Our Feeds



Sunday, January 18, 2026

Zameera

யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்


 யாழ்ப்பாணம் - கச்சேரி நல்லூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலை சேர்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கெப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றுடன் ஒன்று மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்தவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 


இச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பு. கஜிந்தன்

Zameera

விதிகளை மீறிய 3 மருந்தகங்களுக்கு அபராதம்


 தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரம் இன்றி மருந்தகத்தை நடத்தியமை மற்றும் தகுதிவாய்ந்த மருந்தாளர் இன்றி மருந்தகத்தை இயக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகள் தனித்தனியாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன. 

இதனையடுத்து, இக்குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மருந்தகத்திற்கு 3 இலட்சம் ரூபாய் அபராதமும், அம்பகோட்டே, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மருந்தகத்திற்கு 5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 

மேலும், குற்றத்தை ஒப்புக்கொண்ட கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு மருந்தகத்திற்கு 150,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHAHNI RAMEES

எதிர்வரும் ரமலான் மாதத்தில் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்கள் தங்களது தொழுகைகள் மற்றும் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு விசேட ஏற்பாடுகள் குறித்த சுற்றுநிரூபம் வெளியீடு!

 

நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால்
SHAHNI RAMEES

'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆராய்வதற்காக இலங்கை வரும் நாணய நிதிய சிறப்பு குழு!

 

இலங்கையை அண்மையில் தாக்கிய 'தித்வா' சூறாவளியால்
SHAHNI RAMEES

7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி!

 

உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி

Saturday, January 17, 2026

Zameera

உலகின் மிகப்பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல் இலங்கையில் அறிமுகம்


 இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரிய இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினக்கல்  உலகளாவிய அறிவியல் மற்றும் கலாசார மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 


“தூய நிலத்தின் நட்சத்திரம்” என அழைக்கப்படும் இந்த இரத்தினம் 3,536 கரட் நிறையுடையது.

 


அமெரிக்க இரத்தினவியல் நிறுவனம் (GIA) மற்றும் லங்கா இரத்தினவியல் ஆய்வகத்தால் அதன் தோற்றம் மற்றும் உண்மை தன்மை சான்றளிக்கப்பட்டது.

 


இந்த இரத்தினக்கல் ஆறு கதிர் நட்சத்திர வடிவத்தில் உள்ளது, இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய வட்ட-வெட்டு இயற்கை ஊதா நட்சத்திர இரத்தினமாக உள்ளதென இரத்தினவியலாளர்கள் கூறுகின்றனர்.

 


இந்த இரத்தினக்கல் மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இயற்கை புவியியல் செயன்முறைகளால் உருவானதாகவும் இதனை  செயற்கையாக வடிவமைக்க முடியாது என்றும், அவ்வாறு  உருவாக்க தேவையான நிலைகள் மிகவும் அரிதாக இருப்பதாகவும்  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 


இந்த இரத்தினக்கல் அறிவியல், கலாசார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 


இந்த இரத்தினக்கல்லைப்  பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்காவில் உள்ள Tucson Masterpiece Gem Society க்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

 


SHAHNI RAMEES

கல்விச் சீர்திருத்தங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை!

 


கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டின் மாற்றத்தக்க

SHAHNI RAMEES

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர்!

 


இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்படவுள்ள

SHAHNI RAMEES

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற விமானம் மாயம்!

 


இந்தோனேசியாவில் 11 பேருடன் பயணித்த ATR 42-500 ரக விமானம்

Zameera

உலகின் முதற்தர சுற்றுலா நகரமாக திகழும் ரியாத்.!


 

✍️எஸ். சினீஸ் கான்


பாலைவனத்தின் மத்தியில், அரேபிய வரலாற்றின் சுவாசமாகத் திகழும் ஒரு நகரம், இன்று உலக சுற்றுலா வரைபடத்தில் புதிய சாதனைகளைப் படைத்துவரும் ஓர் நகரமாக சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத் விளங்குகிறது. ஒருகாலத்தில் நிர்வாக மையமாக மட்டுமே அறியப்பட்ட நகரமான இந் நகரம் தற்போது மரபையும் நவீனத்தையும் ஒரே பாதையில் இணைத்துக் கொண்டு, உலகப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் சுற்றுலா நகரமாக திகழ்கிறது.


ரியாத் நகரின் அடையாளமானது அதன் ஆழமான வரலாற்றுப் பின்னணியில் துவங்குகிறது. திரிய்யா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள், சவூதி அரச வம்சத்தின் தோற்றத்தையும், அரேபிய, இஸ்லாமிய மரபின் வேர்களையும் உயிர்ப்புடன் எடுத்துரைக்கின்றன. மண் சுவர்களால் ஆன பழமையான கட்டிடங்கள், காலத்தின் ஓட்டத்தையும் தேச உருவாக்கத்தின் பயணத்தையும் இன்றும் நினைவூட்டிக்கொண்டிருக்கான்றன. இத்தகைய இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு சாதாரண காட்சிப் பொருளாக அல்லாமல் வரலாற்றை நேரடியாக அனுபவிக்கும் சிறப்புமிக்க பயணமாக அமைகின்றன.


இந்த வரலாற்றுப் பயணத்தின் நவீன வெளிப்பாடாக புஜைரி டெரஸ் (Bujairi Terrace) திகழ்கிறது. பாரம்பரிய நஜ்தி கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த இடம், நவீன உலகின் அனைத்து வசதிகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டு, ரியாத் சுற்றுலாவின் புதிய அடையாளமாக விளங்குகிறது. திரிய்யாவின் வரலாற்றுச் சிறப்பை அறிந்து கொள்ளும் வாய்ப்புடன், உலகத் தர உணவுகளை ருசிக்கும் அனுபவத்தையும் இது வழங்குகிறது. மாலை நேரங்களில் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்த பகுதி, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கலை வெளிப்பாடுகளுடன், சர்வதேச தர சுற்றுலா மையமாக மிளிர்ந்து வருகிறது.


ரியாத் நகரின் சுற்றுலா வளர்ச்சி வெறும் கட்டிடங்களோ அல்லது பொழுதுபோக்கு மையங்களோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பான சூழல், குடும்பங்களுக்கு ஏற்ற அமைப்புகள், இஸ்லாமிய மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுங்கு, ஹலால் சுற்றுலா வசதிகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாக அமைகிறது. நவீனத்திற்குள் மரபையும் மதிப்புகளையும் இழக்காமல் முன்னேறும் நகரமாக ரியாத் உலகளவில் தனித்துவம் பெற்றுள்ளது எனலாம்.


அதேபோன்று, ரியாத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக மஸ்மக் கோட்டை (Masmak Fort) விளங்குகிறது. சவூதி அரேபியாவின் ஒன்றுபட்ட தேச உருவாக்கப் பயணத்தை நினைவூட்டும் இந்த கோட்டை, இன்று ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக உள்ளது. இது ரியாத்தின் அரசியல் மற்றும் வரலாற்று அடையாளத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முக்கியச் சின்னமாகக் கருதப்படுகிறது.


அதேபோல், சவூதி அரேபிய தேசிய அருங்காட்சியகம் (National Museum of Saudi Arabia) கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலாவின் மையமாக விளங்குகிறது. சவூதி வரலாறு, இஸ்லாமிய பாரம்பரியம், புவியியல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நவீன காட்சிப்படுத்தல்களுடன் இங்கு விளக்கப்படுகின்றன. மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் இது ஒரு அறிவுச் சுற்றுலா தளமாக திகழ்கிறது.


இயற்கையை விரும்பும் பயணிகளுக்காக வாடி ஹனீஃபா (Wadi Hanifa) ஒரு முக்கிய ஓய்வு மற்றும் சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்த பசுமையான இவ்விடம், நடைபயிற்சி, ஓய்வு மற்றும் இயற்கை ரசனைக்கு ஏற்ற இடமாக மாற்றப்பட்டுள்ளது. பாலைவன நகரமான ரியாத்தில், இயற்கையும் நகர வாழ்வும் இணையும் அழகிய எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.


நவீன ரியாத்தின் அடையாளங்களாக கிங்டம் டவர் (Kingdom Tower) மற்றும் அல்-ஃபைசலிய்யா டவர் (Al Faisaliah Tower) திகழ்கின்றன. உயரமான பார்வை மேடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுடன், இக்கட்டிடங்கள் ரியாத்தின் நவீன நகர உருவத்தை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில், ஒளிவிளக்குகளுடன் மின்னும் இவை சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கின்றன.


பொழுதுபோக்கு மற்றும் குடும்ப சுற்றுலாவிற்காக ரியாத் சீசன் (Riyadh Season) நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் பல நாடுகளிலிருந்து வரும் கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை விழாக்கள், ரியாத்தை ஒரு சர்வதேச பொழுதுபோக்கு நகரமாக மாற்றியுள்ளன. இதன் மூலம் வருடம் முழுவதும் சுற்றுலா இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.


இதனுடன், நவீன பொழுதுபோக்கு நகரங்கள், பூங்காக்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற ஓய்விடங்கள், பாதுகாப்பும் இணைந்த சுற்றுலா சூழலை உருவாக்குகின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சுற்றுலாத்தளங்கள், ரியாத்தை குடும்ப சுற்றுலாவிற்கான சிறந்த மற்றும் தரமானை நகரமாக உயர்த்துகின்றன.


இந்த அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ரியாத் வரலாற்று சிறப்புமிக்க இடமாக மட்டுமல்லாமல்  இயற்கை, நவீனம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தும் சங்கமிக்கும் உலகின் முதற்தர சுற்றுலா நகரமாக உருவெடுத்துள்ளது எனலாம்.


இந்த மாற்றம் தற்செயலானது அல்ல. மரபை காக்கவும், அதே நேரத்தில் நாட்டை உலகத்துடன் போட்டியிடும் வகையில் முன்னேற்றவும் வழிகாட்டிய வலுவான தலைமையின் திறமையினால் இந்த வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத் அவர்களின் ஞானமும் அனுபவமும், சவூதி அரேபியாவின் வரலாறும் கலாச்சாரமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது. அதேபோல், இளவரசரும் பிரதமரும் ஆன முகம்மத் பின் சல்மான் அவர்களின் தொலைநோக்கும் துணிச்சலான சீர்திருத்தங்களும், ரியாத்தை உலகம் வியக்கும் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் தலைநகரமாக மாற்றி வருகின்றன என்பது உறுதியாகிறது.

Zameera

'திட்வா' புயலினால் நிறுத்தப்பட்ட பல ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்


 'திட்வா' புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட பல ரயில்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதற்கமைய, கொழும்பு கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் இரவு நேர அஞ்சல் ரயில் ஜனவரி 20 ஆம் திகதி முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்துடன், கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 'புலத்திசி' நகர கடுகதி ரயிலும் அன்றிலிருந்து தினமும் சேவையில் ஈடுபடுத்தப்படும். 

உதய தேவி ரயில் சேவையையும் அனர்த்த நிலையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் மார்க்கத்தைப் புனரமைக்கும் பணிகள் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. 

இதன் காரணமாக மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை ரயில் சேவைகள் கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

புனரமைப்புப் பணிகளின் பின்னர் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

SHAHNI RAMEES

யாழ். - விசேட அதிரடிப்படையினரின் சீருடையை ஒத்த ஆடையணிந்த இளைஞர் கைது!

 

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின்
SHAHNI RAMEES

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதி!


முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி