Our Feeds



Saturday, March 28, 2026

Zameera

போர் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தானில் நாளை முதல் பேச்சுவார்த்தை

ஒரு மாத காலமாக நீடிக்கும் ஈரான் போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் பாகிஸ்தானில் நாளை (29) முதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதன்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (30) ஆகிய இரு தினங்கள் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளன.

 

இந்த இருநாள் பேச்சுவார்த்தைகளின் போது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நான்கு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துரையாடுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மோதல்களைக் குறைப்பதற்கான ஒரு பொறிமுறையை இந்தச் சந்திப்பின் மூலம் நிறுவ முயற்சிப்பதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் தெரிவித்துள்ளார்.



 

SHAHNI RAMEES

மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை!

 

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி
SHAHNI RAMEES

அமெரிக்க-இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை முடியும் வரை தாக்குதல் தொடரும்.....

 


இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிரான போரில்

Zameera

1235 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது


 வரகாபொல, மாஹேன பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 1235 லீற்றர் டீசலை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


கேகாலை கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தோலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பில் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zameera

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கைக்கு பெரும் பாதிப்பு


 ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. 


ஜெர்மனியின் Kiel உலகப் பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல பொருட்களின் விலைகள் இவ்வாறு உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. 


இந்த ஆய்வின் அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் இலங்கை (15%) இரண்டாம் இடத்தில் உள்ளது. 


இப்பட்டியலில் முதலிடத்தில் சாம்பியா (31%) உள்ளதுடன், தாய்வான் (12%), பாகிஸ்தான் (11%) மற்றும் இந்தியா (10%) ஆகிய நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. 


எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மற்றும் உரங்களை இறக்குமதி செய்யும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள், இந்த உணவு விலை உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்பட்டாலும், உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு நீண்ட காலம் நீடிக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர். 


இந்நீரிணை முழுமையாக மூடப்படுவதால் உலகளவில் கோதுமை மாவின் விலை 4.2 சதவீதத்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை 5.2 சதவீதத்தாலும் உயரக்கூடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 


அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் நேற்று (27) ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்தது. 


உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்நீரிணை ஊடாகவே நடைபெறுகிறது. இதன் முடக்கம் காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் ஏற்கனவே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. 


எரிசக்தி விலை உயர்வைத் தொடர்ந்து ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

SHAHNI RAMEES

தபால் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி : பொதுமக்களுக்கு எச்சரிக்கை

 

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப்
SHAHNI RAMEES

டெல்லி - கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவை!

 



இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான IndiGo,
SHAHNI RAMEES

இந்திய எரிபொருளுடன் கப்பல் கொழும்பை வந்தடைந்தது!

 


இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமார

SHAHNI RAMEES

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது குறித்த மேலதிக தகவல்...

 


மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப்

SHAHNI RAMEES

ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா எதிர்பார்ப்பு!


 ஈரான் இந்த வாரம் வொஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகளை

Zameera

சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல்

 

சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. 


இந்தத் தாக்குதலில் 12 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்

Zameera

டீசல், பெட்ரோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு


 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் ஆகியவற்றை ஏற்றிய கப்பலொன்று இன்று (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்கிழைமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின் குறித்த எரிபொருள் கப்பல் இன்று (28) நாட்டிற்கு வந்தடையவுள்ளது.

Friday, March 27, 2026

SHAHNI RAMEES

புலமைப்பரிசில்களுக்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரல்!

 


பெருந்தோட்டத் தொழிலாளர்களின்