மக்களுக்கு தேவையான பால், முட்டை, இறைச்சி பொருட்கள் சந்தைக்கு வழங்கப்படுவதற்கான தடைகளை நிவர்த்தி செய்வதற்காக மூன்று நேரடி தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த தொழில்துறை அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் டாக்டர் நிரோஷன் கமகே (மேலதிக செயலாளர் – கால்நடை) 0772672015,
டாக்டர் சாகரிகா சுமனசேகர (இயக்குநர் – இனப்பெருக்கம்) – 0718101904 டாக்டர் ஹேமாலி கொதலாவல 0718589004 ஆகியோருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,
குறித்த பொருட்களை விற்கும் தொலைபேசி மூல விற்பனையாளர்கள் தங்களது பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கால்நடை அலுவலகங்களில் இருந்து நேரடியாக அனுமதி பெறலாம் என்று கூறினார்.
பால், முட்டை மற்றும் இறைச்சி பொருட்களுக்கு மேலதிகமாக, ஒரு நபர் மேற்கண்ட அலுவலகங்கள் மூலம் விலங்குகளின் தீவனம் மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல அனுமதி பெறலாம் என்றும் அவர் கூறினார்.
நடமாடும் காய்கறி மற்றும் பழக்கடைகளின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களில் முட்டை மற்றும் இறைச்சியை விற்குமாறும் இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
