ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்தில் இன்று (ஒக்டோபர் 18) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிச்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 22 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மேலும் நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி ஆப்கனில் பைசாபாத் பகுதியில் 5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.