நாட்டில் நேற்று கொவிட் தொற்று உறுதியான 2,177 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
கொவிட் 19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் நாளாந்த அறிக்கையில் கம்பஹா மாவட்டத்தில் 441பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தில் 389 பேருக்கும், மாத்தறை மாவட்டத்தில் 158 பேருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 125 பேருக்கும், கொழும்பு மாவட்டத்தில் 119 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 112 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 100 பேருக்கும் பதுளை மாவட்டத்தில் 91 பேருக்கும் நேற்று தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.