Our Feeds


Friday, July 9, 2021

www.shortnews.lk

மீதமுள்ள பைசர் தடுப்பூசிகள் யாருக்கு? - இராணுவ தளபதி விளக்கம்

 



முதன் முறையாக இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகளில் மீதம் உள்ளவற்றை மன்னார் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு வழங்க உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இன்று (09) காலை தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பு செயலணியில் பதிவு செய்யப்பட்டுள்ள வௌிநாடுகளில் கல்வி கற்கும் 1,130 மாணவர்களிக்கு நேற்றைய தினம் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களும் ஏனைய மாணவர்களுக்கு இன்று மற்றும் நாளை பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »