Our Feeds



Friday, July 3, 2026

Zameera

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் குறைப்பு


 லாஃப்ஸ் சமையல் எரிவாயு நிறுவனமும் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. 


இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1280 ரூபாவால் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. 


இதற்கமைய, 6245 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4965 ரூபாய் ஆகும். 


அதேபோல், 2500 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 512 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1988 ரூபாவாகும்.

Zameera

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு


 லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று (03) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. 


இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 4765 ரூபாயக காணப்பட்ட 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4465 ரூபாய் ஆகும். 

அதேபோல், 1910 ரூபாவாக நிலவிய 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 118 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1792 ரூபாவாகும். 

890 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 835 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
Zameera

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கார் விபத்து : இருவர் காயம்

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின், ராவணா எல்ல பகுதிக்கு கீழே கார் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 


இந்த விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


விபத்து இடம்பெற்ற போது பெண்ணே காரைச் செலுத்தியுள்ளார் என்றும், விபத்துக்குள்ளானவர்கள் திஸ்ஸமஹாராமய பகுதியைச் சேர்ந்த இருவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 


சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Zameera

தவணை முறையில் அரிசி வழங்கப்படவுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மையல்ல - அமைச்சர் வசந்த சமரசிங்க


 (செ.கவிஷனா)


நாட்டில் தவணை முறை அடிப்படையில் அரிசி வழங்கப்படப் போவதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று இலங்கை வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்


அரச சேவை முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 28ஆவது வருடாந்த மாநாடு  கோட்டை ஓய்வுபெற்ற இராணுவத்தினர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


தற்போது அரசாங்கக் களஞ்சியசாலைகளில் பெருமளவிலான நெல் இருப்பு உள்ளதால், அடுத்த போக நெல் அறுவடையைச் சேமிக்க வேண்டுமாயின் தற்போதுள்ள நெல் இருப்புகளை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.



இதன் காரணமாக, களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை அரிசியாக்கி, அதனை அஸ்வசும நலன்புரி திட்ட பயனாளிகளுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் சலுகை அல்லது எளிய முறையில் விநியோகம் செய்ய முடியுமா என்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது, இது விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுத் தருவதற்கும், நுகர்வோருக்குக் குறைந்த விலையில் அரிசியை வழங்குவதற்கும் எடுக்கப்படும் ஒரு சமநிலையான முயற்சியாகும்.


இந்த எளிய விநியோக முறையைத் தவறாகப் புரிந்து கொண்டு அல்லது வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக, அரசாங்கம் தவணை முறையில் அரிசி தரப்போகிறது என்று சிலர் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.


விவசாயிகளையும், நுகர்வோரையும் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கம், எஞ்சிய அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது மற்றும் அரிசி மா சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.


மேலும், விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்து அவற்றை களஞ்சியப்படுத்திய பின்னர் தங்களுக்கு தேவையான பெரும் இலாபத்துக்கு விற்கும் சில நெல் ஆலை உரிமையாளர்கள் நாட்டில் காணப்படுகின்றனர்.


இவ்வாறு மக்களின் உழைப்பை சுரண்டி சொகுசு வாழ்க்கையை வாழும் விடயம் குறித்து அரசாங்கம் தலையிடுவதை விரும்புவதில்லை. கடந்த காலங்களில் 260 ரூபாவுக்கு விற்கப்பட வேண்டிய கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளை 400 ரூபா வரை அதிக விலைக்கு விற்று நுகர்வோரை இவர்கள் சிரமத்துக்கு உள்ளாக்கியதால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.


சந்தையில் ஏற்பட்ட இந்த விலை ஏற்றத்தை கட்டுபடுத்தவும் நுகர்வோருக்கு சாதகமான விலையை உருவாக்கவும் கீரி சம்பாவிற்கு மாற்றீடாக ஒரு குறிப்பிட்ட அளவு அரசியை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதற்காக ஒரு மாத காலத்துக்கு மாத்திரம் அரிசி இறக்குமதி மீதான கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக தற்போது சந்தையில் அரிசி விலை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான அரிசி இருப்பு நாட்டில் காணப்படுகிறது. மேலும் கடந்த காலங்களில் நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் சதொச ஆகிய பொது நிறுவனங்கள் பல பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கி இருந்தபோதிலும் தற்போதைய அரசாங்கம் நெல் கொள்வனவுக்காக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் 6000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்றார்.

Zameera

தமிழக முதலமைச்சருடன் தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் சந்திப்பு


 இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசமான ஈழத்தமிழ்த் தேச மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள், இன்று (03) சென்னையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர். 


இச்சந்திப்பின் போது ஈழத்தமிழ் மக்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய எழுத்துமூலமான கடிதம் ஒன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 


பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். 


இக்கலந்துரையாடலின் போது, ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகள். 


இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு, தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம். 


ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியதன் தேவை. 


இந்திய – ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள். 


இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன. 


இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனநாயகத் தமிழர் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான கே. வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், உத்தியோகபூர்வ பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ், கொள்கைப் பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 


அத்துடன் தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசும் இந்த சந்திப்பில் இணைந்திருந்தார்.

Zameera

கைதான வசந்த கரன்னாகொட கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு

 

இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (03) கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி, அத்மிரல் ஒஃப் த ப்ளீட் (Admiral of the Fleet) வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். 


முன்னாள் கடற்படைத் தளபதி, சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று முற்பகல் 10.05 மணியளவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அந்த ஆணைக்குழு வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 


2006ஆம் ஆண்டு கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவுக்கு கடற்படை அதிகாரிகளை இணைத்துக்கொள்ளும் போது, உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்காத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவை அந்தப் பதவிக்கு இணைத்துக்கொண்டமை அவர் மீதான ஒரு குற்றச்சாட்டாகும். 


அக்காலத்தில் காணப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்குப் புறம்பாக, அரசாங்கப் பணத்தைச் செலவழித்து யோஷித ராஜபக்ஷவுக்கு பிரித்தானிய அரச கடற்படைக் கல்லூரியில் பயிற்சிப் பாடநெறி ஒன்றில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தமை மற்றைய குற்றச்சாட்டாகும்.

Zameera

ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.!


 ஈஸ்டர் விசாரணைகளை முடக்குவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்; அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.! 


- பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்



ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் மற்றும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் எத்தகை உயரிய அந்தஸ்தில், பதவியில் அல்லது பொருளாதார பலத்துடன் இருந்தாலும் சரி, அவர்கள் தராதரம் பாராது கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.


நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;


"ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் காரணமாக முழு நாடும் பேரழிவைச் சந்தித்தது. குறிப்பாக, கிறிஸ்தவ மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, உயிர்களையும் உடமைகளையும் இழந்தனர். கைகளையும் கால்களையும் இழந்து, இன்னும் ஆறாத வடுக்களோடு அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், இந்தத் தாக்குதலால் முஸ்லிம் சமூகம் முழு நாட்டிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. காத்தான்குடி பிரதேசம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.


அன்று ஏற்பட்ட சூழ்நிலையால் எங்களது ஆளுநர் பதவிகள், அமைச்சர் பதவிகளை எல்லாம் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டங்களைச் சந்தித்தோம். கடைகள் மூடப்பட்டன. வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் அபாண்டமாக அனுபவித்தது.


தற்போது  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளை முடக்குவதற்குக் கூட சிலர் முயற்சிக்கிறார்கள், அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


கடந்த காலங்களில் இந்தத் கொடூரத் தாக்குதலுக்கு யாரெல்லாம் பொறுப்புக்கூற வேண்டுமோ, அவர்கள் கண்டறியப்பட வேண்டும். இந்தத் தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற நற்சான்றிதழை (Certificate) இந்தச் சமுதாயம் பெற வேண்டிய தேவையுள்ளது. எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அந்தப் பாரிய இழிவிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுபட வேண்டும்.


எனவே, அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த நேர்மையான விசாரணைகளுக்கு முஸ்லிம் சமூகம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளது. குற்றவாளிகளின் பதவி, பட்டம் அல்லது அந்தஸ்தைப் பார்க்காமல், அவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, உரிய விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், முஸ்லிம் சமூகத்திற்கு விடிவும் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மேலும் தெரிவித்தார்.

Zameera

சுகாதார சேவைக்கு 2652 நியமனங்கள்


 சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில், சுகாதாரப் பணி உதவியாளர்கள், அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் மற்றும் சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


நாட்டின் இலவச சுகாதார சேவை அமைப்பின் தரத்தை மேம்படுத்துதல், வைத்தியசாலைக் கட்டமைப்பை மேலும் திறம்படச் செய்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லுதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


இதற்கமைய, மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நீண்ட காலத்திற்குப் பின்னர் சுகாதாரப் பணி உதவியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் முதற்கட்ட சுகாதாரப் பணி உதவியாளர்களாக 627 பேருக்கு நாளை (04) நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. 


சுகாதாரப் பணி உதவியாளர் நியமனங்களை பல கட்டங்களின் கீழ் வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 


ஜூலை 18 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக 600 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும், ஒகஸ்ட் 01 ஆம் திகதி மூன்றாம் கட்டமாக 762 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கும், அதேபோன்று 295 கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்களுக்கும் மற்றும் 121 சிற்றூழியக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 


அத்துடன், ஜூலை 16 ஆம் திகதி 247 அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு


 பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்‌ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (3) நிராகரித்துள்ளது.


இந்தக் குற்றச்சாட்டை சவாலுக்கு உட்படுத்தி யோஷித ராஜபக்‌ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட சீராய்வு மனுவை பரிசீலித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.


அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  

SHAHNI RAMEES

அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்க, ஈரான் பறந்தார் ரவூப் ஹக்கீம்!


படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்

SHAHNI RAMEES

பிள்ளைகள் போதைக்கு அடிமையா? — பெற்றோரே வீட்டில் சோதிக்கும் புதிய வசதி விரைவில்

 

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு
Zameera

கொழும்பு பிரதேச செயலகங்களில் கார்டு கட்டண வசதி அறிமுகம்


 "டிஜிட்டல் மயமாக்கல்" மூலமாக அரச சேவைகளை மிகுந்த வினைத்திறனும், வெளிப்படைத்தன்மையும் மிக்க இலகுவான முறையில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தைப் பலப்படுத்துவதுடன், அரச நிறுவனங்களில் வங்கி அட்டைகள் (POS இயந்திரங்கள்) மூலம் பணம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு, வியாழக்கிழமை (2) திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்றது.


இதற்கமைய, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள பதிவாளர் பிரிவு மற்றும் 4 ஆம் மாடியில் அமைந்துள்ள வாகன வருமான அனுமதிப்பத்திரப் பிரிவு ஆகியவற்றில் POS இயந்திரங்களை ஆரம்பித்து வைத்த பிரதமர், அடையாள நிமித்தமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.


கொழும்பு மாவட்டச் செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், இலங்கை வங்கியின் (BOC) நிதி மற்றும் தொழில்நுட்ப அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம், கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக, மக்களிடமிருந்து கட்டணங்களை அறவிடும் சந்தர்ப்பங்களில் கிரெடிட் (Credit) மற்றும் டெபிட் (Debit) அட்டைகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பான முறையில் பணத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

SHAHNI RAMEES

டெங்கு அபாயம்: ஹோமாகம டிப்போவுக்கு 25,000 ரூபா அபராதம்!

 

ஹோமாகம பேருந்து டிப்போ வளாகத்தினுள் டெங்கு