Our Feeds



Tuesday, June 30, 2026

Zameera

சிறுபோக நெல்லுக்கான உத்தரவாத விலை அறிவிப்பு

சிறுபோகத்திற்காக அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான உத்தரவாத விலைகளை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

அதன்படி, பின்வரும் விலைகளின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்:

நாடு நெல் (Naadu): ஒரு கிலோகிராம் 120 ரூபாய்

சம்பா நெல் (Samba): ஒரு கிலோகிராம் 130 ரூபாய்

கீரி சம்பா நெல் (Keeri Samba): ஒரு கிலோகிராம் 140 ரூபாய்

அதேபோல், தற்போது கையிருப்பில் உள்ள அரிசியை நுகர்வோருக்கு மிக விரைவாக விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Zameera

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராக துமிந்த ஹுலங்கமுவ நியமனம்


 இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) புதிய தலைவராகவும், அதன் உறுப்பினராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

அத்துடன், அதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷணி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்குரிய நியமனக் கடிதங்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

Zameera

தோணி கவிழ்ந்து 4 மாணவர்கள் உயிரிழப்பு


 வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்ற பாடசாலை மாணவர்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது.

மாணவர்கள் 5 பேர் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

அவர்களில் ஒரு மாணவர் நீந்தி கரை சேர்ந்து உயிர் தப்பியுள்ளதுடன், ஏனைய நான்கு பிள்ளைகளும் நீரில் மூழ்கியுள்ளனர்.

அவ்வாறு நீரில் மூழ்கிய ஏனைய நான்கு மாணவர்களும் இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் 16 வயதுடைய பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இச்சம்பவம் குறித்து வனாத்தவில்லுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHAHNI RAMEES

இஸ்ரேலில் ‘குளோபல் ரெமிட்’ சேவை முடக்கம்! : தொழிலாளர்களின் 6.9 மில்லியன் டொலர் பணம் தற்காலிகமாக முடக்கம்

 


இஸ்ரேலில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணம் வைப்பிலிட்டுள்ள

SHAHNI RAMEES

பௌத்த துறவிகளுக்கென விசேட நீதிமன்றம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்! – பலாங்கொட கஸ்ஸப்ப தேரர்

 

இலங்கையில் பௌத்த துறவிகள் எதிர்கொள்ளும்

Zameera

புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ நியமனம்



இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் தளபதி அத்மிரால் காஞ்சன பானகொட அன்றைய தினம் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Zameera

கடற்படைத் தளபதி காஞ்சன பானகொட அத்மிரால் பதவிக்கு உயர்வு


 கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் காஞ்சன பானகொட, அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

இதற்கமைய, அவர் நாளை (01) கடற்படைத் தளபதி பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி, பானகொட இலங்கையின் 26ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.

Admin

அநுரவின் வாயப் போலவே எல்லாம் பொய்! - மீண்டும் சிறை செல்லும் போது கதறிய பிள்ளையான்.



“என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்  குற்றச்சாட்டுக்கள். போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று நீதிமன்றத்திலிருந்து கொண்டுசெல்லப்படும்போது ஊடகங்கவியலாளர்களைப் பார்த்துக் கூறிய பிள்ளையான், “இது உங்களுக்கு சந்தோஷமான விடயம்தானே” என்றார்.


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.


பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற 'பிள்ளையான்' மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.


கடந்த 15ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை அடுத்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு விடுக்கப்பட்ட பணிப்புரையின் அடிப்படையில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.


ஐந்து ஆட்கொலை தொடர்பில் சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கல்லடியில் உள்ள காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பிலேயே இன்றைய நீதிமன்ற விசாரணை நடைபெற்றன.


இது தொடர்பான வழக்கு விசாரணை  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி அ. தர்சினி முன்னிலையில் நடத்தப்பட்டது.


இன்றைய தினம் சாட்சிகளும் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் இது தொடர்பான விசாரணை தொடர்ந்தது.


அத்துடன் பிள்ளையான் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகளால் பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


இதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வழக்கினை சாதாரண வழக்குக்கு மாற்றுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று கல்லடி காணி பிணக்கு தொடர்பான வழக்கினை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.


2008ஆம் ஆண்டில் டி-56 ரக துப்பாக்கிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள கல்லடி முருகன் கோவில் அருகே, முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் இரவில் ஆயுதமேந்திய குழுவினரால் மேலும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்குகளில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் சந்திரகாந்தன் சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Admin

புதிய “கொத்து”டன் மீண்டும் வருவேன் | பிழை செய்தேன் மன்னித்துக் கொள்ளுங்கள் - Mr கொத்து



ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மிஸ்டர் கொத்து உரிமையாளர் 5 லட்சம் பெருமதியான இரு பிணைகளில் நுகேகொட நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டார். 

SHAHNI RAMEES

சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

 


தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக மையப்படுத்தப்பட்ட

Admin

1 மில்லியன் மதிப்புள்ள இரு பிணைகளில் விடுவிக்கப்பட்டார் ஷியாமலா | வெளிநாடு செல்லவும் தடை விதிப்பு.



இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினரால் இன்று (30) கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவருமான ஷாமிலா பெரேரா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


குறித்த நபரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, சந்தேக நபரை தலா ரூ. 1 மில்லியன் மதிப்புள்ள இரு பிணைகளில் விடுவிக்கவும், வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHAHNI RAMEES

NLB முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

 

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள்
SHAHNI RAMEES

Mr. கொத்து விராஜ் விக்ரமநாயக்க கைது!

 


நாட்டில் பிரபலமான கொத்து உணவகமான