Our Feeds



Monday, June 1, 2026

Zameera

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 5% உயர்வு


 இன்று முதல் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை 5% இனால் அதிகரிப்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 


இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, இன்று முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். 


கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தங்கள் காரணமாக டீசல் விலை சுமார் 25 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், அதனுடன் இணைந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மசகு எண்ணெய், டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைக்கு அவசியமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாகவே இந்தக் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளத் தீர்மானித்ததாக அவர் கூறினார். 


இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையின் தொடர்ச்சியான செயல்பாடுகளைப் பேணுவதற்கு கொள்கலன் போக்குவரத்து வாகனங்களை முறையாகப் பராமரிப்பது அத்தியாவசியமானது என்றும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அந்தச் செலவுகளும் அதிகரித்துள்ளதாக சனத் மஞ்சுள மேலும் தெரிவித்தார். 


இதற்கமைய, கொள்கலன் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. 


மேலும் கருத்துத் தெரிவித்த கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள, 


"கடந்த நாட்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை திருத்தங்களுடன் ஒட்டுமொத்தமாக டீசல் விலை சுமார் 25 ரூபாவினால் அதிகரித்தது. அதோடு சேர்த்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் உயர்ந்தன. அது எங்களது போக்குவரத்துத் துறையைப் பாதித்தது. ஏனெனில், தற்போது எங்களது வாகனங்களின் அனைத்து உதிரிப்பாகங்கள், குறிப்பாக மசகு எண்ணெய் விலை, டயர்களின் விலை மற்றும் உதிரிப்பாகங்களின் விலைகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன. இவை அனைத்திற்கும் மேலாக, குறிப்பாக இந்த எரிபொருள் விலை உயர்வு எங்களது போக்குவரத்துத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது. 


இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த லொறி வாகனங்களின் பராமரிப்புச் சேவைகளை நிச்சயமாகப் பேண வேண்டும். ஏனெனில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையுடன் பராமரிப்புச் சேவைக்கான செலவுகளும் கூட அதிகரித்துள்ளன. இந்த அனைத்துக் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டே நாங்கள் இந்த விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

Zameera

ரயில் தடம்புரண்டு : புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டன

ரயில் தடம்புரண்டதன் காரணமாக, புத்தளம் மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 


கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 9.30 மணிக்கு சிலாபம் நோக்கி பயணித்த ரயில், நண்பகல் 12.30 மணியளவில் சிலாபம் ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. 


இந்தச் சம்பவத்தின் காரணமாக, புத்தளம் மார்க்கத்தில் இயங்கும் அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக மாதம்பே ரயில் நிலையம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

 

Zameera

ஷிரான் பாசிக் கைது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை


 பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். 


எனினும், இது குறித்து உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். 


"உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இது குறித்து சில தகவல்கள் இருந்தன. இது தொடர்பாக பொலிஸாரும், குறிப்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் அவதானத்துடன் இருக்கின்றனர். வரும் காலத்தில் இந்த போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிவப்பு மற்றும் நீல நிற நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும். ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டமை குறித்து டுபாய் அரசிடமிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பரிமாறப்பட்டன. எவ்வாறாயினும், சர்வதேச பொலிஸார் ஊடாக இது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அவர் எத்தகைய நபராக இருந்தாலும், அவரை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்." என்றார். 


பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. 


ஈரானின் போதைப்பொருள் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளதன் காரணமாக, இவர் அமெரிக்காவினால் கூட தேடப்பட்டு வரும் ஒரு நபராவார் எனக் குறிப்பிடப்படுகிறது. 


அத்துடன், இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாக இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 


இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் பிரதான 5 கடத்தல்காரர்களில் ஷிரான் பாசிக்கும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Zameera

மலேசியாவில் சிறுவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் தடை


 மலேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக கணக்குகளை தொடங்குவதற்கு அந்நாட்டு அரசு அதிரடி தடை விதித்துள்ளது. இத்தகவலை மலேசிய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதாக ‘ராய்ட்டர்ஸ்’ (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளின்படி, மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram), டிக்டாக் (TikTok) மற்றும் கூகுளின் யூடியூப் (YouTube) உள்ளிட்ட முன்னணி சமூக ஊடகத் தளங்கள், புதிய பயனர் ஒருவரின் வயதை அரசின் அடையாள ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு 10 மில்லியன் ரிங்கிட் (மலேசிய நாணயம்) வரை அபராதம் விதிக்கப்படும்; இது தோராயமாக 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்குச் சமமாகும்.


எனினும், தற்பொழுது பயன்பாட்டில் உள்ள சிறுவர்களின் கணக்குகள் உடனடியாக நீக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, ஏற்கனவே தங்கள் சேவைகளைப் பயன்படுத்தி வரும் சிறுவர்களின் வயதைச் சரிபார்ப்பதற்கு (Age verification), சமூக ஊடக நிறுவனங்களுக்கு மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.


"இந்தக் கொள்கையானது, இளைஞர்களை இணையத்திலிருந்து துண்டிப்பதற்காகவோ அல்லது அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவோ கொண்டு வரப்படவில்லை; மாறாக, இணைய வெளியில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமூக ஊடகத் தளங்கள், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்படுவதை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்," என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.


இளைஞர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளினால், மைனர்கள் (Minor) சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குக் சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடுகளின் பட்டியலில் தற்பொழுது மலேசியாவும் இணைந்துள்ளது.


மேலும், இணைய உள்ளடக்கங்கள் மீதான மலேசிய அதிகாரிகளின் பரந்த அளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கையையும் இது பிரதிபலிக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் இணையத்தில் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள்; குறிப்பாக இன, மத ரீதியிலான பதற்றத்தைத் தூண்டும் பதிவுகள் மற்றும் நாட்டின் மன்னராட்சியைக் விமர்சிக்கும் உள்ளடக்கங்களைக் குறிவைத்து தீவிரமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

SHAHNI RAMEES

​இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் "மௌலவி" இல்லை

 


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Zameera

தரமற்ற நிலக்கரி இறக்குமதியே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் – நாமல் ராஜபக்ஷ


 தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதால் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்யவும், அதற்குப் பதிலாக மின் உற்பத்திக்காக அதிகளவில் எரிபொருளைப் பயன்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதாலுமே அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நேற்று மாலை நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கங்கள் எரிபொருள் விலையை உயர்த்தும்போது அமைச்சர்களுக்கு தரகுப் பணம் சென்றதாகக் கூறப்பட்ட போதிலும், இன்று எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதற்கான முக்கிய காரணம் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையாகும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இதனால் ஏற்பட்டுள்ள பெரும் நட்டத்திற்கு மத்தியில், மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக நாளொன்றுக்கு பல இலட்சம் லீற்றர் எரிபொருளை மேலதிகமாக எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், உலகிலேயே அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்து, அந்த நட்டத்தை இந்த நாட்டு மக்களே இன்று செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தற்போதைய அரசாங்கம் மக்கள் குறித்து எவ்விதத்திலும் சிந்திப்பதில்லை என்றும், தனது நிர்வாகத் திறமையின்மை, ஊழல் மற்றும் நட்டங்கள் அனைத்தையும் மக்கள் மீதே சுமத்துவதாகவும் தெரிவித்த அவர், விலைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எதற்கு என்று அன்று மேடைகளில் கேட்டவர்களே, இன்று ஆட்சிக்கு வந்து மக்களின் தலை மேல் அனைத்து சுமைகளையும் சுமத்துகிறார்கள் என்றும் விசனம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயற்பாடுகள் மற்றும் நீதிமன்ற விவகாரங்கள் குறித்துப் பேசிய நாமல் ராஜபக்ஷ, மேடைகளில் நின்றுகொண்டு தீர்ப்பு வழங்கும் நிலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளதாகக் கூறினார். நீதிமன்றத் தவணை நாளன்று நீதிமன்றத்திற்கு வர முடியும் எனக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்றத்தில் தான் பேசும்போது தனக்கு அருகில் வந்து நிற்கும் 'திசைகாட்டி' (தேசிய மக்கள் சக்தி) கட்சியின் 159 உறுப்பினர்களும் அந்த வழக்கின்போது நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்திருக்குமாறு அழைப்பு விடுத்தார். 

அப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசாமல், அவர்களால் உண்மைக் கதையைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும், இல்லையெனில் மேடைகளிலேயே தீர்ப்பு வழங்கும் உங்களுடைய ஜனாதிபதியிடமே இதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

மேலும், உடனடியாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி, பிரதேச தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மாகாண சபைகளின் அதிகாரங்களும் நிதியும் ஜனாதிபதியின் ஒன்பது அரசியல் பிரதிநிதிகளான ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். 

இந்த அதிகாரங்களை அரசியல் பிரதிநிதிகளிடம் வழங்காமல் மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்கியிருக்க வேண்டும் என்றும், ஏனெனில் அவர்களே மக்களுக்குப் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டவர்கள் என்றும் கூறினார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ஆளுநர் ஒருவர் இராஜிநாமா செய்ததை நினைவுபடுத்திய அவர், தேர்தல் நெருங்க நெருங்க ஏனையோரும் இராஜிநாமா செய்துவிட்டு தத்தமது நாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள் என்றும், இறுதியில் மக்களுக்குப் பொறுப்புக்கூற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் எச்சரித்தார்.

அரசாங்கம் மூன்றரை ஆண்டுகள் நீடிக்குமா இல்லையா என்பதை சட்டப்பூர்வமாக தேர்தல் ஆணைக்குழுவும் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் பதவியில் இருக்கும் வரை அவர்களிடம் வேலை வாங்குவதே தமது நோக்கம் என்றார். அரசாங்கத்தின் தவறுகளையும், திறமையின்மையையும் தாம் தொடர்ந்து சுட்டிக்காட்டுவதுடன், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் வரை, தாம் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, அண்மையில் இலங்கைக்கு வந்த புதிய நிலக்கரி கப்பலும் தரமற்றது என நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்திற்கு வேலை தெரியாது என்றும், ஊழலும் மோசடியும்தான் நிறைந்துள்ளது என்றும் சாடினார். 

அடுத்த நிலக்கரி கப்பலும் தரம் குறைந்ததாக மாறும் பட்சத்தில், இந்தத் தோல்விகளை மறைப்பதற்காகத் தன்னை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

(ஞான பிரசாந்தன்)

Zameera

மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுடன் 237 பேர் அடையாளம்


 நாட்டின் பல பகுதிகளில் மெனிஞ்சைடிஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 237 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. 


நோய் பரவுவதைத் தடுப்பதற்காக, சுத்தமான குடிநீரைப் பயன்படுத்துமாறும், இயலுமானவரை எப்போதும் கொதித்தாறிய நீரைக் அருந்துமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 


இது குறித்து கருத்து தெரிவித்த சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா, தற்போது பதிவாகும் நோயாளர்களில் பெரும்பாலானோர் வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் மெனிஞ்சைடிஸ் நோயாளர்களே எனக் குறிப்பிட்டார். 


இந்த நோய்த்தொற்று முதன்முதலில் ஏப்ரல் 15ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் கண்டறியப்பட்டது. 


பின்னர் ரிகில்லகஸ்கட, கண்டி, பதுளை, வெலிமடை மற்றும் தியத்தலாவ ஆகிய பகுதிகளிலும் நோயாளர்கள் பதிவானதாக அவர் கூறினார். 


பதிவாகியுள்ள நோயாளர்களில் பெரும்பான்மையானோர் பாடசாலை மாணவர்கள் என்றும், நேற்று (31) மாலை நிலவரப்படி 59 நோயாளர்கள் மாத்திரமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனைய அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியன இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். 


பொதுவாக மெனிஞ்சைடிஸ் வைரஸ் நோயில் இருந்து சில நாட்களுக்குள் குணமடைந்துவிடலாம் என்றும் அவர் கூறினார். 


இந்த நிலைமை குறித்த விசாரணைகள் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அசுத்தமான குடிநீர் ஆதாரங்கள் நோய் பரவுவதற்கு காரணமாக அமையலாம் என்பதால் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுகளினால் விசேட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


பிள்ளைகளின் உணவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், எப்போதும் சுத்தமான மற்றும் கொதிக்க வைத்து ஆறவைத்த நீரையே பயன்படுத்துமாறும் சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


 

Zameera

கடுமையாக அமுலாகும் எரிபொருள் QR - புதிய அறிவிப்பு


 தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில் அமுல்படுத்த எதிர்பார்ப்பதாகத் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். 


இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 


இந்த நெருக்கடி நிலையான சூழலில், எரிபொருள் நுகர்வை ஏதேனும் ஒரு வழியில் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும், இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகளை ஓரளவிற்குக் குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 


இந்த நெருக்கடி நிலைமை தொடர்வதன் காரணமாக, எரிபொருள் நுகர்வை பெருமளவில் குறைக்க வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுள்ளது. 


ஏற்கனவே QR முறைமை மற்றும் கோட்டா முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் எரிபொருள் நுகர்வில் குறிப்பிடத்தக்களவு குறைப்பை ஏற்படுத்த முடிந்த போதிலும், அது இன்னும் நாட்டின் தேவைக்கான மட்டத்திற்கு வரவில்லை." 


தற்போது உலக சந்தையில் எரிபொருளின் விலை பெருமளவில் அதிகரித்துள்ளதால், பெருமளவிலான வெளிநாட்டு நாணயம் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 


இதனை ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால், கடந்த ஜனவரி மாதத்தில் 186 மில்லியனாகவும், பெப்ரவரி மாதத்தில் 97 மில்லியனாகவும் இருந்த எரிபொருள் செலவினம், மே மாதமாகும்போது வெளிநாட்டு நாணயமாக 524 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது. 


இந்த நிலைமையைத் தொடர்ந்து தாங்கிக்கொள்வது கடினம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒரு நாடாக நாம் சிந்தித்து எரிபொருள் நுகர்வில் நிச்சயமாக ஏதேனும் ஒரு குறைப்பை ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். 


நாட்டை விட்டு வெளியேறும் டொலர்களின் அளவைக் குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அது ஒருபுறம் எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு வழிவகுப்பதுடன், ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். 


எனவே, எதிர்காலத்தில் இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனமும் (CPC), டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து தற்போது நடைமுறையிலுள்ள QR முறைமையை மேலும் கடுமையான முறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார். 


இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கத்தை ஓரளவிற்குச் சமன் செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

SHAHNI RAMEES

நாங்க ரெடி! - எபோலா, மெனிஞ்சைடிஸ் நோய்கள் தொடர்பில் நாடு தயார்நிலையில்...

 


உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸ் மற்றும்
SHAHNI RAMEES

14 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்! - மௌலவி ஒருவர் கைது

 


இறக்காமம் (Eragama) பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய

SHAHNI RAMEES

மெட்ரோ பஸ்களை LIVE Tracking செய்ய புதிய 'LMT GO' செயலி அறிமுகம்!


மெட்ரோ பஸ்கள் தற்போது பயணிக்கும்

SHAHNI RAMEES

சாரதி மது போதையில் - தன்சல் வரிசையில் நின்றவர்கள் மீது கெப் மோதி விபத்து - 6 பேர் பலி


 மீகொடை பகுதியில் தன்சல் ஒன்றுக்காக வரிசையில்

Zameera

அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை


 அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.


அரசு நிறுவனங்களில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் 15ஆம் திகதி ஒரு சிறப்புச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.


இந்தச் சுற்றறிக்கை அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், கழகங்களின் தலைவர்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்களுக்கு வழங்கப்பட்டது.


தொடர்புடைய சுற்றறிக்கையின்படி, அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை வாங்குவதும் பயன்படுத்துவதும் மே 31ஆம் திகதி முதல் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும்.


மேலும், அனைத்து நிறுவனத் தலைவர்களும் தங்கள் நிறுவனத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்தப் புதிய சுற்றறிக்கைக்குக் கூடுதலாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் விதிகளும் நடைமுறையில் உள்ளன என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அதன்படி, அனைத்து பொது நிறுவனங்களும் "மூன்று R" என்ற கருத்தை, அதாவது குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.


மேலும், இந்தச் சுற்றறிக்கை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது என்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.