Our Feeds



Monday, April 27, 2026

SHAHNI RAMEES

வில்பத்து காடழிப்பு தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு: நீதியரசர் நவாஸ் விலகல்!

 


வில்பத்து சரணாலயத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிகளை

SHAHNI RAMEES

போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்!

 


கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில்

Zameera

இலங்கை திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி: கொழும்பில் திரண்ட போராட்டக்காரர்கள்


 இலங்கை திறைசேரியினால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (27) கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நிதி அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக சர்வஜன அதிகாரம் அமைப்பினர் இன்று காலை பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பொதுமக்களின் வரிப்பணம் முறையாகக் கையாளப்படாமை குறித்து இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.


இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளும் இந்த நிதி மோசடிக்கு எதிராக இன்று காலை இலங்கை மத்திய வங்கிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அத்துடன், அரகலயவின் பிரஜைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு எதிர்ப்புப் போராட்டமும் இன்று மத்திய வங்கிக்கு முன்பாக இடம்பெற்றது. அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள பாரிய குறைபாடுகளே இவ்வாறான நிதி இழப்புகளுக்குக் காரணம் என இதன்போது போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.    

Zameera

பெருமளவு போதைப்பொருள் கையிருப்பு பகிரங்கமாக அழிப்பு


 பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு, இன்று (27) பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது. 

பலபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பலபிட்டிய நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண மற்றும் சிலாபம் நீதவான் ஹர்ஷ டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இந்தப் போதைப்பொருள் கையிருப்புக்கள் இன்று முறைப்படி அழிக்கப்பட்டன. 

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டிருந்த இந்த சான்றுப் பொருட்கள், நீதிவான்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பான முறையில் அழித்தொழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஞான பிரசாந்தன்

Zameera

நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 559 பேர் கைது


 (இணையத்தள செய்திப் பிரிவு)

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 559 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், 27,704 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், 09 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய மற்றும் நேரடியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 203 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 153 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 123 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 61 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,988 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.        

SHAHNI RAMEES

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து சிதறிய லொறி! - சாரதி போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தமை உறுதி!

 


லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான

SHAHNI RAMEES

செம்மணி மனித புதைகுழியின் 3ம் கட்ட அகழ்வு ஆரம்பம்!

 

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு
Zameera

சாகரிக்கா ரயில் சேவை வழமைக்கு


 அண்மையில் தடம் புரண்ட ‘சாகரிக்கா’ ரயில் இன்று (27) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


குறித்த ரயில் இன்று (27) முதல் வழமைப் போல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என அதன் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார். 


கடந்த 24 ஆம் திகதி பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிக்கா ரயில் வாதுவை புகையிரத நிலையத்தில் தடம் புரண்டதுடன், அதில் ரயிலின் 13 பெட்டிகளில் 11 பெட்டிகள் தடம் புரண்டிருந்தன. 


மேலும், தடம் புரண்ட சாகரிக்கா ரயிலில் கடமையாற்றிய நான்கு ஊழியர்கள் ரயில் சேவைக் கடமைகளில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். 


இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களை ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இதன்படி, குறித்த ரயிலின் சாரதி, காப்பாளர் , உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை இவ்வாறு ரயில் சேவைக் கடமைகளில் ஈடுபடுத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை, புகையிரத நிர்வாகத்தின் குறைபாடுகளை மூடிமறைப்பதற்காகவே விபத்துக்குள்ளான ‘சாகரிக்கா’ ரயிலின் சாரதி, காப்பாளர், உதவி சாரதி மற்றும் உதவி காப்பாளர் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் சுயாதீன தொழிற்சங்க கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. 


தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ள ரயில்களை இயக்குவதிலிருந்து விலகவும், வேகக் கட்டுப்பாடுகளுக்கு அமைய ரயில்களை இயக்கவும் ரயில் சாரதிகள் சங்கம் தற்போது தீர்மானித்துள்ளதாக அதன் அமைப்பாளர் இந்திக தொடம்கொட சுட்டிக்காட்டுகின்றார்.

SHAHNI RAMEES

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது!

 


பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா

Zameera

கட்டான, ஜயபிம பகுதியில் ஹெரொயினுடன் நபர் ஒருவர் கைது


 கட்டான, ஜயபிம பகுதியில் ஹெரொயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதெ 52 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டான பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Zameera

கன மழைக்கு வாய்ப்பு


 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


அதேநேரம் தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 


மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும். 


மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், குருநாகல் மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் மூடுபனி நிலை காணப்படலாம். 


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

Zameera

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


 ஜப்பானின் வடக்கு பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (27) அதிகாலை பதிவாகியுள்ளது. 


இருப்பினும், இதனால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 


ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதனையும் விடுக்கவில்லை. 


அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, ஜப்பானின் வடக்கு தீவான ஹோக்கைடோவில் உள்ள சரபெட்சு எனும் சிறிய நகரத்திற்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில், 81 கிலோமீட்டர் கடல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 


ஒரு வாரத்திற்கு முன்பு, ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதிகளில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sunday, April 26, 2026

Zameera

இன்று ஆட்சியில் இருப்பது கொள்ளையர்களின் அரசாங்கம் - நாமல் எம்.பி.


 இன்று ஆட்சியில் இருப்பது கொள்ளையர்களின் அரசாங்கம் என்று மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் பட்டப்பகலில் திறைசேரியை கொள்ளையடித்துள்ளது. பிக்பொக்கட் (பணப்பையை) அடிப்பவர் திருடன் என்று கூறிக்கொண்டு சுற்றித் திரிகின்றான். அந்த திருடர்கள் சொல்வதைக் கேட்டு அப்பாவி மக்கள் அவனைத் துரத்திச் செல்கின்றனர். 

அந்த திருடன் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிடுகிறான். அரசாங்கமும் அப்படித்தான். அரசு பதவியேற்ற நாள் முதல், ஒருபுறம் முந்நூற்று இருபத்து மூன்று கொள்கலன்கள் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டுள்ளன. 

துறைமுகத்திலிருந்து போதைப்பொருள் கொள்கலன்கள் கடத்தப்பட்டுள்ளன. மறுபுறம், நிலக்கரி மோசடி செய்யப்படுகின்றது. இப்போது நிதி அமைச்சின் கணக்கிலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளதென்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.