Our Feeds



Saturday, February 7, 2026

Zameera

கண்டி மாவட்டத்தின் நாளை நீர்வெட்டு


 கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (08) முற்பகல் முதல் 22 மணிநேர நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.



நாளை (08) சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் மறுநாள் (09) அதிகாலை 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அச்சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதன்படி, அஸ்கிரிய (மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி), வேகிரிய, பல்லேமுல்ல (புதிய மற்றும் பழைய), யடிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல சேவை நீர்த்தேக்கம், மெதவல (பழைய) சேவை நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.


அதேபோல், கஹவத்த, குருகொட, புலுகொஹதென்ன, கிராகடுவ, கஹல்ல, தெலம்புகஹவத்த, நுகவெல, பலனகல, மெதவல (புதிய) சேவை நீர்த்தேக்கம், கலகெதர மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.


நீர் விநியோகம் தடைப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Zameera

கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவு!


 கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நேற்று (06) பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.

தற்போது அதிகரித்து வரும் குற்றங்களின் தன்மை குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர், நாளொன்றுக்கு 23 முதல் 25 வரையான சைபர் குற்றங்கள் பதிவாகுவதாகவும், இது கணிசமான அளவு உயர்வு எனவும் சுட்டிக்காட்டினார்.

இக்குற்றங்களை வினைத்திறனுடன் விசாரணை செய்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், விசேட அறிவு மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நவீனமயமாக்கும் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் சிறந்த, வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், திறமையான அதிகாரிகள் உயர்மட்டத்திற்குச் செல்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும், தவறிழைக்கும் அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்குமான பொறிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Zameera

கலகாவில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழப்பு


 கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கருவேப்பிலை மரத்தில் கருவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி இந்த மரணங்கள் சம்பவித்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் கலகா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Zameera

சுற்றுலாப் பயணிகளின் வருகை 3 இலட்சத்தைக் கடந்தது


 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 300,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி 04ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 317,381 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. 

இந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியப் பிரஜைகளாவர் என்பதுடன், அவர்களின் எண்ணிக்கை 57,348 எனப் பதிவாகியுள்ளது. 

அத்துடன், பிரித்தானியப் பிரஜைகள் 34,724 பேரும், ரஷ்யப் பிரஜைகள் 30,951 பேரும், ஜேர்மனியப் பிரஜைகள் 20,272 பேரும் மற்றும் சீனப் பிரஜைகள் 16,315 பேரும் இதில் அடங்குவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பெருமளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

மேலும், பெப்ரவரி மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் 40,054 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Zameera

ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு பதிலளித்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார


 குருக்கள் மட விவகாரம்: ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கை நியாயமானது, அவரது நல்ல கோரிக்கைகளை பாராட்டுகின்றேன்.

- ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு பதிலளித்தார் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார.

--------------------------------------------

குருக்கள் மடத்தில்  வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு மார்க்க அடிப்படையில் மீள் அடக்கம் செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும்  அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ்  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தா்ர்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் திகதி புனித ஹஜ் கிரிகைகளை நிறைவு செய்து விட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம் யாத்திரியர்கள் கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதயில் குருக்கள் மடம் எனும் இடத்தில் தமிழீல விடுதலைப்புலிகளினால் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர் என காத்தான்குடியைச் சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மது றவூப் என்பவரினால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் 2014.04.09ஆம் தகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பிலே கடந்த வரவு செலவுத் திட்ட நீதி அமைச்சு தொடர்பான விவாதத்தின் போதும் நான் பேசியிருந்ததை நினைவுகூறுகின்றேன். 

மேற்படி சம்பவத்தின்போது 100 க்கும் மேற்பட்வர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டு அவர்களது உடமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இறுதியில் கொலை செய்யப்பட்டு குருக்கள்மட கடற்கரையை அண்டிய ஒரு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளார்கள் என்ற நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தின் மேலான தலையீட்டைக் கோரிய போது, 2014.04.28ஆம் திகதியாகிய சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே குறித்த புதைகுழியை அகழ்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நீதிவான் கட்டளை பிரப்பித்திருந்தார். எனினும் இன்றுவரை குறித்த புதைகுழி அகழப்படவில்லை. 

மேற்படி சம்பவமானது வலிந்து காணாமலாக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் தொடர்பானதாகும். தங்களது உறவினர்களுக்கும் அன்பர்களுக்கும் என்ன நேர்ந்தது என்பதை அறிகின்ற தார்மீக உரிமை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் குருக்கள்மடப் புதைகுழியில் மேற்படி வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தால் புதைக்கப்பட்ட எச்சங்களைத் தோண்டியெடுத்து மரபணுப்பரிசோதனைகள் மூலம் அடையாளங்கண்டு அவ் எச்சங்களை அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு மார்க்க அனுஷ்டானங்களை மேற்கொண்டு கடமைகளை நிறைவேற்றி மீள் அடக்கம் செய்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதும் இவ் உயரிய சபையினுடைய கடமையாகும். 

இவ்விடயம் தொடர்பில் இவ் உயரிய சபையில் நான் பேசிய பின்பு நீங்களும் அவ்விடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டு அகழ்வு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.  இதற்காக பாதிக்கட்ட மக்கள் சார்பாக உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனினும் இதற்குத் தேவையான நிதி விடுவிக்கப்படாமை காரணமாகவே இவ்விடயம் இன்னும் பிற்படுத்தப்பட்டு செல்வதாக அறிகின்றேன். ஏற்கனவே இவ் அகழ்வுப் பணிக்காக சுமார் இருபத்தொன்பது இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவ் ஒதுக்கப்பட்ட நிதியானது குறித்த அகழ்வுப் பணிக்கு விடுவிக்கப்படாததன் காரணமாக கடந்த 2026.01.06ஆம் திகதிய வழக்குத் தவணையின் போது நீதிவான்  மேலதிக நிதியினைக் கோரியிருப்பதாகவும் நான் அறிகின்றேன்.  

நீதிவானின் உத்தரவின் பேரில் குருக்கள்மட மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியை மண்முனை தென்எருவில்பற்று, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகமே பொறுப்பேற்றுள்ளதாக அறிகின்றேன். எனவே இதற்குத் தேவையான மொத்த நிதியையும் குறித்த பிரதேச செயலகத்திற்கு விடுவித்து  தங்களது உறவுகளின் ஜனாஸாக்களையாவது மார்க்க முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு ஆவண செய்யுமாறு தங்களிடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

எனவே வலிந்து காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை தோண்டியெடுத்து அவர்களது குடும்பத்தினர் விரும்பியவாறு இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கடமைகளை நிறைவேற்றி மீள் அடக்கம் செய்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என கேட்கிறேன் என்றார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கை நியாயமானது, அதற்கான நிதி மிக விரைவில் ஒதுக்கீடு செய்யபப்படும் என்பதோட நான் தனிப்பட்ட ரீதியில் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவேன் என்பதோடு இவ்விடயம் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்வின் நல்ல முயற்சிகளை பாராட்டுகிறேன். அவன் எந்த நேரத்திலும் என்னோடு தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.


-- ஊடகப்பிரிவு

Zameera

வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்களுக்கு பூட்டு


 வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால் நேற்று மூடப்பட்டன.

குறித்த உணவகங்கள் சுகாதார பரிசோதகர்களால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த உணவகங்களை நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரு உணவகங்கள்,பழையபேருந்து நிலையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகம், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல உணவகங்களுக்கே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-வவுனியா தீபன்-

Zameera

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க


 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

SHAHNI RAMEES

'டித்வா'வினால் பெற்றோரை இழந்த 103 சிறுவர்கள்.....

 'டித்வா்' காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 


பதுளை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (6) நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினார். 


இதற்கமைய, அந்தச் சிறுவர்களைப் பராமரிப்பதற்கும்

SHAHNI RAMEES

3வது நாளாக தொடரும் மீனவர்களின் போராட்டம்: பேச்சுவார்த்தைகள் தோல்வி!


உலவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச்களைப்

Zameera

தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசன அமைச்சர் இணக்கம்




 தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்களை தேச பற்றார்களாக அறிவிக்க புத்தசாசன

அமைச்சர் இணக்கம்.  


அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கிடையில் முக்கிய சந்திப்பு..!

-------------------------------------------


தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான விவகாரத்தில், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (06) பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரை தனித்தனியே சந்தித்து கலந்துரையாடினார்.


முதற்கட்டமாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விளக்கங்களை முன்வைத்தார். இதன்போது, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக இவ்விடயத்தை முன்னெடுத்து நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.


இந்த சந்திப்பின்போது, காலனித்துவ ஆட்சிக்கெதிராக போராடிய பல முஸ்லிம் வீரர்கள், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ‘தேசத் துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களை உரிய வகையில் தேசப் பற்றாளர்களாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.


மேலும், இவ்விவகாரம் தொடர்பான முழுமையான ஆவணங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள் உள்ளிட்ட தேவையான அனைத்து தகவல்களையும் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் அவர் கையளித்தார்.


இதற்கு பதிலளித்த அமைச்சர், குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட முஸ்லிம் வீரர்கள் தொடர்பான இந்த விவகாரம் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இதற்கு முன்னரும் பல தடவைகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் விரிவாக கருத்துகளை முன்வைத்து, தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


-- ஊடகப் பிரிவு

Zameera

லொறி மோதி பாடசாலை மாணவி உயிரிழப்பு


 வீதியோரமாகச் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். 

எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று (06) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் காயமடைந்த மாணவி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

உயிரிழந்த மாணவி அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. 

விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்


 10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. 


மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 


தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. 


ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 


பி பிரிவில் இலங்கை, அவுஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமான், சிம்பாப்வே அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, இத்தாலி, நேபாள், ஸ்கொட்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 


ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய அணிகள் டி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. 


ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 


லீக், சூப்பர் 8, அரையிறுதி, இறுதி என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது. 


இந்த போட்டிகள் இலங்கையில் கொழும்பு எஸ்.எஸ்.சி, பிரேமதாச மற்றும் கண்டி பல்லேகல மைதானங்களிலும், இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி மற்றும் மும்பை, ஆகிய மைதானங்களிலும் இடம்பெறவுள்ளன. 


இன்றைய போட்டி விபரம், 


பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று காலை 11.00 மணிக்கு கொழும்பு எஸ்.எஸ். சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 


அடுத்த போட்டி இன்று மாலை 03.00 மணிக்கு ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில் ஈடன்காடன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. 


பின்னர் இரவு 07.00 மணிக்கு இந்தியா மற்றும் அமெரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி வங்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது.

Friday, February 6, 2026

Zameera

கத்தாரில் நடைபெற்ற இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வு


 ஜே. எம். பாஸித் - கத்தார் 

இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, கத்தார் – தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு புதன்கிழமை (04) காலை நடைபெற்றது.

தூதரக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கத்தாருக்கான இலங்கைத் தூதுவர் ரொஷான் சித்தாரா கான் அசார்ட் அவர்களால் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்களின் ஆசிர்வாதங்களுடன் விசேட மத அனுஷ்டானங்கள் நடைபெற்றன.இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் விடுக்கப்பட்ட சுதந்திர தினச் செய்தி இதன்போது வாசிக்கப்பட்டது. 

இவ்வாண்டு சுதந்திர தினம் “இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.