Our Feeds


Sunday, November 14, 2021

SHAHNI RAMEES

ஆசிரியர் சங்கம் தமது தீர்மானத்தை அறிவித்தது

 

அதிபர் − ஆசிரியர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அதிபர் − ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்த நிலையில், வரவு செலவு திட்டத்தின் ஊடாக, சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் 30,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அதிபர் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தில் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »