Our Feeds


Tuesday, March 29, 2022

ShortTalk

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி - இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் தாக்கல்.



பாகிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் நாடாளுமன்ற கீழவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மாா்ச் 31-ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.


பணவீக்கம், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தாதது போன்ற காரணங்களுக்காக பிரதமா் இம்ரான்கான் மீது எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை நாடாளுமன்றச் செயலகத்தில் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி அளித்தன. இதன் மீதான விவாதத்தை தொடங்குவதற்காக நாடாளுமன்றம் மாா்ச் 25-ஆம் திகதி கூடியது. ஆனால், அன்றைய தினம் நம்பிக்கையில்லா தீா்மானம் தாக்கல் செய்யப்படவில்லை. அவையை 28-ஆம் திகதி மாலை வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

இதன்படி, நாடாளுமன்றம் திங்கள்கிழமை காலை கூடியது. எதிா்க்கட்சித் தலைவரும் பிஎம்எல்-என் கட்சித் தலைவருமான ஷேபாஸ் ஷெரீஃப் நம்பிக்கையில்லாத் தீா்மானத்தை அவையில் தாக்கல் செய்தாா். அவைத் தலைவா் ஆசாத் கைதா் இல்லாத நிலையில், அவையை வழிநடத்திய துணைத் தலைவா் காசிம் கான் சுரி, தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினா்கள் எழுந்து நிற்கும்படி கேட்டுக்கொண்டாா்.

அதன்படி, தீா்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள 161 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். இதையடுத்து, தீா்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் மீதான வாக்கெடுப்பு 3-7 நாள்களில் நடத்தப்படும் என்பதால், துணைத் தலைவா் காசிம் கான் சுரி, அவையை மாா்ச் 31-ஆம் திகதி 4-ஆம் திகதி வரை ஒத்திவைத்தாா். தீா்மானம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக அன்றைய தினம் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.

342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில், நம்பிக்கையில்லா தீா்மானத்தை தோற்கடிக்க இம்ரான் கானுக்கு 172 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு 155 உறுப்பினா்கள் உள்ளனா். கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக இதுவரை உறுதியளிக்கவில்லை.

மேலும், அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியை சோ்ந்த சுமாா் 20 உறுப்பினா்கள் இம்ரானுக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தியுள்ளதால் இம்ரான் பதவியில் தொடா்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து உள்துறை அமைச்சா் ஷேக் ரஷீத் கூறுகையில், நம்பிக்கையில்லா தீா்மானம் மீது மாா்ச் 31-ஆம் திகதி முடிவு செய்யப்படும். பிரதமா் இம்ரான்கான் எங்கேயும் போய்விடவில்லை. இஸ்லாமாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் இம்ரானுக்கு ஆதரவாக ஏராளமானோா் குவிந்தனா்.

இதனால், அவரது ஆட்சி விளிம்புக்கு வந்துவிட்டது என்ற எண்ணத்தை மக்கள் தவிா்க்க வேண்டும். அவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதற்கான சதியாகும் என்றாா் அவா்.

பஞ்சாப் முதல்வா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: 

இதற்கிடையே, இம்ரான் கான் கட்சியை சோ்ந்த பஞ்சாப் மாகாண முதல்வா் உஸ்மான் பஸ்தா் மீது எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 127 உறுப்பினா்கள் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸை அளித்துள்ளனா்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »