Our Feeds


Saturday, August 14, 2021

www.shortnews.lk

BREAKING: ஈஸ்டர் தாக்குதல் – பாப்பரசருக்கு அனுப்பப்படவுள்ள வெளிவராத இரகசியங்கள் அடங்கிய முக்கிய கடிதம்

 



ஈஸ்டர் தாக்குதல் குறித்து இதுவரை அம்பலப்படுத்தப்படாத சில முக்கிய விடயங்கள் பற்றிய கடிதமொன்று பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கர்தினால் மெல்கம் ரஞ்ஜித்தினால் இந்தக் கடிதம் மிகவிரைவில் பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் ஆயர் இல்ல வட்டாரங்கள் கூறுகின்றன.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சர்வதேச சமூகத்திற்கு முன்பாக உதவிகோருவதாகவும் கர்தினால் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகள் மந்தகதியில் நடத்தப்படுவதாகவும், நீதியை விரைவில் பெற்றுத்தர வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்ற 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் கறுப்புக் கொடிப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை நேற்று தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »