Our Feeds


Wednesday, October 13, 2021

ShortNews Admin

யாழில் பிரசித்திபெற்ற ஆலயத்திற்குள் காலணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரி.



இந்துமத கலாசார நியதிகளை மதிக்காமல் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குள் காலணியுடன் சென்ற பொலிஸ் அதிகாரி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கொட்டாச்சி என்பவரே இவ்வாறு மத நியதிகளை மீறி ஆலயங்களுக்குள் காலணியுடன் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று நண்பகல் வருகை தந்துள்ள பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் ஆலய வெளி வீதியில் சப்பாத்துக்களை கழற்றிவிட்டு ஆலயங்களுக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்திருந்த நிலையில், காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் காலணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் நிருபர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »