயல்பாட்டின்  மூலமே சாத்தியமாகும். இங்குள்ள நீங்கள் அனைவரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டு வருவீர்கள் என நம்பி, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை போக்குவரத்து சபை பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.ஏ.என். தம்மிக ரத்நாயக்க   

நாட்டின் அரச போக்குவரத்துச் சேவையை சிறந்த நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கும் நிறுவனம் இலங்கை போக்குவரத்து சபை ஆகும். ஒரு காலத்தில் 'மக்கள்மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவை' என்றும், மற்றுமொரு காலத்தில் 'கொத்தணி பஸ் நிறுவனங்கள்' என்றும் பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், பல கடினமான பயணங்களுக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டளவில் மீண்டும் தலைதூக்கும் ஒரு போக்குவரத்து நிறுவனமாக மாறியுள்ளது.

எனினும், உங்கள் அனைவரினதும் கவனத்திற்கு ஒரு விடயத்தைக் கூற வேண்டும். இலங்கைபோக்குவரத்து சபையிடம் தற்போது 7,130 பஸ்கள் உள்ளன. அவற்றில், 10 ஆண்டுகளுக்கும் பழமையான பஸ்களின் எண்ணிக்கை 70% க்கும் அதிகமாகும். அதில் 3,848 பஸ்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலானவை. தற்போதைய அரசாங்கம், இலங்கை  போக்குவரத்து சபையை மேம்படுத்தி, மிகவும் தரமான சேவையை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றது.

Tuesday, March 10, 2026

SHAHNI RAMEES

இன்று(10) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!!!

 

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்
Zameera

பிரசாத் ரணசிங்கவுக்கு பிணை


 கைதான குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான பிரசாத் ரணசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

கைதான அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுப்பட்டார்.

இதன்போது அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.




Zameera

பலநாள் மீன்பிடி படகில் இருந்து 600 கிலோவுக்கும் அதிக போதைப்பொருள் மீட்பு


 போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகில் 600 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 


குறித்த படகு அடுத்த இரண்டு நாட்களுக்குள் கரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதனுள் கணிசமான அளவு ஆயுதங்களும் பாதுகாப்புக் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த படகு பொறுப்பேற்கப்பட்டது. 


இதேவேளை, கடந்த 7ஆம் திகதியும் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில் மற்றுமொரு படகு கைப்பற்றப்பட்டது. அது திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதிக்கப்பட்ட போது, அதனுள் 102 கிலோ ஹெரோயின் மற்றும் 900 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர். 


இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால: 


"போதைப்பொருள் விநியோக வலையமைப்பை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருளுக்கு அடிமையான பிரஜைகளை மீட்டெடுக்கும் அதேவேளை, சமூகத்தையும் நாம் சுத்தப்படுத்த வேண்டும். இந்த விநியோக வலையமைப்பு திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் பிணைந்துள்ளது. இதனை முற்றாக ஒழிப்பதற்காக இலங்கை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.

SHAHNI RAMEES

முடிந்தவரை சிக்கனமாக பெற்றோல், டீசலை பயன்படுத்துங்கள்!

 



மத்திய கிழக்கு போர் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள

Zameera

ஈரானிய வீராங்கனைகளுக்கு புகலிடம் வழங்கிய அவுஸ்திரேலியா!


 தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான விசா வழங்கியுள்ளது. 


தமது நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த வீராங்கனைகள் அரசியல் புகலிடம் கோரியிருந்தனர். 


அவுஸ்திரேலியப் பிரதமர் எண்டனி எல்பானீஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


ஆசியக் கிண்ணக் கால்பந்தாட்ட தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த ஈரான் மகளிர் அணி, தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது ஈரான் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தவிர்த்தது. 


இது ஈரான் அரசுக்கு ஆதரவான ஊடகங்களால் "அவமரியாதையான செயல்" என விமர்சிக்கப்பட்ட நிலையில், வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச கவனம் திரும்பியது. 


அவுஸ்திரேலியாவினால் பாதுகாப்பு வழங்கப்பட்ட வீராங்கனைகள்: 


சாரா சர்பாலி அலிஷா (Zahra Sarbali Alishah) 


மோனா ஹமூதி (Mona Hamoudi) 


சாரா கன்பாரி (Zahra Ghanbari) 


பாத்திமா பசந்திதே (Fatemeh Pasandideh) 


அத்தேபே ரமசானிசாதே (Atefeh Ramezanizadeh) 


இந்த வீராங்கனைகள் மீண்டும் ஈரானுக்கு நாடுகடத்தப்பட்டால் அவர்கள் கொல்லப்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். 


எவ்வாறாயினும், அவுஸ்திரேலியப் பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர், அவுஸ்திரேலியா இந்த "உணர்திறன் மிக்க சூழலை" மிகச் சிறப்பாகக் கையாளுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த துணிச்சலான பெண்களின் நிலை குறித்து அவுஸ்திரேலியர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் பிரதமர் எல்பானீஸ் தெரிவித்துள்ளார். 


அணியின் ஏனைய வீராங்கனைகளுக்கும் அவுஸ்திரேலியாவின் ஆதரவு திறந்த நிலையில் உள்ள போதிலும், ஈரானில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் காரணமாக சில வீராங்கனைகள் மீண்டும் தாய்நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


பிலிப்பைன்ஸிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறிய ஈரான் அணியின் ஏனைய உறுப்பினர்கள் டுபாய் ஊடாக நாடு திரும்ப முயன்ற போதிலும், ஐக்கிய அரபு இராச்சியம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது. 


அதன்படி அவர்கள் துருக்கி அல்லது மலேசியா ஊடாக மீண்டும் ஈரானுக்குச் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. 


ஐந்து வீராங்கனைகளுக்குப் புகலிடம் அளித்தது சாதகமான நடவடிக்கை என்றாலும், எஞ்சிய வீராங்கனைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து இன்னும் பலத்த சந்தேகம் நிலவுவதாக உலகளாவிய வீரர்கள் சங்கமான FIFPRO தெரிவித்துள்ளது.

Zameera

மத்திய கிழக்கில் மோதல்; வெளிநாட்டு பிரஜைகளுக்கு 14 நாட்கள் விசா நீடிப்பு


 மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமை காரணமாக, தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்கு விசா நீடிப்பு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


பெப்ரவரி 28ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சில வெளிநாட்டுப் பயணிகள் திட்டமிட்டபடி நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக, பல சுற்றுலாப் பயணிகள் தமது விசா காலம் முடிவடைவதற்குள் வெளியேற முடியாத அபாயத்தை எதிர்நோக்கினர். 


இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, பெப்ரவரி 28 முதல் மத்திய கிழக்கிற்கான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் இலங்கையில் சட்டப்பூர்வமாகத் தங்கியிருக்கும் அதேவேளை, மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய அவர்களுக்குப் போதிய கால அவகாசம் வழங்குவதே இதன் நோக்கமாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலதிகமாக, வரும் நாட்களில் விமான ரத்துக்கள் தொடருமானால், மேலும் 14 நாட்களுக்குக் கட்டணமின்றி விசா நீடிப்பு வழங்குவதற்காகப் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு மாற்று விமானங்களைப் பெற்றுக்கொள்ளும் வரை, நாட்டில் சிக்கியுள்ள பயணிகள் சட்டப்பூர்வமாகத் தங்கியிருப்பதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.