Our Feeds



Tuesday, October 22, 2024

Sri Lanka

52% மக்கள் நிராகரித்த ஜனாதிபதியே அநுர - இராதாகிருஷ்ணன்!


ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும், 52 சதவீதமான மக்கள் அவரை நிராகரித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Sri Lanka

ஷானி, ரவி செனவிரட்ணவை பதவிகளிலிருந்து நீக்க முடியாது - விஜித ஹேரத்!


உதய கம்மன்பிலவின் தேவைக்காக ஷானி அபேசேகர, ரவி செனவிரட்ணவை பதவிகளிலிருந்து நீக்க முடியாதுதென அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Sri Lanka

9 மாதங்களில் 3000 முறைப்பாடுகள் பதிவு!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம உத்தியோகத்தர்கள், 3 காதி நீதிபதிகள், இரண்டு வருமான பரிசோதகர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த சுற்றிவளைப்புக்களில் 22 பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் 68 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காலப்பகுதியில் 56 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 237 வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வருடத்தில் 19 பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Zameera

எல்பிட்டிய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு


 எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 26 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



Zameera

பொதுத் தேர்தல் தொடர்பில் காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் அகற்றம்


 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக சட்டவிரோதமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 1,30,000 சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் 401 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்


 முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பதிவு செய்யப்படாத சொகுசு BMW வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்கமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு, குருநாகல் பொலிஸாரினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதுவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குப் முன்னிலையாகாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Zameera

ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களின் ஓய்வு: அச்சுறுத்தலாக மாறும் பாதுகாப்பு

ரயில்வே பாதுகாப்பு துறையின் மொத்த ஊழியர்களில் 75 சதவீதம் பேர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற உள்ளதால் ரயில்வே துறையின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஐநூறுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு தலைமை அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில்வே பாதுகாப்பு சேவையில் 719 பேர் இருக்க வேண்டும் ஆனால் தற்போது 400-க்கும் குறைவான பாதுகாப்பு அதிகாரிகளே உள்ளனர்.

பல ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு இல்லாததால், ரயில்வே துறைக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

இதனால் ரயில் பயணங்களின் போது கொள்ளை, பயணிகளின் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

போதிய பாதுகாப்பை ஏற்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களை குறைக்க முடியும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். 

 

Zameera

புதிய கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்

புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்று முதல் ஆரம்பமானது. 
 
இதற்கமைய, பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்கவு திணைக்களம் தெரிவித்துள்ளது. 
 
நேற்று முதல் விநியோகிக்கப்படும் புதிய சாதாரண கடவுச்சீட்டானது கரு நீல நிறத்தைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கடவுச்சீட்டு 48 பக்கங்களைக் கொண்டுள்ளது. 
 

Zameera

இன்று கனமழைக்கு வாய்ப்பு!


 மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடக்கு மாகாணங்களில்சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Zameera

வாக்காளர் அட்டை விநியோகம் 26 ஆம் திகதி ஆரம்பம்


 எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

 
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். 
 
அத்துடன், வேட்பாளர்கள் தத்தமது செலவின அறிக்கைகளைக் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 

Monday, October 21, 2024

Zameera

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை - சாகல ரத்நாயக்க


 சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை. ஜனாதிபதி உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மாற்றுவதாக  தெரிவித்துவரும் நிலையில், நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை அவ்வாறே முன்னெடுத்து செல்வதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கு தெரிவித்துள்ளது என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணி கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி கடன் உதவிகளை பெற்றுக்கொள்ளவும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த மாதம் செப்டெம்பர் மாதத்துடன்  இரு தரப்பு இணக்கப்பாடுகளுடன் பூரணப்படுத்தப்பட்டன.

என்றாலும் எமக்கு தனிப்பட்ட ரீதியில் கடன் வழங்கி இருந்த எமில்டன் ரிசவ் வங்கி, இலங்கைகக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. குறித்த வழக்கில், பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. என்றாலும் எமது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, கடனை மீள செலுத்த கால அவகாசம் கோரி, எமது நீதிபதிகள் அமெரிக்க நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தது. அதன் பிரகாரம் எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குறித்த வழக்கு விசாரணை 6மாத காலத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சில தவணைகள் எமக்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளுக்கு எதிரான கருத்துடையது. அதனால் எமக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடுத்திருந்த, எமில்டன் ரிசவ் வங்கி, கடந்த முதலாம் திகதி மீண்டும் வழக்கு தொடுத்திருந்தது.

அதற்கு இலங்கை அரசாங்கம் அதற்கு பதிலளி்க்கும் வகையில் கடந்த 4ஆம் திகதி தனது நிலைப்பாட்டை அறிவித்து அமெரிக்க நீதிமன்றத்துக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கிறது. அதில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தையும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையையும் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் முன்னெடுத்துச்செல்வதாக தெரிவித்திருக்கிறது.

ஆனால் எமக்குள்ள பிரச்சினை என்னவென்றால், நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டை மாற்றியமைக்க பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மக்கள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தெரிவித்து வருகிறது. ஆனால் நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக இணக்கப்பாடு ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது. அவ்வாறு எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கும் அமெரிக்க நீதிமன்றத்துக்கும் அறிவித்திருக்கிறது. 

அவ்வாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்களிடம் ஒரு கருத்தை தெரிவித்துக்கொண்டு, ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டத்தை அவ்வாறே முன்னெடுப்பதாக சர்வதேசத்திடம் தெரிவித்து வருகிறது. அதனால் நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை. அதேநேரம் புதிய ஜனாதிபதி ஒருவர் பதிவி ஏற்றால் ஆரம்பமாக அவர் தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை பாராளுமன்றத்திலோ அல்லது மக்கள் முன்னிலையிலோ முன்வைக்க வேண்டும். ஆனால் அநுரகுமார திஸாநாயக்க இதுவரை அவ்வாறு எதனையும் தெரிவிப்பதை காணவில்லை என்றார்.

SHAHNI RAMEES

#Update: சிலாபத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மூவர் – பிரேத பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்கள்!

 

சிலாபத்தில் வீடொன்றில் எரிந்த நிலையில் சடலமாக
Zameera

புதிய கட்சியில் இணையும் நடிகை தமிதா


  

நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் இணைய தீர்மானித்துள்ளார்.


இன்று (21) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.


மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளையும் இராஜிநாமா செய்வதாகவும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தமிதா அபேரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவரது பெயர் வேட்பு மனுவில் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.