(கல்குடா நிருபர்)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட அறபா நகரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள முஹைதீன் அப்துல் காதர் வித்தியாலய அங்குரார்ப்பண நிகழ்வு அறபா நகர் ஜும்ஆ பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதே நாடாளுமன்ற உறுப்பினர்களை போகச் சொன்னதும் நீங்கள்தான். நாங்க இந்தப் பக்கம் இருக்கிறோம். என்று கூறி அனுப்பி விட்டு இப்போது ஒன்றும் தெரியாதது போன்று அரசியல் காய் நகர்த்தல்களை செய்கின்றனர். இப்போதைய அரசியல் யதார்த்தை கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
20 ஆவது சீர்திருத்தத்துக்கு கை உயர்த்தவில்லையாயின் கோறளைப்பற்று மத்திக்கும் ஓட்டமாவடி பிரதேசத்துக்கும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பிள்ளையான் அல்லது வியாழேந்திரன் வந்திருப்பார்கள்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எங்களின் அரசியல் காய் நகர்த்தல் காரணமாகவே அடக்கம் செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.