வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். உரிமை, உரிமை என்று பேசிக்கொண்டிருப்பவர்கள் சாதித்தது எதுவும் இல்லை அதனை விட்டு யதார்த்ததுக்கு வரவேண்டிய தேவை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை
நாட்டின் நிலைமையை புரிந்து அதற்கேற்ப காய் நகர்த்த வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. யுத்த காலத்தில் மாத்திரமல்ல. யுத்தத்தத்துக்கு பின்பு வந்த ஆட்சியில் கூட நாங்கள் தொடர்ச்சியாக பல சோதனைகளை மட்டக்களப்பு மாவட்டம் சந்தித்துள்ளோம்.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணக்கப்பாட்டு அரசியலை அனைவரும் இணைந்து முன்னெடுத்து மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய கடமை எங்களிடம் இன்று உள்ளது என்றார்.