இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் அரசு பாடசாலை வகுப்பறையில் மாணவர் ஒருவர் சகமாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கேரளா எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் அமைந்துள்ளது அரச மேல்நிலை பள்ளி.
இந்த பள்ளியில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் தன்னுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு நண்பர்களின் வற்புறுத்தல் பேரில் தாலி கட்டியுள்ளார்.
மாணவன் மாணவிக்கு தாலி கட்டும் போது சக மாணவர்கள் காகிதங்களை கிழிந்து அவர்கள் மீது மலர்கள் போல தூவி வாழ்த்தியும் உள்ளனர்.
இதை உடன் இருந்த மாணவர் ஒருவர் அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.