கிண்ணியா குறஞ்சாக்கேணி கலப்பில் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (04) நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்நாட்களில் வடக்கு, கிழக்கில் ''பிரபஞ்சம்” நிகழ்ச்சித் திட்டம், “ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து மூச்சு’ நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சித் தொடரின் போதே அவர் இந் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அண்மையில் இடம் பெற்ற படகு விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்பதோடு மற்றும் பலர் காயமடைந்தனர் என்பதும் நினைவு கூரத்தக்கது.