Our Feeds



Sunday, April 12, 2026

Zameera

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக ஹேஷா விதானகே நியமனம்


ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் 2026 நடப்பாண்டிற்கான தலைவராக இரத்தினபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே

நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதி வழங்கி வைத்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய பெண்கள் சக்தியின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹிணி குமாரி கவிரத்ன விஜேயரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் பிரச்சனமாகி இருந்தார்.

Zameera

அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்


 நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார். 


பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும் எனவும், அத்தகைய பேருந்துகள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


அவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பேருந்துகளை நேற்று (11) சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடிந்ததாக அவர் கூறினார். 


அந்தப் பேருந்துகள் அந்த இடத்திலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Zameera

பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர் - சஜித் பிரேமதாச


 எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


ஹம்பாந்தோட்டைப் பகுதியில் உள்ள யோதகண்டிய போதி மஹா விகாரை, நாக மஹா விகாரை மற்றும் சித்தல்பவ்வ மகுல் மஹா விகாரை ஆகிய இடங்களுக்கு இன்று (12) விஜயம் செய்த அவர், அங்குள்ள தேரர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 


பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் என மக்கள் எதிர்பார்த்த போதிலும், மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவில் அதிகரித்துள்ளன. 


உரம் தட்டுப்பாடு போன்ற நிலைமைகளால் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். 


பொருட்களின் விலை அதிகரிப்புக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேள்வி எழுப்புவதாகவும், இந்தத் தருணத்தில் எரிபொருள், எரிவாயு விலைகள் மட்டுமன்றி மின்சாரக் கட்டணம், உணவு, உரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகளுக்கு இன்னும் தீர்வை வழங்க முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


SHAHNI RAMEES

அமெரிக்கா மீது நம்பிக்கை ஏற்படவில்லை - ஈரான் சபாநாயகர்...


 பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய

SHAHNI RAMEES

பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்!

 

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம்
Zameera

ஹோர்முஸ் நீரிணை குறித்த அமெரிக்காவின் கருத்தை ஈரான் மறுத்துள்ளது


 ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்கக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்ட அறிக்கையை ஈரான் மறுத்துள்ளது. 


ஹோர்முஸ் நீரிணை வழியாக இரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் பயணித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்திருந்தது. எனினும், இந்த அறிக்கையை நிராகரித்துள்ள ஈரான் ஆயுதப் படைகளின் தலைமையகம், எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதியைக் கடப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளுக்கே உள்ளது எனத் தெரிவித்துள்ளது. 


மேலும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிவில் கப்பல்கள் மட்டுமே நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் கூறியுள்ளது. அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலுக்கும் எதிராகக் கடுமையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

SHAHNI RAMEES

புதுப்பிக்கப்பட்ட Pettah மத்திய பேருந்து நிலையத்தை சேதப்படுத்திய நபர் விளக்கமறியலில்...

 


புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து

SHAHNI RAMEES

விபத்துக்களில் ஒரே வாரத்தில் 49 பேர் பலி!

 


கடந்த ஏப்ரல் 04ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரையிலான

SHAHNI RAMEES

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை!

 


ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில்

Saturday, April 11, 2026

Zameera

இலங்கை நிலக்கரி நிறுவன காரியாலயத்திற்கு சீல் வைப்பு

 

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் காரியாலயத்திற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தற்போது முத்திரையிட்டுள்ளனர்

ShortNews

வீதி விதிமீறல்களை முறைப்பாடு அளிக்க புதிய 'WhatsApp' இலக்கம் அறிமுகம்!

 


அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில்

ShortNews

சில நாட்களுக்கு பெட்ரோல் வாகனங்களுக்கான QR முறைமை நீக்கம்!


புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும்

Zameera

இலங்கை பொருளாதாரம் நெருக்கடியில் – ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரிக்கை


 மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இவ்வாண்டு 4% ஆகக் குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது.



கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட சிரேஷ்ட பொருளாதார நிபுணர் லிலியா அலெக்சாண்டியன் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நெருக்கடி நீண்ட காலத்திற்கு நீடித்தால், பொருளாதார வளர்ச்சி மேலும் 0.5% முதல் 0.8% வரை வீழ்ச்சியடையக்கூடும் எனச் சுட்டிக்காட்டினார்.

எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு



இந்த நெருக்கடியின் நேரடி விளைவாக, நாட்டின் எரிசக்தி மற்றும் உணவு விலைகளில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது:



• பணவீக்கம்: மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, இவ்வாண்டு பணவீக்கம் 5.2% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோதல்கள் நீடித்தால், இது மேலும் 3% முதல் 5% வரை அதிகரிக்கக்கூடும்.



• எண்ணெய் விலை: சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த ஜனவரியில் 60 டொலராக இருந்த நிலையில், தற்போது 110 டொலர் வரை உயர்ந்துள்ளது.



• பொருளாதார தாக்கம்: இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4% எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதிக்காக செலவிடப்படுவதால், இந்த விலை ஏற்ற இறக்கங்கள் பொருளாதாரத்தில் தீர்மானமிக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


விவசாயம் மற்றும் உற்பத்தித் துறை பாதிப்பு


எரிசக்தி நெருக்கடிக்கு மேலதிகமாக, ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளது:


• யுரியா உரம் விலை 50% ஆலும், அமோனியா விலை 40% ஆலும் அதிகரித்துள்ளன.


• இது உள்நாட்டு விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அமையும் என அலெக்சாண்டியன் தெரிவித்தார்.


சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வருமானம்


சுற்றுலாத்துறை குறித்து கருத்துத் தெரிவித்த பிரதம பொருளாதார அதிகாரி லக்மினி பெர்னாண்டோ பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டார்:


• சுற்றுலாப் பயணிகள் வருகை: வான்பரப்பு மூடப்படுதல் மற்றும் விமான டிக்கெட் விலைகள் அதிகரிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 20% ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் 185,000 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்துள்ளனர், இது அரசாங்கத்தின் இலக்கை விடக் குறைவானதாகும்.


• வெளிநாட்டு கையிருப்பு: இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த மாதத்தில் 3.5% ஆல் குறைந்துள்ளது. வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி செலுத்தல்கள் ஆரம்பிக்கப்படும் போது நிலைமை மேலும் சிக்கலாகலாம்.


• பணப்பரிமாற்றம்: இலங்கைக்கு அதிகளவான வெளிநாட்டுப் பணம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே கிடைக்கிறது. அங்குள்ள நெருக்கடியால் இந்த வருமானம் பாதிக்கப்பட்டால், அது வெளிநாட்டு கையிருப்பைப் பாதிக்கும்.


ஆசிய அபிவிருத்தி வங்கியின் பரிந்துரை


வாகன இறக்குமதி போன்ற தற்காலிக வருமான வழிகளில் தங்கியிருக்காமல், எதிர்வரும் ஆண்டுகளுக்கு நிலையான வருமான வழிகளைக் கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கி இதன்போது வலியுறுத்தியுள்ளது.