Our Feeds


Thursday, June 30, 2022

SHAHNI RAMEES

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய 598 பேர் சரண்!



பொலன்னறுவை-கந்தக்காடு புனர்வாழ்வு

நிலையத்தில் இருந்து தப்பியோடிய 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று (19) இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில், குறித்த மோதலில் 600 கைதிகள் தப்பியோடி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இவ்வாறு தப்பியோடிய கைதிகளில் 598 பேர் மீண்டும் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »