Our Feeds



Tuesday, May 26, 2026

Zameera

யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலய காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை


 யாழ்ப்பாண உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிப்பதற்கு மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


 


உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,



"மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தக் காணிகளை விடுவிக்கும் முகமாக உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வுகளையும் மேற்கொண்டோம்.



இதில் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை விடுவிப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.



அதேவேளை, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை விடுவித்து, முழுமையாக வீதிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



உடனடியாக விடுவிக்க முடியாத நிலையில் காணப்படும் காணிகள் குறித்து மேலும் ஆராயப்பட்டு, எதிர்காலத்தில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அவ்வாறு விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அது குறித்துத் தீர்மானிக்கவுள்ளோம்.



விமான நிலைய விரிவாக்கத்திற்காக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அந்தக் காணிகளை வழங்குவது குறித்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.



அதேபோல், விவசாயக் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் விவரங்களைக் கோரியுள்ளோம். அந்தத் தரவுகள் கிடைத்ததும் அக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.


-யாழ். நிருபர் பிரதீபன்-

Zameera

ஆதிவாசி சமூகத்தினரின் பூர்வீக நிலங்களை மீள ஒப்படைக்க மஹாவலி அதிகாரசபை இணக்கம்


 விவசாய நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த, ஆதிவாசி சமூகத்தினர்   பயன்படுத்தி வந்த காணிகளை மீண்டும் அவர்களிடமே விடுவிப்பதற்கு மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது.


ஆதிவாசி சமூகத்தினரின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட்  மனு  மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (26) செவ்வாய்க்கிழமை   பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மஹாவலி அதிகாரசபை இந்த உத்தியோகபூர்வ அறிவித்தலை விடுத்துள்ளது.


விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் கடந்த 2021ஆம் ஆண்டில் பொல்லேபெத்த மற்றும் ரம்பகன் ஓயா ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த வனப்பகுதிகளைக் கனரக இயந்திரங்கள் கொண்டு துப்பரவு செய்திருந்தன. ஆதிவாசி சமூகத்தினரின் வாழ்வாதாரத்தையும் கலாசாரத்தையும் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்த நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவே, ஆதிவாசி சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த ரீட் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


இந்த மனு இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, ஆதிவாசி தலைவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே முன்னிலையாகியிருந்தார். இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பூர்வீக நிலங்கள் அனைத்தையும் அந்த நிறுவனங்களிடமிருந்து மீட்டு, மீண்டும் ஆதிவாசி  சமூகத்தினரிடம் ஒப்படைப்பதுக்கு மஹாவலி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றிற்குத் தெரிவித்தனர்.

Zameera

4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு


 தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (25) விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நான்கு மாவட்டங்களின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் இந்த அபாய எச்சரிக்கையை விடுக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இது நாளை (27) பிற்பகல் 4.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி, அயகம மற்றும் எஹலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள விபரம் பின்வருமாறு:

களுத்துறை மாவட்டம்: மத்துகம மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகள்.

கேகாலை மாவட்டம்: தெரணியகல, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, ருவான்வெல்ல மற்றும் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள்.

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவு.

இரத்தினபுரி மாவட்டம்: எலபாத, நிவித்திகல, பெல்மதுல்ல, கிரியெல்ல மற்றும் கலவான பிரதேச செயலாளர் பிரிவுகள்.

Admin

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு தரமற்ற நிலக்கரி கப்பல்!


முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.


அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி குறித்த நிலக்கரி கப்பலின் ஏற்றுமதி அறிக்கை பிரதிகள், குறித்த நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அந்த அறிக்கையின்படி, குறித்த நிலக்கரி கப்பல் தென்னாப்பிரிக்காவின் 'ரிச்சர்ட்ஸ் பே கோல் டெர்மினல்' துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதுடன், அதில் 59,766 மெட்ரிக் தொன் நிலக்கரி இருப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், அந்த நிலக்கரி இருப்பின் சாம்பல் சதவீதம் 16.8 அலகுகளாகக் காணப்படுவதால், லங்கா நிலக்கரி நிறுவனம் கோரியிருந்த ஒப்பந்தப் பெறுமதியான 16 அலகுகளை விட அது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அபராதக் கொடுப்பனவுக்கு உட்படுத்தியோ அல்லது வேறு எந்த வகையிலோ அந்த நிலக்கரி இருப்பைக் கொள்வனவு செய்ய நிலக்கரி நிறுவனத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக 'அத தெரண' ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள வலுசக்தி அமைச்சர் பேராசிரியர் அனுர கருணாதிலக, குறித்த நிலக்கரி இருப்பு தரத்தில் குறைவாக இருந்தபோதிலும், அதனை நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார். 

ஒப்பந்த நடைமுறைகளின்படி, தரம் தொடர்பான இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அத்துடன், குறித்த கப்பல் விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

Admin

சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எந்த தடையும் இல்லை - நளிந்த ஜயதிஸ்ஸ!


தேர்தல் முறைமை குறித்த சட்ட ரீதியான சிக்கல்கள் தீர்க்கப்பட்டால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் எவ்வித தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் இலக்கு. அதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நிதி பிரச்சினை இல்லை என்றார்.

அத்துடன், எதிர்க்கட்சியிலிருந்து எவரையும் அரசாங்கத்தில் இணைப்பதற்கு எதிர்பார்க்கவுமில்லை. அதனை நாம் விரும்பவுமில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாறுபவர்களது பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் முன்வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Admin

இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க பாகிஸ்தான் தயார்!


இலங்கைக்கு எந்தவித நிபந்தனைகளும் இன்றி ஆதரவளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி நய்யார் நசீர்  தெரிவித்துள்ளார்.


கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காநதவுக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.


இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், கால்நடை உற்பத்தியில் உலகளவில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளதால், அது சார்ந்த அறிவையும், விவசாய உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப அறிவையும் இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.


மேலும், ஜூன் மாத இறுதியில் இலங்கை பிரதமரின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் இடம்பெறவுள்ளதுடன், அதற்காகத் தனது நாடு மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


"முதலாவதாக இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானைப் போன்றே இலங்கையும் ஒரு விவசாய நாடாகும் என்பதால், இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் உதவிகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. உலக அளவில் கால்நடை உற்பத்தியில், குறிப்பாகப் பால் உற்பத்தியில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே அந்தத் துறையில் ஒரு வலுவான தொடர்பை ஏற்படுத்த முடியும். நாம் இலங்கைக்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்கத் தயாராக இருக்கிறோம்.


பாகிஸ்தானில் சீனி உற்பத்தி, காய்கறி உற்பத்தி மற்றும் பழ உற்பத்தி போன்ற அனைத்துத் துறைகளும் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளன. எமது நாட்டில் சிறந்த பாஸ்மதி அரிசி வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கைக்குப் பொருத்தமான பாஸ்மதி அரிசி வகைகளை உருவாக்கிக்கொள்ள எம்மால் உதவ முடியும். அத்துடன், பாகிஸ்தானில் உயர்தரமான, மிகவும் சுவையான மாம்பழ வகைகள் உள்ளன.


கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் கமத்தொழில் அமைச்சின் பெயரை 'உணவுப் பாதுகாப்பு அமைச்சு' என மாற்றியமைத்தோம். நீர் இருந்தபோதிலும் அதனை விநியோகிப்பதில் சில சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த நிலைமை குடிநீர் விநியோகத்தைப் போன்றே நீர்ப்பாசனத் துறையையும் பாதிக்கின்றது. எவ்வாறாயினும், பாகிஸ்தான் விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.


எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் இலங்கை பிரதமர் பாகிஸ்தானுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அதற்காக நாம் மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகிறோம். இந்த விஜயத்தில் பிரதமருடன் இணைந்து கொள்ளுமாறு அல்லது பிறிதொரு சந்தர்ப்பத்தில் பாகிஸ்தானுக்கு வருகை தந்து, அங்கு விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நேரில் பார்வையிடுமாறு கமத்தொழில் அமைச்சருக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்."

Admin

முக்கிய தீர்மான சக்தியாக மாறிவரும் ரில்வின்!


“மக்களின் பிரதிநிதி கூட இல்லாத கட்சியொன்றின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நாட்டின் முக்கிய தீர்மானங்களை முடிவுசெய்யுமளவுக்கு அதிகாரமுடையவராக மாறியுள்ளார்.


ஜனநாயகத்துக்கு என்ன நடந்துள்ளது? இரண்டு வருடங்களாகியும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாகவே தேர்தல் முறையை மாற்ற முடியவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள் என்றால் அரசாங்கத்தின் இயலாமையின் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளதென்று” ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

எதிர்க் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சரவையோ, ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இந்த அரசாங்கத்தின் தீர்மானங்களை எடுப்பதில்லை.பெலவத்தையிலேயே அரசாங்கத்தின் தீர்மானங்கள் இறுதி செய்யப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவே பெலவத்தையின் முக்கிய தலைவர்.

ரில்வின் சில்வா யாழ்ப்பாணத்துக்குச் சென்று, இந்த வருடத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை. அடுத்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பில் பரிசீலித்து கொண்டிருக்கிறோம். மக்களின் பிரதிநிதி கூட இல்லாத கட்சியொன்றின் பொதுச் செயலாளர் ஒருவர் நாட்டின் முக்கிய தீர்மானங்களை முடிவுசெய்யுமளவுக்கு அதிகாரமுடையவாராக மாறியுள்ளார். ஜனநாயகத்துக்கு என்ன நடந்துள்ளது.

ரில்வின் சில்வாவே ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்கும் மேல் உயரிய இடத்தில் இருக்கிறார். தேர்தல் ஆணைக்குழுவை மூடிவிட வேண்டும். தேர்தல் ஆணைக்குழு, பாராளுமன்ற தீர்மானங்களுக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படுவதில்லை. ரில்வின் சில்வாவின் தீர்மானங்களுக்கமைய முடிவெடுக்கப்படுகிறது.

திறைசேரி நிரம்பி வழியுமளவுக்கு நிதி இருப்பதாகவும் அதனால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றே இந்த அரசாங்கத்தினர் கூறினார்கள். அவ்வாறு இருக்கையில், ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை முறையாக நடத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் முறையாக சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என்று இவர்கள் கூறினார்கள். அதனாலேயே தேர்தலும் நடத்தப்படாமல் இருக்கிறது என்றார்கள். இவர்கள் ஆட்சிபீடமேறி இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றன. இவற்றுக்கு தீர்வுக் காண்பதற்காகவே இந்த அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்களாகியும் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாகவே தேர்தல் முறையை மாற்ற முடியவில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள் என்றால் அரசாங்கத்தின் இயலாமையின் காரணமாகவே மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இவர்களுக்கு அங்கிகாரம் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே வேண்மென்றே தேர்தலை நடத்தாமல் காலங்கடத்தி வருகிறார்கள்.

மாகாண சபைத் தேர்தலை கட்டாயம் நடத்த வேண்டும். பொதுமக்கள் இந்தத் தேர்தலுக்காக முன்னிருக்க வேண்டும். சர்வதேச தரப்பும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

Zameera

மஹர மற்றும் கம்பஹாவில் 12 மணிநேர நீர்வெட்டு


 மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு நாளை (27) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 


இதற்கமைய, நாளை (27) பி.ப 07.00 மணி முதல் மறுநாள் (28) மு.ப 07.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு நிறுத்தப்படவுள்ளது. 


மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர்ழாய் மாற்றி அமைக்கும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Admin

ராஜிதவின் வெளிநாட்டுப் பயணத் தடையில் தளர்வு!


ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜித சேனாரத்னவின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை, இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, தனது கட்சிக்காரர் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டார். 

அதற்காக, தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்துமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். 

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கவனத்தில் கொண்ட பிரதான நீதவான், சந்தேகநபருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் மாதம் 02 ஆம் திகதி வரை தற்காலிகமாக தளர்த்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.

Admin

எரிபொருள் விலை தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு!



எதிர்வரும் ஜூலை மாதம் இறுதி வரை நாட்டிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்கள் தற்போது நாட்டில் உள்ளதாகப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த விநியோக முனைய நிறுவனத்தின் (CPSTL) முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.


இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், வரும் நாட்களில் எரிபொருள் விலையில் பெரிய அளவிலான உயர்வையோ அல்லது விலை குறைப்பையோ எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகச் சில ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக முண்டியடிப்பதாக மயூர நெத்திகுமாரகே தெரிவித்தார்.

ஆயினும், இதுவரை அத்தகைய எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

"எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பாகப் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அதேபோல், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகப் பரப்பப்படும் பிரசாரங்களில் எந்தவொரு உண்மையும் இல்லை. இந்த மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருட்களும், ஏழாம் மாதம் (ஜூலை) இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்புகளும் தற்போது நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளன.

இந்த மாதத்தில் வரவிருந்த அனைத்துக் கப்பல்களும் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளன. அத்துடன், இந்த மாதம் 28 மற்றும் 31 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் வரவுள்ளன. அந்த எண்ணெயைச் சுத்திகரிப்பதன் மூலம் பெறப்படும் எரிபொருளை அடுத்த மாதத்திலும் விநியோகிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.


ஏப்ரல் மாதத்தில் உலக சந்தையில் டீசல் விலை அதிகரித்திருந்த போதிலும், தற்போது அந்த விலை படிப்படியாகக் குறைந்து வருகின்றது. 

இந்த விலை மேலும் குறையும் என நாம் நம்புகிறோம். எனவே, ஏப்ரல் மாதத்தில் எரிபொருளை அதிக விலைக்கு விற்க வேண்டியிருந்த தேவை தற்போது குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை. 

விலைக் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என்றாலும், முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது போல் விலையை 700 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லை. அந்தச் சூழ்நிலை இப்போது நீங்கியுள்ளது." என்றார்.

Admin

அரசின் திறமையின்மையால் பொருளாதாரம் சீர்குலைவு - சாகர காரியவசம்!



நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதுடன், பொருட்களின் விலைவாசி உயர்வினால் மக்கள் வாழ முடியாத அளவுக்கு வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைப் பின்வருமாறு குறிப்பிட்டார்.....


கபில சந்திரசேனவின் மரணம் தற்கொலை என கூறப்பட்டாலும், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதற்கு ஏதோவொரு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. அவர் முறையான பிணையாளர்களை முன்வைத்து பிணையில் விடுவிக்கப்பட்ட மறுநாளே, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 



அதாவது, கபில சந்திரசேன முறையற்ற பிணையாளர்களை சமர்ப்பித்துள்ளதால் அவரது பிணையை ரத்து செய்து, வழக்கு முடியும் வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரப்பட்டது.



உண்மையில், கபில சந்திரசேனவிடம் தகுதியான பிணையாளர்கள் இருந்தபோதும், பிறிதொரு தரப்பினரால் தகுதியற்ற இரு பிணையாளர்கள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளனர். எனினும், அந்த இருவரையும் நீதிமன்றத்தின் பதிவாளர் நிராகரித்துள்ளார். கபில சந்திரசேன எவ்வித சட்டவிரோத தன்மையுமின்றி முறையான பிணையாளர்களை முன்வைத்தே பிணை பெற்றுள்ளார். 



பிணையாளர்கள் தகுதியானவர்களா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இரகசியமான முறையில் செயற்பட்டுள்ளது. முன்னதாக, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், கபில சந்திரசேனவை தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளுவதாக அச்சுறுத்தியுள்ளார். 



லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மூவரின் கீழ் செயற்படும் பணிப்பாளர் நாயகம் இவ்வாறு சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது, ஆணையாளர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள்? அவருக்கு எதிராக விசாரணை நடத்தி அவரை பதவியிலிருந்து நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு ஏன் அறிவிக்கவில்லை? இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தற்போது ஒரு சுயாதீன நிறுவனம் அல்ல, அது அரசியல் தேவைகளுக்காக இயங்கும் ஒரு நிறுவனமாக மாறியுள்ளது.



அதேபோல், நாட்டின் பொருளாதாரம் தற்போது மிக ஆபத்தான முறையில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. 2022 ஆம் ஆண்டில் டொலரின் மதிப்பு அதிகரித்ததற்கு கோவிட் நெருக்கடி, சுற்றுலாப்பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் வருகை இன்மை போன்ற நியாயமான காரணங்கள் இருந்தன. அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர்களை பணம் அனுப்ப வேண்டாம் என மக்கள் விடுதலை முன்னணி (JVP) கோரியிருந்தமையும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. 



ஆனால், இன்று கோவிட் நெருக்கடி இல்லை. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், இந்த அரசாங்கத்தின் ஊழல் காரணமாகவே நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. நிலக்கரி ஊழல் காரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகளவிலான டீசலை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலகிலேயே அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளது. 



இந்த நிலக்கரி மற்றும் டீசல் ஊழல்களே பொருளாதார வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டில் இருந்த முதலீட்டாளர்களையும் விரட்டியடித்தது. கடந்த ஒரு வருடமும் 8 மாத கால ஆட்சிக்குள், நாட்டிற்கு ஒரு டொலரேனும் கொண்டு வரக்கூடிய ஒரு முதலீட்டாளரைக் கூட ஈர்க்க இந்த அரசாங்கம் தவறியுள்ளது.



நாடு இத்தகைய பாரதூரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில், ஜனாதிபதியும் பிரதமரும் இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். ஆனால், பிரதமர் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அது ஒரு பொழுதுபோக்கு பயணமா? அல்லது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏதேனும் முதலீடுகளை கொண்டுவரும் பயணமா? மறுபுறம், நாடு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் வேளையில், ஜனாதிபதி அருகம்பே பகுதிக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். 



இந்த நேரத்தில் ஜனாதிபதி பொருளாதார நிபுணர்களையும் பேராசிரியர்களையும் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், விவசாயிகளுக்கு உரம் இன்றி, அத்தியாவசிய பொருட்களின் விலை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், ஜனாதிபதி சமூக ஊடக செயற்பாட்டாளர்களை அழைத்து, அரசாங்கத்தின் திறமையின்மையை மறைத்து எவ்வாறு பொய்களை பரப்புவது என்று அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். 



எனவே, இந்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தொலைநோக்குப் பார்வையற்ற தன்மையின் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் முழுமையாக சீர்குலைக்கப்பட்டுள்ளது என சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.
SHAHNI RAMEES

சாணியடி வாங்கியது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க பொலிஸ் நிலையம் வந்த கோட்டாவின் செயலாளர்.

 


வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக,

SHAHNI RAMEES

சட்ட விதிகள் கிடைத்தவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தயார்!

 


பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகளின்