Our Feeds


Sunday, August 15, 2021

www.shortnews.lk

SHORT_BREAKING: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் சற்று முன் நுழைய ஆரம்பித்து விட்டனர் - ஆப்கான் உள்துறை அமைச்சு அறிவிப்பு

 



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான் இயக்கத்தினர் நுழைய ஆரம்பித்துள்ளனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சு சற்றுமுன் தெரிவித்துள்ளது.


ஆப்கானிஸ்தான் பல பகுதிகளை தலிபான்கள் வேகமாக கைப்பற்றி வருகின்றனர்.

அந்நாட்டின் 34 மாகாண தலைநகர்களில் காபூல் மற்றும் 5 தலைநகரங்கள் தவிர ஏனைய அனைத்து மாகாணத் தலைநகரங்களையும் தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.

இந்நிலையில், தலைநகர் காபூலுக்குள் அனைத்து பகுதிகளிலிருந்தும் தலிபான்கள் நுழைய ஆரம்பித்துள்ளனர் என ஆப்கான் உள்துறை அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

எனினும், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானியின் அதிகாரிகளின் பிரதானி தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களை அமைதியாக இருக்குமாறு கோரியுள்ளார். தயவுசெய்து கவலையடைய வேண்டாம். பிரச்சினையில்லை. காபூல் கட்டுப்பாட்டில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள தலிபான் தலைவர் ஒருவர் கூறுகையில், காபூல் நகரை பலவந்தமாக கைப்பற்ற வேண்டாம் என தமது போராளிகளுக்கு தலிபான் தலைமையினால் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காபூலிலிருந்து வெளியேற விரும்புவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதாகவும் தலிபான் தலைமை தெரிவித்துள்ளது.

காபூல் நகர வாயில்களை கடந்து செல்ல வேண்டாம் என தமது போராளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தலிபான் அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »