Our Feeds



Thursday, February 5, 2026

Zameera

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் வரலாற்றுச் சாதனை


 2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


2013 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 140,614 பயணிகள் கையாளப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் 703 சர்வதேச விமானங்கள் மத்தல விமான நிலையத்தில் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன.


அத்துடன், கடந்த மூன்று ஆண்டுகளாக மத்தல விமான நிலையத்தின் பயணிகள் போக்குவரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மத்தல விமான நிலையத்தின் மீது செலுத்திய விசேட அவதானமே இந்தச் சாதனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வனவிலங்கு பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் சர்வதேச விமான நிறுவனங்கள் இங்கு சேவைகளை முன்னெடுக்கத் தயக்கம் காட்டின. இப்பிரச்சினைகளுக்குப் புதிய அரசாங்கம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால், 2025 இல் விமானங்களின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


மத்தல சர்வதேச விமான நிலையத்தின் மீது நம்பிக்கை வைத்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியாவை இணைக்கும் வகையில் பல விமான நிறுவனங்கள் 2025 இல் தமது சேவைகளை முன்னெடுத்துள்ளன.


அதன்படி, ரஷ்யாவின் Red Wings, பஹ்ரைன் மற்றும் பாகிஸ்தானிலிருந்து SkyUp, டுபாயிலிருந்து Fly One, உஸ்பெகிஸ்தானிலிருந்து Centrum Air மற்றும் Uzbekistan Airways, பல்கேரியாவிலிருந்து Bulgaria Air ஆகிய நிறுவனங்கள் மத்தல வரை தமது விமானச் சேவைகளை நடத்தியுள்ளன.


மேலும், பெலாரஸின் மின்ஸ்க் நகரிலிருந்து Belavia விமான சேவை 2025 ஆம் ஆண்டில் முதன்முறையாக மத்தல சர்வதேச விமான நிலையத்திற்குத் தனது பயணங்களை ஆரம்பித்தமை ஒரு விசேட அம்சமாகும்.


மத்தல சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கையின் பல சுற்றுலாத் தலங்களை இலகுவாகச் சென்றடைய முடிவதால், நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.


அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகப்படியான நெரிசலுக்கு ஒரு சிறந்த மாற்றீடாகவும் மூலோபாய ரீதியாக மத்தல விமான நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது.


பில்லியன் கணக்கான பொதுப்பணம் செலவிடப்பட்டு, பயன்பாடின்றி அழிந்து போகும் நிலையில் இருந்த மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், 2025 இல் ஈட்டியுள்ள இந்த வெற்றி, விமான நிலையம் குறித்த புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Zameera

அரசு இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்கத்தக்கது




 மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியவது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்,


இன்று (05) பாராளுமன்றில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு உரையாற்றும் போது,


”மன்னார் புத்தளம் பாதையை பாதையை திறந்து தருவோம் என்று சொல்லி விட்டு இன்று, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து அவர்களின் அமைச்சின் திணைக்களங்கள் கூறுவது வேடிக்கையானது. இன்று நான் இல்லாத வேளையிலே, அமைச்சர் விமல் ரத்நாயக் அவர்கள், ஒரு பாராளுமன்ற உறுப்பினருடைய கேள்விக்கு, பதிலளிக்கின்ற பொழுது, அவருடைய பதில், ஒரு நியாயமானதாக, எனக்கு தெரியவில்லை.

விமல் ரத்நாயக்க அவர்களின் மீது ஒரு பெரிய நல்லெண்ணம் கொண்டவனாக நான் இன்று வரை இருந்தேன். ஆனால், மன்னார் புத்தளம் பாதை சம்பந்தமாக, அவருடைய கருத்து, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நூறு வருடம் பழமை வாய்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, B(பீ) வகையான பாதையே மன்னார்- புத்தளம் பாதை ஆகும்.


நான் அமைச்சராக இருந்த பொழுது, அந்த பாதையை, மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தேன். அதற்கு முன்னர் நூறு (100) வருடங்களுக்கு முன்னால் அந்த பாதை, வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதையாக இருந்த பாதை, எங்களை எல்லாம் அன்று அந்த மண்ணிலிருந்து, பயங்கரவாதம் வெளியேற்றிய பொழுது, அந்தப் பாதையும் மூடப்பட்டு, வாழ்ந்த மக்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டதனால், அந்தப் பகுதியில், யாரும் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.



இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு, சமாதானம் வந்த பிறகுதான், சொந்த ஊருக்கு, அந்த மக்கள், குறிப்பாக மறிச்சுக்கட்டி, காரடிக்குழி, பாலக்குழி, பெரியமாடு, முள்ளிக்குளம் மக்கள் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் மீள் குடியேறச்சென்றார்கள். அவ்வாறு செல்லுகின்ற பொழுது, பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்த பெரியமடு, மரிச்சுக்கட்டு, பாலக்கூலி, கரடிக்குழி, முள்ளிக்குளம், கொண்டச்சி, அளக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகள் இவ்வாறு வன வள திணைக்களத்திற்கு கீழ் ரெண்டாயிரத்தி பனிரெண்டாம் ஆண்டு, அந்த மக்களுக்கே தெரியாமல் அன்றிருந்த அரசாங்கம் இரகசியமாக வர்த்தமானி அறிவித்தல் செய்து கையகப்படுத்தினார்கள்.


இதற்கு எதிராக, அன்று நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடர் முயற்சியாக போராடிக்கொண்டு எதிர்த்து பல போராட்டங்களை நியாயபூர்வமாக நாங்கள் செய்த பொழுது இந்த நாட்டில் இருந்த மதவாதம் குறிப்பாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மதகுருமார் ஒரு சிலர் மன்னாரோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் மன்னாருக்குள்ளே வந்து ஆர்ப்பாட்டங்களை செய்து என்னை ”ஒரு காடுகளை அழிக்கின்ற” ஒருவராக காட்டுகின்ற, ஒரு மோசமான ஒரு இனவாத செயலைச் செய்தார்கள்.

எந்த ஊடகத்தை எடுத்தாலும் எனக்கு எதிராக அந்த மக்களுடைய குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பெரிய அநியாயமாக அன்று பேசப்பட்ட ஒரு காலமாக இருந்தது. அதையெல்லாம் தாண்டி அம்மக்களை நான் குடியேற்றினேன். அவ்வாறு இருக்கின்ற பொழுது இந்த மன்னார்-புத்தளம் பாதையை மூடுமாறு மேல் மாகாணத்தில் இருக்கின்ற, அந்த பாதைக்கு, சம்பந்தமில்லாத ஒரு சில சிங்கள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள். மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் அன்று வழக்கு போடுகின்ற பொழுது நானும் அதில் நான்காவது குற்றவாளியாக பெயரிடப்பட்டேன். அதுபோல் வனவள திணைக்களத்திற்கும், அன்று இருந்த முன்னாள் அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, சேர்த்து வழக்குதாக்கல் செய்தனர்.


இதன் போது அன்றைய காலம் தொட்டு அனுரவுக்கு முன்னர் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால ஸ்ரீசேனா , கோட்டாபாய ராஜபக்‌ஷ, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து ஆட்சியாளர்களின் அமைச்சின் திணைக்களங்கள் மக்களுக்கு சார்பாகவே இருந்தனர் குறிப்பாக வனவளத்திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் , வீதி அபிவிருத்தி திணைக்களம் மக்களுக்காக அப்பாதையை திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலலையே இருந்தனர்.


ஆனால் இன்று இருக்கின்ற ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவின் ஆட்சியிலுள்ள அமைச்சரின் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியோர் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர்,


யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்கும் இடையிலே, இருக்க, வருகின்ற பொழுது, 100 கி.மீ குறைவு, மன்னாரிலே இருந்து, புத்தளத்துக்கு வருகின்ற பொழுது, 100 கி.மீ குறைவு. ஜனாதிபதியாகியதும் இந்த பாதையை திறப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனுரகுமார திஸ்ஸநாயக்க மீது, இனவாதம் இல்லாத ஓர் அரசாங்கம் என்றும், முஸ்லிம் சமூகத்தினர் ஜனாதிபதி அனுர மீது நல்லெண்ணம் கொண்டிருந்தோம். நீங்கள் செய்யும் நல்ல விடயங்களுக்கு நாம் ஆதரவுகளை வழங்கி இருந்தோம், ஆனால் அப்படிப்பட்ட இந்த அரசாங்கம் இந்த பாதையை நிரந்தரமாக மூடுவதற்கான துரோகத்தை செய்கின்றது என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்கின்ற பொருட்களை கொழும்புக்கு கொண்டு வருவதன் மூலம் எவ்வளவு பொருளாதாரம் மிச்சம் என்று சிந்தியுங்கள். நூறு கிலோமீட்டர் குறைகின்ற பொழுது, இநத நாட்டுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள், அந்த பிரதேசத்துக்கு செல்லுகின்ற பொழுது, அந்த பிரதேசம் முன்னேறும். அதேபோல, நூறு கிலோமீட்டர் கூடுதலாக செல்லுகின்ற பொழுது, எவ்வளவு சுற்றாடல் மாசடையும் என்று சிந்தியுங்கள்.

78 வது இலங்கையின் சுதந்திரத்தினை அரசு கொண்டாடிய போது வடக்கிலும்,கிழக்கிலும் வாழும் மக்கள் இன்றைய தினத்தை கறிநாளாக கொண்டிாடியதுடன்,தமது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர்.ஆனால் நாங்கள் உங்களிடம் நாட்டை பிரித்து கொடுங்கள் என்று கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


எனவே, தயவு செய்து விலங்குகளை பாதுகாக்கிறோம் என்று மக்களை மக்களை கஷ்டப்படுத்துகின்ற ஒரு முடிவை இந்த அரசாங்கம் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக அவசரமாக பொறுப்பான அமைச்சர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும், வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓர் மேசையில் உட்கார்ந்து பேசுங்கள் தீர்வைப் பெற்றுத்தாருங்கள்.


ஜனாதிபதி அவர்கள், புத்தளத்துக்கு சென்ற பொழுது மன்னார் புத்தளம் பாதையில் ஒரு பெரிய அணைக்கட்டை கட்டுவதற்கு 600 மில்லியன் தருவதாக முடிவெடுத்து வரலாற்று துரோகத்தை செய்துவிடாதீர்கள்.


அந்த அணைக்கட்டு திட்டத்தை விட இந்த வீதி முக்கியம் அதை திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள், இல்லையெனின் நாட்டிற்கு அது பெரும் பாதிக்கப்பாக அமையும்.” என அங்கு கருத்து தெரிவித்தார்.


-ஊடகப்பிரிவு,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Zameera

டித்வா புயல்: கண்டியில் நிவாரண திட்டங்கள்


 'டித்வா' புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நாளை (06) கண்டியில் நடைபெறவுள்ளது. 


அதற்கமைய, 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட குண்டசாலை, மெததும்பர, பாததும்பர மற்றும் பன்வில பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள கைத்தொழிலாளர்களுக்கும், முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கும் நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு குண்டசாலை மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெறும். 


'டித்வா' புயலினால் தமது கைத்தொழில் நிலையங்கள் அல்லது இயந்திர உபகரணங்கள் போன்றவற்றிற்குச் சேதம் ஏற்பட்ட நபர்களுக்கு, வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக நட்டஈட்டுத் தொகையாக 02 இலட்சம் ரூபா வீதம் இதன்போது வழங்கப்படவுள்ளது. 


சிறிய, நடுத்தர அல்லது பாரிய அளவு என்ற பேதமின்றி பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வியாபாரங்களுக்கும் இந்த நிதியுதவி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய மேற்கொள்ளப்படுகிறது. 


அத்துடன், கண்டி மாவட்டத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்குப் புதிய வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்காக வழங்கப்படவுள்ள 50 இலட்சம் ரூபா தொகையில், முதற்கட்டமாக 20 இலட்சம் ரூபா காசோலைகளை வழங்குவதும் இதன்போது இடம்பெறும். 


தமக்குச் சொந்தமான காணியில் அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படும் காணியில் வீட்டை நிர்மாணிக்கும் நபர்கள் இத்திட்டத்தினுள் உள்ளடக்கப்படுவர். 


'டித்வா' புயல் காரணமாக முழுமையாக வீடுகள் சேதமடைந்த மற்றும் மண்சரிவு உயர் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காகக் காணிகளை வழங்குதல் மற்றும் நட்டஈடு வழங்குதல் என்பன நாளை (06) பிற்பகல் நியங்கொட பாடசாலை மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது. 


அத்துடன், வீடுகள் பகுதியளவு சேதமடைந்த குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் நட்டஈட்டுத் தொகையை வழங்குவதும் இதன்போது இடம்பெறும். புதிய வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்குச் சமாந்தர ஒன்றாக, புதிய வீடொன்றின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். 


இதனிடையே, கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் (A-009) மஹய்யாவ சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகளும் நாளை முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 


அத்துடன், நீண்ட காலமாக நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த கெட்டம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதும் நாளை முற்பகல் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Zameera

ஸ்மார்ட் போர்டு விநியோகம் ஆரம்பம்; பெற்றோரிடமிருந்து நிதி சேகரிப்பை நிறுத்த உத்தரவு - பிரதமர்


 

புதிய கல்வி மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போர்டுகளைக் கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ள நிலையில், அதற்காகப் பாடசாலை மட்டத்தில் பெற்றோரிடம் நிதி சேகரிப்பதை உடனடியாக நிறுத்துமாறும், இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,


இலவசக் கல்வி என்பது எதிர்க்கட்சித் தலைவரின் கொள்கையாக இல்லாவிட்டாலும், இந்தச் சந்தர்ப்பத்திலாவது அதற்காக அவர் குரல் கொடுப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் சமூக ஊடகங்கள் அல்லது வதந்திகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்ப வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன். இலவசக் கல்வியைக் குறைப்பதற்கோ அல்லது ஜயவர்தனபுர பல் மருத்துவ பீடத்தை மூடுவதற்கோ நாம் எந்த முடிவும் எடுக்கவில்லை. 

விக்ரமாராச்சி மருத்துவ பீடம் எவ்வித விதிமுறைகளுமின்றி ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இன்று அந்த மாணவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இது தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகிறோம். இது ஒரு அரசியல் தீர்மானம் அல்ல. விக்ரமாராச்சி மருத்துவ பீடத்தின் பிரச்சினை தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நாம் செயற்படுகிறோம். என தெரவித்துள்ளார்.

SHAHNI RAMEES

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பாராளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது!

 


முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தத்தில்திருமண வயதை

Zameera

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு


 பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!


பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றிருந்தது.


தமிழ்நாடு, திருச்சி – சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துகொண்ட பின்னர், நயினார் நாகேந்திரன் அவர்கள் ஜீவன் தொண்டமான் எம்.பி அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருந்தபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.


இதன்போது, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள், நயினார் நாகேந்திரன் அவர்களை பொன்னாடையுடன் வரவேற்றார்.


இந்த சந்திப்பின்போது, பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


தனது அழைப்பை ஏற்று, திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள சௌமியநாரயண பெருமாள் கோயிலில் நாளை நடைபெறவுள்ள கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு இன்று இடம்பெற்ற யாகப் பூஜைகளில் கலந்துக்கொள்ள வருகைத் தந்த நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு, ஜீவன் தொண்டமான் அவர்கள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.


ஊடகப்பிரிவு

ஜீவன் தொண்டமான் எம்.பி

SHAHNI RAMEES

வாக்குறுதி அளித்தபடி மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும்!



வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள்

Zameera

பேராயர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை


 முத்துராஜவெல ஈரநில வலயத்தைப் பாதுகாப்பதற்காக 'முத்துராஜவெல அபிவிருத்தி அதிகாரசபை' என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை ஸ்தாபிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பேராயர் இல்லத்தில் இன்று (05) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். 

கம்பஹா மாவட்டத்தின் இயற்கையான நீர் வழிந்தோடும் முறைமை முத்துராஜவெல ஈரநிலத்தின் ஊடாக அமைந்துள்ளதால், அங்கு தொடர்ந்தும் அத்துமீறிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக எதிர்காலத்தில் மீண்டும் கம்பஹா மாவட்டத்தில் பாரிய வெள்ள நிலைமைகள் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார். 

முத்துராஜவெல ஈரநில வலயத்தினுள் நாளுக்கு நாள் இடம்பெற்று வரும் அத்துமீறிய கட்டுமானங்கள் மற்றும் அவ்வலயத்தைப் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. 

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

SHAHNI RAMEES

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய கணக்காய்வாளர் நாயகம்



இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 


தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். 


இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 


சமுதிகா ஜயரத்ன, வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவராவார்.

SHAHNI RAMEES

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

 


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில்

SHAHNI RAMEES

அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திற்கு மீண்டும் அனுமதி!

 


சுற்றாடல் பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால்,

Zameera

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்றவருக்கு ஆயுள் தண்டனை


 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.


2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராகவும் தற்போதைய ஜனாதிபதியாகவும் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற நபருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சம்பந்தப்பட்ட சந்தேக நபர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.


இதன்படி, டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 59 வயதான ரயான் ரூத் என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Zameera

சுதந்திர தின நிகழ்வில் இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை - சரத் வீரசேகர


 (இராஜதுரை ஹஷான்)


நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில்  புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார்.

78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை.  அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.