355 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த எவன்கார்ட் நிறுவன தலைவர் நிச்சங்க சேனாதிபதி மற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த இருவருக்கும் எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்யும் உரிமையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப் பத்திரிகையை இரத்து செய்யுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனக்கு அறிவிப்பு விடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்ப்பில் ஆஜரான அதன் பிரதி பணிப்பாளர் நாயகம் துஷாரி ஜயரத்ன நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தார்.