Our Feeds



Friday, April 17, 2026

Zameera

எரிபொருள் விலை விரைவில் குறையும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ


 வளைகுடா நாடுகளுக்கிடையில் நிலவும் போர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மிக விரைவில் எரிபொருள் விலை குறைக்கப்படுமென சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறை பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

‘‘ஏனைய நாடுகளில் எரிபொருளுக்கான வரிசை தோற்றம் பெற்றுள்ள நிலையில், வாரத்துக்கு 23 முறைகள் எரிபொருள் விலையை அதிகரிக்கும் சந்தர்ப்பத்திலும் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய வகையிலேயே முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம்.

தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் மற்றும் மின்சார விநியோகத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றங்களுக்கமைய எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை மேற்கொள்ள நேரிடும்.

அதற்காக விலையேற்றத்துக்கு ஏற்ப மொத்தமாக விலை அதிகரிப்பை மேற்கொள்வதில்லை. அதிலொரு பகுதியை திறைசேரி பொறுப்பேற்பதுடன் இன்னுமொரு பகுதிக்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பேற்றுக்கொண்டே ஓரளவு விலை அதிகரிப்புக்கான சுமையை மக்கள் மீது சுமத்த நேர்ந்துள்ளது.

வளைகுடா நாடுகளுக்கிடையில் நிலவும் போர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதும் மிக விரைவில் எரிபொருள் விலையை குறைப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

மக்கள் தமது வர்த்தகத் துறையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் கடமைகளிலும் புதிய எதிர்பார்ப்புகளுடன் முன்னோக்கிச் செல்வதே சகலரதும் விருப்பமும் குறிக்கோளுமாகும். அந்த எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்கிக் கொள்வதற்கான சூழல் உருவாகியுள்ளது என்பதை சகலரும் அறிவார்கள்.

கடந்த ஒன்றரை வருட காலப் பகுதியில் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்து வருகிறது என்பதை சகலரும் அறிவார்கள். அதேபோன்று உலக மட்டத்தில் இலங்கைக்கு இருக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது. டிட்வா புயலுக்கும் தற்போது நிலவும் போர் நிலைமையிலும் நாடு என்ற அடிப்படையில் ஸ்திரமாக எதிர்கொண்டு வருகிறோம். இந்த நெருக்கடிகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறோம்.

எனவே, மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டு எதிர்பார்ப்புகளை வெற்றிக்கொள்வதற்கான வருடமாக அமையும் என்பது உறுதி. கடந்த ஒன்றரை வருடங்களில் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு இன்னும் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கும் வருடமாக இது அமையும்.

எதிர்க்கட்சியினருக்கு ஜனநாயகத்தை கற்பிக்க வேண்டும். ஒன்றரை வருடத்துக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் ஐந்து வருடங்களுக்கு ஆட்சி பலத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். இந்த ஐந்து வருடங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கத்தினதும் பொறுப்பாகும். அதனை நாங்கள் செய்து கொண்டே இருக்கிறோம்.

ஆனால், எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு மாதமும் போலி எதிர்பார்ப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதனை தவிர அவர்களுக்கு செய்வதற்கு வேறு ஏதும் இல்லை. குறைந்தது கிராமங்களுக்கு ஏதாவது சேவை செய்துகொடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு சாதகமாக அமையும். ஆதரவாளர்களை தக்கவைத்து கொள்வதற்காக அவர்கள் கூறும் விடயங்கள் பயனளிக்காது’’ என்றார்.

Zameera

கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம்


 வீதிகளில் அதிகளவில் கரும்புகையை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து, அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைப் பொலிஸார் சோதனையிடவுள்ளனர். விதி மீறும் வாகனங்கள் உடனடியாகப் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


உலகளாவிய ரீதியில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்நிலையைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.


வீதிகளில் இவ்வாறான வாகனங்களைக் கண்டால், பொதுமக்கள் அது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்யலாம் என்று கூறியவர், பொதுமக்கள் 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு வாகனத்தின் இலக்கம் அல்லது வீடியோ காட்சிகளை அனுப்பி வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 


பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊடாக மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Zameera

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் இன்று இடைநிறுத்தம்


 ( இணையத்தள செய்திப் பிரிவு )


ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை மற்றும் அனைத்து பொதுச் சேவைகளும் இன்று வெள்ளிக்கிழமை (17) ஒரு நாளைக்கு மட்டும் செயற்படாது என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.


திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில்  ஏற்பட்டுள்ள திடீர் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை வழமைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் முன்னெடுக்கப்படும் ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று இயங்காது என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Zameera

ஈரானிடம் இனிமேல் அணு ஆயுதம் இருக்காது என அந்நாடு ஒப்புக் கொண்டுவிட்டது - ட்ரம்ப் அறிவிப்பு


 ஈரானிடம் இனிமேல் அணு ஆயுதம் இருக்காது என்று அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்தார். 

வாஷிங்டன் ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு “மிக நெருக்கமாக” இருப்பதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதியில் நடைபெறக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“மிக முக்கியமானது என்னவென்றால், ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை, அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஈரான் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது, மேலும் அவர்கள் அதை மிகவும் வலிமையாக ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“பி2 போர் விமானங்கள் (B2 bombers) மூலம் நாம் நடத்திய தாக்குதலால் நிலத்தடியில் ஆழமாக இருக்கும் அணுக்கழிவுகளை (nuclear dust) எங்களிடம் திருப்பித் தர அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.


Zameera

கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட படகில் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

போதைப்பொருள் கடத்தப்பட்ட நிலையில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகில், 400 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 

குறித்த போதைப்பொருள் தொகையைப் பார்வையிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்தார். 

இதற்கமைய, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்தப் படகில் இருந்த போதைப்பொருள் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்து 150 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் சோதனையிடப்பட்டதை அடுத்து, நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த 4 சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டனர். 

இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கடற்படையினரால் இந்தப் நெடுநாள் மீன்பிடி படகு பொறுப்பேற்கப்பட்டதுடன், அதிலிருந்த 6 போதைப்பொருள் பொதிகளுடன் 4 சந்தேகநபர்களும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Zameera

இ.போ.ச பேருந்து கட்டணத்தை இனி அட்டை மூலம் செலுத்த நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையின் (இ.போ.ச) பேருந்து கட்டணங்களை செலுத்துவதற்கு இனிவரும் காலங்களில் அட்டைகளை (Cards) மட்டுமே பயன்படுத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அதன் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் சில மாதங்களுக்குள் இந்த நடைமுறை இ.போ.ச சேவையில் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். 

இன்று (16) மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகளின் போக்குவரத்து வசதிகள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார். 

இ.போ.ச டிஜிட்டல் மயமாக்கப்படுவது உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவையின் மாற்றங்களை எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் மக்கள் காண முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Thursday, April 16, 2026

SHAHNI RAMEES

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம்!

 



லெபனானும் இஸ்ரேலும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு

Zameera

வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும்


நாட்டில் நாளை (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


21 மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதனால் அதிகமாக வெளியில் இருப்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 

Zameera

ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு


 ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதனை சீர்செய்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

SHAHNI RAMEES

97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் கப்பல் நாளை நாட்டுக்கு...

 


மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர்,

Zameera

களனி ஆற்றில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு


கித்துல்கல, நெலிகம பகுதியில் உள்ள களனி ஆற்றில் நீராடச் சென்ற நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) உறவினர்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கித்துல்கல பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில், ஆற்றின் ஆழமான குழியொன்றில் சிக்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Zameera

வாகன இலக்கத் தகடுகள் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!


  வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இலக்கத் தகடுகள் முறையான தரநிலைகளுக்கு அமைய இல்லாவிடின், அத்தகைய வாகனங்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அமையாத இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தும் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர், 15,000 முதல் 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த காலங்களில் புதிய வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், அதனை அடுத்த சில வாரங்களுக்குள் சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறினார். இலக்கத் தகடுகளைச் சரியான முறையில் எவ்வாறு பொருத்துவது என்பது குறித்து மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் வாகன உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட தரத்தின்படி, முன் பக்க இலக்கத் தகடு வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்கள் மற்றும் எண்களையும், பின் பக்க இலக்கத் தகடு மஞ்சள் நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்கள் மற்றும் எண்களையும் கொண்டிருக்க வேண்டும்.

இருப்பினும், தற்போது பல்வேறு நிறங்கள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்தி இலக்கத் தகடுகளை மாற்றி வாகனங்களை ஓட்டுவது அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான மாற்றங்களால் விபத்துக்கள் அல்லது குற்றச் செயல்கள் நடக்கும்போது வாகனங்களை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

Zameera

400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை




 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சுமார் 2,000 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது 12,000க்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.

சுகாதாரத்திற்குப் புறம்பான முறையில் உணவுகளை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான விசேட சுற்றிவளைப்புகள் எதிர்வரும் வசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களை முன்னிட்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.