Our Feeds



Tuesday, March 25, 2025

Zameera

இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழு இலங்கை வருகை


 சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களைச் சந்தித்து அவர்களின் விடுதலைக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட குழுவொன்று இலங்கை வரவுள்ளது.



இராமேஸ்வரத்தில் உள்ள பாரம்பரிய இந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் வி.பி. சேசுராஜா மற்றும் நான்கு உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து கொழும்புக்கு வர உள்ளனர்.


இந்த குழு, பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை ஆய்வு செய்ய உள்ளதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோருவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.


எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி வரை இந்த குழு இலங்கையில் தங்கியிருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

துப்பாக்கிச் சூடுகள் நடந்தாலும், தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை! - பாதுகாப்பு பிரதி அமைச்சர்

 


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறும் துப்பாக்கிச்

SHAHNI RAMEES

'பிரிட்டன் தடையால் எனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை' - கருணா Opentalk




பிரிட்டன் விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு

SHAHNI RAMEES

மோடியுடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும் ஒப்பந்தங்களை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் - முன்னணி சோசலிச கட்சி

 


இலங்கைக்கு வர இருக்கும் இந்திய பிரதமரின்

SHAHNI RAMEES

மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ வீட்டை விட்டு வெளியேற்றுவோம் என்று கூறியதை அரசாங்கம் மறந்து விட்டது.

 

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் தாக்கல்
SHAHNI RAMEES

இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட32 சந்தேக நபர்கள் கைது!

 

வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமான மார்ச் 3ஆம் திகதி
SHAHNI RAMEES

தேசபந்துவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

 

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு,
SHAHNI RAMEES

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்! - ரவூப் ஹக்கீம்

 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வேட்பு
SHAHNI RAMEES

பிரிட்டன் எங்கள் யுத்தவெற்றிவீரர்களிற்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. - பொங்கி எழுந்த அலி சப்ரி

 


பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும்

Zameera

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


 நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழைக்காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 

 
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 
 
நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற் கொண்டு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு நாளை மறுதினம் முதல் இருநாள் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
Zameera

பிற்பகல் 2 மணிக்கு பிறகு இடியுடன் கூடிய மழை


 மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (25) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர்வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தி உள்ளது.

Zameera

இலங்கையில் “ஸ்டார்லிங்க்” இணைய சேவையை இடைநிறுத்த நடவடிக்கை




 இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தரவு மற்றும் தகவல் தொடர்பு தகவல்களைப் பாதுகாப்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும் வரை இந்த செயல்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.


“ஸ்டார் லிங்க்” இணைய சேவையின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்படும் வரை, இணைய சேவையை நாட்டில் நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் அனுமதி வழங்காது என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.

Monday, March 24, 2025

SHAHNI RAMEES

ஐக்கிய மக்கள் சக்திக்கு யாருடனும் இணைய வேண்டிய தேவை இல்லை! - சஜித்


ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த