
Wednesday, February 18, 2026

பேராதனை பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்து ஏப்ரல் 14க்கு முன் ஆரம்பிக்க திட்டம்
நாடாளுமன்றில் இன்று (18) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய இரண்டரை மாதக் காலப்பகுதிக்குள் 1,200 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முப்படையினர் பாரிய ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பு கிடைத்திருக்காவிட்டால் நாம் தற்போது இந்த இலக்கை எட்டியிருக்க முடியாது.
அத்துடன், டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் வீதிகளில் 99 சதவீதமானவை தற்போது போக்குவரத்தை முன்னெடுக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளன. இதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பே பிரதான காரணமாகும்.
பேராதனைப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடம் மற்றும் பல தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் திகதிக்கு முன்னர் அந்தப் பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை
அதன்படி, மொரட்டுவ, ராவதவத்தை, சொய்சாபுர, இரத்மலானை, தெஹிவளை, கல்கிசை, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா, கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பத்தரமுல்லைப் பகுதிக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் வழங்கப்படுகிறது.
நாளை (19) காலை 6 மணிக்கு முன்னர் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

முறையான பரிசோதனையின்றி கொள்கலன் விடுவிப்பு - தெரிவுக்குழுவில் உபாலி பன்னிலகே
நிலையியற் கட்டளை 106 இன் விதிகளுக்கு அமைவாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (18) பாராளுமன்றுக்கு அறிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அது தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்கவும் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அநுர கருணாதிலக விலகியதையடுத்து வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.\
குறித்த வெற்றிடத்திற்கு, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இந்த குழு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் புதிய பிரதமர் - நளிந்த ஜயதிஸ்ஸ விசேட சந்திப்பு
இந்தக் கலந்துரையாடல் நேற்று (17) மாலை அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்களாதேஷின் புதிய பிரதமருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கடந்த டித்வா புயலின் போது பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், பங்களாதேஷின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் ஈர்ப்பது, சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவது மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடியும் கலந்துகொண்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஒரு சில அசம்பாவிதங்கள் பதிவாகின்றன.
அதற்காக முழு நாட்டிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் பிரச்சினை இருப்பதாக கூற முடியாது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்குமாயின் இரண்டின் நாட்டின் தேசிய வீரர்கள் எவ்வாறு நாட்டிற்கு வருகை தருவார்கள்.
பாதுகாப்பு தொடர்பில் உறுதிப்படுத்திய பின்னரே போட்டியை நடத்துவதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கட் பேரவை வழங்கும்.
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க இடமளிக்க முடியாது.
உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தம்
அதன்படி, செவ்வாய்க்கிழமை (17) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரயில்வே லோகோமோட்டிவ் பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இராணுவ அதிகாரிகளுக்கு ரயில் ஓட்டுநர் பயிற்சி வழங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்ததால், தொழில்துறை நடவடிக்கை இடைநிறுத்தப்படுவதாக அதன் செயலாளர் திமுத்து எதிரிசிங்க தெரிவித்தார்.
Tuesday, February 17, 2026

பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்றையதினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட் விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகின.
இதனைத் தொடர்ந்து குழு நிலையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோர் சட்டமூலத்தின் மூன்றாவது பிரிவுக்கு திருத்தங்களை முன்வைத்தனர். அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டதுடன், இதன்போது சாமர சம்பத் அவர்கள் தனது திருத்தத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமைய குறித்த சட்டமூலத்தை திருத்தங்கள் இன்றி நிறைவேற்றுவதற்கு ஆதரவாக 152 வாக்குகளும், முன்மொழியப்பட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆதரவாக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களினால் சட்டமூலத்தின் 4ஆவது பிரிவுக்கு திருத்தம் முன்வைக்கப்பட்டதுடன், இதனை ஏற்றுக் கொள்ளவில்லையென நீதி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரினால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2026 ஜனவரி 07ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2026ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.
இச்சட்டத்தின் ஊடாக தேசிய அரசுப் பேரவையின் 1977ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் நீங்குகின்றது. இதற்கு அமைய சட்டத்தின் 3வது பிரிவின் நியதிகளின் படி ஓய்வூதியமொன்றறைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவரானவரும் மற்றும் இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு முன்னதாக ஓய்வூதியமொன்றைப் பெற்றுக்கொள்கின்றவருமான எவரேனும் ஆளுக்கு இச்சட்டம் தொடங்கும் தேதியன்றும் அதன் பின்னரும் அத்தகைய ஓய்வூதியம் நிறுத்தப்படும்.

BIMSTEC நிபுணர் குழு கூட்டம் 2026 இலங்கையில்
வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (BIMSTEC) நிறுவப்பட்டுள்ளது.
7வது இந்து சமுத்திர உச்சிமாநாட்டிற்கு இணையாக 2024 பெப்ரவரி மாதம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அரச நிதி மற்றும் நாணயக் கொள்கைகளை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான நிபுணத்துவ அறிவு மற்றும் அனுபவங்களை உறுப்பு நாடுகளுக்கிடையில் பகிர்ந்துகொள்வதற்கு வசதி அளிப்பதற்காக 'அரச நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான நிபுணர் குழுவொன்றை அமைப்பதற்கு, அந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் முன்மொழிந்திருந்தார்.
அந்த முன்மொழிவுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பான எண்ணக்கருவுக்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும் அமைச்சர்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
குறித்த நிபுணர் குழுவின் பணிப்புரை விதிமுறைகள் மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஏதுவாக, அந்த நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு பிம்ஸ்டெக் செயலகம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஊடாக உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, குறித்த நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்பது தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகாமையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர்
சட்டத்தரணியும் அவரது மனைவியுமே சம்பவத்தில் உயிரிழந்தனர்.
சட்டத்தரணிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமகனின் பாதுகாப்புக்கு என்ன நடக்கும்.
சட்டத்தை உரிய வகையில் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம், பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே தினத்தில் இரண்டு இடங்களில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.
கடந்த வருடம் 111 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகின.
ஆரசாங்கத்தின் அசமந்த போக்கு காரணமாகவே இந்த சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
