Our Feeds



Friday, April 10, 2026

Zameera

சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். 

தமது சொத்து விபரங்களை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

அந்த 14 நாட்கள் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 

இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த சொத்து மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை சமர்ப்பித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Zameera

வாழைச்சேனையில் புதையல் தோண்டிய 6 பேர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள குகணேசபுரம் பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்ட 6 பேரை இன்று வெள்ளிக்கிழமை (10) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் மற்றும் புதையல் தோண்டும் உபகரணங்களை கைப்பற்றி வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினர் குகணேசபுரம் கருங்காலிச்சோலையில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளரின் காணியில் இன்று அதிகாலை புதையல் தோண்டப்பட்ட பகுதியை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போதே 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கருங்காலிச்சோலை, ஓட்டமாவடி, நவகந்தேகம, உயாங்கொட, நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

SHAHNI RAMEES

ஈஸ்டர் தாக்குதல்: இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது...

 ​


உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்

SHAHNI RAMEES

பாலியல் குற்றவாளி எப்ஸ்டினுடன் எந்த தொடர்பும் இல்லை - மெலனியா டிரம்ப் மறுப்பு

 வாஷிங்டன்,

அமெரிக்காவின் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி

Zameera

அரச வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம் நாளையுடன் நிறைவு


 அரச வைத்திய அதிகாரிகளினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்தை நாளை (11) காலை 08.00 மணியுடன் நிறைவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

“பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய்தான் இ#ரேல்..” என பாகிஸ்தான் விமர்சனம்

 

டெல் அவிவ்,

லெபனானிலும் தனது இனப்படுகொலையை அரங்கேற்றும்

SHAHNI RAMEES

லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும் வரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம்: ஈரான் உறுதி...

 


அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான்

Zameera

புறக்கோட்டை பஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை


 புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். 


இன்று (10) காலை புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார். 


பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பது திட்டமிடப்பட்ட குழுக்களின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், இதற்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்தவும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


அங்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கையில், பெண்களுக்கான கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்களுக்கு முதல் நாளே சேதம் விளைவிக்கப்பட்ட நிலையில் அவை மீண்டும் பொருத்தப்பட்டதன் பின்னர் நேற்று (09) இரவு இரண்டாவது முறையாகவும் உடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 


இது ஒரு திட்டமிடப்பட்ட குழுவின் செயல் எனத் தெரிவித்த அமைச்சர், பஸ் நிலையத்தின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 


இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, 


அரசியலில் நமக்கு வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனால் இது பொதுமக்களின் சொத்து, மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது. 


இவற்றுக்குச் சேதம் விளைவிக்க இடமளிக்க முடியாது, இதற்கு எதிராக நாம் சட்டத்தை அமுல்படுத்துவோம். 


அதேபோல் இங்கு பாதுகாப்பையும் பலப்படுத்துவோம். சிசிடிவி (CCTV) கமராக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, அதனை அதிகரிக்க எதிர்பார்க்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Zameera

இலங்கை யின் பொருளாதார வளர்ச்சி குறித்து ADB யின் கணிப்பு


 2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட 5.0 சதவீத இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2026 இல் 4.0 சதவீதமாக வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 


மத்திய கிழக்கு மோதலானது, அபிவிருத்தியடைந்து வரும் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார நிலைவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 


ஆரம்பநிலை ஸ்திரத்தன்மை நிலவும் சூழலில், பிராந்திய வளர்ச்சியானது 2026 மற்றும் 2027 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் 5.1 சதவீதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


அதிகரித்த எரிசக்தி விலைகள் உற்பத்திச் செலவுகளையும் நுகர்வோர் விலைகளையும் உயர்த்தும் அதேவேளை, அமெரிக்க சுங்க வரி அதிகரிப்புக்கு முன்னதாகவே கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அதீத ஏற்றுமதி நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஏற்றுமதி வளர்ச்சி வழமைக்குத் திரும்பும். 


தெற்காசியா மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் தென்கிழக்கு ஆசியா ஆகியவற்றில் நிலவும் உறுதியான உள்நாட்டுத் தேவையானது வளர்ச்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்தும். 


2025 ஆம் ஆண்டில் பல பொருளாதாரங்களில் தணிந்திருந்த பணவீக்கம், மோதல்களுடன் தொடர்புடைய அதிக எரிசக்தி விலைகளின் தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு 3.6 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 


அதற்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


2027 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 4.2 சதவீதமாகச் சிறியளவில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 


அதேவேளை, பணவீக்கமானது 2026 ஆம் ஆண்டில் -0.5 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக உயர்ந்து, பின்னர் 2027 இல் 4.0 சதவீதமாகத் குறைவடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.

Zameera

திருமண நிகழ்ச்சியை குறிவைத்து டிரோன் தாக்குதல் : 30 பேர் பலி


 (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு)

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்களின் பின்னணியில், திருமண நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பிறகு, சூடானில் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியது. தற்போது, தலைவராக இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் (Abdel Fattah al-Burhan)  செயல்பட்டு வருகிறார்.

அதேவேளை, துணை இராணுவப்படையான Rapid Support Forces (RSF) அமைப்பின்  தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ ( Mohamed Hamdan Dagalo ) செயல்படுகிறார்.

இராணுவத்துக்கும் RSF அமைப்பிற்கும் இடையே அதிகாரப் போட்டி அதிகரித்ததன் விளைவாக, 2023 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் கடும் ஆயுத மோதல்கள் வெடித்தன.

இதில் தலைநகரான கார்டூம் (Khartoum ) உள்ளிட்ட பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம், RSF கட்டுப்பாட்டில் இருந்த கார்டூமை இராணுவம் மீண்டும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், டார்பூர் (Darfur) மாகாணத்தில் உள்ள குடும் நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குறைந்தது 30 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை Sudanese Armed Forces மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்கள் மேலும் தீவிரமடைந்து வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச அக்கறை அதிகரித்துள்ளது.

Zameera

அரச வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் நீடிப்பு!


 ( இணையத்தள செய்திப் பிரிவு )


அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று வெள்ளிக்கிழமை (10) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இதனால் வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

பயிற்சி பெற்ற வைத்தியர்களுக்கான நியமனங்களை வழங்குவதில், எட்டப்பட்ட உடன்பாடுகளை சுகாதார அமைச்சு மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தி நேற்று (09) காலை 8.00 மணி முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நியமனப் பட்டியலை உடனடியாக இரத்து செய்து, இப்பிரச்சினைக்கு முறையான தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், இது தொடர்பாக குறித்த சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை சுகாதார அமைச்சர் இதுவரை நிராகரித்து வருகின்றார்.

அதேநேரம், நாடளாவிய ரீதியில் உள்ள தமது உறுப்பினர்களுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும், அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் சங்கத்தின் பிரதம செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகந்ததாச தெரிவித்துள்ளார்.    


Zameera

குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்திற்கு

 


வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (10) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் மற்றும் கொள்முதல் நடைமுறைகளில் காணப்பட்ட முறைகேடுகள் காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இதனை அடிப்படையாகக் கொண்டே அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மாதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

அமைச்சர் குமார ஜயகொடி அரச அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற வழக்கு குறித்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்; கேள்வி எழுப்பவுள்ளனர்.

நிலக்கரி கொள்முதலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அண்மையில் வெளியான கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதத்தின் போது விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிக்க முடியும் என ஆளுந்தரப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இன்றைய விவாதத்தின் முடிவில் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Zameera

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல் - ஒருவர் உயிரிழப்பு

ஹோமாகம – மொரகஹஹேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து, தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம – மொரகஹஹேன பகுதியில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து நிகழ்வின் போது, மாணவர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியபோதே குறித்த மாணவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.