Our Feeds



Saturday, June 27, 2026

Admin

இந்தியாவில் நிலநடுக்கம்!


இந்தியாவின் தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை 7.12 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நில அதிர்வுகளை உணர்ந்தவுடன், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

சில வினாடிகள் நீடித்த இந்த அதிர்வுகள் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ அல்லது பெரிய அளவிலான சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. டெல்லி மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மற்றும் மேலும் சில வட மாநிலங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHAHNI RAMEES

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவராக சட்டத்தரணி அஷ்ஷெய்க் ஜே. எம். அஷ்ரப் நளீமி தெரிவு

 


SHAHNI RAMEES

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,459 ஆக உயர்வு! - 30 பேர் மரணம்.

 


இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின்

SHAHNI RAMEES

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு அழிப்பு!

 


பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால்

SHAHNI RAMEES

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்!: உயிரிழப்புகள் 920 ஆக உயர்வு!

 

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த
SHAHNI RAMEES

இஸ்ரேல் - லெபனான் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்து!

 



இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா

Friday, June 26, 2026

SHAHNI RAMEES

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு!

 


வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்

Zameera

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முறையிட புதிய வட்ஸ்அப் இலக்கம்


 சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக, சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வட்ஸ்அப் சேவை இன்று (26) முதல் நடைமுறைக்கு வருகிறது. 


இதற்கமைய, பொதுமக்கள் தமக்குரிய முறைப்பாடுகளை 0702509509 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நேரடியாகத் தெரிவிக்க முடியும். 


இந்தத் தகவல்கள் பரிமாற்றச் செயன்முறையில், ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அறிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கத் தீர்மானித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. 


இந்தச் செயன்முறை ஊடாக, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மிகவும் துல்லியமான, விஞ்ஞானபூர்வமான மற்றும் விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது. 


களமட்டத்தில் இடம்பெறும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உடனடியாக அறிவிப்பதற்கும், சூழல் நட்பு ரீதியான புதிய யோசனைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக அதிகாரிகளுக்குப் பகிர்ந்து கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைக் குறைப்பின் பலன் எதிர்காலத்தில்


 சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைவதற்கேற்ப, அதன் நன்மைகளை எதிர்காலத்தில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். 


இன்று (26) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 


இதுவரை அரசாங்கம் எரிபொருளுக்காக 57 பில்லியன் ரூபா மானியத்தை வழங்கியுள்ளதாகவும், அந்த மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


அதற்கமைய, மீண்டும் அந்த மானியத்தை வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிக்கப்படவுள்ளதாகவும், பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரித்தமையினால், அதற்கு அமைய நாட்டில் எரிபொருள் விலைகளை அரசாங்கம் சற்று அதிகரிக்க நேரிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். 


அந்த உயர்ந்த எரிபொருள் விலைகள் தற்போது குறைந்து வருவதாகவும், அந்த விலையில் எரிபொருளை கொள்வனவு செய்யும்போது அதன் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


தற்போது நாட்டில் உள்ள மற்றும் அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ள எரிபொருள் கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவை என்பதால், எதிர்காலத்தில் முன்பதிவு செய்யப்படும் எரிபொருளுக்காக அதன் செலவை ஈடுசெய்து, அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


"போர்ச் சூழலுக்கு முன்னிருந்த நிலைமை இன்னும் ஏற்படவில்லை. உதாரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை நாங்கள் இறுதியாக 64-65 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையிலேயே பெற்றுக்கொண்டோம். அது 125 டொலர்கள் வரை அதிகரித்தது. அக்காலகட்டத்தில் விலை இருமடங்காகிய போதும், நாமும் விலையை இருமடங்காக அதிகரித்து இலாபம் உழைக்கும் இடத்திற்கு செல்லவில்லை. அன்று நாம் நிலவிய விலைகளிலேயே எரிபொருளை வழங்கவே முயற்சித்தோம். 


விலை அதிகரிப்பை கூட நாம் மிகுந்த புரிதலுடன் மிகச் சிறிய அளவிலேயே மேற்கொண்டோம். ஆனால், தற்போது அந்த உயர்ந்த விலை 125 டொலர்களிலிருந்து குறைந்து, 70 டொலர்கள் என்ற மட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த விலைகளுக்கமைய செலவுகளை ஈடுசெய்யும் வகையில் எரிபொருள் கிடைக்கும்போதுதான், அதன் நன்மையை எம்மால் மக்களுக்கு வழங்க முடியும். 


இப்போது பெறப்படும் எரிபொருள், குறிப்பாக அடுத்த இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறவுள்ளவை, கடந்த மாதத்தில் முன்பதிவு செய்யப்பட்டவையாகும். தற்போது எம்மால் இந்தச் சுமையை தாங்கிக்கொள்ள முடியாததால், 100 பில்லியன் ரூபா தொகுப்பிற்குள் 57 பில்லியன் ரூபாவை ஒதுக்கி இதற்கான மானியத்தை வழங்கினோம். 


இந்த ஜூன் மாதத்துடன் அந்த மானியம் முடிவடைகிறது. தற்போதைய நிலைமையை ஆய்வு செய்து, விலை மாற்றங்களைச் செய்துவிட்டு, மீண்டும் மானியம் வழங்க முடியுமா இல்லையா என்பது குறித்து கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்து அறிவிப்போம். 


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களுக்கு தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க நாங்கள் தயாரில்லை. அந்த நன்மைகளை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்." என்றார்.

Zameera

சூரிய மின்கட்டமைப்புகளை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை


 மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை பேணுவதற்காக, நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அமைப்புகளை நிறுத்தி வைப்பதன் மூலம் கடந்த வெசாக் தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை மின்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Zameera

சரித் அபேசிங்கவின் கட்சி பதவிகள் நீக்கம்


 இலஞ்ச குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் பதவியும், அவர் வகித்த அனைத்து பதவிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

கட்சி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

ஞானசார தேரரின் வழக்கு ஜூலை 31க்கு ஒத்திவைப்பு


 இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி.ராகல இன்று (26) கடமை நிமித்தம் விடுமுறையில் இருந்ததனால், வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 


அங்கு நீதிபதி, இந்த வழக்கை முன் - விசாரணை மாநாட்டிற்காக ஜூலை 31-ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டார். 


வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். 


இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Zameera

ஹஜ் யாத்திரை தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது


 2026 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பான ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தெரிவித்துள்ளார். 


பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


கடந்த காலத்தை விடவும் இம்முறை முடிந்தளவில் சிரமங்களை தவிர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கூறினார். 


அதேநேரம், ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு நாடுகளில் இருந்தும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் இம்முறை யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். 


பெருந்திரளான மக்கள் செல்வதால், அங்கு அதனை முகாமைத்துவம் செய்வதில் சில சிரமங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 


எனினும் அதனை இயலுமான வரையில் குறைப்பதற்கே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 


இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற ஹஜ் யாத்திரை தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்று தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறினார். 


அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்தி இனிவரும் காலத்தில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். 


இந்த விடயத்தை மேலதிக குழுவொன்றை நியமித்து ஆராய்வது குறித்த தீர்மானத்தை எடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கையினை ஆராய்ந்த பின்னரே எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.