Our Feeds


Friday, September 24, 2021

SHAHNI RAMEES

டிசம்பரில் 2 வது முறையாக LPL போட்டிகள்




 லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் 2 வது முறையாக நடைபெறும் என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதன்படி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

லங்கா பிரீமியர் லீக்கில் 5 அணிகள் விளையாடுகின்றன. ஒவ்வொரு அணியும் 14 உள்ளூர் வீரர்களையும் 6 வெளிநாட்டு வீரர்களையும் கொண்டுள்ளது.

இதேவேளை, இந்த வருட லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களின் பதிவுகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »