ஜம்ஷெட்பூர் : பள்ளி பாடங்களை, 'ஒன்லைனில்' படிக்க வசதியாக ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு, 12 மாம்பழங்களை, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, தொழிலதிபர் ஒருவர் மாணவிக்கு உதவி செய்துள்ளார்.
ஆனால், துள்சி குமாரியிடம், ஸ்மார்ட் போன் இல்லாததால், அவரால், ஒன்லைனில் படிக்க முடியவில்லை. பெண்ணுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க, குமாரிடம் வசதியில்லை. இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே, ஜம்ஷெட்பூருக்கு வந்து, துள்சியை தேடி கண்டுபிடித்தார்.
துள்சியிடம், தலா, 10 ஆயிரம் ரூபாய்க்கு, 12 மாம்பழங்களை வாங்கினார். துள்சியின் தந்தையின் வங்கி கணக்குக்கு, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயை உடனடியாக, ஒன்லைன் வழியாக செலுத்தினார். 'இந்த பணத்தை வைத்து, ஸ்மார்ட் போன் வாங்கி, ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும்' என, துள்சியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டார். மேலும், ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும், துள்சிக்கு ஹீட்டே வழங்கினார்.