
Wednesday, June 3, 2026

எகிறும் அமெரிக்க டொலரின் விற்பனை விலை
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள அண்மைக்கால நாளாந்த நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337 ரூபா எல்லையைத் தாண்டியுள்ளது.
மத்திய வங்கி இன்று (03) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 328.00 ரூபாவாகவும், விற்பனை விலை 337.97 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதற்கு மாறாக, நேற்று (02) அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 326.75 ரூபாவாகவும், விற்பனை விலை 336.60 ரூபாவாகவும் இருந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதுகேளாமை கண்டறிய WHO புதிய செயலி அறிமுகம்
இந்த பிரச்சினைக்கு வெற்றிகரமான தீர்வாக, உலக சுகாதார அமைப்பு (WHO) ‘WHOears’ என்ற புதிய மொபைல் செயலியை (App) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய மென்பொருளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு சிறப்பு உலகளாவிய நேரலை இணையவழி கலந்துரையாடலை (Webinar) நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த செயலி ஏன் சிறப்பானது?
இலவசமாகப் பெறலாம்: இந்த செயலியை எண்ட்ராய்டு (Android) மற்றும் ஆப்பிள் (Apple) போன்கள் மற்றும் டெப்லெட்களில் முற்றிலும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறைந்த செலவு: ஒரு டெப்லெட் மற்றும் சாதாரண ஹெட்போன் (Headphones) உதவியுடன், அமைதியான எந்தவொரு இடத்திலும் மிகக் குறைந்த செலவில் செவித்திறன் பரிசோதனையை இதன் மூலம் செய்ய முடியும்.
வழிகாட்டுதல்கள்: 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட எவருடைய செவித்திறனையும் பரிசோதிப்பதற்கான படிப்படியான வழிமுறைகளை இந்த செயலி சுகாதார ஊழியர்களுக்கு வழங்குகிறது.
இந்தத் திட்டத்திற்கு, உதவி தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய கூட்டாண்மை அமைப்பான ‘ATscale’ ஆதரவளித்துள்ளது.
அறிமுக நேரலை இணையவழி கலந்துரையாடல்
இந்த மென்பொருள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நேரலையாகக் காண்பிப்பதற்கும், இதனை சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பது குறித்து விவாதிப்பதற்கும் நடத்தப்படும் இந்த இணையவழி கலந்துரையாடல் அனைவருக்கும் திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பின்வரும் துறைகளைச் சேர்ந்தவர்களை இதில் இணையுமாறு உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது:
சமூக சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள்.
சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திட்ட மேலாளர்கள்.
செவித்திறன் மற்றும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் (Audiologists & ENT Specialists).
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGOs).
காதுகேளாமைப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக சுகாதார ஊழியர்களைத் தயார்படுத்துவதை இந்த ‘WHOears’ செயலி மூலம் உலக சுகாதார அமைப்பு எதிர்பாக்கிறது.

புகையிரதத் திணைக்களத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பருவச்சீட்டுகளை அரச ஊழியர்களுக்கு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, புகையிரதத் திணைக்களத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்திற்குள் ஏற்பட்ட மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான சர்ச்சை காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் வழங்கப்படும் பருவச்சீட்டுகள், கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் உரிய நேரத்தில் விநியோகிக்கப்படாததால், செயல்பாட்டு சிரமங்கள் மற்றும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜயசேகரவின் கூற்றுப்படி, ஏப்ரல் மாத பருவச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை புகையிரதத் திணைக்களம் பலமுறை நீடித்ததுடன், அதனை மே மாதத்திலும் பயன்படுத்த அனுமதித்திருந்தது. இதன் விளைவாக, பல அரச ஊழியர்கள் மே மாதத்திற்கான புதிய பருவச்சீட்டுகளை கொள்வனவு செய்யவில்லை என்பதுடன், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பருவச்சீட்டுகள் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலை காரணமாக பருவச்சீட்டு விற்பனை கணிசமாகக் குறைவடைந்ததுடன், திணைக்களத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கலேவெல பகுதியில் லொறியுடன் மோதிய சொகுசு பேருந்து - பலர் காயம்!

போர் பதற்றத்தால் மீண்டும் உயரும் எண்ணெய் விலை!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருகின்றது.
அதற்கமைய பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 0.86 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 96.86 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் சுமார் 0.85% அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 94.61 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
அத்துடன் மேர்பன் ரக மசகு எண்ணெய் விலை 1.66% அதிகரித்து,பீப்பாய் ஒன்றின் விலை 96.09 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.171 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ஈரான் நோக்கிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீண்டும் எண்ணெய் விலை அதிகரிப்பதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மாயம்
ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற படகில் இருந்த மீனவர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக நேற்று (02) புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், பின்னர் அதில் இருந்த மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் படகின் உரிமையாளர் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன மீனவர் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவராவார்.
6 மீனவர்களைக் கொண்ட குழுவொன்று மீன்பிடி நடவடிக்கைக்காகக் குறித்த படகில் புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், சுமார் 15 கடல் மைல் தொலைவில் வைத்து ஒரு மீனவர் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
நேற்று இரவு உணவு உண்பதற்காகத் தேடிய போதே, இவ்வாறு ஒரு மீனவர் காணாமல் போயுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், பின்னர் அது குறித்துப் படகில் இருந்த ஏனையோர் படகின் உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி ட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது
நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகியிருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் உட்பட இருவர், போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை (02) இரவு அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த 36 வயதுடைய சந்தேகநபர், ஹெரோயின் போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்தபோது பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டார்.
அச்சமயம், பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகச் சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். எனினும், பொலிஸார் தமது உயிரைப் பணயம் வைத்து நடத்திய நீண்ட தேடுதலின் பின்னர் அவரை மீண்டும் மடக்கிப் பிடித்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் இடது காலில் காயமடைந்ததுடன், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளார்.
நீண்டகாலமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து, அவர்களுக்கு மிக நுணுக்கமான முறையில் போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த 25 வயதுடைய மற்றுமொரு சந்தேகநபரையும் பொலிஸார் அன்றைய தினம் இரவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் சட்ட நடவடிக்கைக்காகச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் கீழ், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆராச்சியின் வழிநடத்தலில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குவைத் விமான நிலையத்திற்கு ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்
குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.



