இலங்கையில் தொழிலுக்கு ஈடுபடுத்துவோரின் வயதெல்லையை 14 வயது முதல் 16 வயது வரை அதிகரித்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் சட்டமாக்கியுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
இதன்படி, வேலைக்கு ஈடுபடுத்துவோரின் வயதெல்லை 16 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய சில சட்டங்களை திருத்துவதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவிக்கின்றது,
இதற்கமைய, கட்டாய கல்;வி 16 வயது வரை தொடர வேண்டும் என கூறப்படுகின்றது
