
Saturday, March 28, 2026


1235 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது
கேகாலை கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தோலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு
ஜெர்மனியின் Kiel உலகப் பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல பொருட்களின் விலைகள் இவ்வாறு உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இலங்கை (15%) இரண்டாம் இடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தில் சாம்பியா (31%) உள்ளதுடன், தாய்வான் (12%), பாகிஸ்தான் (11%) மற்றும் இந்தியா (10%) ஆகிய நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.
எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மற்றும் உரங்களை இறக்குமதி செய்யும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், இந்த உணவு விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட்டாலும், உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீண்ட காலம் நீடிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இந்நீரிணை முழுமையாக மூடப்படுவதால் உலகளவில் கோதுமை மாவின் விலை 4.2 சதவீதத்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2 சதவீதத்தாலும் உயரக்கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நேற்று (27) ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்தது.
உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்நீரிணை ஊடாகவே நடைபெறுகிறது. இதன் முடக்கம் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் ஏற்கனவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
எரிசக்தி விலை உயர்வைத் தொடர்ந்து ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

டீசல், பெட்ரோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு
20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய கப்பலொன்று இன்று (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்கிழைமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின் குறித்த எரிபொருள் கப்பல் இன்று (28) நாட்டிற்கு வந்தடையவுள்ளது.








