Our Feeds


Thursday, May 5, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது - பிரபல சட்டத்தரணி கருத்து


 

 
 


அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு எதிராக எந்த நேரத்திலும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியாது என சட்டத்தரணி கலாநிதி பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.


விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில், பதவி நீக்க பிரேரணையை கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கையொப்பமிட வேண்டும்.


ஜனாதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும். பதவி நீக்க பிரேரணையை கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். 

சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும். சபாநாயகர் திருப்தி அடைய வேண்டும். 

அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இதைத் தவிர ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியாது. 

ஜனாதிபதிக்கு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரலாம் என நினைப்பது அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. சபாநாயகர் அதை ஏற்கவும் முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »