Our Feeds


Wednesday, June 23, 2021

www.shortnews.lk

யாழ் மாவட்டத்தில் 8,000 பேர் சுய தனிமைப்படுத்தலில் : 2 கிராமங்கள் முடக்கம்!

 



(மயூரன்)


யாழ் மாவட்டத்தில் 2, 721 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்  உள்ளதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று ( 23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் இதுவரை 72 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 4,919 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.  இவர்களில் 3,696 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

உடுவில் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இரண்டு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் மாவட்டத்தில் தற்போது 2,721 குடும்பங்களை சேர்ந்த 8 ,071 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளர்.

மேலும் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கட்டுவரும் 5,000 ரூபா கொடுப்பனவு யாழ் மாவட்டத்தில் இதுவரை 71, 721 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »