Our Feeds



Monday, May 25, 2026

Sri Lanka

மீண்டும் நாட்டில் மதப் பிரிவினையை தூண்டுவதற்கு இடமளிக்கப் போவதில்லை – ஆனந்த விஜேயபால!


அரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும், மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர் மீண்டும் நாட்டில் ஒருபோதும் இனவாதம், மதவாதம் அல்லது எந்தவொரு சதித்திட்டங்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.


நிகவெரட்டியவில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டில் தற்போது சட்டம் தன் கடமையைச் செய்யத் தொடங்கியுள்ளது. முன்னாள் அதிபர்கள், அவர்களின் வாரிசுகள், உறவினர்கள் மற்றும் குற்றங்களுடன் தொடர்புடைய அரசியல் குழுக்கள் தற்போது குழப்பத்தில் கலக்கமடைந்துள்ளனர். சட்டத்துக்கு மேல் எவரும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது.


கடந்த காலங்களில் இனவாதம் தூண்டப்பட்டதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என ஒட்டுமொத்த நாடும் போரினால் பேரழிவைச் சந்தித்தது. இந்த மண்ணில் இலட்சக்கணக்கான மக்கள் தேவையற்ற போரினால் உயிரிழந்துள்ளனர். அத்தகைய கசப்பான அனுபவங்களை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு நல்லிணக்க சமூகச் சூழல் கடந்த ஓராண்டு காலத்தில் கட்டியெழுப்பட்டுள்ளது.


தேர்தலில் தோல்வியடைந்த மற்றும் தீய எண்ணங்களால் தங்களின் அரசியல் இலாபத்துக்காக நாட்டில் இனவாதத்தையும், மதப் பிரிவினையும் தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும் இந்த நாட்டில் மீண்டும் ஒருமுறை இனவாதத்தையோ அல்லது மதக் கலவரங்களையோ உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் எவ்விதத்திலும் இடமளிக்காது என்றார்.

Sri Lanka

அடுத்த சில நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும்!


நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருகின்றது. அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப் படுகின்றது. 


ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 


மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள். 


மழை நிலைமை : 
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 


காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 


கடல் நிலை : 
காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக சிலாபம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல).

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Sri Lanka

மாவில்மடை பள்ளிவாசலில் மாடு அறுப்பு தொடர்பில் பஸ்நாயக நிலமே கண்டி மேயருக்கு கடிதம்!



ஹஜ் பெருநாளை முன்னிட்டு மாவில்மடை பள்ளிவாசலில் மாடு அறுப்பு செய்வதற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை நிராகரிக்குமாறு ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலய பஸ்நாயக நிலமே, கண்டி மாநகர சபை மேயருக்கு கடிதம்  அனுப்பிவைத்துள்ளார்.


ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம், கண்டி மற்றும் ஸ்ரீ தெடிமுண்ட தேவாலயம், அளுத்நுவர,
மகிந்த ரத்வத்தே – பஸ்நாயக்க நிலமே.

தொலைபேசி: 081 2223791 | பேக்ஸ்: 081 2223791 | மின்னஞ்சல்: srimahavishnudevalayanuwara1@gmail.com
2026-05-22.


சந்திரசிறி விஜேநாயக்க அவர்களே,
கௌரவ முதல்வர்,
மாநகர சபை,
கண்டி.

கௌரவ முதல்வர் அவர்களே,

ஹஜ் பெருநாளை முன்னிட்டு மாவில்மடை பள்ளிவாசலில் மாடு அறுப்பு செய்வதற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பானது.


கண்டி மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மாவில்மடை பகுதியில், எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு அங்குள்ள பிரதான முஸ்லிம் தேவாலயத்தினால் (பள்ளிவாசலினால்) சுமார் 14 மாடுகளை இறைச்சிக்காக அறுப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியவந்துள்ளது.


புனித பல் சின்னம் வீற்றிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி புனித நகரில், சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வந்த விலங்கு அறுப்பை நிறுத்துமாறு மல்வத்து மகா விகாரை மற்றும் அஸ்கிரி மகா விகாரை உள்ளிட்ட மகா சங்கத்தினர் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.


அந்த கோரிக்கைகளுக்கு அமைவாக, கடந்த 2012ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கௌரவ மாநகர சபையினதும், எனது எதிர்க்கட்சிக் குழுவினதும் ஆதரவோடு அதனை நிறுத்த முடிந்தது. அதற்கேற்ப, 2013 பிப்ரவரி மாதம் 26 ஆம் திகதியன்று நிறைவேற்றப்பட்ட இலக்கம் 08(4) சபைத் தீர்மானத்தின்படி, 2013 மார்ச் 15 ஆம் திகதி முதல் புனித கண்டி நகரில் விலங்குகளை அறுப்பது முற்றாக நிறுத்தப்பட்டது.


கௌரவ முதல்வர் அவர்களே, அதன் பின்னர் கண்டி மாநகர சபையின் முதல்வர் பதவியை வகித்த அனைத்து முதல்வர்களும் இன்றுவரை கண்டி நகரை விலங்கு அறுப்பு இல்லாத ஒரு நகரமாகப் பாதுகாத்துச் செயலாற்றியுள்ளனர்.

கௌரவ முதல்வர் அவர்களே, உங்களது இந்த பதவிக்காலத்திலும், புனித பல் சின்னம் வீற்றிருக்கும் எமது புனித கண்டி நகரை விலங்கு அறுப்பு இல்லாத ஒரு நகரமாகப் பாதுகாத்துத் தருமாறு மிகவும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி,
இப்படிக்கு உண்மையுள்ள,


(ஒப்பம்)
மகிந்த ரத்வத்தே
பஸ்நாயக்க நிலமே,
ஸ்ரீ மகா விஷ்ணு தேவாலயம் – கண்டி.
ஸ்ரீ தெடிமுண்ட தேவாலயம் – அளுத்நுவர.

பிரதிகள்:
1. கௌரவ பிரதி முதல்வர், மாநகர சபை, கண்டி. (நடவடிக்கைக்காக)
2. கௌரவ எதிர்க்கட்சித் தலைவர், மாநகர சபை, கண்டி. (நடவடிக்கைக்காக)
3. நகராட்சி ஆணையாளர், மாநகர சபை, கண்டி. (நடவடிக்கைக்காக)

SHAHNI RAMEES

வடக்கில் வெசாக் நிகழ்வுகளுக்கு தடையா? - ஆளுநர் அறிக்கை

 


தன்சல் நடத்துவது தொடர்பாக சமூக ஊடகங்களில்

Zameera

இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள் இந்தியாவினால் அன்பளிப்பு


 இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவை வழங்கப்பட்டுள்ளன. 


இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன. 


எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது குறிப்பிட்டார். 


இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த அன்பளிப்பைப் பாராட்டி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

SHAHNI RAMEES

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியாகும் கருத்துகளுக்கு ஆணைக்குழு பொறுப்பல்ல!

 


மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால்

SHAHNI RAMEES

ஹஜ், வெசாக் பண்டிகை: சிறைக்கைதிகளுக்கு விசேட பார்வையாளர் சலுகை!

 


எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை
SHAHNI RAMEES

இனி காப்புறுதி டிஜிட்டல் அட்டை மாத்திரமே வழங்கப்படும்!

 


காப்புறுதி அட்டை டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறையின்

Zameera

கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!


 அடுத்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடற்பரப்புகளில் தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை காணப்படும்.


எனினும், காங்கேசன்துறையிலிருந்து மன்னர் ஊடாக சிலாபம் வரையான கடற்பரப்பு மற்றும்  காலியிலிருந்து அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை மிகத் தீவிரமாக அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.


காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக மன்னார், சிலாபம், காலி, பொத்துவில், அம்பாந்தோட்டைஅவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பான நிலவரத்தைக் கொண்டிருக்கும்.


புத்தளம் முதல் கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரைகடல் அலைகளின் உயரமானது 2.0 மீற்றர் முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.


தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகள் திடீரென மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


அதனால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் இவ்விடயம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Zameera

விமல் வீரவங்சவுக்கு பிணை


 தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில் விடுவிக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று தலங்கம பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையாகியிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

SHAHNI RAMEES

இஸ்ரேல் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு இலவச விசா அனுமதி! - இன்று (25) முதல் அமுலுக்கு....

 

குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வருகை தரும்
Zameera

Breaking:- விமல் வீரவங்ச கைது


 முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போர்வீரர்கள் நினைவு அஞ்சலிக்கான ஒத்திகையை குழப்ப முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Zameera

நாட்டை பொறுப்பேற்கத் தயாராக உள்ளேன் – திலித் ஜயவீர


 இப்பொழுதேனும் நாட்டினைப் பொறுப்பேற்கத் தான் தயாராக இருப்பதாகவும், நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘Sri Lanka – Mingle with Dilith’ (இலங்கை மீதான அக்கறை - திலித்துடனான கலந்துரையாடல்) எனும் இந்த விசேட சந்திப்பு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள Acacia Campus Theatre மண்டபத்தில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதோ திலித் ஜயவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்:

கேள்வி: ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்தால், இரண்டாயிரத்து இருபத்தொன்பது (2029) வரை காத்திருக்காமல் உங்களுக்கு ஜனாதிபதி பதவி தற்போது வழங்கப்பட்டால்... இந்த நாட்களில் நிலவும் பொருளாதார நெருக்கடியை நீங்கள் எவ்வாறு கையாள்வீர்கள்?

பதில் : "வேலைத்திட்டம் இல்லாமல் பணியைப் பொறுப்பேற்கக் கூடாது. ஆனால், இப்போது நமக்கு (வாய்ப்பு) வழங்கப்பட்டால் இப்போதே செய்வோம். இன்று தந்தால் இன்றே செய்து காட்டுவோம். எந்தவொரு சிக்கலான பிரச்சினையினதும் ஆரம்பப் புள்ளிக்குச் சென்றால் அது மிகவும் எளிமையானது.

இப்போது இருக்கும் பிரச்சினை, டொலரின் மீது ஏற்படும் அழுத்தமே முதன்மையானது. அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் முதலாவது விடயம். தற்போது நமது பொருளாதாரத்திற்கு வரும் அழுத்தம் இதுதான்.

இதனை மேலாண்மை செய்ய வேண்டுமாயின், முதலாவதாக செய்ய வேண்டியது என்னவென்றால், இந்தத் தருணத்தில் மக்களுடன் ஒரு உண்மையான, நேர்மையான, நம்பிக்கையான உரையாடலை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், இன்று இல்லாமல் போயிருப்பது இந்த நாட்டின் தலைமைத்துவம் மீதான நம்பிக்கையே தவிர டொலர் அல்ல. 

கட்டியெழுப்பப்பட வேண்டிய இந்த நம்பிக்கையை, சில மணித்தியாலங்களுக்குள் உண்மைகளைப் பேசி, மக்களுடன் ஒரு கலந்துரையாடலுக்குச் செல்வதன் மூலம் கட்டியெழுப்ப முடியும். 

அவ்வாறின்றி, மீண்டும் பெருமை பேசிக்கொண்டும், டொலர் இல்லாமல் போனதற்குக் காரணம் வேறு யாரோ ஒருவர் என்று கூறிக்கொண்டும் இருந்தால், இதனை ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது.

அது முதலாவது விடயம். அடுத்தது, கடன் வழங்குநர்களுக்குத் தேவையான முறையில் ஒரு வியாபாரத்தை நடத்தினால், அதாவது வங்கிக்குத் தேவையான முறையில் நாம் வியாபாரத்தைச் செய்வது போலாகும். 

நாம் ஒன்றைப்புரிந்துகொள்ள வேண்டும், கடன் வழங்குநர்கள் நம்மை விடவும் அனாதரவான நிலையில் இருக்கிறார்கள் (நம்மிடம் இருந்து கடனைத் திரும்பப் பெறுவதில்). இந்த ஒரு விடயத்தைத்தான் நாம் பயன்படுத்தாமல் இருக்கிறோம்.

நான் சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) எதிரானவன் அல்ல. ஆனால் நான் கூறுவது என்னவென்றால், சர்வதேச நாணய நிதியம் கொண்டு செல்லும் இந்த வேலைத்திட்டத்தினால்தான் நாம் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். 

அதனை (சரியான முறையில்) கையாள்வதற்கோ, பேசித் தீர்ப்பதற்கோ தேவையான பலம், ஆளுமை மற்றும் அறிவு இல்லாமையே இன்றைய நெருக்கடிக்கு மிகப்பெரிய காரணமாகும்."