Our Feeds



Sunday, June 14, 2026

Zameera

40 இலட்சம் பேருக்கு இன்னும் TIN இலக்கம் இல்லை - இறைவரித் திணைக்களம்


 வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் TIN இலக்கத்தை, சுமார் 40 இலட்சம் பேர் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  


தற்போது வரை 13 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த TIN இலக்கத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.  


18 வயது பூர்த்தியடைந்த அனைத்து நபர்களும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கமைய நாட்டில் சுமார் 17 மில்லியன் மக்கள் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  


இதேவேளை, 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய, தற்போது பல்வேறு தேவைகளுக்காக TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  


இதன்படி, வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல், வணிகங்களை பதிவு செய்தல், நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  


உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் குறிப்பிடுகையில், உரிய சட்டத்திற்கு அமைய TIN இலக்கமானது இனிமேலும் இரகசியத் தகவலாகக் கருதப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

Zameera

கோப்பாய் பொலிஸ் நிலைய புதிய கட்டிடம் திறப்பு


பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 




குற்றச் செயல்களைப் பொலிஸ் திணைக்களத்தால் மாத்திரம் தனித்துக் கட்டுப்படுத்திவிட முடியாது எனவும் அவர் வலியுறுத்தினார்.




1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாகத் தற்காலிக இடங்களில் இயங்கிவந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் இன்று (14)உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவுடன் இணைந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.




நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஆளுநர்,




நான் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் பொலிஸார் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகளைப் பெற்றிருக்கின்றேன். குறிப்பாக, பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகள் ஏற்கப்படுவதில்லை எனவும், தமக்குத் தீங்கிழைத்த குற்றவாளிகளுடன் பொலிஸார் நட்பாகப் பழகுவதாகவும் மக்கள் முறையிட்டிருந்தனர். 




ஆனால், இன்று அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வழங்கிவரும் உறுதியான தலைமைத்துவமே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். இருப்பினும், இத்துறையில் இன்னமும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது.




வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகளை நான் பாராட்டுகின்றேன். அவர்கள் தங்களால் முடியுமானளவு சிறப்பான சேவைகளைத் தற்போது வழங்கி வருகின்றார்கள். எமது வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்திருந்த வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைக் கலாசாரம் இன்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.




பொலிஸார் தமது சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்குப் பௌதீக வளங்கள் மிகவும் அவசியமானவை. அந்தவகையில், நீண்டகாலத்தின் பின் இன்று அவர்களுக்குத் தேவையான நிரந்தரக் கட்டடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர்கள் மேலும் சிறப்பான சேவைகளை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.




கிளிநொச்சியில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தல்களால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக நானும், அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ சந்திரசேகர் அவர்களும் பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்திருந்தோம். 




அதன்போது, 'கடந்த காலங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசியல்வாதிகள் எம்மைத் தேடி வருவார்கள் ஆனால், நீங்களோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வந்துள்ளீர்கள்' என அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார். அதுதான் உண்மை. சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசாங்கம் ஒருபோதும் நிற்காது. இத்தகைய குற்றங்களை ஒழிப்பதற்குப் பொதுமக்களாகிய நீங்களும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும், எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.




இந்நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. அதன்பின்னர், புதிய பொலிஸ் நிலையக் கட்டடம் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டு அதிதிகளால் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து மேடை நிகழ்வுகளும், பொலிஸ் நிலைய வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வும் நடைபெற்றன.




இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.சிறிபவானந்தராஜா, ஜெ.றஜீவன், பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Zameera

காலி முகத்திடலில் பரதநாட்டிய கின்னஸ் சாதனை


 காலி முகத்திடலில் இன்று (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளனர். 


இந்தியாவில் இடம்பெற்ற அயலக தமிழர் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தபோது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும், அவரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், சங்கமம் குளோபல் அகடமி மற்றும் சங்கமம்லியா ஹொலிடேஸ் ஏற்பாட்டிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. 


இதற்கு முன்னர் பரதநாட்டியத் துறையில் படைக்கப்பட்டிருந்த உலக சாதனையானது வெறும் 416 கலைஞர்களின் பங்கேற்புடன் மட்டுமே அமைந்திருந்தது. 


ஆனால், இம்முறை அதனை விடப் பல மடங்கு அதிகமாக, இந்தியா மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 5000 கலைஞர்கள் கலந்துகொண்டு முந்தைய சாதனையை முறியடித்துள்ளனர். 


இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காண பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் காலி முகத்திடலில் குழுமியிருந்தனர். 


சங்கமம் 2026 நிகழ்வானது உலக சாதனை புத்தகமான கின்னஸில் இடம் பிடித்ததை உறுதி செய்து கின்னஸ் சாதனை நிறுவனத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Zameera

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தாமதம்


 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிடுகையில், இதற்கு முன்னர் நாளை (15) ஆம் திகதி முடிவுகளை வெளியிடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். 


முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவுகளை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

SHAHNI RAMEES

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா?

 


பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம்,

SHAHNI RAMEES

2.5 மில்லியன் டொலர் மோசடி பாராளுமன்றுக்கு 8 மாதங்கள் கடந்தும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை!

 


வெளிநாட்டு கடன் வழங்குநருக்கு திறைசேரியால்

SHAHNI RAMEES

சலே அரசியலமைப்புக்கு இணங்க செயலாற்றிய நேர்மையான அதிகாரி எந்த இடத்திலும் பயமின்றி கூறுவேன்!

 


யார் என்ன கூறினாலும், நீண்டகாலமாக நான்

SHAHNI RAMEES

துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!

 


2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின்

Saturday, June 13, 2026

SHAHNI RAMEES

அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் எட்டக்கூடிய தூரத்தில் உள்ளதாக சமிக்ஞை; ஆனால் இன்னும் கையெழுத்தாகவில்லை

 


அமெரிக்கா மற்றும் டெஹ்ரான் அமைதி ஒப்பந்தம்

Zameera

ஜனாதிபதிக்கும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவன தலைவருக்கும் இடையில் சந்திப்பு


 ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company - CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் "நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம்" காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN தெரிவித்தார். 


குறிப்பாக, கொழும்பு துறைமுக நகர் சிறப்பு பொருளாதார வலயத்திற்காக வழங்கப்பட்டுள்ள ஊக்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்த தலைவர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதையும் பாராட்டினார். 


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) இன்றியமையாத காரணியாகும் என்பதை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 


சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டியுள்ள இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அரசாங்கம் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்றும், அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான திசையில் செயற்படுவதாகவும் இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ஆகக்கூடிய ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவதாகவும், குறிப்பாக கொழும்பு துறைமுக நகர் வலயத்தை அபிவிருத்தி அடைந்த பொருளாதார வலயமாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் தெரிவித்தார். 


மேலும், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சைனா ஹார்பர் நிறுவனம் வழங்கிய ஆதரவும் இதன்போது ஜனாதிபதியின் நன்றியுடன் கூடிய பாராட்டைப் பெற்றது.

SHAHNI RAMEES

#Update: அசாம் விமான விபத்தில் 5 பேர் உயிரிழப்பு!

 

அசாமின் ஜோர்ஹட்டில் விமானப் படை போக்குவரத்து
SHAHNI RAMEES

கென்னடி கலை மையத்திலிருந்து டிரம்பின் பெயர் நீக்கம்!

 


அமெரிக்காவின் வொஷிங்டன் டிசி நகரில் அமைந்துள்ள

SHAHNI RAMEES

அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்து!

 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான AN-32 ரக