Our Feeds



Wednesday, April 1, 2026

Zameera

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படமாட்டாது - ஈரான் உறுதி


 ஹோர்முஸ் நீரிணை தமது தேசத்தின் எதிரிகளுக்காக ஒருபோது திறந்துவிடப்படாது என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. 


ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலை ஏற்படும் போது அது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். 

எவ்வாறாயினும் அதற்கு பதிலளிக்கும் வகையில் தகவல் வௌியிட்டுள்ள ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, நிலைமை உறுதியாகவும் ஆதிக்கத்துடனும் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதியின் இத்தகைய கேலிக்குரிய செயல்களால் இந்தத் தேசத்தின் எதிரிகளுக்கு அது ஒருபோதும் திறந்துவிடப்படாது. 

ஈரானிய தலைவர் போர்நிறுத்தம் கோரியுள்ளதாகச் சற்று முன்னர் ட்ரம்ப், தெரிவித்திருந்தார்.
Zameera

தெற்கு லெபனானில் வான்வழித் தாக்குதல் - இருவர் உயிரிழப்பு


 தெற்கு லெபனானின் மன்சூரி நகரில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலிலே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் தெற்கு லெபனானின் சில பகுதிகளில் ஊடுருவலைத் தொடங்கியுள்ளதுடன், அந்நாட்டில் தொடர்ந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. 

நேற்று இரவு தெற்கு பெய்ரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Zameera

தேங்காய் எண்ணெய் கலப்படம் – 5 வியாபார நிலையங்களுக்கு எதிராக வழக்கு


 கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபட்ட வியாபார நிலையங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


கல்முனை பிரதேசத்தில் மூன்று வியாபார நிலையங்களிலும் சாய்ந்தமருதில் இரண்டு வியாபார நிறுவனங்களிலும் இவ்வாறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.


இவற்றுக்கு எதிராக அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வியாழக்கிழமை (02) கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் இஸட்எம். ஸாஜித் தெரிவித்தார்.


-அஸ்லம் எஸ்.மௌலானா

Zameera

அரசாங்கம் மீது GMOA குற்றச்சாட்டு


 தற்போதைய அரசாங்கமும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும், வைத்தியர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகச் சேவையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தமது சங்கத்தைச் சேர்ந்த 23,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அவ்வாறு அடிமைகளாகப் பணியாற்றத் தயாரில்லை என அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்

"மே 10ஆம் திகதியளவில் சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முறையான இடமாற்றச் செயல்முறை கடந்த 13 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இடமாற்றச் சபைகளில் இருந்துகொண்டு, அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் 13 முதல் 17 வருடங்கள் வரை ஒரே இடத்திலேயே தங்கியிருந்தனர். கண் வைத்தியசாலையில் இருந்துகொண்டு வீதியைக் கடந்து தேசிய வைத்தியசாலைக்குக் கூடச் செல்ல முடியாமல் சிலர் முடங்கிக்கிடந்தனர். இவ்வாறான அனைத்து முறைகேடுகளையும் நிறுத்திவிட்டு, தற்போது வருடாந்த இடமாற்றச் செயல்முறையை முன்னெடுத்து வருகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களையும், மனைவிகளையும் தமக்கு விருப்பமான இடங்களிலேயே பல வருடங்களாகத் தங்கவைத்திருந்தவர்களே ஆகும்."

அமைச்சரின் இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்ததாவது:

"சுகாதார அமைச்சர் பல பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். ஏப்ரல் 1ஆம் திகதி என்பதால் அவர் பொய் சொல்கிறாரா என்று தெரியவில்லை. 2019ஆம் ஆண்டில் தேங்கிக்கிடந்த பெருமளவிலான இடமாற்றங்களை எமது சங்கமே முன்னின்று 98 சதவீத வெற்றிகரத்துடன் பூர்த்தி செய்தது. 2026ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், 6,000 பேரில் ஐந்தில் ஒரு பங்கினரைக் கூட இன்னும் இடமாற்ற முடியவில்லை. இதிலிருந்தே சுகாதார அமைச்சு எவ்வளவு தூரம் தோல்வியடைந்துள்ளது என்பது புரிகிறது. வைத்தியர்கள் யாருடைய கட்டளைக்கும் பணிய மாட்டார்கள். நாம் யாருக்கும் கடமைப்பட்டவர்களும் அல்ல, யாருக்கும் அஞ்சியவர்களும் அல்ல. 23,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அடிமைகளாக வேலை செய்யத் தயாரில்லை. அமைச்சர் எம்முடன் மோத விரும்பினால், அதற்குப் பதில் வழங்க நாம் தயாராகவே இருக்கிறோம்."


SHAHNI RAMEES

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் தான்! - விவாதத்திற்கு நான் ரெடி

 

2019.04.29 ஆம் திகதி சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற
Zameera

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி


 ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருளை இறக்குவதற்கு இலங்கையிலுள்ள இரண்டு இடங்களும் தற்போது பணிச்சுமை அதிகமாக இருப்பதன் காரணமாகவே, கப்பல்களைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் கலாநிதி மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் விளக்கிய கலாநிதி மயூர நெத்திகுமார:

"ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். தற்போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான எரிபொருள் கப்பல்கள் பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் எரிபொருளை இறக்குவதற்கு பிரதானமாக இரண்டு இடங்களே உள்ளன. எனவே, ரஷ்ய நிறுவனத்திடமிருந்து பெறப்படும் எரிபொருள் கப்பல் அத்தகைய இடத்திற்கு வரக்கூடிய திகதிகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் குறித்தே தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறாயினும், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."

நாட்டின் தற்போதைய எரிபொருள் இருப்பு குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

"நாளை மற்றுமொரு டீசல் கப்பல் இலங்கையை வந்தடையவுள்ளது. அதில் சுமார் 32,000 மெட்ரிக் தொன் டீசலும், 5,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளும் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல், ஏப்ரல் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் மேலும் இரண்டு டீசல் கப்பல்கள் வரவுள்ளன. அதன்படி, ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நாங்கள் எதிர்பார்த்த அனைத்துக் கப்பல்களும் இலங்கையை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதமும் எதிர்பார்த்த அனைத்துக் கப்பல்களும் நாட்டை வந்தடைந்தன. எனவே, பண்டிகைக் காலம் முடிந்து ஐந்தாம் மாதம் முடியும் வரை இலங்கையில் எரிபொருள் கையிருப்பில் இருக்கும். எனினும், எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்."


SHAHNI RAMEES

A/L பெறுபேறுகள் : வணிகப் பிரிவில் காத்தான்குடி மாணவன் முதலிடம்!

 


2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப்
SHAHNI RAMEES

அமெரிக்காவின் முன்னணி Tech நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

 

ஈரான் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை குறித்த தகவல்கள் இதோ:

​முக்கியச் செய்திகள்:

​அச்சுறுத்தல்: ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC), கூகுள் (Google), மெட்டா (Meta), ஆப்பிள் (Apple), மைக்ரோசாப்ட் (Microsoft), டெஸ்லா (Tesla) மற்றும் போயிங் (Boeing) உட்பட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைக்கப்போவதாக எச்சரித்துள்ளது.

​காரணம்: ஈரானியத் தலைவர்கள் மீதான "இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளுக்கு" (Targeted Assassinations) இந்த நிறுவனங்கள் உடந்தையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக, இந்த நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்கள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிடப் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளது.

​காலக்கெடு: ஏப்ரல் 1, 2026 அன்று ஈரான் நேரப்படி இரவு 8:00 மணி முதல் இந்த நிறுவனங்களின் பிரிவுகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

​எச்சரிக்கை: இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள உடனடியாக அந்தப் பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

​தாக்கங்கள்: ஏற்கனவே ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த அறிவிப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைபர் தாக்குதல்கள் அல்லது உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது.

​சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவுவதாகக் கருதும் ஈரான், அவற்றுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

Zameera

24 மணி நேர அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு


 அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. 

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் பின்னரே தீர்மானிக்கப்படும் என அந்தச் சங்கத்தின் துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

"சுகாதார அமைச்சர் தனது அரசியல் பிம்பத்தை மெருகேற்றிக் கொள்வதற்காக, பயிற்சிக்காக நியமிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை முழுமையாகத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றார். கஷ்டப் பிரதேசங்களுக்கான இடமாற்றப் பட்டியல் முழுமையாக விகாரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் நாட்டில் சுமார் 150 கஷ்டப் பிரதேச வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் எவ்விதத் தயார்நிலையும் இல்லை. அதேவேளை, சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு முன்னால் தோன்றி தவறான தகவல்களையும் தரவுகளையும் புள்ளிவிபரங்களையும் மிகவும் பெருமையுடன் முன்வைப்பதைப் பார்க்க முடிகிறது. இது அவர் ஒரு சுகாதார அமைச்சராக இருந்தும் அவருக்குள்ள அறியாமையையே வெளிப்படுத்துகின்றது."

Zameera

VAT வரிப்பட்டியலை நடைமுறைப்படுத்தல் ஒத்திவைப்பு


 தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


குறிப்பிட்ட இந்த வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்தும் திகதி 2026 ஜூலை 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான திருத்தம் விரைவில் வெளியிடப்படும் என ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இந்தச் சீர்திருத்தம் ஆரம்பத்தில் 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது. எவ்வாறாயினும், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பெறுமதி சேர் வரிக்காகப் பதிவு செய்துள்ள வணிகங்களின் கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு, அதன் அமலாக்கத் திகதி முதலில் 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.


நீண்டகாலமாக நிலவும் முரண்பாடுகளை நீக்குதல், வரி இணக்கப்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் நாட்டின் பரந்த டிஜிட்டல் வரிவிதிப்பு சாலை வரைபடத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை புதிய முறை நோக்கமாகக் கொண்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

க்ரைமியாவில் ரஷ்ய இராணுவ விமானம் விபத்து – 29 பேர் பலி


 க்ரைமியா தீபகற்ப வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவின் 'அன்டோனோவ்-26' (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.



நேற்றைய தினம் (31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா தீபகற்பத்தின் மேல் திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த குறித்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது.



விபத்துக்குள்ளான விமானத்தில் 6 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் என மொத்தம் 29 பேர் பயணித்திருந்ததுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விமானத்தின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்ததில், வெளிப்புறத் தாக்குதல்கள் எதற்கும் இலக்கானதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைய நாட்களாக வான்வழி அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விபத்து சர்வதேச ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Zameera

அப்பிள், மைக்ரோசொப்ட் நிறுவனங்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய எல்லைக்குள் அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.

ஈரானிய செய்தி நிறுவனமான 'தஸ்னிம்' வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த தாக்குதல் பட்டியலில் பின்வரும் முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன

அப்பிள் (Apple)

மைக்ரோசொப்ட் (Microsoft)

கூகுள் (Google)

டெஸ்லா (Tesla)

இன்டெல் (Intel)

ஐ.பி.எம் (IBM)

போயிங் (Boeing)

ஈரானிய மண்ணில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கும் கைமாறாக, அந்தந்த நிறுவனங்களின் கிளைகள் மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் முதலாம் திகதி முதல் இந்த இலக்குகள் மீதான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் அமைந்துள்ள இந்த நிறுவனங்களின் தரவு மையங்கள் மற்றும் அலுவலகங்கள் ஈரானின் ஏவுகணை அல்லது சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம் என சர்வதேச அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே அமேசான் நிறுவனத்தின் சில தரவு மையங்கள் கடந்த வாரம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tuesday, March 31, 2026

SHAHNI RAMEES

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது...


 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்