Our Feeds



Sunday, April 26, 2026

Zameera

சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு


 விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்வதற்காக சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அழைப்பு விடுத்தள்ளது.

இதற்கான விருப்பங்களை வெளிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உலகளாவிய ரீதியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Zameera

வாகன இறக்குமதி செலவு 2025 இல் மூன்றாவது உச்ச நிலையை அடைவு

இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி செலவானது, வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025 ஆண்டுக்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரி அளவில் தனிப்பட்ட வாகனங்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டிருந்தன. நீண்டகால கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய கேள்வி அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கத்தினால் வரி மற்றும் வரி அல்லாத பல கொள்கை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

இருப்பினும், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இது பல ஆண்டுகளாக நிலவிய கட்டுப்பாடுகளால் தேங்கியிருந்த கேள்வி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக 2025 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இறக்குமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டதுடன், தனிப்பட்ட மற்றும் வர்த்தக வாகனங்கள் ஆகிய இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன இறக்குமதி செலவு 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டில் பதிவான 2.12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டில் பதிவான 2.09 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குப் பிறகு பதிவான மூன்றாவது மிக உயர்ந்த வருடாந்த வாகன இறக்குமதி செலவாகக் கருதப்படுகிறது.

 

SHAHNI RAMEES

பெண்களைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியதாக அர்ச்சுனா மீது குற்றச்சாட்டு!

 



யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் பாராளுமன்ற

SHAHNI RAMEES

1.1 பில்லியன் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் இலங்கையை சேர்ந்த 22 பௌத்த துறவிகள் கைது!

 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும்

SHAHNI RAMEES

ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

 


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற

SHAHNI RAMEES

இன்று பிற்பகல் நாட்டை வந்தடையும் பாரிய கச்சா எண்ணெய் கப்பல்

 

மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர்,

Saturday, April 25, 2026

Zameera

மருதானை ரயில் நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு


 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, 'Dream Destination' திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மருதானை ரயில் நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது.

ரயில் பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை ரயில் நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் 06 ஆம் இலக்க மேடைகளின் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சூழல் அழகுபடுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இதற்கான நிதி அனுசரணையினை அக்பர் நிறுவனம் வழங்கியுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், NIO Engineering நிறுவனத்தின் ஆலோசனை சேவைகளுக்கமைய ஆறு மாத காலப்பகுதிக்குள் இந்த புனரமைப்பு பணிகள் முறையாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரயில் நிலையங்களில் ஒன்றான மருதானை ரயில் நிலையம், கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையங்களில் இரண்டாவது மிகப்பெரிய நிலையமாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் செல்வதற்காக ஒன்றுகூடும் இந்த ரயில் நிலையத்தை பல கட்டங்களின் கீழ் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க.

கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலும் எவ்வித தாமதமுமின்றி ஆறு மாத காலத்திற்குள் பிரதான கட்டிடம் உள்ளிட்ட வளாகத்தில் நிலையான நவீனமயமாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பொது வசதிகளை முறையாகப் பயன்படுத்துவதும், அவற்றைச் பாதுகாப்பாகப் பேணுவதும் பயணிகள் மற்றும் ரயில் திணைக்கள ஊழியர்களின் முதன்மையான பொறுப்பாகும். 

நாட்டின் நன்மையை விரும்பும் அனைத்து மக்களும் இவ்வாறான தேசிய சொத்துக்களைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும். பொதுச் சொத்துக்களுக்கு விளைவிக்கப்படும் சேதங்களுக்கு எதிராக சமூகம் அணிதிரள வேண்டும்.

கடந்த காலங்களில் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்பட்ட பின்னர், அதற்கு விளைவிக்கப்பட்ட சேதங்களுக்கு எதிராக பாரிய சமூக எதிர்ப்பு கிளம்பியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அது அரசாங்கத்திற்கு ஒரு பெரிய சமூக பலமாக அமைந்ததாகவும், எனவே இவ்வாறான பொதுச் சொத்துக்களையும் வரலாற்று மரபுகளையும் பாதுகாப்பது ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பாகும் என்றும் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (Clean Sri Lanka செயலகம்) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, ரயில் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய, அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் உப தலைவர் அஸ்கி அக்பர் அலி, பணிப்பாளர்களான ஹுஸைன் அக்பர் அலி, ஹதீம் அக்பர் அலி, முகாமைத்துவப் பணிப்பாளர் ரஜீவ் த சில்வா, செயற்பாட்டுப் பணிப்பாளர் துஷார லக்ஷ்மன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Zameera

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு

அடுத்த நான்கு ஆண்டுகாலத்திற்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இன்று (25) நடைபெற்ற அக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தலிலேயே அவர் இப்பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.

 

இம்முறை தலைவர் பதவிக்காக 5 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். 

 

அவர்களில் இலங்கை கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் உப தலைவர் சிரந்த பீரிஸ் மற்றும் இலங்கை பேஸ்பால் கூட்டமைப்பின் தலைவர் அஸங்க செனவிரத்ன ஆகியோர் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கியிருந்தனர்.

 

இதன்போது நடைபெற்ற தேர்தலில் 16 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அஸங்க செனவிரத்ன, அடுத்த 4 ஆண்டுகளுக்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார்.

அடுத்த நான்கு ஆண்டுகாலத்திற்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவராக அஸங்க செனவிரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (25) நடைபெற்ற அந்தக்குழுவின் உத்தியோகபூர்வ பொதுத்தேர்தலிலேயே அவர் இப்பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.

இம்முறை தலைவர் பதவிக்காக 5 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் இலங்கை கால்பந்துக் கூட்டமைப்பின் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் உப தலைவர் சிரந்த பீரிஸ் மற்றும் இலங்கை பேஸ்பால் (Baseball) கூட்டமைப்பின் தலைவர் அஸங்க செனவிரத்ன ஆகியோர் பிரதான வேட்பாளர்களாகக் களமிறங்கியிருந்தனர்.

இதன்போது நடைபெற்ற தேர்தலில் 16 வாக்குகளைப் பெற்றுக்கொண்ட அஸங்க செனவிரத்ன, அடுத்த 4 ஆண்டுகளுக்காக தேசிய ஒலிம்பிக் குழுவின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார்.
 

SHAHNI RAMEES

மாணவர்களுக்கு முறையற்ற சிகை அலங்காரம்: மட்டக்களப்பில் இரண்டு சிகை அலங்கார நிலையங்கள் அதிரடியாக மூடல்!

 

பாடசாலை மாணவர்களுக்கு ஒழுக்கமற்ற மற்றும் முறையற்ற
SHAHNI RAMEES

நேற்று தடம் புரண்ட 'சாகரிகா' ரயில் மீண்டும் தடம் புரண்டது!

 


நேற்று (24) தடம் புரண்டிருந்த 'சாகரிகா' ரயில் மீண்டும்

Zameera

டெஹ்ரானில் இருந்து வணிக விமான சேவை மீண்டும் தொடக்கம்


 டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகளை 2 மாதங்கள் கழித்து ஈரான் இன்று (25) தொடங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து, ஈரான் மீது தாக்குதல்களை நடத்தின. போர் தீவிரம் அடைந்ததால் ஈரான் வான்வழிப்பாதைகள் முழுவதும் முடங்கின.

ஈரானுக்கு யாரும் பயணம் செய்யாதீர்கள். இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தற்போது போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், ஈரானுக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான சர்வதேச விமான போக்குவரத்துக்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

இந் நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து வணிக ரீதியான விமான சேவைகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளன. இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல், மஸ்கட் மற்றும் மதீனாவுக்கு விமானங்கள் புறப்பட்டுச் சென்றன. இஸ்தான்புல்லுக்கு குறைந்தது 3 விமானங்கள் இயக்கப்பட்டன.

முன்னதாக பதற்றமான சூழல் தொடர்வதால் இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு பயணிக்க வேண்டாம் என்று டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்து இருந்தது, குறிப்பிடத்தக்கது.


Zameera

மின்சார சபை 38.7 பில்லியன் ரூபா நட்டம்


 மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டன. இக்கட்டணக் குறைப்பு மற்றும் ஆண்டின் முதல் காலாண்டில் நிலவிய வறட்சியான காலநிலை காரணமாக வெப்ப மின் உற்பத்தி அதிகரித்தமை போன்றவற்றால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு உயர்வு, மின்சார சபையின் நிதிச் செயல்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிதி இழப்பை ஈடுசெய்யும் நோக்கில், 2025 ஜூன் மாதம் மின்சாரக் கட்டணங்கள் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்ட போதிலும், அது நட்டத்தை ஈடுசெய்யப் போதுமானதாக அமையவில்லை என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவாக, 2024 இறுதியில் 174.3 பில்லியன் ரூபாவாக இருந்த மின்சார சபையின் குறுகிய காலக் கடன்கள் மற்றும் பொறுப்புகள், 2025 இறுதியில் 206.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளன. அதே காலப்பகுதியில் நீண்ட காலப் பொறுப்புகள் 409 பில்லியனிலிருந்து 411.2 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளன.

இதேவேளை, மின்சார விநியோகச் செலவு மற்றும் வருமான முன்கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மேலும் 10.3 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2025ஆம் ஆண்டில் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சியுடன் மின்சாரத்திற்கான கேள்வியும் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய அனைத்து நுகர்வோர் பிரிவுகளிலும் மின்சார விற்பனை ஒட்டுமொத்தமாக 5.8 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக வீட்டுப் பாவனையாளர் பிரிவில் இரண்டாம் காலாண்டிலிருந்து வலுவான வளர்ச்சி காணப்பட்ட போதிலும், ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட 'டித்வா' புயல் காரணமாக மின்சாரக் கேள்வி தற்காலிகமாகக் குறைந்திருந்ததாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Zameera

வாகன இலக்க தகட்டில் பாரிய மாற்றம்


 வாகன இலக்க தகட்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக ஒருவரின் பெயரைப் பொறிக்கும் முறையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் இதுபோன்ற ஒரு நடைமுறை செயல்படுத்தப்படுகின்றது.

இதற்கிடையில், ஒரு இலட்சம் என்ற எண்ணுக்கு முன்னால் சிறப்பு எண்களை வழங்குவதன் மூலம் மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு சுமார் 1.18 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளது.

மேலும், அத்தகைய எண்ணை வழங்குவதற்கு ஒரு மில்லியன் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

இருப்பினும், வர்த்தமானி அறிவிப்பு இன்றி சுமார் மூன்று ஆண்டுகளாக இந்தக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே, சிறப்பு எண்களை வழங்குவதற்குப் பணம் வசூலிக்கும் திட்டத்திற்கு நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.