Our Feeds



Monday, September 14, 2026

Zameera

இது ஆரம்பம் தான் இனி கைதுகள் தொடரும் - ஜனாதிபதி

 

(இராஜதுரை ஹஷான்)Executive Branch


எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சுயாதீனமான முறையில் தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதுகள் இடம்பெறுவதையிட்;டு ஊழல்வாதிகள் அணி கலக்கமடைய தேவையில்லை. இது ஆரம்பம் தான் இனி கைதுகள் தொடரும். ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் எதிர்கால தலைமுறையினர் ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


நொச்சியாகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


ஜனாதிபதி அங்கு மேலும் தெரிவிக்கையில்,


ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் திணறுகிறார்கள். கூட்டங்களை நடத்துகிறார்கள். ஊழல்வாதிகளை கைது செய்வதிலும் வரையறையுள்ளது என்று குறிப்பிடுகிறார்கள்.


 ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணைக்கு அமைவாகவே நான் செயற்படுகிறேன். ஊழல் குற்றத்துக்காக மகன் சிறைச் சென்றுள்ளார் என்று அழுது புலம்புவது பயனில்லை. அரச நிதியை கொள்ளையடிக்க கூடாது என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்க வேண்டும்.


ஊழல்வாதிகளை கைது செய்யும் போது நான் அரசியல் பழிவாங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேக்காவும் நானும் ஒரே ஹோட்டலில் இருந்தவாறு தேர்தல் முடிவுகளை பார்த்துக் கொண்டிருந்தோம். முடிவுகள் வெளியாகி முடிந்தவுடன் அந்த ஹோட்டலை இராணுவத்தினர் சுற்றிவளைத்தார்கள். சரத் பொன்சேக்காவும் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.


அப்போதைய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டியதற்காக ஊடக நிறுவனம் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அரச அதிகாரிகள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார்கள்.பலர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார்கள்.இதுதான் அரசியல பழிவாங்கல்.


எவரையும் பழிவாங்க வேண்டிய தேவை எனக்கு கிடையாது. அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சுயாதீனமான முறையில் தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைதுகள் இடம்பெறுவதையிட்;டு ஊழல்வாதிகள் அணி கலக்கமடைய தேவையில்லை. இது ஆரம்பம் தான் இனி கைதுகள் தொடரும்.Politics


வெளிநாடுகள் தலைமறைவாகியுள்ள ஊழல்வாதிகள் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இராஜதந்திர மட்டத்தில் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டுமாயின் ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் எதிர்கால தலைமுறையினர் ஊழலற்ற அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்றார்.

Zameera

“தமிழினப் படுகொலையை ஏற்க சர்வதேசம் தயக்கம்” – கஜேந்திரகுமார்


 (நமது நிருபர்)



கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து வருகின்றது என்று தமிழ்த் தேசியப்பேரவையின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.


தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பட்டால் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரி நேற்று முன்னெடுக்கப்பட்ட பேரணியின் இறுதியில் நல்லூர் கிட்டுபூங்காவில் 'தமிழ் மக்களின் நீதிக்கான குரல்' எனும் தொனிப்பொருளில் உள்ளகப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்கின்றோம், சர்வதேச விசாரணையை ஐ.நா.பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிரகடனக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,


2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் இனப்படுகொலையுடன் மௌனிக்கப்பட்டது. அன்றிலிருந்து இனப்படுகொலை நடைபெற்றமைக்கான சாட்சியங்களை எத்தனையோ இடங்களில் வெளிப்படுத்தியும் தமிழினப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச சமூகம் ஏற்க மறுத்து வருகிறது.Astronomy



எமது தாயகத்தில் தமிழினத்தை இலக்கு வைத்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையொன்று அரங்கேற்ற ஆரம்பித்ததை அடுத்தே ஆயுதப்போராட்டத்துக்கு தள்ளப்பட்டோம். அதன்பின்னர் முள்ளிவாய்க்காலில் அந்த இனப்படுகொலை உச்சமடைந்து தற்போதும் நீடித்துக்கொண்டிருக்கின்றது.  இதனை ஆதராங்களுடன் வெளிப்படுத்தியுள்ளபோதம் சர்வதேசம் ஏற்றுக்கொள்வதற்கு தயங்குகின்றது.


கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளைத்தவிரவும் ஏனைய தரப்பினர் எந்ததெந்த இடங்களிலெல்லாம் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது ஒரு இனப்படுகொலை என்பதை எங்கெங்கெல்லாம் தவிர்க்கலாமோ தவிர்த்துக்கொண்டு வருகின்றார்கள்.  அப்படியாதொனரு சூழலில் தான் செம்மணியில் அரங்கேற்றப்பட்ட படுகொலையின் சாட்சியங்களும், ஆதாரங்களும் வெளிவர ஆரம்பித்துள்ளது.


1996ஆம் ஆண்டு பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் தொடர்புடைய இராணுவச் சிப்பாய்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் கோவம் கொண்டு தான் செம்மணியில் 600இற்கும் அதிகமான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்ற விடயத்தினை வெளிப்படுத்தினார்கள்.


அவர்கள் அந்த தகவலை வெளியிட்டமைக்கு காரணம், அரசின் ஆணையின் பிரகாரம் தாங்கள் கொலைகளை செய்தபோதும் அரசு தங்களை காப்பாற்றவில்லை என்ற கோவமாகும்.  அவர்கள் விடயத்தினை வெளிப்படுத்தியபோதும் அன்றிலிருந்து இன்றுவரையில் செம்மணி விடயத்தினை மூடி மறைப்பதற்கே அத்தனை சிங்கள அரசுகளும் நடவடிக்கைகளை எடுத்திருந்தன.


பின்னர், கட்டட நிர்மாணத்திற்கான நடவடிக்கைகளின் போது எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. கிருபாகரன் அதனை கண்டறிந்து எம்மைத்தொடர்பு கொண்டு விடயங்களை கூறினார். அதன்பின்னர் நாம் ஊடகங்களின் ஊடாக வெளிப்படுத்தினோம். கிருபாகரன் பொலிஸாரிடத்தில் இந்த விடயத்தினை முறைப்பாடு செய்வதற்கு முனைந்தபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்பதற்கு மறுத்தார்கள். ஆனாலும் எம்மால் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்ட அழுத்தங்கள் தற்போது அந்தப்பகுதியில் 600 எலும்புக்கூடுகளை கண்டறிவதற்கு வழிவகுத்துள்ளது.


எமது தேசத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது என்று நாங்கள் கூறிக்கொண்டு வந்தபோது எம்மவர்களிலேயே ஒருசிலர் இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை என்றே கூறினார்கள். ஆனால் செம்மணி இனப்படுகொலை நடைபெற்றுள்ளமைக்கான சான்றாதாரமாக மாறியிருக்கின்றது.


அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் சமாதான உடன்பாடு எட்டப்படுகையில் அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு போர் நடைபெற வேண்டும் என்று அழுத்தமளித்து இராணுவ ஆட்சேர்ப்புக்கு உதவிய ஜே.வி.பி.யினர் தான் தற்போது ஆட்சியில் இருக்கின்றார்கள்.


ஜே.வி.பியின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க, ஆட்சிக்கு வந்ததன் பின்னர் போருடன் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கான எந்தவொரு இராணுவ சிப்பாயும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று பல இடங்களில் கூறியுள்ளார்.



அத்தகைய தலைவரின் ஆட்சிக்காலத்தில் தான் செம்மணியில் எலும்புக்கூடுகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. அதேநேரம், சிங்கள மக்கள் இந்த தலைவரின் அரசாங்கத்தினர் நீதித்துறையை அரசியல் மயப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்கள்.Politics


ஆகவே உள்நாட்டின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், படைவீரர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று வலிந்து நிற்கின்ற நிலையிலும் சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றின் ஊடாகவே செம்மணி படுகொலைகள் உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்றார்.


Zameera

சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டவுடன் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

 


(இராஜதுரை ஹஷான்)


பழைய தேர்தல் முறைமை  குறித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் இன்று அதே தேர்தல் முறைமையின்  கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.நாட்காட்டியைத் தேர்ந்தெடுங்கள்


கம்பஹா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரத்தில் கூட்டத்தை நடத்தினார்கள். அந்த மேடையில் சகல ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்தார்கள். கடந்த காலங்களில் ராஜபக்‌ஷர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் மீண்டும் மஹிந்தவை தஞ்சமடைந்துள்ளார்கள்.



இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவே. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவார்கள்.கடந்த காலங்களில் இவர்கள் தமது சுய நல தேவைகளுக்காகவே அரசியல் செய்தார்கள். தற்போது மீண்டும் தமது சுயநல தேவைகளுக்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள்.


மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். 2017 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான்  மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது.


பழையத் தேர்தல் முறைமை  குறித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் இன்று அதே தேர்தல் முறைமையின்  கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்.


முறையற்ற மற்றும் மோசடியான பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் முறையற்ற அரச நிர்வாகமே தோற்றம் பெறும். தேர்தல் முறைமைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்படும் என்றார்.

Zameera

பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

 


(இராஜதுரை ஹஷான்)


பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


நொச்சியாகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்நிலையில் தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம்.இருப்பினும் பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை.



பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறைi பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சேவை வழங்கலையும் வினைத்திறனாக்க அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும்.


பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும் என்றார்.

Zameera

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 


நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் (14) 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 




வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




அதற்கமைய, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். 




அதேநேரம் ஏனைய பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது. 




அத்துடன் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் . 




இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


Sunday, September 13, 2026

Zameera

ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது

 

நாட்டில் பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


கடந்த காலத்தில் காணப்பட்ட ஊழல் நிறைந்த அரசியலுக்கு இனி நாட்டில் மீண்டும் ஒருபோதும் இடம் கிடைக்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 


"எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் - நாட்டிற்குச் சுபிட்சம்" என்ற கருப்பொருளின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் மக்கள் பேரணித் தொடரில், கஹட்டகஸ்திகிலிய நகரில் இன்று பிற்பகல் நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். 


அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

SHAHNI RAMEES

ஞானசார தேரரை காணவில்லை!

 


போது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர்

SHAHNI RAMEES

இந்தோனேசியா: 240+ பயணிகளுடன் ஜாவா கடலில் காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு!

 


இந்தோனேசியாவுக்குச் சொந்தமான ஜாவா கடல் பகுதியில்

Zameera

நாடு முழுவதும் 730 சந்தேகநபர்கள் கைது

 


முழு நாடும் ஒன்றாக தேசிய நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 730 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளின் போது 11 சந்தேகநபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள், மொத்தம் 724 சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சுற்றிவளைப்புகளின் போது 423 கிராம் ஹெரோயினும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 550 கிராம் ஐஸ் போதைப்பொருள், 405 கிராம் கஞ்சா மற்றும் 2,589 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Zameera

15 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

 


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15 இலட்சத்தைக் கடந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கு அமைய, ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,567,007 ஆகும்.

அதேவேளை, செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 31,885 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை கடந்துசென்ற காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 395,377 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 152,625 பேரும், சீனாவிலிருந்து 102,473 பேரும், ஜெர்மனியிலிருந்து 91,763 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அதன்படி இந்தியாவிலிருந்து 9,897 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.


Zameera

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்ற உணவகத்திற்கு ரூ. 5 இலட்சம் அபராதம்

 


500 மி.லீ. குடிநீர் போத்தலை ரூ. 100 க்கு விற்ற ஹோமாகமவில் உள்ள பிரபல உணவகத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்றமை தொடர்பில், ஹோமாகம, கலவிலவத்தை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எதிராக  நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

 


2025.12.11 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அப்போது நடைமுறையில் இருந்த இலக்கம் 2430/15 விசேட வர்த்தமானி அறிவித்தலின் கட்டளை எண் 93 இன் பிரகாரம் 500 மில்லிமீற்றர் உள்நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தலுக்கான அதிகபட்ச சில்லறை விலை ரூ. 70 ஆக இருந்தபோதிலும், அந்த நீர் போத்தல் ரூ. 100 க்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.

 


இந்த வழக்கு கடந்த (10) ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதி நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்தது.

 


இந்தச் சோதனை 2025 டிசம்பரில் நடைமுறையில் இருந்த அதிகபட்ச சில்லறை விலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகும்.

 

2026 ஜூன் 10 நாளிடப்பட்ட இலக்கம் 2492/29 விசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை எண் 96 இன் பிரகாரம், தற்போது உள்நாட்டில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான  நடைமுறையில் உள்ள அதிகபட்ச சில்லறை விலைகள்:

500 மி.லீ. – 999 மி.லீ. வரை, ரூ. 80.00

1லீற்றர் – 1.499 லீற்றர் வரை, ரூ. 120.00

1.5 லீற்றர் – 1.999 லீற்றர் வரை, ரூ. 150.00

2 லீற்றர் – 2.499 லீற்றர் வரை, ரூ. 180.00

5 லீற்றர் – 6.999 லீற்றர் வரை, ரூ. 400.00

இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடகூடிய விலைக்கு குடிநீர் போத்தல்கள் அல்லது பிற பொருட்களை விற்கும் வர்த்தக நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 குறுகிய அழைப்பு எண் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SHAHNI RAMEES

யாழில் விரிவுரையாளரின் அநாகரிகப் பேச்சு: தற்கொலைக்கு முயன்ற மாணவி!

 


யாழ். கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி பயிலும்

SHAHNI RAMEES

75 அடி பள்ளத்தில் பாய்ந்து வீடு மீது லொறி கவிழ்ந்து விபத்து : 04 பேர் படுகாயம்


பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில்,