இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே அவர் இராஜினாமா கடிதத்தை கொடுத்திருப்பதாகவும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவர் பதவியில் இருந்து விலகிவிடுவாரெனவும் மத்தியவங்கியின் தகவல்கள் கூறுகின்றன.
