Our Feeds



Monday, April 13, 2026

Zameera

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணி நேர சேவை


 நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் 24 மணிநேரமும் தமது சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் பட்டாசு மற்றும் வாணவேடிக்கை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், குறிப்பாக சிறுவர்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.

அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டாம் எனவும், மதுபோதையில் எக்காரணம் கொண்டும் வாகனம் ஓட்ட வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார். அதிக சோர்வு மற்றும் தூக்கமின்மை விபத்துக்களுக்கு காரணமாக அமைவதால், அது குறித்து அவதானமாக இருக்க வேண்டும். 

தூய்மையான உணவுகளை மாத்திரமே உட்கொள்ள வேண்டும். முடிந்தவரை கொதித்தாறிய நீரைப் பருகுங்கள். நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள், திருவிழாக் காலத்தில் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறினாலும் மருந்துகளை உட்கொள்ள மறக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

 திருவிழாக் காலத்தின் பின்னர் இவ்வாறான நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் வீதம் அதிகரிப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Zameera

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை


 நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட 'கவனம் செலுத்துக' (Level 1 - Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கண்டி மாவட்டம்: யட்டிநுவர பிரதேச செயலக பிரிவு. 

கேகாலை மாவட்டம்: வரக்காபொல, கேகாலை மற்றும் ரம்புக்கனை பிரதேச செயலக பிரிவுகள். 

நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுகள். 

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, குருவிட்ட, ஓப்பநாயக்க, பெல்மதுளை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகள்.

SHAHNI RAMEES

2 கோடி பெறுமதியான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் சிக்கின! #VIDEO

 



இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா

Zameera

காத்தான்குடியில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு: ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு.!


 காத்தான்குடியில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு: ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு.!


காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (13) நேரில் சென்று பார்வையிட்டார்.


இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு அரங்கு (Indoor Stadium) அமைக்கும் திட்டம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 


மேலும், இப்பகுதியின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராய்யப்பட்டது.


இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம் றுஸ்வின் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.


-- ஊடகப்பிரிவு

Zameera

நிலக்கரி மோசடி தொடர்பாக முஜிபுர் ரஹ்மானால் CID யில் முறைப்பாடு


 ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளனர். 


நிலக்கரிக்கான விலை மனு கோரலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


குறித்த விலை மனுவை ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட விதம் தொடர்பான குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளதாகத் தெரிவித்து, இந்த முறைப்பாட்டை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். 


இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், 


ஒரு குரல் பதிவு வெளியாகியுள்ளது. அதைக் கேட்கும்போது அங்கேயும் ஒரு மோசடி நடந்துள்ளது என்பது புரிகிறது. ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இந்த டெண்டரை வழங்க வேண்டும் என்பது தொடர்பான கலந்துரையாடல் அந்த குரல் பதிவில் உள்ளது. 


எனவே, அந்த குரல் பதிவு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள விடயங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரி இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். 


அந்த குரல் பதிவில் ஜனாதிபதியின் பெயர் மற்றும் அவருக்கு மிக நெருக்கமான தொழிலதிபர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. 


இதன் மூலம் அங்கேயும் தெளிவாக ஒரு மோசடி நடந்துள்ளது என்பது உறுதியாகிறது.

Zameera

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வு திகதி அறிவிப்பு


 தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. 

இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் கல்வியியல் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். 

நேர்முகத் தேர்வுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கான இணைப்பு கீழே, 

https://moe.gov.lk/en/selected-student-teacher-name-list-for-the-national-colleges-of-education-ncoes-base-on-g-c-e-a-l-examinations-result-in-year-2023-and-2024/


 

SHAHNI RAMEES

மற்ற நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது! பிரிட்டன் பிரதமர் அதிரடி

 


ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றநிலைக்கு மத்தியில்,

SHAHNI RAMEES

ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது போர்நிறுத்த மீறலாகக் கருதப்படும்! - IRGC எச்சரிக்கை!

 



ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது

Zameera

“நம்மை முற்றிலும் அழித்துவிடுவதாக அச்சுறுத்திய ஈரான், இப்போது அவர்களே உயிர்பிழைக்கப் போராடுகிறார்கள்” - நெதன்யாஹு


 இஸ்ரேல், அமெரிக்கா – ஈரானுக்கிடையில் தற்போதைய போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அமைதிப் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.

இருப்பினும் அது தோல்வியில் முடிந்த நிலையில், இதுதொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.

“ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் அவர்களின் அணு ஆயுதம், ஏவுகணைகளை நசுக்குவதில் வெற்றி கண்டுள்ளோம். இது இன்னும் முடியவில்லை.

பல அமைப்புகளின் உதவியுடன் எமது கழுத்தை ஈரான் நெரித்து சுற்றி வளைக்க முயற்சித்தது. ஆனால், நாம் தான் அதன் கழுத்தை நெரிக்கிறோம்.

நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவதாக அச்சுறுத்தினார்கள். ஆனால், இப்போது அவர்களே உயிர்பிழைக்கப் போராடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Zameera

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது


 மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. 


30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். 


நேற்று (12) பிற்பகல் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன், அதில் உள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Zameera

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு


 உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதன்படி ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 7% அதிகரித்து, அதன் புதிய விலை 102 டொலர்களாகக் காணப்படுகிறது. 


டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் விலை 8% உயர்ந்துள்ளதுடன், ஒரு பீப்பாயின் விலை 104.50 டாலர்களாகப் பதிவாகியுள்ளது.

Zameera

இன்று மழைக்கு வாய்ப்பு!


 மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று (13) காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம். 


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


இதேவேளை சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கின்றது. 


அதற்கமைய இன்று நண்பகல் 12:11 அளவில் பேசாலை, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Zameera

ஈரானில் இதுவரை 3,375 பேர் கொல்லப்பட்டுள்ளனர்


 அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் குறைந்தது 3,375 ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்கள் மற்றும் 496 பேர் பெண்களாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.