
Friday, February 13, 2026

களுத்துறை மேல் நீதிமன்றத்தால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு
களுத்துறை, குடா வஸ்கடுவ லிட்டில்டன்வத்தை பகுதியைச் சேர்ந்த சமிந்த குமார என்பவர், 2008 அக்டோபர் 23ஆம் திகதியன்று வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றின் போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த வழக்குத் தவணைகளின் போது வழக்கின் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் தீர்ப்பு இன்று (13) அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்னர், மேல் நீதிமன்ற நீதிபதியினால் நீதிமன்ற மண்டபத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டு, மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் எழுந்து நிற்குமாறு பணிக்கப்பட்ட பின்னரே இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தின் பாதஹேவாஹேட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

குரங்குகளின் தொல்லைகளை குறைப்பதற்கு மாத்தளையில் விரைவில் சரணாலயம்!
மாத்தளை கலுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்டுள்ள இவ்விடம் 150 ஏக்கர் பரப்பைக் கொண்டது.
இத்திட்டம் வனவிலங்கு பாதுகாப்புத் துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒப்புதலையும் பெற்றுள்ளதாகத் தெரவித்தார்.
குரங்குகள் மீண்டும் காட்டுக்குள் தப்பிச் செல்வதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்த சராலயத்தில் அரண்கள் அமைக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் போதுமான இயற்கை உணவு இருப்பதாகக் கூறப்படுகிறது, மேலும் தேவைப்பட்டால் கூடுதல் ஏற்பாடுகள் வழங்கப்படும்.
இந்த திட்டம் மாத்தளை நகரில் ஆய்காய்கே காணப்படும் குரங்குகளைப் பிடித்து அவற்றின் தொல்லைகளைக் குறைப்பதே நோக்கமாகும்.
பெண் குரங்குகளுக்கு கர்ப்பத்தடை நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளப்பட உள்ளது.
தடுக்க இதற்காக கருப்பையில் சிறிய அளவிலான வளையம் ஒன்று பொருத்தப்பட உள்ளது. இது குரங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும்.
மாகாணங்களுக்கு இடையில் குரங்குகளை நகர்த்துவது சவாலானது என்பதால், நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது குரங்கு தடுப்பு மையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மாத்தளையின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் வசிக்கும் குரங்குகள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலேயே இருக்கும், அதே நேரத்தில் நகரப் பகுதிகளில் இடையூறுகளை ஏற்படுத்துபவை புதிய மையத்திற்கு மாற்றப்படும்.
இந்த திட்டம் ஒரு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட உள்ளது.
மலேசியா உட்பட பல நாடுகளில் இதேபோன்ற குரங்கு தடுப்பு சரணாலயங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரவித்தார்.

பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப துரித நடவடிக்கை
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று (12) பாடசாலைகளுக்கு விஜயம் செய்ததன் பின்னர், பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவானது தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.
எனினும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இந்நிலைமையில் மாற்றம் ஏற்படும்.
புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கியமான தரப்பினர் ஆசிரியர்களே ஆவர்.
பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாடாக எதிர்பார்க்கும் முழுமையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்குத் தகுதியான மனித வளம் அவசியமானது என்றும், அதற்காகப் பிள்ளைகளுக்கு முறையான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும்
நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிப்பதாகத் தெரிவித்த பிரதமர், ஆசிரியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் 'கல்விப் பேரவை' ஒன்றினை நிறுவுவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாடசாலைகளுக்கு இடையே காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளின் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Thursday, February 12, 2026

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை முறையாக வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு இன்று வியாழக்கிழமை (12) மேற்கொண்ட கல்வி சார்ந்த விஜயத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவிக்கையில் ,
பிரதமர் ஹரிணி அமரசூரிய பெலியத்த ருஹுணு விஜயபா தேசிய பாடசாலை மற்றும் அதன் ஆரம்பப் பிரிவுக்குச் சென்று, 2026 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பயிற்சிப் புத்தகங்கள், அடிப்படை பாடத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
ஒரு நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் பெரிதும் மதிக்கிறது.
ஆசிரியர்களின் தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கும், தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் 'கல்விச் சபை' ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளுக்கு இடையிலான உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்து பிள்ளைகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
இந்த விஜயத்தில் பிரதி அமைச்சர்களான ருவன் செனரத் மற்றும் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர் அதுல வெலந்தகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் போலி செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் நம்பகமான புகைப்படங்கள் அடங்கிய ஒரு போலி செய்தி வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் (முகநூல்) பரவி வருவதாக அறியப்படுகிறது.
அது, தங்கள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டவை அல்ல என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது, தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் என்பவற்றை வாட்ஸ்அப் அல்லது வேறு சமூக ஊடகங்களினூடாக கேட்பதில்லை.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறான போலி இணைப்புக்களுக்கு, உங்கள் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஓ.டி.பி இலக்கம் மற்றும் வங்கி அட்டை விவரங்களைப் பகிர வேண்டாம்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ தொலைபேசி, வலைத்தளங்கள், செயலிகள் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மட்டுமே நிறுவனம் மற்றும் அதன் சலுகைகள் குறித்து அறியமுடியும் என தெரிவித்துள்ளது.





