Our Feeds



Sunday, March 1, 2026

Zameera

ஒமான் அருகே எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: 20 பணியாளர்கள் மீட்பு


 மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திக்கு (Strait of Hormuz) அருகிலுள்ள முசந்தம் தீபகற்பத்தில் (Musandam Peninsula), பாலாவ் (Palau) நாட்டு கொடியுடன் பயணித்த ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற எண்ணெய் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாக ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் முக்கிய விவரங்கள்:

• தாக்குதல் நடந்த இடம்: ஓமனின் முசந்தம் மாகாணத்தில் உள்ள கசாப் (Khasab) துறைமுகத்திற்கு வடக்கே சுமார் 5 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

• பணியாளர்கள் மீட்பு: கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் மற்றும் 5 ஈரானியர்கள் உட்பட மொத்தம் 20 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

• காயங்கள்: முதற்கட்ட தகவல்களின்படி, நான்கு பணியாளர்கள் பல்வேறு அளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

• துகம் துறைமுகத் தாக்குதல்: இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, ஓமனின் வணிகத் துறைமுகமான துகம் (Duqm) மீது ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஒரு வெளிநாட்டுத் தொழிலாளி காயமடைந்ததாகத் தெரிகிறது.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகிறது.


Zameera

சவூதியில் வசிக்கும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு


 த்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 


சவுதி அரேபிய அதிகாரிகள், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்கும் உத்தியோகபூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


அத்துடன் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 


பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், கடவுச்சீட்டு மற்றும் வதிவிட அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் செல்லுபடியாவதை உறுதி செய்து, அவற்றை எளிதில் அணுகக்கூடிய வகையில் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 


இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பும் நலனுமே தூதரகத்தின் முதன்மையான இலக்காகும். 


அவசர தொடர்புகளுக்கு (24 மணிநேர சேவை): தொலைபேசி எண்கள்: +966 54 947 7567, +966 56 982 2700 


WhatsApp / IMO (தகவல்களுக்கு மட்டும்): +966 56 975 3380 


மின்னஞ்சல்: slemb.riyadh@mfa.gov.lk 


மேலதிக தகவல்களுக்குத் தூதரகத்தின் இணையதளம், Facebook, Instagram, X மற்றும் தூதரகத்தின் WhatsApp ஆகிய சமூக ஊடகங்களை பின்தொடருமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

Zameera

வௌிநாட்டு சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது


 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தல்துவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வர்த்தகர் ஒருவராவார். 


சந்தேக நபர் நேற்று (28) இரவு 07.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-652 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 


அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36,000 வெளிநாட்டு சிகரெட்டுகளைக் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.


SHAHNI RAMEES

ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லாஹ் காமணி கொல்லப்பட்டார் - உறுதிப்படுத்தியது ஈரான்

 


ஈரானின் ஷியா ஆன்மீக தலைவர் ஆயதுல்லாஹ்

Zameera

வௌிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இதன்படி, அவர்களின் விசா காலம் 07 நாட்களுக்கு நீடிக்கப்படும் என்றும், அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த வான்பரப்பு ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து விமானப் பயணங்களையும் நேற்று (28) நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 


இதன் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் போகும் பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 


மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டவர் மீண்டும் புறப்பட்டுச் செல்லும் வரை, அவர்கள் எவ்வித அசௌகரியங்களும் இன்றி நாட்டில் தங்கியிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Zameera

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று யாரும் அச்சமடையத் தேவையில்லை


 மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் போர் நிலைமை காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று அச்சமடையத் தேவையில்லை என்றும் நாட்டில் போதுமான அளவு எரிபொருள் இருப்பதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

SHAHNI RAMEES

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா..? நெதன்யாகு வெளியிட்ட தகவலால் அதிகரிக்கும் பதற்றம்

 

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்

Saturday, February 28, 2026

SHAHNI RAMEES

அதிகரித்த பெற்றோல் & டீசல் விலை!

 


மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று

Zameera

கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து


 மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் நாளை 01ஆம் திகதி மதியம் 12.00 மணி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. 


அதற்கமைய, பின்வரும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன, 


UL225 கொழும்பு / துபாய் 


UL226 துபாய் / கொழும்பு 


UL229 கொழும்பு / குவைத் 


UL230 குவைத் / கொழும்பு 


UL217 கொழும்பு / தோஹா 


UL218 தோஹா / கொழும்பு 


UL253 கொழும்பு / தம்மாம் 


UL254 தம்மாம் / கொழும்பு 


UL265 கொழும்பு / ரியாத் 


UL266 ரியாத் / கொழும்பு 


மீளப் பதிவு செய்தல் மற்றும் மேலதிக உதவிகளுக்காக பயணிகள் 1979 என்ற உலகளாவிய தொடர்பு மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது www.srilankan.com இணையத்தளத்திற்குச் செல்லுமாறு அல்லது அருகிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது அந்தந்த பயண முகவர்களைத் தொடர்புகொள்ளுமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Zameera

பல நாடுகளின் வான்பரப்புகள் மூடல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பல நாடுகள் தங்களது வான்பரப்பை மூடியுள்ளன. 


அதன்படி ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்களது வான்பரப்புகளை மூடியுள்ளன.

 

SHAHNI RAMEES

இஸ்ரேலில் பதற்றம் - ஈரானும் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி திருப்பி அடிக்க ஆரம்பித்தது!



 இஸ்ரேல் இன்று (28) காலை ஈரான் மீது நடத்திய தாக்குதலையடுத்து ஈரான் சற்று முன்னர் இஸ்ரேல் மீது பதில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.


ஈரான் இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.


இதனையடுத்து இஸ்ரேலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது . ஈரான் ஏவுகணைகள் தாக்கலாமென்பதால் பதுங்கு குழிகளில் பாதுகாப்பாக இருக்குமாறு மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர் .

SHAHNI RAMEES

BREAKING: ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கியுள்ளோம்: டொனால்டு டிரம்ப்

 


ஈரான் உச்ச தலைவர் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல்

Zameera

30 இலட்சம் ரூபா போதை மாத்திரைகளுடன் மூவர் கைது


 30 இலட்சம் ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் தம்பதியினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும் எகொடஉயன பிரதேசங்களைச் சேர்ந்த 37, 20 மற்றும் 19 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, பாணந்துறை உடஹமுல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 20,000 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 


கைது செய்யப்பட்ட தம்பதியினர் 23,000 ரூபா மாதாந்த வாடகைக்கு வீடொன்றைப் பெற்று, அங்கிருந்து இந்த போதை மாத்திரை வியாபாரத்தை முன்னெடுத்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.