Our Feeds


Thursday, November 18, 2021

SHAHNI RAMEES

நாட்டில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

 

வங்க கடலில் இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை இன்று அடையும்.


இதனால் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 



வடமாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை எதிர்பார்க்கப்படலாம் மற்றும் வடமேல் மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.


பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 


ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.


வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »