
Monday, May 4, 2026

இலங்கை - மாலைதீவு ஜனாதிபதிகளுக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை
இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாலைதீவு ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வைத் தொடர்ந்து, இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
இங்கு மாலைதீவு ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காகத் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 61 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் இடம்பெறும் முகமது முய்சுவின் இந்த இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்களிப்பு, நம்பிக்கை மற்றும் நட்புறவைப் பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல் எட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகள் கிடைக்கும் வகையில் பொருளாதார, கலாசார மற்றும் சமூக உறவுகள் உள்ளிட்ட பன்முகக் கூட்டாண்மையை மேலும் வளர்ப்பது மற்றும் பன்முகப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் இங்கு விரிவாகக் கலந்துரையாடினர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும், மாலைதீவு அரசாங்கத்தின் சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இர்திஷாம் ஆதம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான ஜனாதிபதியின் முதன்மைச் செயலாளர் முகமது நசீர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஹக்கிம், காரியப்பரின் மனு விசாரணையின்றி நிராகரிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அதன் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதாக உயர் நீதிமன்றம் இன்று (04) அறிவித்துள்ளது.
தங்கள் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்பதை பாராளுமன்றத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி அவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
முன்வைக்கப்பட்ட இந்த மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், அதனைத் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிப்பதற்கு தீர்மானித்தது.

முல்லைத்தீவு கடலில் காணாமல்போன மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து இருந்து நேற்று முன்தினம் (2) காலை 10 மணியளவில் படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றிருந்தனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பாத நிலையில், அந்த பகுதி மீனவர்கள் தேடுதல் பணியினை முன்னெடுத்தனர்.
எனினும் அந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை என்பதுடன் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் இரண்டாம் நாளாக இன்றும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த இரண்டு மீனவர்களும் சென்ற படகு நடுக்கடலில் இயந்திர கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதன்காரணமாக நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த இருவரையும் தேடிச் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

இன்றைய வானிலை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
a

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்

மீனவர்கள் இருவர் மாயம்
நேற்று முன்தினம் (2) காலை ப10 மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் கடற்றொழிலுக்காக குறித்த 2 மீனவர்களும் சென்றுள்ளனர்.
எனினும் நேற்று வரை அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதேநேரம் பிரதேச மீனவர்கள் இணைந்து படகுகளில் சென்று குறித்த கடற்பகுதியில் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் அந்த தேடுதல் முயற்சி தோல்வியடைந்ததுடன், இன்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-





