எட்டியாந்தோட்டை பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக எட்டியாந்தோட்டை - புளத்கொஹுப்பிட்டி வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியின் பருசல்ல – களனித் தோட்டத்திற்கு இடையே உள்ள பாலம் முற்றாக வெள்ளநீரில் மூழ்கியிருப்பதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.