Our Feeds


Sunday, August 8, 2021

www.shortnews.lk

கொரோனா நோயாளிகள் யாரும் தரையில் தங்கி சிகிச்சை பெறவில்லை - ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை மறுப்பு

 



ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள், தரையிலும் தாழ்வாரத்திலும் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர் என இணைத்தளங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஏ.ஹேவகே தெரிவித்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தமது வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளோ அல்லது வேறு எந்த நோயாளிகளுமோ தரையிலோ தாழ்வாரத்திலோ தங்கியிருந்து சிகிச்சை பெறவில்லை என்பதை அறியத்தருவதாகவும் அவ்வறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »