பராக்கிரம சமுத்திரத்தை சூழ நடைபாதை அமைக்கும் செயற்பாடு ஏற்புடையதல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த சமுத்திரத்தினை சூழ நடைபாதை அமைப்பதற்காக கருங்கற்கள் அகற்றப்பட்டுள்ளன.
அது வரலாற்று சிறப்பு வாய்ந்த சமுத்திரமாகும்.
அதில் மாற்றங்களை மேற்கொள்வது உகந்ததல்ல.
புதிய தொழிநுட்பத்துடன் அநுராதபுரம், பொலன்னறுவை போன்ற நகரங்கள் இதுவரை மாற்றப்படாமைக்கு அதன் தொல்பொருள் ரீதியான முக்கியத்துவமே காரணமாகும்.
அதனைப்போன்ற சிறப்புகளே பராக்கிரம சமுத்திரத்திற்கும் உள்ளது.
எனவே அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது ஏற்புடைய ஒன்றல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பராக்கிரம சமுத்திரத்தை சூழவுள்ள கருங்கற்கள் அகற்றப்பட்டுள்ளதால், அதில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.