Our Feeds


Thursday, April 14, 2022

ShortTalk

வாழ்வா? சாவா? என்ற நிலையில் விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டு போராடும் மக்கள் அடிப்படைவாதிகளா? - ஞானசாரரின் அறிக்கைக்கு சத்தாரதன ஹிமி சூடான பதில் - VIDEO




காலி முகத்திடலில் கூடியுள்ள மக்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற இன, மத பேதமில்லாமல் இந்த ஊழல் நிறைந்த, குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற மட்டுமே கோரிக்கை விடுக்கிறார்கள். இங்கு வந்திருக்கும் மக்கள் கேஸ் இல்லை, உணவில்லை, எரிபொருள் இல்லையென்பதால் அது வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே வந்துள்ளார்கள். இவர்கள் அடிப்படைவாதிகளா? என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள ராஜாங்கன சத்தாரதன தேரர் தெரிவித்துள்ளார்.


பொது பல சேனாவினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இங்கிருப்பவர்கள் வாழ்க்கை செலவை தாங்கிக் கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட மக்கள், உங்கள் கண் குருடாகியுள்ளதா? வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திலிருக்கும் மக்கள் தான் இங்கிருக்கிறார்கள். முழு நாடும் திவாலாகிப் போன ஒரு நேரத்தில் நாம் இருக்கிறோம். இன்னுமின்னும் இனவாதம், அடிப்படைவாதம் என பேசிக்கொண்டிருக்காதீர்கள். 


உங்களின் இந்த பௌத்த தலைவரான ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டுவர நாமும் கஷ்டப்பட்டோம். ஆனால் எம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை. 


இந்த அரசாங்கம் தற்போது செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வரும்போது இங்குள்ளவர்களை அடிப்படைவாதிகள் என சித்தரிக்கப் பார்க்கிறது. என அவர் மேலும் தெரிவித்தார்.


ராஜாங்கன சத்தாரதன தேரரின் முழுமையான பதிலை கீழுள்ள வீடியோவில் பார்க்க முடியும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »