காலி மாவட்டத்தில் நெலுவ பிரதேச களுபோவிட்டியனைச் சேர்ந்த 74 வயதான சந்திரதாச கொடகே நேற்று (மே 28) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
விஞ்ஞானம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு சந்திரதாச கொடகே விண்ணப்பித்திருந்ததாகவும், அதன்படி அவர் நேற்று விஞ்ஞான பாடத்திற்கு தோற்றியுள்ளார்.
அதேநேரம், அவர் நாளைய தினம் (மே 30) கணிதப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.
கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பாடத்திற்கு தோற்றி ‘எஸ்’ (S) சித்தியைப் பெற்றிருந்தார்.
‘எனக்கு இப்போது 74 வயதாகிறது. அலபலதெனிய மகா வித்தியாலயத்தில் படித்தேன் 1970 ஆம் ஆண்டு தான் நான் முதன் முதலில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றினேன். அந்தத் தேர்வில் ஏழு பாடங்களில் நான்கு பாடங்களுக்கு சித்தி கிடைத்தன.
சாகும் வரை கற்க வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் உள்ளன, இப்போது தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாறிவிட்டது, நவீனமயமாக்கப்பட்ட கல்வி முறை உள்ளது.
அன்றைய தினம் போல் அல்லாமல், தற்போது பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க ஏராளமான வசதிகள் உள்ளன. அப்போது எங்களுக்கு எந்த வசதியும் இல்லை. இப்போது பயிற்சி வகுப்புகள் உள்ளன. ஊடகங்கள் மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது எனவும் அவர் கூறினார்.