Our Feeds


Monday, April 11, 2022

ShortTalk

இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அது அரசியல் புரட்சியாக மாறும் - முன்னாள் பிரதமர் ரனில் எச்சரிக்கை



இளைஞர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் அது அரசியல் புரட்சியாக மாறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


சமூக வலைத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பாராளுமன்றத்துக்குள் அரசாங்கத்தை கவிழ்க்க முயல்கிறோம் என்றும் இளைஞர்கள் வீதிகளில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றனர் என்றும் கூறினார்.

அது ஒரு பெரிய சக்தி என்றும், ஐக்கிய தேசியக் கட்சியிலும் அந்த சக்திகள் தோன்றியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர்களை வீதிப் போராட்டத்தில் ஈடுபட அனுமதியளித்து, அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »