Our Feeds



Monday, April 13, 2026

SHAHNI RAMEES

மற்ற நாடுகள் என்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிக்க முடியாது! பிரிட்டன் பிரதமர் அதிரடி

 


ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றநிலைக்கு மத்தியில்,

SHAHNI RAMEES

ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது போர்நிறுத்த மீறலாகக் கருதப்படும்! - IRGC எச்சரிக்கை!

 



ஹோர்முஸ் நீரிணை நோக்கி ஒரு போர்க்கப்பல் வருவது

Zameera

“நம்மை முற்றிலும் அழித்துவிடுவதாக அச்சுறுத்திய ஈரான், இப்போது அவர்களே உயிர்பிழைக்கப் போராடுகிறார்கள்” - நெதன்யாஹு


 இஸ்ரேல், அமெரிக்கா – ஈரானுக்கிடையில் தற்போதைய போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் அமைதிப் பேச்சு வார்த்தை இடம்பெற்றது.

இருப்பினும் அது தோல்வியில் முடிந்த நிலையில், இதுதொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார்.

“ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் அவர்களின் அணு ஆயுதம், ஏவுகணைகளை நசுக்குவதில் வெற்றி கண்டுள்ளோம். இது இன்னும் முடியவில்லை.

பல அமைப்புகளின் உதவியுடன் எமது கழுத்தை ஈரான் நெரித்து சுற்றி வளைக்க முயற்சித்தது. ஆனால், நாம் தான் அதன் கழுத்தை நெரிக்கிறோம்.

நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவதாக அச்சுறுத்தினார்கள். ஆனால், இப்போது அவர்களே உயிர்பிழைக்கப் போராடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Zameera

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது


 மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. 


30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். 


நேற்று (12) பிற்பகல் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன், அதில் உள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Zameera

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு


 உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைத் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 


ஈரானின் துறைமுகங்களை முடக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டதை அடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதன்படி ப்ரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 7% அதிகரித்து, அதன் புதிய விலை 102 டொலர்களாகக் காணப்படுகிறது. 


டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் விலை 8% உயர்ந்துள்ளதுடன், ஒரு பீப்பாயின் விலை 104.50 டாலர்களாகப் பதிவாகியுள்ளது.

Zameera

இன்று மழைக்கு வாய்ப்பு!


 மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் இன்று (13) காலை வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம். 


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


இதேவேளை சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கின்றது. 


அதற்கமைய இன்று நண்பகல் 12:11 அளவில் பேசாலை, மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Zameera

ஈரானில் இதுவரை 3,375 பேர் கொல்லப்பட்டுள்ளனர்


 அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் குறைந்தது 3,375 ஈரானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 2,875 பேர் ஆண்கள் மற்றும் 496 பேர் பெண்களாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sunday, April 12, 2026

Zameera

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக ஹேஷா விதானகே நியமனம்


ஐக்கிய மக்கள் சக்தியின், ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் 2026 நடப்பாண்டிற்கான தலைவராக இரத்தினபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே

நியமிக்கப்பட்டுள்ளார். 

இவருக்கான நியமனக் கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதி வழங்கி வைத்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய பெண்கள் சக்தியின் தலைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான ரோஹிணி குமாரி கவிரத்ன விஜேயரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் பிரச்சனமாகி இருந்தார்.

Zameera

அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்


 நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 


இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார். 


பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும் எனவும், அத்தகைய பேருந்துகள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


அவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பேருந்துகளை நேற்று (11) சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடிந்ததாக அவர் கூறினார். 


அந்தப் பேருந்துகள் அந்த இடத்திலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Zameera

பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு தள்ளப்பட்டுள்ளனர் - சஜித் பிரேமதாச


 எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


ஹம்பாந்தோட்டைப் பகுதியில் உள்ள யோதகண்டிய போதி மஹா விகாரை, நாக மஹா விகாரை மற்றும் சித்தல்பவ்வ மகுல் மஹா விகாரை ஆகிய இடங்களுக்கு இன்று (12) விஜயம் செய்த அவர், அங்குள்ள தேரர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 


பொருட்களின் விலை அதிகரிப்பால் நாட்டின் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் என மக்கள் எதிர்பார்த்த போதிலும், மின்சாரக் கட்டணம், எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவில் அதிகரித்துள்ளன. 


உரம் தட்டுப்பாடு போன்ற நிலைமைகளால் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார். 


பொருட்களின் விலை அதிகரிப்புக்கான தீர்வு குறித்து ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கேள்வி எழுப்புவதாகவும், இந்தத் தருணத்தில் எரிபொருள், எரிவாயு விலைகள் மட்டுமன்றி மின்சாரக் கட்டணம், உணவு, உரம் மற்றும் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 


கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தால், அதிகரித்துள்ள பொருட்களின் விலைகளுக்கு இன்னும் தீர்வை வழங்க முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


SHAHNI RAMEES

அமெரிக்கா மீது நம்பிக்கை ஏற்படவில்லை - ஈரான் சபாநாயகர்...


 பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய

SHAHNI RAMEES

பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்!

 

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம்
Zameera

ஹோர்முஸ் நீரிணை குறித்த அமெரிக்காவின் கருத்தை ஈரான் மறுத்துள்ளது


 ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்கக் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் பணிகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்ட அறிக்கையை ஈரான் மறுத்துள்ளது. 


ஹோர்முஸ் நீரிணை வழியாக இரண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் பயணித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்திருந்தது. எனினும், இந்த அறிக்கையை நிராகரித்துள்ள ஈரான் ஆயுதப் படைகளின் தலைமையகம், எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதியைக் கடப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளுக்கே உள்ளது எனத் தெரிவித்துள்ளது. 


மேலும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிவில் கப்பல்கள் மட்டுமே நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் கூறியுள்ளது. அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலுக்கும் எதிராகக் கடுமையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.