இந்தியா - கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
60 குரங்குகளை கொலை செய்து கோணிப்பைகளில் கட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளதகா கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது 14 குரங்குகள் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளடன், அவை மீட்கப்பட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எஞ்சிய 46 குரங்குகளும் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கர்நாடக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.