Our Feeds



Monday, February 16, 2026

Zameera

சவூதி அரேபியாவின் மன்னர் மற்றும் இளவரசர் தலைமையில் இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழம்.!


 🇸🇦🇱🇰 மனிதநேய உதவிகள்: சவூதி அரேபியாவின் மன்னர் மற்றும் இளவரசர் தலைமையில் இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழம்.!


✍️ எஸ். சினீஸ் கான்


புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்கும் மக்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு செயல்படும் சவூதி அரேபிய அரசாங்கத்தின் மனிதநேய அணுகுமுறை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகளாவிய ரீதீயில் 120 நாடுகளில் வழங்கப்படும் ரமழான் இந்த உதவிகள் இதன் சிறந்த எடுத்துக்காட்டாகும்.


இலங்கையில், “இரு புனிதஸ்தலங்களின் பாதுகாவலரின்” பேரீச்சம்பழ விநியோகத் திட்டம் மற்றும் நோன்பு நோற்கும் மக்களுக்கான இப்தார் உணவுகள் வழங்கும் உயரிய நோக்கத்தின் கீழ், இலங்கைக்காகான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில், இந்த உதவிகள் நியாயமான முறையில் மசூதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.


மேலும், சவூதி அரேபியா மன்னர் சல்மான் மனிதநேய உதவி மற்றும் நிவாரண மையம் மூலம் இலங்கைக்கு 50 டன் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சவூதி அரேபிய  தூதுவர் காலித் பின் ஹமுத் அல்-கஹ்தானி அதிகாரப்பூர்வமாக வழங்கிவைத்தார்.


இந்த முயற்சி, ரமழான் மாதத்தின் ஆன்மீகமும் மனிதநேய உணர்வையும் பிரதிபலிக்கும் ஒன்றாகும். 


இது மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸவூத் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையிலான சவூதி அரேபியாவின் தூய்மையான மனிதநேய பார்வையை வெளிப்படுத்துகிறது.

நாடு மற்றும் மத வித்தியாசங்களை மீறி உலகெங்கிலும் தேவையுள்ளவர்களுக்கு உதவுதல், மனிதநேய சேவையை வழங்குதல் என்பது சவூதி அரசின் முக்கியக் குணமாகும்.


இந்த உதவி  இலங்கையின் முஸ்லிம் சமூகத்துக்கும் பொதுமக்களுக்கும் நிம்மதி மற்றும் நம்பிக்கையைக் கொண்டுவருகிறது. 

மேலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் பரஸ்பர மரியாதையை வலுப்படுத்துகிறது.


இலங்கை மக்கள் சார்பில், மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல்ஸவூத் மற்றும் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆகியோருக்கு இந்த மனிதநேய உதவிக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் இந்த நேர்த்தியான தலைமையின் கீழ் சவூதி அரேபியாவை மனிதநேயத்தின் ஒளியாய் நிலைநாட்டச் செய்வாயாக.!

Zameera

மன்னார் இளைஞர் படுகொலையின் பாரதூரம்; ஜனாதிபதியிடம் ரிஷாட் எம்.பி அவசர உரையாடல்




 மன்னார் இளைஞர் படுகொலையின் பாரதூரம்;

ஜனாதிபதியிடம் ரிஷாட் எம்பி அவசர உரையாடல்


மன்னார் இளைஞர் கொழும்பு ஜிந்துப்பட்டியில் சுட்டுக் கொல்லப்பட்டதன் பாரதூரத்தை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவசரமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இன்று (16) தொலைபேசியில் ஜனாதிபதியை தொடர்பு கொண்ட அவர்,


அப்பாவி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குறிவைத்து சுடப்படுவது, சிவில் சமூகத்தின் அன்றாட வாழ்வை அச்சுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இது குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்ததாவது:


சட்டவிரோத ஆயுதக் கும்பல் கள் சுதந்திரமாக உலவுவது, அப்பாவி சிவில் சமூகத்தை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.


கொழும்பு ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மன்னார் வெள்ளிமலையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் சஹ்ரீ மரணமடைந்தார்.இத் துயரம் அப்பாவிகளுக்கு விழுந்த பாரிய இடி. தமது ஜீவனோபாயத்திற்காக கொழும்பில் பணிபுரிந்துவந்த இவ்விளைஞன், விடுமுறைக்காக வீடு திரும்புவதற்கு சலூனுக்கு சென்றிருந்தார். இந்தத் தருணத்திலே இவர் சுடப்பட்டார்.


இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ளவர்களை, அவசரமாக கைது செய்து சட்டத்தின் பிடியில் நிறுத்துங்கள். நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங் கள் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும். பாதுகாப்புத்துறையை இவ்விடயத்தில் தீவிர கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துங்கள்.


பாதளக் கோஷ்டியை ஒழிப்பதற்கும் போதைப் பாவனைகளை அழிப்பதற்கும் தீவிரமாக செயல்படும் அரசாங்கம், அப்பாவிகளின் உயிர்களை பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.


இச்சம்பவம் தொடர்பில் தேவையான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென இதன் போது ஜனாதிபதி உறுதியளித்தார்.

Zameera

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்


 ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.

Zameera

AI Impact Summit 2026: ஜனாதிபதி இந்தியா பயணம்


 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை (17) மாலை இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார்.

செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 19ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.

ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.


SHAHNI RAMEES

புதிய வக்பு சபை நியமனங்கள் அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளதாக பகிரங்க குற்றச்சாட்டு !!

 


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள

SHAHNI RAMEES

சவுதி அரேபியாவிடமிருந்து இலங்கைக்கு 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் நன்கொடை

ஊடக அறிக்கை - பெப்ரவரி 16, 2026

​புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவுதி அரேபிய

SHAHNI RAMEES

அக்குரேகொட இரட்டைக் கொலை: இரு சகோதரர்கள் கைது

 

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி
SHAHNI RAMEES

அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடியாக பதவி விலக வேண்டும்! - UNP போர்க்கொடி!

 


அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும்

SHAHNI RAMEES

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்!

 

40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும்
Zameera

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை - சரத் பொன்சேகா


 ஓரிரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் நிலைமையைப் புரிந்துகொண்டு அதை நிர்வகிக்கும் திறன் கொண்டது எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக, பல்வேறு குழுக்கள் அமைதியின்மையை உருவாக்குவதற்கும், இனவாத பதற்றங்களைத் தூண்டுவதற்கும், பல்வேறு வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இருப்பினும், ஆயுதப்படைகள் தங்கள் கடமைகளை உரிய முறையில் முன்னெடுப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் முற்று முழுதாக ஒழிக்கப்படவில்லை.

இந்த நிலையில், நாட்டில் முன்னெடுக்கப்படும் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

SHAHNI RAMEES

நாமலின் கிரிஷ் வழக்கு ஒத்திவைப்பு!

 


கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற

SHAHNI RAMEES

IMF பணிப்பாளர் இன்று நாட்டுக்கு விஜயம்!

 

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்
Zameera

பரீட்சார்த்திகளுக்கான விசேட ஆலோசனைகள்


 நாளை (17) ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் மனதை இலகுவாக வைத்துக்கொள்ள வேண்டும் என ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச தெரிவித்தார். 


இன்றைய இரவில் நித்திரையைத் தவிர்த்துப் படிப்பதில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல என்றும், மத வழிபாடுகளில் ஈடுபட்டு மனதை அமைதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேலும் கூறினார். 


அதேபோல் இந்த குறுகிய காலப்பகுதிக்குள், இதுவரை கற்காத புதிய பாடவிடயங்களைக் கற்பதற்காக நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்க்குமாறும் மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச வலியுறுத்தியுள்ளார். 


ஏற்கனவே படித்துள்ள பாடங்களை மீண்டும் ஒருமுறை மீட்டுவது மாத்திரம் போதுமானது என பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். 


வினாத்தாள் வழங்கப்பட்ட பின்னர், முதல் 5 நிமிடங்கள் மிக முக்கியமானவை என்றும், அந்தக் காலப்பகுதியில் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்பதால் முதல் வினாவுக்கு உடனடியாக விடையளிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


அதற்குப் பதிலாக அந்த நேரத்தை, வினாத்தாளை நன்றாக வாசித்து, மிகவும் இலகுவாக விடையளிக்கக்கூடிய வினாவொன்றைத் தெரிவு செய்வதற்குச் செலவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


அவ்வாறு இலகுவான வினாவொன்றைத் தெரிவு செய்து விடையளிக்க ஆரம்பிப்பது, பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கான மிகச் சிறந்த அணுகுமுறையாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 


இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம் எதிர்மறையான அழுத்தத்தைக் குறைத்து, நேர்மறையான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்தார். 


ராகம மருத்துவ பீடத்தின் பேராசிரியர் விசேட மனநல மருத்துவர் மியுரு சந்திரதாச மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: 


"க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னர் முதலாவது முக்கியமான விடயம், நீங்கள் படித்துள்ள பாடங்களுக்கு மேலதிகமாக புதிதாக எதையும் படிக்க முயற்சிக்காதீர்கள். ஏற்கனவே படித்தவற்றை மீட்டுவது சிறந்தது. பரீட்சையின் போது உங்கள் மனதை நிதானமாக வைத்துக்கொள்வதற்காக வீட்டில் நிம்மதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். பரீட்சைக்கு முந்தைய நாள் நித்திரையைத் தவிர்த்துப் படிப்பது பொருத்தமான ஒன்றல்ல. நாளை தினத்திற்குத் தேவையான பேனா, பென்சில்களை இன்றே தயார் செய்து கொள்ளுங்கள். பரீட்சைக்கு முகங்கொடுக்கும் போது முதல் 5 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. அந்த நேரத்தில் உங்கள் மனதில் அழுத்தம் அதிகமாக இருக்கலாம், எனவே முதல் 5 நிமிடங்களில் முதல் வினாவுக்கு விடையளிக்க முயற்சிக்க வேண்டாம். வினாத்தாளை வாசித்துவிட்டு, உங்களால் எழுதக்கூடிய மிக இலகுவான வினாவொன்றைத் தெரிவு செய்தே பரீட்சையை எழுத ஆரம்பிக்க வேண்டும்." என்றார். 


2025 ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை (17) ஆரம்பமாகவுள்ளது. இம்முறை 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.