Our Feeds


Sunday, May 29, 2022

ShortTalk

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாடு எப்போது நீங்கும்? - சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு



அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை, இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.


மேலும் மருந்து இறக்குமதிக்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மருந்துகளை கோரியதன் பின்னரே மருத்துவ நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி பணிகளை ஆரம்பிக்கும் என்பதால், மருந்துகளை இறக்குமதி செய்ய மூன்று மாதங்கள் ஆகும்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் முன்னணி மருந்து நிறுவனங்களிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் மருந்துகளை விநியோகிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

உயிர் காக்கும் மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களுக்காக தட்டுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா என்பன உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »