Our Feeds


Thursday, May 5, 2022

ShortNews Admin

VIDEO: நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம், 148 பேர் ராஜபக்க்ஷர்கள் பக்கமே உள்ளனர்! - சாணக்கியன்



(எம்.ஆர்.எம்.வஸீம் இராஜதுரை ஹஷான்)


நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்கள் பக்கம் உள்ளார்கள். 148 பேர் ராஜபக்க்ஷர்கள் பக்கமே உள்ளனர். சுயாதீனமாக செயற்படுகிறோம் என கூறிக்கொள்ளும் தரப்பினரது அரசியல் நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் இராசாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (05) இடம்பெற்ற கூட்டத் தொடரின் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு தொடர்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் தெரிவு ஊடாக நாடாளுமன்றில் இடம்பெறும் அரசியல் நாடகம் வெளிப்பட்டு விட்டது. சுதந்திர கட்சியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிடியவுக்கு ஆதரவு வழங்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுப்பினர்களிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.ஆனால் அவர் எதிர்க்கட்சியிலேயே உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »