Our Feeds


Tuesday, July 6, 2021

www.shortnews.lk

BREAKING: 14 வயதான மாணவன் காயங்களுடன் சடலமாக மீட்பு!

 



(கதீஸ்)


வவுனியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லக்க்ஷபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் 14 வயதான மாணவன் காயங்களுடன் இன்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டார்.


தலை மற்றும் முகத்தில் அடிகாயங்களும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் வீட்டுக்கு பின் பகுதியில் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

நேற்றையதினம் (05) இரவு நேர உணவின் பின்னர் வீட்டில் அனைவரும் உறங்கியுள்ளனர். இந்நிலையிலேயே இன்று (06 ) காலை மாணவனைக் காணவில்லை என சிறுவனின் சகோதரிகள் தேடியபோது இவர்கள் உறங்கும் வர்த்தக நிலையத்தின் பின் பகுதியில் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்துடன் தடவியல் பொலிஸாரின் உதவியையும் பெற்றனர்.

பின்னர் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களை பார்வையிட்டதுடன் விசாரணைளையும் முன்னெடுத்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »