Our Feeds



Wednesday, August 19, 2026

ShortNews

எதிர்க்கட்சித் தலைவர் - தமிழ்,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையில் சந்திப்பு!


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கவனம் செலுத்தப்பட்டன.

குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரதேச மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு விடயங்களை தெரிவித்தனர்.

அவ்வாறே, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் மிகவும் பரந்தளவில் முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான அவசியமான தலையீடுகளைச் செய்வது தொடர்பாகவும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம். தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ்.உதுமா லெப்பே, ரவூப் ஹக்கீம், டாக்கடர் இராமநாதன் அர்ச்சுனா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ShortNews

அந்நியச் செலாவணி கையிருப்பு குறித்து பிரதி அமைச்சர் தகவல்!


ஒரு நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிடுவதற்கு அந்நியச் செலாவணிக் கையிருப்பு மட்டுமே ஒரே அளவுகோல் அல்ல என நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நிதிச் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்நியச் செலாவணிக் கையிருப்பு பொருளாதாரத்துக்கான பாதுகாப்பு அரண் மாத்திரமே எனவும், பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப அது மாறுபடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இலங்கையின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு சுமார் 6.6 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சுமார் 2.6 பில்லியன் டொலர் கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து சுமார் 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்திருந்தால் நாட்டின் கையிருப்பு மேலும் 3.5 பில்லியன் டொலர் அதிகமாக இருந்திருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, கையிருப்பின் அளவை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு நாட்டின் பொருளாதார நிலைமையை மதிப்பிட முடியாது என அவர் மேலும் வலியுறுத்தினார்.

ShortNews

நாளை பாராளுமன்றத்திற்கு வருகை தரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!


22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாளை (20) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்தத் தகவலைச் சபைக்குத் தெரிவித்தார்.

Zameera

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி கட்டாயம்


 செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக வீதிகளுக்கும் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேக வீதியில் பயணிக்கும் சாரதிகள் மற்றும் பயணிகள் ஆசனப்பட்டி அணிவது தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, அனைத்துப் பயணிகளும் இருக்கை வார் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் நபருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிவேகப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாத பயணிகளிடமிருந்தும் இந்த அபராதத் தொகையை அறவிடுவதற்கான சட்டப்பூர்வ வசதி உள்ளதாகத் தெரிவித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, ஆசனப்பட்டி அணிவதன் அவசியத்தை இலங்கை மக்கள் தீவிரமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் உயிர் பாதுகாப்பிற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய விபத்துகளில் ஆசனப்பட்டி அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், தேசிய வீதி பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன கருத்துத் தெரிவிக்கையில், ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களில் அவற்றை பொறுத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலமும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் முடிவடடைவதாகத் தெரிவித்தார்.

2025 செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2455/29 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, அதிவேக வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

ShortNews

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது - ஊழல் எதிர்ப்புச் திருத்தச் சட்டமூலம்!

 



ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இன்று (19) இச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Zameera

டெங்கு மரணங்கள் அதிகரிப்பு


 நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அண்மைக்கால தரவுகளின்படி, இவ்வருடத்தில் இதுவரை மொத்தம் 92,854 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் 52.95% ஆனோர், அதாவது 49,163 நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்திற்கே ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 19,778 (21.30%) நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18,433 (19.85%) நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 6,695 (7.21%) நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த ஜூலை மாதத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 29,964 ஆகும்.

இதேவேளை, ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை கடந்துள்ள சில நாட்களில் மட்டும் 7,516 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், 96 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை தொடர்ந்து டெங்கு அதி-அபாய வலயங்களாக சுகாதாரப் பிரிவினர் பெயரிட்டுள்ளனர்.

SHAHNI RAMEES

ஜனாஸா எரிப்பு தொடர்பான பிரேரணை: பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக் கோரி சபாநாயகரிடம் கையெழுத்துடனான கோரிக்கை கடிதம் சமர்ப்பிப்பு!

 



கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள்

Zameera

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்


 அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (19) புதன்கிழமை சபைக்கு அறிவித்துள்ளார்.

குறித்த மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.

SHAHNI RAMEES

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!


பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரைத் திருமணம்

Zameera

உண்டியல் பணப்பரிமாற்றம்: 19 வயது இளைஞர் கைது

சட்டவிரோதமான முறையில் 'உண்டியல்கள்' அமைப்பில் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞனை, பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.



சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்களில் ஈடுபடும் நபர் ஒருவர் தொடர்பில்  குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று செவ்வாய்க்கிழமை  (18) வேல்லவீதி பொலிஸ் பிரிவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது, 01 கோடி 04 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா பணத்தைச் சம்பாதித்தமைக்கான சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியமை காரணமாக, பணச்சலவை சட்டத்தின் கீழும், போலியான ஆயிரம் ரூபா பணத்தாள் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டிலும் இச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.


இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

SHAHNI RAMEES

"சாப்பிட" மட்டும் தான் வாய் திறக்கும், அரசாங்க தமிழ் பேசும் MPக்கள்!

 


"சாப்பிட" மட்டும் தான் வாய் திறக்கும், அரசாங்க தமிழ் பேசும் MPக்கள்!

Zameera

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட ஒப்புதல்


 (நா.தனுஜா)


பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன்பின்னர் அச்சட்டமூலம் பற்றி விரிவாக விவாதிக்கமுடியும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.


அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (18) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.


இதன்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.


அதனையடுத்து இச்சட்ட வரைவு குறித்து ஏற்கனவே பல்வேறு கரிசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவை தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளனவா என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியதாவது:



பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் தொடர்பான கருத்தாடல்கள் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவருகின்றன. அச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. இருப்பினும் அதனை நீக்கிவிட்டு, பயங்கரவாதம் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கையாள்வதற்கு ஏதுவான சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டியது அவசியமாகும்.


அதற்கமைவாகவே தற்போது அவசியமான திருத்தங்களுடன் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் இதுபற்றி மேலும் விவாதிக்கமுடியும் என்றார்.

Zameera

ஓகஸ்ட் மாத ‘அஸ்வெசும’ கொடுப்பனவு இன்று


 ஓகஸ்ட் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவு இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.


 


நலன்புரி நன்மைகள் சபை விடுத்துள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதற்கமைய, அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபாய் தொகை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.


 


அத்துடன், அதன் இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரத்து 500 ரூபாய் தொகையை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.