15 வயது சிறுமியின் பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, பொலிஸ் விசாரணையை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தி, அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.