“சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் எம்.பி, துமிந்தா சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டமை இலங்கையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன் இலங்கையின் பொறுப்புக்கூறலைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.”
இவ்வாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
இதேவேளை , துமிந்தவின் விடுதலைக்கு கண்டனம் தெரிவித்து ஹிருணிகா பிரேமச்சந்திர, ஜனாதிபதிக்கு ஐந்து பக்கங்கள் கொண்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.