Our Feeds


Wednesday, November 10, 2021

ShortNews Admin

காணாமல் போனதாக கூறப்பட்ட 3 பெண் பிள்ளைகள் அனுராதபுரம் வரை சென்று திரும்பி வந்துள்ளனர் - அங்கு என்ன செய்தார்கள்? - நடந்தது என்ன?



08ம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய கொழும்பு, வாழைத்தோட்டத்தை சேர்ந்த 3 சிறுமிகளும் கொழும்பின் சில இடங்களில் சுற்றி விட்டு அனுராதபுரம் வரை சென்று மீண்டும் கொழும்புக்கு வந்துள்ளனர்.


கொழும்பை வந்தடைந்த குறித்த 3 பெண் பிள்ளைகளும் ஓர் வீட்டில் மறைந்திருந்துள்ளனர் என இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதே வேலை குறித்த 3 பிள்ளைகளும் பெரிய கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் வீடியோ காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன.


3 பெண் பிள்ளைகள் தொடர்பில் முழுமையான விசாரனைகளை பொலிசார் முன்னெடுப்பதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். 


03 பெண் பிள்ளைகளும் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் காட்சி

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »