Our Feeds


Wednesday, November 10, 2021

SHAHNI RAMEES

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ஆசை மனநிலையில் ஆசிரியர் தொழிற்சங்கத்தினர்! அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன


இலங்கை  ஆசிரியர் சங்க செயலாளர் ஜோஸப் ஸ்டாலின், ஆசிரியர் சேவை சங்க செயலாளர் மஹிந்த ஜெயசிங்க ஆகியோர் கர்ப்பிணிப்பெண்களின் ”ஆசை” மனநிலையில் இருப்பதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று (10) புதன்கிழமை இடம்பெற்ற ஒதுக்கீட்டு சட்டமூல திருத்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மேலும் கூறுகையில்,

நாட்டில் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.கெட்டப்புலாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது 27 வயது ஆசிரியை ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவருக்கு எனது அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.


இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , ஆசிரியர் சேவை சங்க செயலாளர் மஹிந்த ஜெயசிங்க ஆகியோரின் ஆசை இப்போது நிறைவேறி விட்டதா?


ஒரு பெண் கர்ப்பிணியாகும்போது அவருக்கு சில ‘ஆசை’ கள் ஏற்படும்.மாங்காய்,நெல்லிக்காய் போன்ற புளிப்பு சுவையானவற்றை சாப்பிட வேண்டும் போல் ஆசை ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் இந்த கர்ப்பகால ஆசை போன்றே இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , ஆசிரியர் சேவை சங்க செயலாளர் மஹிந்த ஜெயசிங்க ஆகியோரும் கர்ப்பிணிப் பெண்களின் ‘ஆசை’ மனநிலையில் உள்ளனர் என்றார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »