இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும், தமிழர்களின் காணி பிரச்சினைகள், மாகாண சபை தேர்தல், அரசியல் யாப்பு திருத்தம் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.