Our Feeds


Wednesday, November 24, 2021

SHAHNI RAMEES

மன்னாரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

 

மன்னார் மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 23

நாட்களில் 470 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ரி.வினோதன் இன்று (24) புதன்கிழமை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மேலும் புதிதாக 14 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை 470 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் 2,846 நோயாளர்களும், மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 2,863 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »