Our Feeds


Monday, July 26, 2021

www.shortnews.lk

ஜனாதிபதியுடனான பேச்சுவார்தை வெற்றியடைந்தது - அமைச்சர் நிமல்

 



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா தெரிவித்துள்ளார்.


கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »