Our Feeds


Friday, April 1, 2022

SHAHNI RAMEES

கோட்டாவின் மிரிஹான இல்லத்திற்கு சென்ற மஹிந்த மற்றும் நாமல்!

 

பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.



 
சம்பவத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இராணுவத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் போராட்டத்தில் காயமடைந்தனர்.

மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் சமூக ஊடக குழுக்களால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 
3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போராட்டத்தில், பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி தாக்குதல் நடத்தியதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


 

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »