ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.