கொழும்பு சிறுவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவலின் ஆபத்து அறிந்து முறையான சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.