Our Feeds



Saturday, April 27, 2024

News Editor

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்


 அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.

மே மாதம் இரண்டாம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் இணைத் தலைவர் திரு.தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.

சம்பளப் பிரச்சினையை நிவர்த்தி செய்யக் கோரி கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

News Editor

பல பகுதிகளில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்


 நாட்டின் பல பகுதிகளில் இன்று (27) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெளியில் கடுமையான உழைப்பைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Editor

வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனம்! - அமைச்சர் டி.வீ சானக


 வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார்.

குறித்த நிறுவனம், வலுசக்தித் துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தும் என்றும் அதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக

தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்திற்குத் தேவையான ஸ்திரத்தன்மையை தற்போது ஏற்படுத்த முடிந்துள்ளது. எரிபொருள் வரிசைகளின் காலம் முடிந்துவிட்டது. எமது அமைச்சும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் உயர்தர எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், வலுசக்தித் துறையின் இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை நிறுவனமொன்றின் அவசியத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

இந்த சுயாதீன நிறுவனத்தை நிறுவுவதன் நோக்கம், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், LPG, LNG  எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் தரம், விநியோகப் போட்டி மற்றும் விலைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.

வாடிக்கையாளர்களுக்கு முறையான மற்றும் நியாயமான விலையில் வழங்க இது உதவும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதற்கான பிரதான கட்டமைப்பைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உலக சந்தை நிலவரங்கள் மற்றும் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அறிந்து, அடுத்த 06 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான கேள்விமனுப் பத்திரம் கோரப்பட்டுள்ளது.

இம்மாதம் 30 ஆம் திகதியும், அடுத்த மாதம் 13 ஆம் திகதியும் மேலும் இரண்டு மாதங்களுக்கு கேள்விமப் பத்திரம் கோரப்படவுள்ளன. இதன்படி, 2024ஆம் ஆண்டுக்குத் தேவையான எரிபொருளின் தவணைகள் நிறைவு செய்யப்படும். இதன் காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது விலைகளில் மாற்றம் ஏற்படாது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் குறித்து ஆய்வு செய்ய தற்போது இரண்டு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்கள் செய்த ஆய்வுகளால் மில்லியன் டொலர்களை எமக்கு சேமிக்க முடிந்தது.

மேலும், கடந்த காலங்களில், எரிபொருள் இறக்குமதியில் கப்பல்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டது. காலதாமதமாக கட்டணம் செலுத்துவது தொடர்பான பல்வேறு செய்திகள் தினசரி ஊடகங்களில் வெளியாகின. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கப்பல்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்தப்படவில்லை. நாங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தியதே இதற்குக் காரணம்.

தற்போது எரிபொருள் கையிருப்புக்களை ஒரு மாதத்திற்கு பேணி வருகிறோம். ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் வாங்குவதற்கு டொலர்கள் கையிருப்பில் பேணப்படுகிறது. அதன்படி, எங்களிடம் இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருள் மற்றும் டொலர்கள் உள்ளன.’’ என்று தெரிவித்தார்.

Friday, April 26, 2024

News Editor

நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறிய புதிய செயலி


 மக்கள் நீச்சலடிக்கச் சென்று நீரில் மூழ்கும் இடங்களைக் கண்டறியும் செயலியை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு செயல்பட்டு வருகிறது.


தற்போது, நீரில் மூழ்கும் மரணங்கள் அதிகம் பதிவாகும் இடங்களை சுகாதார அமைச்சகம் கண்டறிந்து வருகிறது.


அதன்படி, 500க்கும் மேற்பட்ட இடங்களில் எச்சரிக்கை பலகைகள் பொருத்தப்பட உள்ளன.


எச்சரிக்கை பலகைகளை நிறுவுவதற்கு சேவை வழங்குநர்கள்,விநியோகஸ்தர்களை தேர்ந்தெடுக்க இப்போது முன்மொழியப்பட்டுள்ளது.


இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த எச்சரிக்கை பலகைகளை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது.


இந்நாட்டில் வருடாந்தம் 800 முதல் 1000 பேர் வரை நீரில் மூழ்கி உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHAHNI RAMEES

காஸா சிறுவர் நிதியம் – பல நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு


காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

ShortTalk

ஆஸ்திரேலிய கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்

ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக்கில் உள்ள கடற்கரையில் நேற்று

ShortTalk

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் – ஜனாதிபதி சந்திப்பு

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும்

ShortTalk

புதிதாக 2053 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில்


 தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி
ShortTalk

ஆபத்தான நிலையில் எல்ல – வெல்லவாய வீதி


 எல்ல – கரந்தகொல்ல – மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு
News Editor

காஸா சிறுவர் நிதி நன்கொடைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு


 காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஸ்தாபிக்கப்பட்ட காஸா குழந்தைகள் நிதியத்திற்கான (Children of Gaza Fund) நிதி நன்கொடைகள் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டன.

கல்முனை ஹுதா ஜும்மா பள்ளிவாசல் 1,589,000 ரூபாவையும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கிண்ணியா கிளை 5,300,000 ரூபாவையும், கல்முனை வலயக் கல்வி அலுவலகம் 3,128,500 ரூபாவையும், Sports First Foundation 300,000 ரூபாவையும் சிறுவர் நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

எதிர்வரும் காலங்களில் குறித்த பணம் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நன்கொடையாளர்கள் 2024 ஏப்ரல் 30, வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் நன்கொடைகளை வழங்க விரும்புவர்கள் இருப்பின், அந்த நன்கொடைகளை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை வங்கியின் (7010) தப்ரோபன் கிளையில் (747) உள்ள கணக்கு இலக்கமான 7040016 க்கு வைப்பீடு செய்ய வேண்டும் என்றும் அது தொடர்பான பற்றுச் சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்பி வைக்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

SHAHNI RAMEES

ஈரான் செல்கிறார் மஹிந்த அமரவீர

 

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
News Editor

மத்தள சர்வதேச விமான நிலைய நிர்வாகம் இந்தியா, ரஷ்யாவுக்கு


 மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அதன்படி, இந்தியாவின் Shaurya Aeronautics Pvt. Ltd மற்றும் ரஷ்யாவின் Airports of Regions Management Company அல்லது அதன் துணை நிறுவனங்கள் 30 வருட காலத்திற்கு நிர்வாகத்தை மாற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

News Editor

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு


 கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை (27) சனிக்கிழமை முதல்  14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை சனிக்கிழமை  மாலை 5 மணி முதல்  ஞாயிற்றுக்கிழமை (28) காலை 7 மணி வரை குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6, தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ நகர சபை பகுதிகளிலும், ஜயந்திபுர மற்றும் பெலவத்தை பிரதேசங்களிலும் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.