Our Feeds



Thursday, April 2, 2026

Zameera

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்கமால் இருக்க முடியாது


பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேச செலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாதது அவர்களின் பெற்றோரின் தவறு என்பதால், அதிகாரிகள் அந்த விஷயத்தில் ஒதுங்கியிருக்க முடியாது.

பதிவுத் திணைக்களத்தின் மூலம் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடைமுறை முடியும் வரை, அத்தகைய அனைத்துப் பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்க்கப்பட வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ் இல்லையென்ற காரணத்திற்காக எந்தவொரு பிள்ளையையும் பாடசாலையில் சேர்க்க மறுக்க முடியாது என அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு முதலாம் தரத்திற்குச் சேர வேண்டிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் , பிறப்புச் சான்றிதழ் அல்லது பிற ஆவணங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வகுப்பறைகளில் இருக்க வேண்டும்.

கல்வி கற்பதற்கும் வகுப்பறையில் இருப்பதற்கும் ஒரு பிள்ளைக்கு இருக்கும் உரிமைக்கு பிறப்புச் சான்றிதழ் ஒரு தடையாக இருக்கக்கூடாது.

ஏற்கனவே மூன்று மாதங்கள் தாமதமாகியுள்ள நிலையில், அந்தந்த வலயங்களில் உள்ள முதலாம் தரத்திற்கு தகுதியான அனைத்துப்பிள்ளைகளும் பாடசாலைக்குச் செல்வதை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.


Zameera

நிலக்கரி மோசடி: ஜனாதிபதி மீது நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு


 நிலக்கரி மோசடியில் ஈடுபட்டவர்களை ஜனாதிபதி பாதுகாக்க முற்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். 


கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். 


நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை ஜனாதிபதி ஒரு மோசடியாகக் கருதவில்லை என்றால், ஜனாதிபதியும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். 


இந்த அரசாங்கத்தின் கொள்கையும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையைப் போன்றதே. ஒரு நபர் மற்றவரின் பையைத் திருடிவிட்டு இதோ திருடன், இதோ திருடன் என்று கூச்சலிட்டபடி ஓடுவார். 


கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த திருடனைப் பிடிக்க திருடனுக்குப் பின்னால் ஓடுவார்கள். ஆனால் இறுதியில் பார்த்தால், யார் மற்றவரை திருடன் என்று சொன்னாரோ அவரே உண்மையாக திருடியிருப்பார். 


இந்த அரசாங்கமும் அப்படித்தான். இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நிலக்கரி மோசடி செய்தவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதை நாம் அனைவரும் காண்கிறோம். 


ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றையும், அவரது நடத்தையையும், அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது, இந்த நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி இருப்பது தெளிவாகிறது. 


ஏனெனில், சம்பந்தப்பட்ட நபர் தற்போதைய ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்திலேயே அமைச்சிற்கு கொண்டு வரப்பட்டார். 


அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவர் மீது பின்னர் ஒரு மோசடி தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நிகரான ஒரு மோசடியே தற்போதைய நிலக்கரி கொள்வனவிலும் இடம்பெற்றுள்ளது. 


ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்தபோது அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை, தற்போது அமைச்சரவை அமைச்சராக்கி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, தொடர்ந்தும் அவரைப் பாதுகாக்கிறார்கள் என்றால் - இது ஜனாதிபதிக்கு ஒரு மோசடியாகத் தெரியவில்லை என்றால் - இந்த மோசடியின் பின்னணியில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களே இருக்கிறார் என்பது மிகத் தெளிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Zameera

அர்ச்சுனா எம்.பி உட்பட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல்

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக
வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


நிகழ்நிலை காப்பு சட்டத்தின் (Online Safety Act) கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்றைய தினம் (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 


இதன்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வைத்தியர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். 


எனினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய விசாரணையில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட இருவரையும் கட்டாயம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.


-யாழ். நிருபர் பிரதீபன்-

SHAHNI RAMEES

பிள்ளையான் விளக்கமறியலில்...

 


தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத்

Zameera

கலடுவாவையில் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இன்று (02) தெரிவித்தார். 

வெப்பமான வானிலையுடன் நீரின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் நீர் நுகர்வு அதிகரிப்பு காரணமாக, குடிநீர் உற்பத்தியை எதிர்காலத்தில் ஓரளவு கட்டுப்படுத்த நேரிடும் என்றும் அவர் கூறினார். 

இதேவேளை, லபுகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 50 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
 

Zameera

ஈரான் போரின் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்த வேண்டும்


ஈரான் மீதான போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வலியுறுத்தியுள்ளார். 

“இராணுவ வழிமுறைகளால் ஒரு பிரச்சனைக்கு தீர்வை காண முடியாது. மோதல்கள் தீவிரமடைவது இரு தரப்புக்கும் நலன் பயக்காது. சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் மேலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் முயற்சிக்க வேண்டும் என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Zameera

வெற்றிக்கு அருகில் அமெரிக்கா – டொனால்ட் ட்ரம்ப்


ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட போர் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாக நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்தினார். 

‘‘ஈரானுக்கு எதிரான போர் முடிவடையும் தருவாயில் உள்ளது. நாங்கள் இதை முடிக்கப் போகிறோம். மிக வேகமாக முடிக்கப் போகிறோம். நாங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம். ஈரான் ராணுவத்தை நசுக்க வேண்டும். ஈரானிய மதகுருமார்களின் அரசு பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு அளிக்கும் ஆதரவை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்த போரில் அமெரிக்கா இணைந்தது. இந்த முக்கிய நோக்கங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த நான்கு வாரங்களில் நமது ஆயுதப் படைகள் போர்க்களத்தில் விரைவான, தீர்க்கமான, மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதுபோன்ற வெற்றிகளை இதற்கு முன் மிகச் சிலரே கண்டிருக்கிறார்கள்.

ஈரானில் உள்ள அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டுவிட்டனர். அடுத்த இரண்டு முதல் மூன்ற வாரங்களில் அவர்கள் இருக்க வேண்டிய கற்காலத்துக்கே அவர்களை திரும்ப அழைத்துச் செல்லப் போகிறோம். அமெரிக்க பேச்சுவார்த்தையில் ஈரான் தீர்வை எட்டாவிட்டால், அவர்களின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் நாங்கள் தாக்குவோம். 

எல்லா வாய்ப்புகளும் எங்களிடம் உள்ளன. அவர்களிடம் (ஈரானிடம்) எதுவும் இல்லை. அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் அரபு நாடுகள் காயப்படவோ அல்லது தோல்வியடையவோ நான் அனுமதிக்க மாட்டேன்’’ என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

SHAHNI RAMEES

ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி

 


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்,

SHAHNI RAMEES

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னாள் CEO கபில சந்திரசேன மீளவும் விளக்கமறியலில்....

 

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம்
SHAHNI RAMEES

கொத்மலையில் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வேன் விபத்து! - ஐவர் படுகாயம்!

 


கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் ஒரே குடும்பத்தைச்

Zameera

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!


போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். 


வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்களும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். 


அவர்களிடம் இருந்து 1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. 


கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


-வவுனியா தீபன்-

Zameera

ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் தாக்குதல் தொடரும் - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை


 ஈரான் மீது அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை ட்ரம்ப் வெளியிடுவதாக கூறியிருந்தார். அதன்படி வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: ஈரான் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்:

ஈரானில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம்.ஈரான் கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆயுதப்படைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் அவர்களிடம் எரிசக்தி நிலையங்களை ஒவ்வொன்றாக தாக்க உள்ளோம். ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்காக்கு எண்ணெய் தேவையில்லை. அமெரிக்கா தனது ஆற்றல் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Zameera

பஹ்ரைனில் உள்ள அமேசானின் கம்ப்யூட்டிங் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது


 பஹ்ரைனில் உள்ள அமேசானின் கிளவுட் கம்ப்யூட்டிங் செயல்பாடு மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த செய்தியை ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்தும் நிறுவன வளாகத்தில் ஏற்பட்ட தீயை பொது பாதுகாப்பு குழுக்கள் அணைத்து வருவதாக பஹ்ரைனின் உள்துறை அமைச்சு முன்னதாக தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட நிறுவனம், உயிரிழப்புகள் அல்லது சேதத்தின் அளவு குறித்த விபரங்களை அமைச்சிற்கு உடனடியாக வழங்கவில்லை.

ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களைத் தாக்கப்போவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் அச்சுறுத்திய ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.