மின்சாரக் கட்டணம் நியாயமான சதவீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தானும் கொண்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம். எம். சி. பெர்டிணான்டூ தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.