
Sunday, February 15, 2026

நாளை நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலக சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம்
14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்திலேயே அந்தச் சங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதில் சுமார் 3,500 சட்டத்தரணிகள் கலந்துகொண்டதுடன், ஒரு பகுதியினர் Zoom தொழில்நுட்பம் ஊடாக இக்கூட்டத்தில் இணைந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பல விசேட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அதன்படி, தற்போது நாட்டில் நிலவும் படுகொலை கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான யோசனைகளை முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரக் குற்றத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்புகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை சமூகமயப்படுத்துவது அல்லது அவற்றை உண்மை எனச் சித்தரிப்பது தொடர்பில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது சங்கம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு பல தரப்பினர் எதிர்ப்பு

மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும்
மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தற்போது பயணிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டு ள்ளோம்.
வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட வருகின்ற நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-

அனுமதி இன்றி முதியோர் இல்லங்கள் நடத்த முடியாது
இதற்கமைய, தேசிய முதியோர் செயலகத்தின் முதியோருக்கான தேசிய சபையின் பரிந்துரை இன்றி எந்தவொரு முதியோர் இல்லத்தையும் கொண்டு நடத்த முடியாதவாறு சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அதன் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் தெரிவித்தார்.
ஐந்துக்கும் மேற்பட்ட முதியோர்களைத் தரிக்கவைத்து பராமரிப்பு வழங்கும் நிறுவனங்கள் முதியோர் செயலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற போதிலும், அவ்வாறு இதுவரை 136 முதியோர் இல்லங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் குறிப்பிட்டார்.
முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தற்போது தெளிவான ஏற்பாடுகள் இல்லாததால், அந்தச் சட்டத்தைத் திருத்துவதற்கும், அதனூடாக முதியோர் இல்லப் பதிவு மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான புதிய விதிகள் மற்றும் கட்டளைகளை இந்த ஆண்டில் வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
தற்போது முதியோர் இல்லத்தைப் பதிவு செய்வதற்கான அடிப்படை வழிகாட்டிக் கோவை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், முதியோர் இல்லங்களை அமைக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய 09 முக்கிய அளவுகோல்களை முன்வைத்தார். அவை வருமாறு:
நிலப்பரப்பு: கிராமப்புறங்களில் முதியோர் இல்லங்களை அமைக்கும் போது குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு இருக்க வேண்டும். அரை நகர்ப்புற அல்லது நகர்ப்புறங்களில் அமைப்பதாக இருந்தால் 40 பேர்சஸிற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
வெளிப்புற நடவடிக்கைகள்: தங்கியிருக்கும் முதியோர்களின் வெளிப்புற செயற்பாடுகளுக்காக மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதத்தை ஒதுக்க வேண்டும்.
அனுமதி: முதியோர் இல்லத்தை அமைப்பதற்கு பிரதேச சபை/ மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும்.
ஆராய்ச்சி நிறுவனப் பரிந்துரை: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பரிந்துரையைப் பெற வேண்டும்.
வாடகை ஒப்பந்தம்: குத்தகை அடிப்படையில் நடத்தப்படுவதாயின், அந்த குத்தகை ஒப்பந்தம் குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் நீண்டகால ஒப்பந்தமாக இருக்க வேண்டும்.
தரக்கட்டுப்பாடு: முதியோர் இல்லத்தின் அனைத்து கட்டுமானங்களும் "முதியோர் பராமரிப்பு இல்ல" தரநிலைகளுக்கு இணங்க அமைதல் வேண்டும்.
பசுமைக் கட்டடக் கோட்பாடு: பசுமைக் கட்டடக் கோட்பாட்டிற்கு (Green Building Concept) அமைய நிலப்பரப்பு மற்றும் கட்டிடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
மாற்று சக்தி: முடிந்தவரை புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்திகளைப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
இடமாற்றம்: தற்போது இயங்கி வரும் முதியோர் இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றினாலோ அல்லது புதிய பகுதிகளை இணைத்தாலோ, அது குறித்து பிரதேச செயலாளர் ஊடாக தேசிய முதியோர் செயலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.
முதியோர் சட்டத்தைத் திருத்தி, இல்லங்களில் இடம்பெறும் அத்துமீறல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சுகாதார அமைச்சு, முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், மாகாண சபைகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் இல்லங்களை நடத்துபவர்களின் கருத்துக்கள் இந்தச் சட்டவாக்கச் செயன்முறையில் உள்வாங்கப்படும் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
முதியோர் செயலகப் பணிப்பாளர் கே. சதுர மிஹிதும் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"சமூக சேவை என்ற போர்வையில் பல்வேறு அறக்கட்டளைகளை உருவாக்கி சிலர் மோசடிகளில் ஈடுபடுகின்றனர்."
"எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி 456 முதியோர் இல்லங்கள் உள்ளன. பதிவாகாத இல்லங்கள் மேலும் 100 வரை இருக்கலாம். இவற்றில் மொத்தமாக சுமார் 15,000 முதியோர்கள் தங்கியுள்ளனர். இவர்களில் தாயாரே அதிகளவில் உள்ளனர். இவை தொடர்பாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இல்லங்கள் தொடர்பில் விதிகள் உள்ளன.
ஆனால், பதிவு செய்யப்படாவிட்டால் விதிக்கப்பட வேண்டிய தண்டனை என்ன என்பது இதுவரை தெளிவாக இல்லை. எனவே, புதிய திருத்தத்தில் அந்தப் பகுதிகளைச் சரியாக உள்வாங்குவோம். சில முதியோர் இல்லங்களில் மக்களிடம் அதிக பணம் அறவிடப்படுகிறது. பாவம் அந்த அப்பாவி மக்கள்; சமூக சேவை என்று கூறிக்கொண்டு பல்வேறு அமைப்புக்களை உருவாக்கிச் சிலர் பெரியளவில் மோசடி செய்கின்றனர்," என அவர் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு மலையகத்திலும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்
2025ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு ஒன்று ஹட்டனில் இன்று (14) நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே, இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்கு கல்வி மறுசீரமைப்பு ஒன்று கட்டாயம் அவசியமானதொன்றாகும்.
அந்த வகையில் தற்போது பிரதமர் ஹரினி அமரசூரியவினால் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு வரவேற்க கூடிய ஒரு விடயமாகும்.
அதில் இருக்கும் தவறு ஒன்றை சுட்டிக்காட்டி, முழுமையான கல்வி மறுசீரமைப்பையும் ஓரங்கட்டுவது ஏற்புடைய விடயம் அல்ல.
அத்துடன் தற்போது நடைமுறைக்கு வந்துள்ள இந்த கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை முழுமையாக மலையகத்தை சென்றடைய வேண்டும்.
மலையக பாடசாலைகளில் நவீன கருவிகளை வழங்கி கற்றல் நிலைக்கேற்ற வகையில் வளங்களை ஏற்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் அறிமுகமான ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் மலையக பகுதிகளை சென்றடையவில்லை.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
-மலையக நிருபர் இராமச்சந்திரன்-
Saturday, February 14, 2026

விஷம் குடித்தால் என்னவாகும்? என பரிசோதனையில் ஈடுபட்ட ஐந்து பேரில் , நால்வர் பரிதாபமாக உயிரிழப்பு
“விஷம் குடித்தால் என்னவாகும்?” என்ற விபரீதப் பரிசோதனையில் ஈடுபட்ட சிறுமிகள் ஐவரில், நால்வர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உயிர் பிழைத்த 14 வயது சிறுமியின் வாக்குமூலத்தின்படி, ஐந்து நண்பர்களும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று கொக்குகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தை உட்கொண்டுள்ளனர்.
“விஷம் குடித்தால் மரணிப்போமா அல்லது பிழைப்போமா என்று பார்ப்போம் என என் தோழி கூறினாள். அனைவரும் தண்ணீருடன் விஷத்தைக் கலந்து குடித்தனர். நான் மிகக் குறைந்த அளவே உட்கொண்டுவிட்டு, உடனடியாகத் துப்பிவிட்டேன். அதனால் உயிர் பிழைத்தேன்” என அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.
கண்ணெதிரே தனது நான்கு நண்பர்களும் நிலைகுலைந்து வீழ்ந்து உயிரிழப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, வீட்டிற்கு ஓடிச் சென்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் உடனடியாக வேப்பிலைச் சாற்றைக் கொடுத்து வாந்தி எடுக்கச் செய்ததால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
Source:- NDTV

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இன்று (14) முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னலினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இலவச விசா வழங்குவதில் சிக்கல்
இன்று (14) அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனா நான்கு மாதங்களுக்கு முன்னர் 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை எடுத்தது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த காலப்பகுதிகளில் இலவச விசா வழங்க நாம் விரும்பினோம்.
இது குறித்து ஊடகங்களுக்குத் தெரிவித்து, வெளிவிவகார அமைச்சுக்கும் அறிவித்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது, ஒரு சட்டத் தடை ஏற்பட்டது.
விசா வழங்கும் நடைமுறையை கடந்த காலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தமை மற்றும் அதற்கான நிதி அரசாங்கத்திற்குச் சேராமை தொடர்பில் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீண்டகாலமாக முடிவின்றித் தொடர்கிறது. தற்போது மீண்டும் ஒரு நகர்வு மனுவைத் தாக்கல் செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.



