Our Feeds



Monday, February 9, 2026

SHAHNI RAMEES

முன்னாள் சிஐடி பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) கைது!


முன்னாள் சிஐடி பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) கைது!

Zameera

நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல.. - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

 

எதிர்க்கட்சியினரின் நோக்கம் பொய்களைக் கூறி, அரசாங்கமும் தங்களைப் போலவே தவறு செய்யும் ஒரு குழுவினர் என்ற சமூகக் கருத்தை உருவாக்குவதே என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

“அவர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொண்டு எங்களை விடச் சிறந்த மனிதர்களாக மாறுவதற்குப் பதிலாக, பொய்களைக் கூறி சத்தமிட்டு, நாங்களும் அவர்கள் செய்த தவறுகளைச் செய்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அதற்காகவே அவர்கள் வருடம் முழுவதும் பாடுபடுகிறார்கள்.


எமது நாட்டு மக்களுக்கு விக்ரமசிங்கக்கள், பிரேமதாசாக்கள் மற்றும் ராஜபக்சக்களின் 40-50 வருட கால ஆட்சி முறையே தெரியும். எனவே, அரசியல்வாதிகள் என்பவர்கள் திருடர்கள், பொய்யர்கள் மற்றும் உறவினர்களுக்குச் சலுகை வழங்குபவர்கள் (nepotism) என மக்கள் நினைக்கிறார்கள். அதன் காரணமாக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திலும் அப்படிப்பட்டவர்களே இருக்கிறார்கள் என அவர்கள் கருதுகிறார்கள். எங்களிடம் அப்படிப்பட்டவர்கள் இல்லை. நாம் சுயகட்டுப்பாட்டுடன் எம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்சியாகும்.”


ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்


Zameera

யோஷித ராஜபக்ஷ, டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு


 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.


இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் இன்று விசாரணைக்கு வந்தது.


பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.


பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ஆக்ஸ்வால்ட் பெரேரா, பிரதிவாதியான டெய்சி ஃபொரஸ்ட் விசாரணையைத் தாங்கும் அளவுக்கு மனரீதியாகத் தகுதியானவரா என்பது குறித்து கொழும்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி மூலம் கோரப்பட்ட நிபுணர் மருத்துவ அறிக்கை இன்னும் பெறப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


அதன்படி, தொடர்புடைய விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை வழக்கை விசாரிக்க வேறு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரினார்.


முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி, வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

Zameera

சாட்சியங்கள் நுணுக்கமான முறையில் அழிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ




 கடந்த கால ஆட்சிக் காலங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது தற்போது கடினமான காரியமாக மாறியுள்ளது என்றும், அதற்கான சாட்சியங்கள் நுணுக்கமான முறையில் அழிக்கப்பட்டுள்ளதாக அல்லது சிதைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊழல் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற கல்வி மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது:


“ஏதாவது ஒரு மோசடி அல்லது ஊழல் இடம்பெற்று சில மாதங்களில் அல்லது இரண்டு மூன்று வருடங்களில் ஒரு அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால், கிடைக்கப்பெறும் சாட்சியங்களின் அடிப்படையில் அந்த விசாரணைகளை மிக வேகமாக முன்னெடுத்திருக்க முடியும். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அதே குழுவினர் மேலும் 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பின்னரே எமக்கு அரசாங்கம் கிடைத்துள்ளது.”


அந்த நீண்ட காலப்பகுதியில், மோசடிகள் மற்றும் ஊழல்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை அழிப்பதற்கு அல்லது அவற்றை மறைப்பதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சில திறமையான விசாரணை அதிகாரிகளை இடமாற்றம் செய்து விசாரணை கட்டமைப்பை சீர்குலைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.


இதன் காரணமாக, மோசடி மற்றும் ஊழல்களைக் கண்டறிவது ஒரு எளிய செயல்முறை அல்ல என்றும், அது மிகவும் கடினமான மற்றும் சிக்கலான நடவடிக்கையாக மாறியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இன்று எதிர்க்கட்சியினரின் கூச்சல் கேட்கப்படுவதற்கு காரணம், விசாரணைகள் சரியாக முன்னெடுக்கப்படுவதாலேயே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Zameera

அனுராதபுரம் – தம்புத்தேகம கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி




 அனுராதபுரம் – தம்புத்தேகம கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி வெற்றி பெற்றுள்ளது.

இங்கு இடம்பெற்ற 17 உறுப்பினர்களுக்கான தேர்தலில் NPP (தேசிய மக்கள் சக்தி) சார்பிலேயே 17 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


சஜித்தின் சமகி ஜன பலவேகய , பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசிய கட்சி , திலித் ஜெயவீரவின் பதக்கம் உள்ளீட்ட எதிர்கட்சியினர் ஒரு ஆசனம் கூட வெல்லவில்லை.


அதற்கமைய, தம்புத்தேகம கூட்டுறவுச் சங்க தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றி பெற்றுள்ளனர்.


SHAHNI RAMEES

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

 



திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக

Zameera

அனர்த்தத்தால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 


தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார். 


அங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், மாடுகள், பன்றிகள், ஆடுகள், பிரொய்லர் கோழிகள் அழிக்கப்பட்ட பண்ணைகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். 


இந்த இழப்பீட்டுத் தொகைகளுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உலக வங்கி உதவியின் கீழ் இதற்காக ரூ.2.5 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


விலங்குகளை நோய்களில் இருந்து பாதுகாப்பதே இந்த தடுப்பூசி செயல்முறையின் நோக்கம் என்றும், இது சுமார் 2 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். 


மேலும் அனர்த்தங்களால் அழிக்கப்பட்ட பண்ணைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவும் வழங்கப்படும் என்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Zameera

அதிகரிக்கப்படும் தபால் கட்டணங்கள்


 இன்று (09) முதல் தபால் கட்டணங்களை அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்தப் புதிய கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

பொது மற்றும் வணிக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமில் இருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும், துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமில் இருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு முன்னர் வசூலிக்கப்பட்ட 30 ரூபா கட்டணம் தற்போது 50 ரூபாவாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக அனுப்பப்படும் தபால் பொருட்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் 110 ரூபாயில் இருந்து 130 ரூபாவாகவும், ஒரு அஞ்சல் அட்டையின் விலை 20 ரூபாயில் இருந்து 40 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இருப்பினும், சாதாரண பொதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் திருத்தப்படாது என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Zameera

ஆசிரியர் நியமன வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிப்பு


 பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பதற்கான வெளியிடப்பட்ட வர்த்தமானியில் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமக்கான நியமனங்களை உறுதிப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

நேற்று (08) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த சங்க உறுப்பினர்கள், 

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் என்று சொல்வதை விட ஏமாற்றப்பட்டவர்கள் என்றே சொல்ல வேண்டும். நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எமது உரிமைகளுக்காகப் போராடுகின்றவர்கள். 

அந்த வகையில் இந்த ஆண்டில் அரசாங்கத்தினால் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து மாகாணத்தையும் எடுத்து நோக்கும் போது கிழக்கு மாகாணம் மாத்திரம் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்வதாகக் கூறி அதிகளவான விளம்பரங்கள் விடப்பட்டாலும், உண்மை நிலவரம் இந்த அறிக்கையைப் பார்க்கும் போதே தெரிய வந்துள்ளது. 

அந்த அடிப்படையில் இந்த அறிக்கையின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான பாடநெறிகள் தவிர்க்கப்பட்டு மிகவும் குறைந்தளவிலான பாடநெறிகளே அதிலும் கலைப் பாடங்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டே இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக எதுவித போட்டிப் பரீட்சைகளுக்கும் உள்வாங்கப்படாமல் இருக்கின்றார்கள். ஓன்றிரண்டு பரீட்சைகள் தோற்றினாலும் குறைந்தளவிலான ஆட்சேர்ப்புகளே இடம்பெற்றுள்ளன. அத்துடன் பல பரீட்சைகள் இதுவரை நடாத்தப்படாமலும் இருக்கின்றன. 

2020 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரைக்கும் எந்தவித போட்டிப் பரீட்சைக்கும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தோற்ற முடியாதவாறான சூழ்நிலை இருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் அதிகளவான பாடங்கள் இருந்த போதிலும் விரிவுரையாளர்களின் கருத்திற்கிணங்கள் நாங்கள் குறிப்பிட்ட பாடங்களைத் தெரிவு செய்து கற்றும் அப்பாடங்களுக்கான எவ்வித ஆட்சேர்ப்பு முறைகளும் இல்லாமல் இருப்பதென்பது கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. 

குறிப்பிடட சில முக்கிய பாடங்களுக்கான பரீட்சைக்கான வாய்ப்புகள் இதுவரை எமக்கு வழங்கப்படவில்லை. நாங்கள் எதுவித விசேட சலுகைகளும் கோரவில்லை. எங்களுக்கான சம வாய்ப்பினையே நாங்கள் கோருகின்றோம். பல பரீட்சைகளுக்கு கட்டணங்கள் செலுத்தியுள்ள போதிலும் வேலைவாய்ப்புகள் எதுவும் காட்டப்படாத நிலையில் எந்த நம்பிக்கையில் பரீட்சைக்கு சமூகமளிப்பது. 

எங்களுக்காக ஆதரவு வழங்க வேண்டிய கிழக்கு மாகாண அதிகாரிகள் மௌனமாக இருப்பது ஏன் என்று எமக்குத் தெரியவில்லை. இது தொடர்பில் யாரிடம் முறையிடுவதென்று தெரியாத நிலையில் ஊடகங்களை நம்பி வந்துள்ளோம். 

நாங்கள் பரீட்சைகளைப் புறக்கணிக்கவில்லை. பரீட்சை எழுதுவதற்குத் தயாராக இருக்கின்றோம். கடந்த ஆறு வருடங்களாக அதற்கான வாய்ப்புகள் இல்லாமலே தவித்துக் கொண்டிருக்கின்றோம். எனவே உரிய அதிகாரிகள் இதற்கான காரணத்தை எமக்குத் தெரியப்படுத்தி பரீட்சைக்கான வாய்ப்புகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். 

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட அனைவருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். அவர்கள் எம்மைப் பொறுமையாக இருக்கும் படியாகக் கூறியிருந்தார்கள். நாங்களும் இதுவரை எதுவித எதிர்ப்பினையும் வெளிப்படுத்தாமல் இருந்தோம். ஆனால் தற்போது வெளிவந்துள்ள ஆசிரியர் ஆட்சேர்ப்பு சுற்றுநிருபமும் எமக்கு எதிராகவே இருக்கின்றது. இதன் காரணமாகவே நாங்கள் மனவேதனைக்குள்ளாகியிருக்கின்றோம். 

எமக்கு வெளிவந்த அறிக்கையும் முதலில் சிங்களத்தில் மாத்திரமே பெறப்பட்டது தற்போதே அதன் தமிழ் மொழி எமக்குக் கிடைத்துள்ளது. இதனால் எவருடனும் இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முடியவில்லை. துறந்த சுற்றுநிருபத்தின் மூலம் எமக்கான வாய்ப்புகள் அறவே இல்லை. 

நாங்கள் விசேட சலுகைகள் எதுவும் கேட்கவில்லை. போட்டிப் பரீட்சைகளுக்கான வாய்ப்புகளையே தருமாறு கேட்கின்றோம் என்று தெரிவித்தனர்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

Zameera

இலங்கையின் மனிதாபிமான திட்டத்திற்கு 22.4 மில்லியன் டொலர் உதவி

இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 


இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 


அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. 


கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அண்மைய தரவுகளின்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 216,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, போசணை, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 


கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவு சேதங்கள் 'டித்வா' புயலினால் ஏற்பட்டதோடு, இது நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்தது. 


அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்படி, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியாகும் போது புயல் காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர். 


புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பங்காளிகள், சர்வதேச மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையினதும், இருதரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளின் ஆதரவும் கிடைக்கிறது. 


பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள், மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன

 

Zameera

மோசமான வானிலை காரணமாக மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்பு


 மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள், நிலவும் மோசமான வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். குழு மீண்டும் கூடியவுடன் அதன் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது விரைவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்


அமைச்சரின் கூற்றுப்படி, எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.


அத்துடன், மாகாண சபைத் தேர்தல்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து கட்டம் கட்டமாக நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தயார்நிலையிலும் இல்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் தெரிவுக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.



இதேவேளை, நடைமுறையிலுள்ள சட்டக் கட்டமைப்பின் கீழ் தேர்தலை நடத்துவதாயின், தொகுதி எல்லை நிர்ணய அறிக்கை அங்கீகரிக்கப்படுவது கட்டாயமானது என ‘பெபரல்’ (PAFFREL) அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.



50% தொகுதி அடிப்படையிலும், 50% மேலதிகப் பட்டியலிலிருந்தும் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் புதிய முறையை நடைமுறைப்படுத்துவதாயின், எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைய வேண்டும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.



இந்தச் செயன்முறைகள் காரணமாக தேர்தல் ஜூன் அல்லது ஜூலை மாதம் வரை ஒத்திவைக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளினதும் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்து தற்போது பல வருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Zameera

கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுத்து வருகின்றன


 கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுத்து வருகின்றன. 


கல்வித் துறையில் மனிதவள முகாமைத்துவம் தொடர்பாக கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கல்வித் துறையில் மனிதவளத்தை ஏமாற்றமடையச் செய்யும் கொள்கை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. 


ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் விவகாரத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட விதம் போலவே இந்த விவகாரத்திலும் அரசாங்கம் நடந்து வருகின்றது. 


அதிபர் சேவையின் 3 ஆம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2019 இல் நடைபெற்றது. முதல் சுற்றில் 1858 பேரும், இரண்டாவது சுற்றில் 4800 பேரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 


இருப்பினும், மேலும் 1216 பேர் தங்கள் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் சேவையில் சேரத் தயாராக உள்ளனர். ஆனால் தற்போதைய அரசாங்கம் இவர்களை நியமிக்காமல் புதிய போட்டிப் பரீட்சையை நடத்தி அவர்களை ஆட்சேர்ப்பு செய்யவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


3 ஆம் தர அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து இன்னும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படாத தரப்பினரை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார். 


அரசாங்கத்திடம் திறமையான மற்றும் முறையான திட்டமொன்று இல்லாததன் காரணமாக, கல்வித் துறையில் பாரிய சரிவு ஏற்பட்டுக் கொண்டு வருகின்றன. 


கல்வி அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை கல்வியை ஆபாசமயப்படுத்தியதால் கல்விச் சீர்திருத்தங்கள் நாசமடைந்து போயுள்ளன. பிரதமர் ஒன்றைச் சொல்கிறார், ஜனாதிபதி வேறொன்றைச் சொல்கிறார். இவ்வாறு இருவரும் முரணான கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 


ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒன்றுக்கொன்று முரண்பாடான கருத்துக்களால், கல்வித் துறையில் பிள்ளைகளும் மனித வளங்களுமே பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. 


கல்வித் துறைக்கு ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்பு கடுமையானது என்பதால், மேலும் இங்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது, அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் ஏலவே சித்தி பெற்றவர்களை இணைத்துக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Sunday, February 8, 2026

Zameera

நாடு முழுவதிலும் 4000 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் நீதிமன்றில்!


 சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 


1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டத்திற்கு அமைய இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


அதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. 


அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 


சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், பாலியல் உறவுக்காகச் சிறுவர்களை வாடகைக்குப் பெறுதல் அல்லது பணியில் அமர்த்தல், கொடுமைக்கு உட்படுத்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.