Our Feeds


Friday, November 19, 2021

SHAHNI RAMEES

அம்பாந்தோட்டை, காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

 

அம்பாந்தோட்டை, வீரக்கெட்டிய தெலம்புயாய பிரதேசத்தில், காணாமல்போன குடுஸ்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வீரக்கெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரக்கெட்டிய வேக்கந்தவல கேக்குனாய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அலுத் பண்டாரகே தினெத் குமார (வயது – 44) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த செவ்வாய்கிழமை கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிய நபர், வீடு திரும்பாததால் உறவினர்கள் அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்தில் வெட்டுக்காயங்கள் பல காணப்படுவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »